தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆயுர்வேத வைத்திய முறைகள்

View previous topic View next topic Go down

ஆயுர்வேத வைத்திய முறைகள் Empty ஆயுர்வேத வைத்திய முறைகள்

Post by Guest Sat Sep 04, 2010 4:34 pm



பிழிச்சல் சிகிச்சை

இப்போது அலோபதி எனும் ஆங்கில மருத்துவ முறையையே பெரும்பாலானவர்கள் பின்பற்றினாலும், பின்விளைவு இல்லாத நிரந்தர ஆரோக்கியத்தை என்றும் தரக்கூடியது ஆயுர்வேதம் மட்டுமே என்கின்றனர் ஆயுர்வேத வைத்தியர்கள்.

ஆமாம் ஆயுர்வேத வைத்தியத்தின் வரலாறு தெரியுமா?

"வாழ்க்கையின் விஞ்ஞானம்" என்பதுதான் ஆயுர்வேதம். கிறிஸ்து பிறப்பதற்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஆயுர்வேத முறை பயன்பாட்டில் இருந்துள்ளது. மிக நீண்ட வரலாறு கொண்ட ஆயுர்வேதம் பல்வேறு நிலைகளில் பல மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது.

வேத காலத்தில் இந்தியாவில் சிறந்து விளங்கிய ஆயுர்வேதம் இந்தோனேஷியா, கிரேக்கம் போன்ற நாடுகளுக்கும் பரவியது. பிற நாடுகளில் இந்திய ஆயுர்வேதத்தை ஏற்றுக் கொண்டவர்கள், அதை தங்களுடைய தேவைகளுக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொண்டனர்.

இன்றைய உயரிய வசதிகள் இல்லாத அந்த காலக்கட்டத்தில் ஓலைச்சுவடிகளில் பெரும்பாலும் எழுதி வைக்கப்பட்ட இந்திய ஆயுர்வேத ரகசியங்கள் கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

நோய் வரும் முன் காப்பதையும், நோய் வந்த பின் என்னென்ன சிகிச்சை முறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பழங்கால ஆயுர்வேத நூல்கள் அழகாக தெரிவிக்கின்றன.

நோய்கள் தோன்றி மனிதகுலம் அவதிக்குள்ளாவதைக் கண்ட ரிஷிகளும், முனிவர்களும் தீவிரமாக யோசித்ததன் விளைவுதான் ஆயுர்வேதம் பிறப்பு. பரத்வாஜர் என்ற ரிஷி தேவேந்திரனிடம் ஆயுர்வேத முறையைக் கற்று, அதை மற்ற ரிஷிகளுக்கு கற்பித்தார். அவர்கள் தங்களது சீடர்களுக்கு அதை எடுத்துரைத்தனர். ஆயுர்வேதம் பற்றிய நூல்களும் எழுந்தன.

புனர்வசு ஆத்திரேயர் என்ற ரிஷியின் சீடரான அக்னி வேசர் எழுதிய அக்னிவேச சம்ஹிதையே ஆயுர்வேதத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது. இந்த அக்னிவேச சம்ஹிதையே "சரக சம்ஹிதை" என்று அழைக்கப்படுகிறது.

ஆயுர்வேத நூல்களில் மற்றொரு மிகச் சிறந்த நூலாகத் திகழ்கிறது, சுஷ்ருதரால் இயற்றப்பட்ட "சஷ்ருத சம்ஹிதை". புத்தர் வாழ்ந்த காலத்துக்கும் முற்பட்டவர் இந்த சுஷ்ருதர்.

- இப்படித்தான் ஆயுர்வேதம் தோன்றி வளர்ந்துள்ளது.

இதே ஆயுர்வேத முறையை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கேரள ஆயுர்வேத சிகிச்சை முறைகள் நம் நாட்டவரை மட்டுமின்றி, வெளிநாட்டவரையும் வெகுவாக ஈர்த்துள்ளன. இதனால்தான், இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் கேரளாவுக்குச் சென்று கேரள ஆயுர்வேத சிகிச்சை எடுத்துப் புதுப்பொலிவோடு திரும்புகின்றனர். இதனால், ஆரோக்கிய சுற்றுலாவில் (Healthu Tourism) முதன்மையாகத் திகழ்கிறது கேரளா.

கேரளாவில் அப்படி என்ன ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கிறார்கள்?

அப்யங்க ஸ்வேதனா

மிக எளிமையான சிகிச்சை முறைதான் இது. குறிப்பிட்டகால ஆரம்பக்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மூலிகை மருந்து கலந்த எண்ணெய் மற்றும் நீராவி குளியலுடன் மசாஜ் சிகிச்சை அளிப்பார்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், உடலை வலுப்படுத்தும், உடல் திசுக்களை உறுதிப்படுத்தும், நல்ல - ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.

பிழிச்சில்

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம்வரை உடலில் இளஞ்சூட்டில் எண்ணெய் விட்டு சிகிச்சை அளிக்கும் முறை இது. எலும்பு முறிவுகள், மூட்டு பிசகு, கை-கால் வலி மற்றும் விரைப்புத்தன்மை, பக்கவாதம், ருமாடிக் காய்ச்சல், ருமாய்ட்டோடு ஆர்த்தரைட்டிஸ் போன்ற பிரச்சினைகள் இந்த சிகிச்சையால் விலகும்.



தாரா சிகிச்சை

தாரா

ஒரு குறிப்பிட்ட மூலிகை எண்ணெய், மருந்து கலந்த பாலை தினமும் 45 நிமிடங்கள் முன் நெற்றியில் விசேஷமான முறையில் ஊற்றி சிகிச்சை அளிக்கும் முறையே இது. உடல், மனம் சமநிலை பெறுவதில் இந்த சிகிச்சை மிகவும் உதவுகிறது. உடல் பலமும், நினைவு திறனும் அதிகரிக்கிறது. அத்துடன் குரல் வளம் தெளிவாகிறது. கண் நோய்கள் தீருதல், தலைவலியில் இருந்து விடுதலை, ஆரோக்கியமான நல்ல தூக்கம், மென்மையான அழகான சருமம் பெறுதல்... போன்ற பல்வேறு நன்மைகளும் இந்த சிகிச்சையால் நமக்கு கிடைக்கின்றன.

நவரக்கிழி

பல்வேறு மருந்து கலவை கொண்ட துணிப்பை மூலம் உடலில் ஒற்றடம் கொடுத்து சிகிச்சை அளிக்கும் முறையே இது. இதன்மூலம் முழு உடலும் அல்லது உடலின் குறிப்பிட்ட பகுதிகள் வியர்க்க வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக உடலின் இறக்கம் குறைந்து மூட்டுகளின் விறைப்புத்தன்மை நீங்குகிறது. ரத்த ஓட்டமும் மேம்படுகிறது. தேகம் பொலிவு பெறுகிறது. அதிக தூக்கத்தால் உண்டாகும் அசதியும் விலகுவதோடு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகின்றன.

நஸ்யம்

இது ஒரு வித்தியாசமான சிகிச்சை முறை. மூலிகைச்சாறையும், மருந்துகள் கலந்த எண்ணெயையும் மூக்கின் வழியே விடுகிறார்கள். இதனால் ரத்த ஓட்டம் மேம்பட்டு உடல் உறுப்புகளுக்கு புது தெம்பு கிடைக்கிறது. அத்துடன், பல்வேறு நரம்புகளின் நுனிகள் தூண்டப்பட்டு மைய நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கிறது.

உத்வர்த்தனம்

இது மசாஜ் முறையிலான சிகிச்சை. மருந்து கலந்த பவுடரை உடலில் தூவி மசாஜ் செய்வார்கள். இதனால் தோற்றம் பொலிவு பெறுவதோடு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அகற்றப்படுகிறது. அதன்மூலம் உடல் எடை குறைகிறது. மேலும், நல்ல தூக்கம் கிடைத்து உடலும் புத்துணர்வு பெறுகிறது.

- வருடம் முழுவதும் உழைத்து உழைத்து மனதாலும், உடலாலும் தேய்ந்து போனவர்கள், கேரள ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இது கொஞ்சம் அதிகச் செலவுடைய சிகிச்சைதான் என்றாலும், பல நன்மைகளைத் தரக்கூடியது என்பதால் தாராளமாக எடுத்துக் கொள்ள முன்வரலாம்.

அதற்காகப் போலி ஆயுர்வேத சிகிச்சை மையங்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது.

இப்போதெல்லாம் கேரள ஆயுர்வேத சிகிச்சை முறைகள் சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் அளிக்கப்படுகின்றன. ஆனால், கேரளாவுக்குச் சென்று இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டால், அங்குள்ள இயற்கையோடு ஒன்றி லயிக்கலாம். கூடுதல் பலனும் கிடைக்கும்.

எனவே.. இந்த கோடை காலத்தில் கேரளாவுக்கு ஒருமுறை சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துத்தான் பாருங்களேன்...

Anonymous
Guest
Guest


Back to top Go down

ஆயுர்வேத வைத்திய முறைகள் Empty Re: ஆயுர்வேத வைத்திய முறைகள்

Post by Admin Sat Sep 04, 2010 9:41 pm

இப்படிப்பட்ட ஆயுர்வேத இயற்க்கை வைத்தியங்கள் இறைவன் நமக்கு அளித்துள்ளான் இருந்தாலும் இதை அவ்வளவு உபயோகிப்பது குறைவு......
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum