தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்களை நிரப்புங்கள்…

View previous topic View next topic Go down

உங்களை நிரப்புங்கள்… Empty உங்களை நிரப்புங்கள்…

Post by முழுமுதலோன் Thu Aug 29, 2013 10:28 am

உங்களை நிரப்புங்கள்…


குறைகுடம் தளும்பும். குறைகுடம் கூத்தாடம் என்பது பழமொழி மட்டு மல்ல. அனைவரிடம் ஒளிந்துள்ள உண்மையும் அதுவே. நம் அனைவரிடத் திலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு குடமொன்று உண்டு. நாம் மற்றவர்களை எவ்வாறு மதிக்கிறோம். மற்றவர்களால்

நாம் எவ்வாறு மதிக்கப் படுகிறோம் என்பதன் பிரதிநிதியாக அந்தக் குடம் விளங்குகிறது. அந்தக் குடத்தை நிரப்பப் பல வழிகள் உண்டு. உங்களை மற்றவர்கள் புகழ்கிற போது உங்களை உன்னதமான மனிதர் என்று போற்றும் போது, உங்கள் குடம் சிறிது நிறைவதைப் போல் உணர்வீர்கள்.

உங்களுக்குப் பிடித்தமானவர்கள் உங்களுக்கு பிடித்தமான முறையில் உங்களை அழைக்கிற போதும், அந்தக் குடம் கொஞ்சம் நிரம்பும். உங்கள் உடையை, உடைமைகளை, கடின உழைப்பை யாராவது பாராட்டுகிற போதும் குடம் இன்னும் சற்று அதிகமாக நிரம்பிவிடும். இதைப் போலவே பிறரின் குடங்களை நிரப்ப பலகோடி வழிகள் உள்ளன. பிறருக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகளை சொல்வதன் மூலம், பிறரை உற்சாகப்படுத்தி அவர்களின் வெற்றி முனைப்பை அதிகரிக்கச் செய்வதன் மூலம், இழப்புகளுக்கு ஆறுதல் கூறி இன்னும் சாதிக்கத் தூண்டுவதன் மூலம், ஆற்றலை பிறருடைய குடத்தை நம்மால் எளிதாக நிரப்ப முடியும். ஒருவருடைய குடம் உணர்வுகளால் நிரப்படும் போது அன்பும், தோழமையும் அதில் பொங்கி வழியும். அதைப் போலவே நம்பிக்கையாலும், சாதிக்கும் திறனோடும் நிரப்பப்படுகிற போது வெற்றிகளாகவே வழிந்தோடும்.

நமக்குள் ஒளிந்திருக்கும் இந்தக் கண்ணுக்குத் தெரியாத குடத்தை நிரப்ப முனையும் முன் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான். நிரம்பிய உங்கள் குடங்களை குறைகுடமாக மாற்ற எண்ணற்ற கற்கள் உங்களை நோக்கி எறியப்படும். அதை சமர்த்தியமாகக் கையாள்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். நம்மில் பலரின் குடங்கள் பல நேரங்களில் காலியாகவே விடப்பட்டுவிடுகின்றன. அதன் காரணம், செய்யும் செயல்களில் நமக்கு தெளிவும் நம்பிக்கையும் இல்லாததே. ஒருவரின் குடம் நிரம்பியிருக்கிற போது அவருக்கும் இருக்கும் மனநிலைக்கும், காலியாக இருக்கிற போது அவருக்கு ஏற்படுகிற மனநிலைக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. உதாரணமாக, தன் மீதே வெறுப்புடன் காணப்படும் உங்களின் நண்பரின் குடம் காலியாக இருக்கிற போது, நீங்கள் அவரைப் பற்றி பல வகையிலும் நல்ல விதமாக எடுத்துக்கூறி அவர் குடத்தை நிரப்ப முயன்றாலும் அதை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். இது போன்ற சூழல்களில்தான் சில மனிதர்கள் வெற்றியால் நிரம்ப வேண்டிய தன் குடத்தை தானே துளை இட்டுக் கொள்கிறார்கள்.

ஒருவர் தன் குடத்தில் தானே துளையிட்டுக் கொள்கிற போது அவர்களிடம் எழுகிற கோபம், தாழ்வு மனப்பான்மை போன்றவை, அவரைச் சுற்றியிருப்பவர்களின் குடங்களையும் காலியாக்கி விடுகின்றது. இந்த நிலையைத் தடுக்க தனக்குள் இருக்கும் ஆற்றலை உணர்ந்து, வாய்ப்புகள் கிடைக்கிற போதெல்லாம் நம் திறமைகளால் முத்திரை பதித்து நம் குடங்களுக்கு எப்போதும் நீர் வார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நாம் பெரும்பாலும் நம் குடங்களை மட்டுமே நிரப்ப முயற்சிக்கிறோம். பிறரின் குடங்களை நிரப்ப நம்மில் பலருக்கும் பல வகையிலும் தயக்கங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. நாம் பிறருக்கு உதவுகிற போதும், பிறரின் திறமைகளை அங்கீகரிக்கிற போதும் நம் ஆளுமைத்திறன் இயற்கையாகவே அதிகரித்து விடுகிறது. பிறரின் குடங்களை நிரப்ப முற்படுகையில் நம் குடத்தின் நீர் சிறிதளவும் குறைவதில்லை. மாறாக நிரம்பவே செய்கின்றன.
நமக்குள் இருக்கும் திறமைகளை அடையாளம் காண்பதிலும், பிறருக்குள் இருக்கும் ஆற்றலைக் கண்டு உத்வேகம் அளிப்பதிலும் நமக்கும், பிறருக்கும் கிடைக்கவிருக்கிற வெற்றிகளும் அதன் மூலம் கிடைக்கிற மகிழ்ச்சியும் நிறைவும் நம் குடங்களை தளும்பச் செய்கிறது.

குழாயடிகளில் வரிசையிலே காத்திருக்கும் குடங்கள் காரணமாகவே சில சமயங்களில் குழாயடிச் சண்டைகள், குடுமிப்பிடி சண்டை களாகும். ஏனென்றால் குழாயைத் திறந்தால் சில நேரங்களில் தண்ணீரும் பல நேரங்களில் காற்றும்தான் வரும்.

எனவே, தன்னுடைய குடம் நிரம்பினால் போதும் என்ற எண்ணம் பலருக்கும் எழும். ஆனால் நமக்குள் இருக்கும் இந்தக் கண்ணுக்குத் தெரியாத குடத்தை நிரப்ப மிக எளியவழி அடுத்தவர்களின் குடங்களை நிரப்புவதுதான்.

என்ன… உங்களைச் சுற்றியுள்ள குடங்களை நிரப்பத் தயாராகி விட்டீர்களா?

Posted by Sakthivel Balasubramanian
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களை நிரப்புங்கள்… Empty Re: உங்களை நிரப்புங்கள்…

Post by ரானுஜா Thu Aug 29, 2013 3:12 pm

பகிர்வுக்கு நன்றீ
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உங்களை நிரப்புங்கள்… Empty Re: உங்களை நிரப்புங்கள்…

Post by yarlpavanan Fri Aug 30, 2013 6:23 am

சிறந்த வழிகாட்டல்
yarlpavanan
yarlpavanan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 73

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

உங்களை நிரப்புங்கள்… Empty Re: உங்களை நிரப்புங்கள்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum