Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரிசப்ஷனா... தாமதமாகவே செல்லுங்கள்!
Page 1 of 1 • Share
ரிசப்ஷனா... தாமதமாகவே செல்லுங்கள்!
எந்த பங்ஷனும் லேட்டாகத்தான் ஆரம்பிப்பார்கள். ஆகவே நாம ஊருக்கு முன்னே போய் உட்கார்ந்துகொண்டு என்ன செய்வது என்பார்கள் சிலர். வாஸ்தவமான பேச்சு.
ரிஸப்ஷன் 6 மணிக்கு என்று போட்டிருந்தால் அதை அப்படியே எடுத்துக்கொண்டு விடக்கூடாது.
அது அதனுடைய லிஸ்ட் ப்ரைஸ். நாம் பேரம் செய்து குறைத்துக் கேட்கலாம்.
6 மணி போட்டிருந்தால் நாம் ஏழே முக்காலுக்குப் போகலாம். ரிஸப்ஷன் பெண் மேக்கப் செய்து கொண்டு வர எந்த பியூட்டி பார்லருக்கோ தனியார் அழகு விடுதிக்கோ போய் அலங்கோ அலங்கோ அலங்கரித்துக் கொண்டு ஏழே முக்காலுக்கு அந்த உருவம் வந்து சேரும.
ஒரே ஜிகினா மயம். பட்டுப் புடவையின் பளபளப்பு, போதாதென்று உடம்பு பூரா ஜிகினாப் பவுடர் மாதிரி எதையோ தூவிவிடுவார்கள்.
கர்நாடகத்துக்கும் நவ நாகரிகத்துக்கும், கிழக்குக் கலாசாரத்துக்கும் மேற்கத்திய நாகரிகத்துக்கும் நடக்கும் போரை அல்லது கலவரத்தை, கலகத்தை, கலக்கலை மணமகள் உடம்பில் பார்க்கலாம். வியர்த்துக் கொட்டும்.
பெடஸ்டல் விசிறி வைத்தால் மேக்கப்பை அலைக் கழிக்கும் என்பதால் கை விசிறியால் ஒரு வாண்டு 'அக்கா'வுக்கு விசிறக் கூடும்.
விசிறி முதுகில் இடித்தால், மணமகள் அதை நிறுத்தும்படி சமிக்ஞை செய்வாள். விசிறி வாண்டுவும் பொழச்சேண்டியக்கா
என்று சந்தோஷமாகத் தப்பி ஓடிவிடும்.
ஆறு மணியிலிருந்து ஏழரை வரை ரிஸப்ஷன். அப்புறம் டின்னர் என்று போட்டிருந்தாலும். ஏழரைக்கு முன்னதாகவே ஏழிலிருந்தே சாப்பாட்டு ஹால் மாடியிலா கீழேவா என்பது போன்ற கவலைகள் நம்மை அரிக்க ஆஜராகிவிடும்.
சில முன்னடைவுள்ளவர்கள் தானே சென்று கதவு சாத்தப்பட்ட ஹாலை நைஸாகத் திறந்து எட்டிப் பார்ப்பார்கள். பிறகு வெறுப்போடு ''இன்னும் கேசரி போண்டா க்ளாஸே முடியலை போலிருக்கு'' என்று ரிப்போர்ட் சமர்ப்பிப்பார்கள்.
சிலபேர் ரொம்ப உரிமை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட உறவினரிடமோ அல்லது உறவினர் என்று தப்பாக நினைத்துக்கொண்டு வேறு யாரிடமோ ''இலை போட இன்னும் நாழியாகுமா'' என்று கேட்டுவிடுவார்கள்.
கேட்கப்பட்டவரும் வாய்விட்டு ''ஆகும் ஒரு மணி நேரம். நீங்கள் சாயந்தரம் டி·பன் சாப்பிட்டீங்களோ?'' என்பார்.
'அதையும் கொட்டிக் கொண்டா இப்படி அலையறீர்?' என்ற எரிச்சலின் பாதிப்பு அவர் கேள்வி.
ஆகவே - திருமண ரிசப்ஷனுக்குப் போகும் விஷயங்களில் பரபரப்பு காட்ட வேண்டாம்.
நண்பன் நாராயணன் எந்த முகூர்த்தத்துக்கும் லேட்டாகத்தான் போவான். குறைந்தது ஒரு மணி தாமதமாக போவான்.
லேட்டாகப் போகிறவருக்கு ஒரு அனுகூலம் என்னவென்றால், சபை ஓரளவு கூடியிருக்கும். வாசலில் வரவேற்புக் குழுவாக நாலைந்து பேர் நின்றுகொண்டிருப்பார்கள், 'வாங்கோ, வாங்கோ' என்று ஊமைப்படம் மாதிரி சிரிப்பு ஆக்ஷன் காட்டி வரவேற்பார்கள்.
தாலி கட்டுவதற்கு பத்து நிமிடம் முன்னால் போதும் என்பான் நாராயணன். ஆனால் நான் அவன் பேச்சை நம்பி போகமாட்டான்.
ஏனென்றால் எப்போது தாலி கட்டுவார்கள் என்பதை அவ்வளவு சுலபமாக நிர்ணயிக்க முடியாது. அந்த விஷயம் புரோகிதர் ஒருத்தருக்குத்தான் தெரியும். இருபது லட்சம் செலவு செய்து திருமணம் பண்ணுகிற பெண்ணின் அப்பாவுக்கோ, தாலி கட்டப் போகிற மாப்பிள்ளைக்கோ, தாலி கட்டிக்கொள்ளப்போகிற பெண்ணுக்கோகூடத் தெரியாது.
திருமண அழைப்பில் எட்டிலிருந்து ஒன்பது முகூர்த்தம் என்று போட்டிருக்கும். ஓரொரு வாத்தியார் எட்டு ஐம்பத்தேழுக்கு தாலியைத் தூக்கி பையன் கையில் தருவார்.
சிலரோ (அவருக்கு இன்னொரு முகூர்த்த அவசரமாக இருக்கலாம்.) எட்டு மணி இரண்டு நிமிஷத்துக்கே முகூர்த்தத்தை முடித்து விடுவார். எட்டிலிருந்து ஒன்பதுக்குள் - இடைப்பட்ட அந்த அறுபது நிமிடத்திற்குள் எந்த நொடியிலும் தாலி கட்டக் கட்டளையிடும் சுதந்திரம் அதிகாரம் அவருக்கு உண்டு.
சிலபேர் டூ இன் ஒன்னைத் தவிர்ப்பதற்காக காலை டிபனுக்குப் போகாமல் ஒரேயடியாக சாப்பாட்டுக்கே நேராகப் போய்விடலாம் என்று ஒரு சொந்த காப்பியை மட்டும் குடித்துவிட்டு வந்து எப்போது சாப்பாடு போடுவார்கள் என்று கவா கவா என்று காத்திருப்பார்கள்.
சாதாரண விஷயத்துக்கெல்லாம் அவர்களுக்கு கோபம் கோபமாக வரும். கல்யாணத்தில் செய்யப்பட்டுள்ள சிறப்பான ஏற்பாடுகள் அவர்களுடைய கண்ணில் படாது.
அட்டைப் பெட்டி பழரசக் கோப்பைகள் அவர்களைத் தாண்டிப் போகிறபோது பாய்ந்து எடுத்துப் பருகுவார்கள்.
கூச்சநாச்சம் பார்க்காமல் இரண்டாவது மூன்றாவது ரவுண்டு கூட வழிமறித்துக் குடிப்பார்கள். யார் என்ன சொல்லுவது, யார் என்ன நினைத்துக்கொள்ளுவது? அவரவர் பசி அவரவருக்குத் தெரியும்.
'பத்து மணிக்கு இலை போடுகிறார்களாம்' என்று யாரும் கேட்காமலே டிரான்ஸ்சிஸ்டர் மாதிரி தானே பேசிக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் போவார்கள்.
லேட்டாகிக்கொண்டிருந்தால் எரிச்சல் அதிகமாகி சிலர், தான் கொண்டு வந்த மொய்ப் பணக் கவரிலிருந்து ஐம்பது, நூறு குறைத்துவிடுவார்கள்.
கல்யாணம் எப்படி என்று அந்த பசிப் பிராணிகளைக் கேட்டால் ''நன்னாயிருந்தது. ஆனால் அரேஞ்சுமெண்டு போதாது'' என்பார்கள்.
அரேஞ்சுமெண்டு என்று அவர்கள் குறிப்பிடுவது எட்டு ஐம்பத்தைந்துக்கு டிபன் செக்ஷன் முடிந்ததும் ஒன்பது மணிக்கு சாப்பாடு செக்ஷன் துவக்காததைப் பற்றித்தான்.
என்னைப் பொறுத்தவரையில் கல்யாண ரிஸப்ஷனுக்குப் போகுமுன் வயிற்றை ஓரளவாவது நிரப்பிக்கொண்டு போய் விடுவேன்.
அதனால் விருந்தை ருசித்துச் சாப்பிட முடியாமல் போய்விடும் என்பார்கள்.
பரவாயில்லை. சமையல் செய்த சமையல்காரருக்கு மதிப்பெண் போட்டு பரிசுக் கோப்பை தரவா நாம் போகிறோம்.
மணமக்களை மனதார வாழ்த்துவதற்குப் போகிறோம். வயிறு காலியாக இருந்தால் எரிச்சலுடன் வாழ்த்துவோமே என்பதற்காகத்தான் சாப்பாட்டுக்கு முன் அடிக்கடி ஜூஸ் அது இது என்று தருகிறார்கள்.
நண்பன் நாராயணனிடம் நான் சொன்னேன். அல்சர் காரணமாக உ னக்கு எரிச்சல் எற்பட்டால் கல்யாண வீட்டில்
எல்லாரிடமும் 'எனக்கு அல்சர் எனக்கு அல்சர்' என்று டமாரம் போடவேண்டாம். ஒரு கப் பாயசம் உடனடியாக
வரவழைத்து யாராவது தருவார்கள் என்ற எதிர்பார்ப்பெல்லாம் வேண்டாம். பாக்கெட்டில் நாலு பிஸ்கட்டை
பொட்டலம் கட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும்விட சிறப்பு கல்யாணத்துக்கோ ரிஸப்ஷனுக்கோ லேட்டாகப் போங்கள். ஆனால் பந்திக்கு முந்திக்கொள்ளுங்கள்.
பாக்கியம் ராமசாமி!
ரிஸப்ஷன் 6 மணிக்கு என்று போட்டிருந்தால் அதை அப்படியே எடுத்துக்கொண்டு விடக்கூடாது.
அது அதனுடைய லிஸ்ட் ப்ரைஸ். நாம் பேரம் செய்து குறைத்துக் கேட்கலாம்.
6 மணி போட்டிருந்தால் நாம் ஏழே முக்காலுக்குப் போகலாம். ரிஸப்ஷன் பெண் மேக்கப் செய்து கொண்டு வர எந்த பியூட்டி பார்லருக்கோ தனியார் அழகு விடுதிக்கோ போய் அலங்கோ அலங்கோ அலங்கரித்துக் கொண்டு ஏழே முக்காலுக்கு அந்த உருவம் வந்து சேரும.
ஒரே ஜிகினா மயம். பட்டுப் புடவையின் பளபளப்பு, போதாதென்று உடம்பு பூரா ஜிகினாப் பவுடர் மாதிரி எதையோ தூவிவிடுவார்கள்.
கர்நாடகத்துக்கும் நவ நாகரிகத்துக்கும், கிழக்குக் கலாசாரத்துக்கும் மேற்கத்திய நாகரிகத்துக்கும் நடக்கும் போரை அல்லது கலவரத்தை, கலகத்தை, கலக்கலை மணமகள் உடம்பில் பார்க்கலாம். வியர்த்துக் கொட்டும்.
பெடஸ்டல் விசிறி வைத்தால் மேக்கப்பை அலைக் கழிக்கும் என்பதால் கை விசிறியால் ஒரு வாண்டு 'அக்கா'வுக்கு விசிறக் கூடும்.
விசிறி முதுகில் இடித்தால், மணமகள் அதை நிறுத்தும்படி சமிக்ஞை செய்வாள். விசிறி வாண்டுவும் பொழச்சேண்டியக்கா
என்று சந்தோஷமாகத் தப்பி ஓடிவிடும்.
ஆறு மணியிலிருந்து ஏழரை வரை ரிஸப்ஷன். அப்புறம் டின்னர் என்று போட்டிருந்தாலும். ஏழரைக்கு முன்னதாகவே ஏழிலிருந்தே சாப்பாட்டு ஹால் மாடியிலா கீழேவா என்பது போன்ற கவலைகள் நம்மை அரிக்க ஆஜராகிவிடும்.
சில முன்னடைவுள்ளவர்கள் தானே சென்று கதவு சாத்தப்பட்ட ஹாலை நைஸாகத் திறந்து எட்டிப் பார்ப்பார்கள். பிறகு வெறுப்போடு ''இன்னும் கேசரி போண்டா க்ளாஸே முடியலை போலிருக்கு'' என்று ரிப்போர்ட் சமர்ப்பிப்பார்கள்.
சிலபேர் ரொம்ப உரிமை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட உறவினரிடமோ அல்லது உறவினர் என்று தப்பாக நினைத்துக்கொண்டு வேறு யாரிடமோ ''இலை போட இன்னும் நாழியாகுமா'' என்று கேட்டுவிடுவார்கள்.
கேட்கப்பட்டவரும் வாய்விட்டு ''ஆகும் ஒரு மணி நேரம். நீங்கள் சாயந்தரம் டி·பன் சாப்பிட்டீங்களோ?'' என்பார்.
'அதையும் கொட்டிக் கொண்டா இப்படி அலையறீர்?' என்ற எரிச்சலின் பாதிப்பு அவர் கேள்வி.
ஆகவே - திருமண ரிசப்ஷனுக்குப் போகும் விஷயங்களில் பரபரப்பு காட்ட வேண்டாம்.
நண்பன் நாராயணன் எந்த முகூர்த்தத்துக்கும் லேட்டாகத்தான் போவான். குறைந்தது ஒரு மணி தாமதமாக போவான்.
லேட்டாகப் போகிறவருக்கு ஒரு அனுகூலம் என்னவென்றால், சபை ஓரளவு கூடியிருக்கும். வாசலில் வரவேற்புக் குழுவாக நாலைந்து பேர் நின்றுகொண்டிருப்பார்கள், 'வாங்கோ, வாங்கோ' என்று ஊமைப்படம் மாதிரி சிரிப்பு ஆக்ஷன் காட்டி வரவேற்பார்கள்.
தாலி கட்டுவதற்கு பத்து நிமிடம் முன்னால் போதும் என்பான் நாராயணன். ஆனால் நான் அவன் பேச்சை நம்பி போகமாட்டான்.
ஏனென்றால் எப்போது தாலி கட்டுவார்கள் என்பதை அவ்வளவு சுலபமாக நிர்ணயிக்க முடியாது. அந்த விஷயம் புரோகிதர் ஒருத்தருக்குத்தான் தெரியும். இருபது லட்சம் செலவு செய்து திருமணம் பண்ணுகிற பெண்ணின் அப்பாவுக்கோ, தாலி கட்டப் போகிற மாப்பிள்ளைக்கோ, தாலி கட்டிக்கொள்ளப்போகிற பெண்ணுக்கோகூடத் தெரியாது.
திருமண அழைப்பில் எட்டிலிருந்து ஒன்பது முகூர்த்தம் என்று போட்டிருக்கும். ஓரொரு வாத்தியார் எட்டு ஐம்பத்தேழுக்கு தாலியைத் தூக்கி பையன் கையில் தருவார்.
சிலரோ (அவருக்கு இன்னொரு முகூர்த்த அவசரமாக இருக்கலாம்.) எட்டு மணி இரண்டு நிமிஷத்துக்கே முகூர்த்தத்தை முடித்து விடுவார். எட்டிலிருந்து ஒன்பதுக்குள் - இடைப்பட்ட அந்த அறுபது நிமிடத்திற்குள் எந்த நொடியிலும் தாலி கட்டக் கட்டளையிடும் சுதந்திரம் அதிகாரம் அவருக்கு உண்டு.
சிலபேர் டூ இன் ஒன்னைத் தவிர்ப்பதற்காக காலை டிபனுக்குப் போகாமல் ஒரேயடியாக சாப்பாட்டுக்கே நேராகப் போய்விடலாம் என்று ஒரு சொந்த காப்பியை மட்டும் குடித்துவிட்டு வந்து எப்போது சாப்பாடு போடுவார்கள் என்று கவா கவா என்று காத்திருப்பார்கள்.
சாதாரண விஷயத்துக்கெல்லாம் அவர்களுக்கு கோபம் கோபமாக வரும். கல்யாணத்தில் செய்யப்பட்டுள்ள சிறப்பான ஏற்பாடுகள் அவர்களுடைய கண்ணில் படாது.
அட்டைப் பெட்டி பழரசக் கோப்பைகள் அவர்களைத் தாண்டிப் போகிறபோது பாய்ந்து எடுத்துப் பருகுவார்கள்.
கூச்சநாச்சம் பார்க்காமல் இரண்டாவது மூன்றாவது ரவுண்டு கூட வழிமறித்துக் குடிப்பார்கள். யார் என்ன சொல்லுவது, யார் என்ன நினைத்துக்கொள்ளுவது? அவரவர் பசி அவரவருக்குத் தெரியும்.
'பத்து மணிக்கு இலை போடுகிறார்களாம்' என்று யாரும் கேட்காமலே டிரான்ஸ்சிஸ்டர் மாதிரி தானே பேசிக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் போவார்கள்.
லேட்டாகிக்கொண்டிருந்தால் எரிச்சல் அதிகமாகி சிலர், தான் கொண்டு வந்த மொய்ப் பணக் கவரிலிருந்து ஐம்பது, நூறு குறைத்துவிடுவார்கள்.
கல்யாணம் எப்படி என்று அந்த பசிப் பிராணிகளைக் கேட்டால் ''நன்னாயிருந்தது. ஆனால் அரேஞ்சுமெண்டு போதாது'' என்பார்கள்.
அரேஞ்சுமெண்டு என்று அவர்கள் குறிப்பிடுவது எட்டு ஐம்பத்தைந்துக்கு டிபன் செக்ஷன் முடிந்ததும் ஒன்பது மணிக்கு சாப்பாடு செக்ஷன் துவக்காததைப் பற்றித்தான்.
என்னைப் பொறுத்தவரையில் கல்யாண ரிஸப்ஷனுக்குப் போகுமுன் வயிற்றை ஓரளவாவது நிரப்பிக்கொண்டு போய் விடுவேன்.
அதனால் விருந்தை ருசித்துச் சாப்பிட முடியாமல் போய்விடும் என்பார்கள்.
பரவாயில்லை. சமையல் செய்த சமையல்காரருக்கு மதிப்பெண் போட்டு பரிசுக் கோப்பை தரவா நாம் போகிறோம்.
மணமக்களை மனதார வாழ்த்துவதற்குப் போகிறோம். வயிறு காலியாக இருந்தால் எரிச்சலுடன் வாழ்த்துவோமே என்பதற்காகத்தான் சாப்பாட்டுக்கு முன் அடிக்கடி ஜூஸ் அது இது என்று தருகிறார்கள்.
நண்பன் நாராயணனிடம் நான் சொன்னேன். அல்சர் காரணமாக உ னக்கு எரிச்சல் எற்பட்டால் கல்யாண வீட்டில்
எல்லாரிடமும் 'எனக்கு அல்சர் எனக்கு அல்சர்' என்று டமாரம் போடவேண்டாம். ஒரு கப் பாயசம் உடனடியாக
வரவழைத்து யாராவது தருவார்கள் என்ற எதிர்பார்ப்பெல்லாம் வேண்டாம். பாக்கெட்டில் நாலு பிஸ்கட்டை
பொட்டலம் கட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும்விட சிறப்பு கல்யாணத்துக்கோ ரிஸப்ஷனுக்கோ லேட்டாகப் போங்கள். ஆனால் பந்திக்கு முந்திக்கொள்ளுங்கள்.
பாக்கியம் ராமசாமி!
Similar topics
» முன்னோக்கிச் செல்லுங்கள்
» முழுமையாகப் படித்துச் செல்லுங்கள்...
» பிரச்னைகளுடன் உறங்கச் செல்லுங்கள்! தீர்வுகளுடன் எழுந்து வாருங்கள் !
» வெள்ளை காகம் பார்க்க வேண்டுமா ? : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் !
» முழுமையாகப் படித்துச் செல்லுங்கள்...
» பிரச்னைகளுடன் உறங்கச் செல்லுங்கள்! தீர்வுகளுடன் எழுந்து வாருங்கள் !
» வெள்ளை காகம் பார்க்க வேண்டுமா ? : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|