தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சர்க்கரை நோய் தினம் வாழ்க்கை இனிப்பாகட்டும்!

View previous topic View next topic Go down

சர்க்கரை நோய் தினம் வாழ்க்கை இனிப்பாகட்டும்! Empty சர்க்கரை நோய் தினம் வாழ்க்கை இனிப்பாகட்டும்!

Post by நாஞ்சில் குமார் Sat Nov 15, 2014 10:33 pm

‘மாஸ்டர் 3 டீ, அதுல ரெண்டு சக்கரை இல்லாம....’இன்று டீக்கடைகளில் அடிக்கடி இப்படி கேட்கலாம். ஒரு காலத்தில் ‘பணக்காரர்களின் வியாதி’  என்று சொல்லப்பட்ட சர்க்கரை நோய், இன்றைக்கு இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவுக்கு அதிகரித்துவிட்டது. 40 வயதை கடந்தவர்களுக்கு  மட்டுமே வந்த சர்க்கரை நோய், இன்று 20 வயதில் உள்ளவர்களையும் எளிதில் பாதிக்கும் அளவுக்கு வந்துவிட்டது. அதற்குக் காரணம், வாழ்க்கை  முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாறுதல்கள்தான்.

நமது உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. சார்லஸ்  பெஸ்ட் என்பவருடன் இணைந்து, பிரடெரிக் பான்டிங் என்பவர், 1921ம் ஆண்டில் சர்க்கரை நோய்க்கு பயன்படும் இன்சுலின் மருந்தைக்  கண்டுபிடித்தார். பான்டிங்கின் பிறந்த தினம் நவம்பர் 14. இந்த நாள்தான், உலக அளவில் இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்குவதற்காக  ‘உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்‘ என ஐக்கிய நாடுகள் சபையால் 2006 முதல் கடைபிடிக்கப்படுகிறது.

அடிக்கடி தாகம், சிறுநீர் கழித்தல், பசி ஆகிய மூன்றுமே சர்க்கரை நோயின் அறிகுறிகள். சர்க்கரை நோய்க்கு மிக முக்கிய காரணம் உடல் பருமன்.  இதில் டைப்1, டைப்2 மற்றும் கர்ப்பக் கால சர்க்கரை நோய் என்று மூன்று வகை உள்ளன. இதைத்தவிர, ‘சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை’ என்று  சொல்லக்கூடிய ‘ப்ரீ டயாபீட்டிஸ்’ வகையும் உள்ளது. உடல், இன்சுலினை முற்றிலும் சுரக்காத நிலையை டைப்1 சர்க்கரை நோய் என்கிறோம்.  பெரும்பாலும் குழந்தைகளுக்கே இது ஏற்படுகிறது. உலக அளவில் காணப்படும் 90 சதவிகித சர்க்கரை நோயாளிகள், இந்த வகையைச்  சேர்ந்தவர்கள்தான். உடலானது இன்சுலினை உற்பத்தி செய்யும்.

ஆனால், அது குறைந்த அளவாகவோ அல்லது தேவையான ஆற்றல் இல்லாததாகவோ இருக்கும். பெரும்பாலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த  நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. பெண்கள் சிலருக்கு, கர்ப்பக் காலத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதை  ஈடுகட்டும் வகையில், கணையத்தால் இன்சுலின் சுரக்க முடியாமல் போகும். இதையே ‘கர்ப்பக் கால சர்க்கரை நோய்’ என்கிறோம். சர்க்கரை  நோயாளிகளைவிட, ப்ரீ டயாபடீஸ் நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களுக்கு சர்க்கரை நோய் எந்நேரமும் வரலாம்.

இவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு என்பது சராசரிக்கும் அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் சர்க்கரை நோய் என்று குறிப்பிடும் அளவுக்குக்  குறைவாக இருக்கும். இவர்கள் எச்சரிக்கையாக இருந்தால், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். இந்த நான்கு நிலையிலும்  இருப்பவர்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மிகமிக அவசியம். முதல் மூன்று நிலைகளில் இருப்பவர்களுக்கு மருந்து, மாத்திரைகள்  தேவைப்படலாம். கூடுமான வரையிலும் உணவு மற்றும் உடற்பயிற்சி மூலமாக கட்டுப்படுத்துவதே நல்லது. எல்லை மீறும்போது, மருந்துகள்,  இன்சுலின் இவற்றை விட்டால் வேறு வழியில்லை.

இன்று உலகில் 38.2 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2035ம் ஆண்டில் 59.3 கோடியாக உயர வாய்ப்பிருப்பதாக  ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது 10ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும். 1970களில் நகர்ப்புறங்களில் 9 சதவீதம் பேரும்,  கிராமப்புறங்களில் 2 சதவீதம் பேரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இது தற்போது நகர்ப்புறங்களில் 20 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 10 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்களில்  50 சதவீதம் பேருக்கு இதய நோய்கள், கிட்னி பாதிப்புகள் உள்ளிட்ட நோய்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரைகளுடன் உணவுக்கட்டுப்பாடு, சீரான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருவோம். வாழ்க்கையை இனிப்பாக்கி கொள்வோம்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சர்க்கரை நோய் தினம் வாழ்க்கை இனிப்பாகட்டும்! Empty Re: சர்க்கரை நோய் தினம் வாழ்க்கை இனிப்பாகட்டும்!

Post by முரளிராஜா Sun Nov 16, 2014 11:40 am

சர்க்கரைநோயை பற்றிய தகவலுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சர்க்கரை நோய் தினம் வாழ்க்கை இனிப்பாகட்டும்! Empty Re: சர்க்கரை நோய் தினம் வாழ்க்கை இனிப்பாகட்டும்!

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 18, 2014 7:06 am

பகிர்வுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சர்க்கரை நோய் தினம் வாழ்க்கை இனிப்பாகட்டும்! Empty Re: சர்க்கரை நோய் தினம் வாழ்க்கை இனிப்பாகட்டும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum