Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கூன் முதுகை மேம்படுத்த உதவும் மருந்துகள்
Page 1 of 1 • Share
கூன் முதுகை மேம்படுத்த உதவும் மருந்துகள்
ஹெச்.எல்.ஏ. பி27-ல் பாசிட்டிவ் ருமாட்டிசம் என்ற நோயால் நான் அவதிப்பட்டு வருகிறேன். எனது ரத்த இ.எஸ்.ஆர். அளவு 80க்கு மேல் இருக்கிறது. என் உடல் முழுவதும் உள்ள மூட்டு இணைப்புகளில் கடுமையான வலி உள்ளது. இந்த வலிகளில் இருந்து விடுபடுவது எப்படி?
- சரவணன், மின்னஞ்சல்
ஆண்களுக்குப் பொதுவாக ஏற்படும் தண்டுவடக் கூன் வாதத்துக்கு Ankylosing spondylitis என்று பெயர். Ankylosing என்றால் இணைதல் அல்லது ஒட்டுதல் என்று பொருள். spondylitis என்றால் தண்டுவட எலும்பு அழற்சி என்று பொருள். இந்த நிலையில் தண்டுவடமானது அசையும் தன்மை குறைந்து, இறுகிவிடும். அவர்களால் தண்டுவட எலும்புகளைச் சரியாக அசைக்க முடியாது. முன்னோக்கி வளைந்து கூன் போட்டது போலக் காணப்படுவார்கள். மூச்சு விடுவதற்குச் சிரமமாக இருக்கும். பெண்களைக் காட்டிலும் ஆண்களையே இது அதிகம் பாதிக்கிறது.
சிலருக்கு இளம் வயதிலேயே இது வரும். முதுகு வலியோடு வரும் இந்த நோயாளிகளுக்கு, disc disease இருப்பதாகப் பல மருத்துவர்கள் தவறாகக் கருதிவிடுவது உண்டு.
இந்த மாதிரி நோயாளிகளிடம் தலையில் பொடுகு உள்ளதா, கண் சிவக்கிறதா, மாலை வேளைகளில் காய்ச்சல் உள்ளதா, வாய்ப்புண் உள்ளதா, சிறுநீர் போகும்போது எரிச்சல் உள்ளதா, குதிகால் வலி உள்ளதா, காய்ச்சல் வந்த பிறகு இந்த நோய் குறியீடுகள் தொடங்கினவா என்பதையெல்லாம் விசாரிக்க வேண்டும். குறிப்பாக sacroiliac joint என்று சொல்லக்கூடிய முதுகின் கீழ்ப்பகுதியில் இருக்கும் எலும்புகளில் வலி உள்ளதா என்பதைக் கேட்க வேண்டும்.
HLAB27 என்கின்ற பரிசோதனையை இதற்குப் பார்ப்பார்கள், இது மரபணு சார்ந்தது. இந்த HLAB27 மரபணு உள்ளவர்கள் இந்த Ankylosing spondylitis தண்டுவட எலும்பு கூன்வாதம் வருவதற்கு அதிக வாய்ப்பைக் கொண்டவர்கள். இந்த நோய் முற்றும் நிலையில் புதிய எலும்புத் தோற்றங்கள் உருவாகும். xray எடுத்துப் பார்க்கும்போது மூங்கில் குருத்து போல் காட்சியளிக்கும். இதை bamboo spine என்று சொல்வார்கள். இந்த நோயில் கண்ணில் திடீரென்று வலி வரலாம். வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் போகலாம். கண் மங்கலாம். இந்த நோய்களுக்கு நீச்சல் மிகச் சிறந்த பயிற்சி, மூச்சுப் பயிற்சிகளும் சிறந்தவை. ஆயுர்வேதத்தில் வாத ரக்த நோயின் ஒரு பிரிவாகக் கருதப்பட்டுச் சிகிச்சை தரப்படுகிறது.
வாத ரக்த நோயாளிகளுக்கு மூலிகைகளால் காய்ச்சப்பட்ட நெய்யைக் கொடுத்து வியர்வை சிகிச்சை செய்து, பேதிக்கு மருந்து கொடுத்து, எனிமா கொடுத்து, அதற்குப் பின் மருந்துகளைக் கொடுக்க வேண்டும். சீந்தில், சிற்றரத்தை, சேராங்கொட்டை, மஞ்சிஷ்டா போன்ற மருந்துகள் இதற்கு நல்ல பலன் அளிக்கும்.
இதற்குப் பிறகு சியவன பிராசம் எனப்படும் நெல்லிக்காய் லேகியத்தைச் சாப்பிடலாம். வெளியே வலி குறைய அதிமதுர எண்ணெய், பிண்டத் தைலம் போன்றவை பலன் அளிக்கும். சீந்தில் கொடி (Tinospora Cordifolia) முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிறது. ஆமணக்கு விதை, சதகுப்பை, எள்ளு, கொள்ளு போன்றவற்றைப் புளி நீரில் காய்ச்சிப் பற்று போட்டால், உடனே வலி குறையும். மூச்சுப் பயிற்சியும், நீச்சல் பயிற்சியும் இதற்கு மிகவும் முக்கியமானவை.
டாக்டர் எல். மகாதேவன்
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கூன் முதுகை மேம்படுத்த உதவும் மருந்துகள்
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கூன் முதுகை மேம்படுத்த உதவும் மருந்துகள்
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கூன் முதுகை மேம்படுத்த உதவும் மருந்துகள்
» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
» தனி நபர் திறனை மேம்படுத்த உதவும் 10 வழிமுறைகள்
» கூன் விழுவதற்கான காரணிகள்
» கூன் விழுவதற்கான காரணிகளும் தடுப்பதற்கான பாதுகாப்புமுறையும்
» வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நற்சிந்தனைகள் !!!
» தனி நபர் திறனை மேம்படுத்த உதவும் 10 வழிமுறைகள்
» கூன் விழுவதற்கான காரணிகள்
» கூன் விழுவதற்கான காரணிகளும் தடுப்பதற்கான பாதுகாப்புமுறையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|