Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிஞ்சு மனம் கெஞ்சிக்கேட்கிறது ....!!!
Page 1 of 1 • Share
பிஞ்சு மனம் கெஞ்சிக்கேட்கிறது ....!!!
அம்மா ஒருதிசையில் வாழ்க்கை ....!!!
அப்பா ஒரு திசையில் வாழ்க்கை .....!!!
நான் சிறு வயதில் என் தோழியோடு ....
கூட்டாஞ்ச்சோறு விளையாட்டில் .....
அம்மா அப்பா விளையாட்டில் பெற்ற.....
சந்தோசத்தை கூட அனுபவிக்காத ......
என் பெற்றோரின் வாழ்க்கையை ......
நினைத்து வெம்பிக்கொண்டிருக்கிறேன்.....
தட்டிக்கேட்கும் வயதும் இல்லை ......
இந்த சூழலில் வாழவும் முடியவில்லை ....!!!
ஏன் இவர்களிடம் இந்த மனமுறிவு ...?
புரிந்து கொள்ளும் அறிவும் இல்லை ....
அதற்கான அனுபவமும் இல்லை ....
அடிக்கடி அம்மா சொல்லும் வார்த்தை...
அவள் வேண்டும் என்றால் எங்களை.....
விட்டு விடு எங்களை வதைக்காதே .....
நான் பிச்சை எடுத்தாயினும் என் .....
குழந்தையை காப்பாற்றுவேன் .....!!!
அடுத்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும்.....
இடையில் என்ன நடக்கும் என்ற பயத்தில் .....
போர்க்களத்தில் வாழுகிறான் நான் ....
அம்மாவின் முகத்தில் சிரிப்பு இல்லை....
அப்பாவின் நெஞ்சில் அரவணைப்பு இல்லை ....
ஒப்பந்த திருமணத்தில் வாழ்க்கை வியாபாரம்....
செய்வதுபோல் வாழ்கிறார்கள் என் பெற்றோர் .....
எனக்கு வேலை மூலையில் நின்று அழுவது ....!!!
அம்மாவின் பாசத்துக்கு ஏங்குகிறேன் ...
அப்பாவின் அரவணைப்பிற்கு துடிக்கிறேன்.....
அம்மா விவாக ரத்துக்கு ஏங்குகிறார்....
அப்பா தனிமையை விரும்புகிறார் .....
உச்ச கட்ட மனமுறிவில் என் குடும்பம்....
என் கற்றல் முற்றாக தடைப்படுகிறது.....
கண்டு கொள்ள யாரும் இல்லை.....
உறவுகள் வரும்போது மட்டும் ...
சந்தோசம் நிலவும் போலி ....
வாழ்கையில் என் குடும்பம் ....!!!
பெற்றோரே எனக்கு...
புது ஆடை வேண்டாம் ...
சுற்றுலா பயணமும் வேண்டாம் ....
என் வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்கனும்...
அம்மா சிரிக்கணும் ..
அன்போடு என்னை முத்தமிடனும் ....
அப்பா சிரிக்கணும் பாசத்தோடு
என்னை தூக்கணும் ...
எங்கள் வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்டு ...
பலமாதங்கள் ஆகிவிட்டது ....!!!
பெற்றோரே ..
வேண்டாம் விவாக ரத்து ...
வேண்டாம் தொலைக்காட்சியில் ....
குடும்ப பிரச்சனை தீர்வு நிகழ்ச்சி ....
முடிந்தால் எனக்காக வாழுங்கள் ....!!!
என் தோழிகளின் பெற்றோர்
போல் வாழுங்கள்
முடியவில்லையம்மா
என்னால் தாங்க...!!!
இரு கரம் கூப்பி கேட்கிறேன்
" பிஞ்சு மனம் கெஞ்சி கேட்கிறேன் "
எங்கள் வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்கட்டும் ....???
Re: பிஞ்சு மனம் கெஞ்சிக்கேட்கிறது ....!!!
கூட்டு குடும்பம் தவிர்த்ததின் விளைவு இது. தனி குடும்பங்கள் பெருகிய நிலையில், பெற்றோர் இருவரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேலை பார்க்க வேண்டிய நிலையில், இத்தகைய சோகங்கள் தவிர்க்க முடியாதவை. இன்று உன் பிள்ளையை தவிக்க விட்டால் நாளை உனக்கு முதியோர் இல்லம்தான். இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
Re: பிஞ்சு மனம் கெஞ்சிக்கேட்கிறது ....!!!
sreemuky wrote:கூட்டு குடும்பம் தவிர்த்ததின் விளைவு இது. தனி குடும்பங்கள் பெருகிய நிலையில், பெற்றோர் இருவரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேலை பார்க்க வேண்டிய நிலையில், இத்தகைய சோகங்கள் தவிர்க்க முடியாதவை. இன்று உன் பிள்ளையை தவிக்க விட்டால் நாளை உனக்கு முதியோர் இல்லம்தான். இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
அருமையாக சொன்னீர்கள்
Re: பிஞ்சு மனம் கெஞ்சிக்கேட்கிறது ....!!!
தனக்கு மிஞ்சிதான் தான தருமம் என்பதை
பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும்...!!
-
பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும்...!!
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சிறந்த மனம் சேவை மனம்
» பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!!
» வெண்டை பிஞ்சு - கத்தரி சூப்
» பிஞ்சு மனசுல இப்பவே கஷ்டங்களை திணிக்கவேண்டாம்.
» பூனை மனம்
» பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!!
» வெண்டை பிஞ்சு - கத்தரி சூப்
» பிஞ்சு மனசுல இப்பவே கஷ்டங்களை திணிக்கவேண்டாம்.
» பூனை மனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|