Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வீட்டுக்குள் ஒரு சாமியார்
Page 1 of 1 • Share
வீட்டுக்குள் ஒரு சாமியார்
தினமும் வாக்கிங் போகிறபோது நம்ம ஆள் ஒருத்தரைத் துணைக்குக் கூட்டிக்கிட்டுப் போறது வழக்கம். கொஞ்ச நாளாக நடராஜன் முகத்திலே தெம்பில்லை. (வாக்கிங் சினேகிதன் பேர்தான் நடராஜன்).
அவரைத் துருவினபோது தெரிஞ்சது - அவருடைய சோகத்துக்குக் காரணம் - அவர் சம்சாரத்தின் நடத்தைதான்னு. அவள் ரொம்ப மாறிவிட்டாளாம்.
''வீட்டிலே ரெண்டு பொண்ணுங்க இருக்கு. அதுங்களுக்கு தலை பின்னி விடறது, சமைக்கறது ஆகிய வேலைங்களைங்கூடச் செய்யறது இல்லை. சதா காலமும் பூஜை, விரதம், கோயில் சுத்தறது, காலட்சேபம் இப்படித்தான் நாள் பூராவையும் செலவு செய்வாள்'' என்று நண்பர் அங்கலாய்த்தார்.
''வயசு நாற்பதுதான் ஆகுது அதுக்குள்ளே இவ்வளவு பக்தியா?'' என்று நொந்து கொண்டார்.
''பக்தியாயிருக்கிறது நல்லதுதானே? சினிமா கினிமா ஷாப்பிங் கீப்பிங்னு ஊர் சுற்றினாத் தப்பு. கோயில் குளம்தானே போறாங்க,'' என்றேன்.
''ஏப்பா, அது அதுக்கு ஒரு அளவில்லையா? கோவிலைச் சுத்தறது நல்லதுதான். அதுக்குன்னு தினம் விடியக் காலை அஞ்சு மணிக்கெல்லாம் குளிச்சிட்டு தலையைத் துடைத்துக் கொள்ளாமல் ஈரம் சொட்டச் சொட்ட நூற்றெட்டு சுற்று சுற்றுகிறாள். பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிற அத்தனை விரதங்களையும் ஒன்று விடாமல் கடைப்பிடிக்கிறாள். மாசத்தில் பாதி நாள் அரைப் பட்டினி மீதிப் பாதி நாள் முழுப் பட்டினி. எப்போ பார்த்தாலும் வீட்டிலே வித விதமான சுலோகங்கள் படித்துக்கொண்டே இருக்கிறது, ஜபம் பண்றது, தினமும் காலையில் ரெண்டு மணி நேரம் பூஜை செய்யறது... எனக்குப் பயம்மாயிருக்கு ராம்,'' என்றார் நண்பர்.
''என்ன பயம்?''
''எங்காவது சாமியாராப் போயிடப் போறாளோ என்றுதான் பயமாயிருக்கு. தலைவாரிக் கொள்றது இல்லை. மனசிலே சாரதாமணி தேவின்னு நினைப்பு. அவளுக்குப் பக்தைகள்னு சிலபேர் வர ஆரம்பிச்சிருக்காங்க. பெயரும் ஏற்கனவே தெய்வநாயகி ஆச்சா? செளகரியமாப் போச்சு. 'தெய்வம்! தெய்வம்னு!' கூப்பிட்டுகிட்டு அடிக்கடி வந்துடறாங்க.''
''உனக்கு இடைஞ்சலாக இருக்காக்கும்?'' என்றேன்.
''வீட்டைத் துறந்து கும்பலாகக் காசி, அரித்துவார்னு போயிடுவாளோ என்று பயமாயிருக்குது.''
நான் நண்பர் வீட்டுக்கு என் பிஸினஸ் விஷயமாகப் போகும்படி ஆயிற்று. நல்லகாலம், நான் போன சமயம் வீட்டிலே 'தெய்வம்' இல்லை. யார் வீட்டுக்கோ பாத பூஜை ஏற்றுக்கொள்ளப் போயிருப்பதாக நண்பர் கூறினார். பீரோ மேலிருந்த ஒரு பெரிய தோல் பெட்டியை இறக்கி எனக்குத் தேவையான தஸ்தாவேஜுகளைக் காட்டினார்.
வருஷா வருஷம் இந்த ஸீஸனில் என் மூலமாக சில பல லட்சத்துக்கு ·பிக்ஸட் டிபாஸிட் அவர் போடுவார். நான் நம்பகமான நிறுவனங்களில் டெபாசிட்டுக்கு ஏற்பாடு செய்து தருவேன். சிறு கமிஷனும் அவர் தருவார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே 'தெய்வம்' வீடு திரும்பிவிட்டாள்.
நான் மரியாதையாக வணங்கினேன். தெய்வம் சாதாரணமானவளாக இருந்தபோதே எனக்குத் தெரியும். நான் ஜாதகம் பார்த்துத்தான் அவர்கள் திருமணமே நடந்தது.
''இருங்கோ, காப்பி கொண்டு வர்ரேன்,'' என்று தெய்வம் காப்பி கொண்டு வந்து தந்தாள்.
கிளம்பும்போது என்னுடன் கூடவே வாசல் வரை வந்தாள். கணவனிடம் ''நான் மாமாகிட்டே கொஞ்சம் தனியாப் பேசணும் நீங்க உள்ளே இருங்க,'' என்றாள்.
அவள் என்கிட்டே இரண்டொரு கேள்வி கேட்டாள். பதில் சொன்னேன்.
ராத்திரி எட்டு மணி சுமாருக்கு நண்பர் என்னைத் தேடி வீட்டுக்கு வந்தார்.
''தெய்வம் உன்கிட்டே என்ன கேட்டது?''
நான் சொன்னேன் ''உன் பயத்தை விட்டுவிடு. உன் சம்சாரம் ஒரு நாளும் சாமியாராகிவிட மாட்டாள். கவலையில்லாமலிரு,'' என்றேன்.
''தெய்வம் என்ன சொல்லித்து. சொல்லலாம்னா சொல்லு. தெய்வ குத்தம் ஆயிடப் போறது?''
''ஒரு குத்தமும் ஆகாது. உன் சம்சாரம் சகல பந்தங்களையும் துறந்து சாமியார் ஆகிவிடுவாளோன்னு நீ பயப்பட வேண்டாம்'' என்றேன்.
''எப்படி சொல்கிறே?''
''எல்லா பாங்க் டெபாசிட்டையும் தெய்வம் பார்த்தாள். பாதியை தன் பேருக்கு மாற்றச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்!'' என்றேன்.
''இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு'' என்றார் நண்பர்.
அருட்பிரகாச வள்ளலார் சரியாகத்தான் பாடியிருக்கிறார். "சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நற்றவமெலாம் சுருங்கி, ஆற்றிலே கரைத்த புளியெனப் போம்"
பாக்கியம் ராமசாமி
அவரைத் துருவினபோது தெரிஞ்சது - அவருடைய சோகத்துக்குக் காரணம் - அவர் சம்சாரத்தின் நடத்தைதான்னு. அவள் ரொம்ப மாறிவிட்டாளாம்.
''வீட்டிலே ரெண்டு பொண்ணுங்க இருக்கு. அதுங்களுக்கு தலை பின்னி விடறது, சமைக்கறது ஆகிய வேலைங்களைங்கூடச் செய்யறது இல்லை. சதா காலமும் பூஜை, விரதம், கோயில் சுத்தறது, காலட்சேபம் இப்படித்தான் நாள் பூராவையும் செலவு செய்வாள்'' என்று நண்பர் அங்கலாய்த்தார்.
''வயசு நாற்பதுதான் ஆகுது அதுக்குள்ளே இவ்வளவு பக்தியா?'' என்று நொந்து கொண்டார்.
''பக்தியாயிருக்கிறது நல்லதுதானே? சினிமா கினிமா ஷாப்பிங் கீப்பிங்னு ஊர் சுற்றினாத் தப்பு. கோயில் குளம்தானே போறாங்க,'' என்றேன்.
''ஏப்பா, அது அதுக்கு ஒரு அளவில்லையா? கோவிலைச் சுத்தறது நல்லதுதான். அதுக்குன்னு தினம் விடியக் காலை அஞ்சு மணிக்கெல்லாம் குளிச்சிட்டு தலையைத் துடைத்துக் கொள்ளாமல் ஈரம் சொட்டச் சொட்ட நூற்றெட்டு சுற்று சுற்றுகிறாள். பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிற அத்தனை விரதங்களையும் ஒன்று விடாமல் கடைப்பிடிக்கிறாள். மாசத்தில் பாதி நாள் அரைப் பட்டினி மீதிப் பாதி நாள் முழுப் பட்டினி. எப்போ பார்த்தாலும் வீட்டிலே வித விதமான சுலோகங்கள் படித்துக்கொண்டே இருக்கிறது, ஜபம் பண்றது, தினமும் காலையில் ரெண்டு மணி நேரம் பூஜை செய்யறது... எனக்குப் பயம்மாயிருக்கு ராம்,'' என்றார் நண்பர்.
''என்ன பயம்?''
''எங்காவது சாமியாராப் போயிடப் போறாளோ என்றுதான் பயமாயிருக்கு. தலைவாரிக் கொள்றது இல்லை. மனசிலே சாரதாமணி தேவின்னு நினைப்பு. அவளுக்குப் பக்தைகள்னு சிலபேர் வர ஆரம்பிச்சிருக்காங்க. பெயரும் ஏற்கனவே தெய்வநாயகி ஆச்சா? செளகரியமாப் போச்சு. 'தெய்வம்! தெய்வம்னு!' கூப்பிட்டுகிட்டு அடிக்கடி வந்துடறாங்க.''
''உனக்கு இடைஞ்சலாக இருக்காக்கும்?'' என்றேன்.
''வீட்டைத் துறந்து கும்பலாகக் காசி, அரித்துவார்னு போயிடுவாளோ என்று பயமாயிருக்குது.''
நான் நண்பர் வீட்டுக்கு என் பிஸினஸ் விஷயமாகப் போகும்படி ஆயிற்று. நல்லகாலம், நான் போன சமயம் வீட்டிலே 'தெய்வம்' இல்லை. யார் வீட்டுக்கோ பாத பூஜை ஏற்றுக்கொள்ளப் போயிருப்பதாக நண்பர் கூறினார். பீரோ மேலிருந்த ஒரு பெரிய தோல் பெட்டியை இறக்கி எனக்குத் தேவையான தஸ்தாவேஜுகளைக் காட்டினார்.
வருஷா வருஷம் இந்த ஸீஸனில் என் மூலமாக சில பல லட்சத்துக்கு ·பிக்ஸட் டிபாஸிட் அவர் போடுவார். நான் நம்பகமான நிறுவனங்களில் டெபாசிட்டுக்கு ஏற்பாடு செய்து தருவேன். சிறு கமிஷனும் அவர் தருவார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே 'தெய்வம்' வீடு திரும்பிவிட்டாள்.
நான் மரியாதையாக வணங்கினேன். தெய்வம் சாதாரணமானவளாக இருந்தபோதே எனக்குத் தெரியும். நான் ஜாதகம் பார்த்துத்தான் அவர்கள் திருமணமே நடந்தது.
''இருங்கோ, காப்பி கொண்டு வர்ரேன்,'' என்று தெய்வம் காப்பி கொண்டு வந்து தந்தாள்.
கிளம்பும்போது என்னுடன் கூடவே வாசல் வரை வந்தாள். கணவனிடம் ''நான் மாமாகிட்டே கொஞ்சம் தனியாப் பேசணும் நீங்க உள்ளே இருங்க,'' என்றாள்.
அவள் என்கிட்டே இரண்டொரு கேள்வி கேட்டாள். பதில் சொன்னேன்.
ராத்திரி எட்டு மணி சுமாருக்கு நண்பர் என்னைத் தேடி வீட்டுக்கு வந்தார்.
''தெய்வம் உன்கிட்டே என்ன கேட்டது?''
நான் சொன்னேன் ''உன் பயத்தை விட்டுவிடு. உன் சம்சாரம் ஒரு நாளும் சாமியாராகிவிட மாட்டாள். கவலையில்லாமலிரு,'' என்றேன்.
''தெய்வம் என்ன சொல்லித்து. சொல்லலாம்னா சொல்லு. தெய்வ குத்தம் ஆயிடப் போறது?''
''ஒரு குத்தமும் ஆகாது. உன் சம்சாரம் சகல பந்தங்களையும் துறந்து சாமியார் ஆகிவிடுவாளோன்னு நீ பயப்பட வேண்டாம்'' என்றேன்.
''எப்படி சொல்கிறே?''
''எல்லா பாங்க் டெபாசிட்டையும் தெய்வம் பார்த்தாள். பாதியை தன் பேருக்கு மாற்றச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்!'' என்றேன்.
''இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு'' என்றார் நண்பர்.
அருட்பிரகாச வள்ளலார் சரியாகத்தான் பாடியிருக்கிறார். "சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நற்றவமெலாம் சுருங்கி, ஆற்றிலே கரைத்த புளியெனப் போம்"
பாக்கியம் ராமசாமி
Similar topics
» குட்டி சாமியார் ஏன் டென்ஷனா இருக்கார்...?
» வீட்டுக்குள் அழகு நிலையம்!
» வீட்டுக்குள் செடி வளர்ப்போம்
» அவரு டிஜிட்டல் சாமியார்….!!
» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
» வீட்டுக்குள் அழகு நிலையம்!
» வீட்டுக்குள் செடி வளர்ப்போம்
» அவரு டிஜிட்டல் சாமியார்….!!
» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|