Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குட்டிக்கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
குட்டிக்கதை
ஒரு பக்தர், கடவுளை நினைத்துத் தவம் இருந்தார். பல நாள் கழித்துக் கடவுள் அவர்முன்னே தோன்றினார். ‘பக்தா,உன் தவத்தை மெச்சினோம், என்ன வரம் வேண்டும், கேள்!’
பக்தருக்கு உடம்பெல்லாம் பரவசம். கடவுளுக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு, ‘நிறைய செல்வம் வேண்டும்!’ என்றார்.
அப்படியே ஆகட்டும்!’ என்று ஆசிர்வாதம் செய்தார் கடவுள். மறுவிநாடி, அவரைக் காணவில்லை. ஆனால், செல்வமும் கிடைக்கவில்லை! பக்தர் குழம்பிப்போனார். ஒருவேளை, நாளைக்குக் கிடைக்குமோ என்று யோசித்தபடி வீட்டுக்கு வெளியே வந்து திண்ணையில் உட்கார்ந்தார். எதேச்சையாகத் தெருவைப் பார்த்தால் அங்கே ஒரு பெட்டி கிடந்தது. அக்கம்பக்கத்தில் யாரையும் காணோம்! ஆச்சர்யத்தோடு அந்தப் பெட்டியை நெருங்கினார் பக்தர். திறந்துபார்த்தார், உள்ளே முழுவதும் தங்கம், வெள்ளி, வைர நகைகள்!
அவர் படாரென்று பெட்டியை மூடினார். அதை வீட்டுக்குள் கொண்டுவந்தார். ’ஒருவேளை, இதுதான் கடவுள் சொன்ன செல்வமாக இருக்குமோ?’ ம்ஹூம், இது அநேகமாக யாரோ திருடிய சொத்து. நான் இதை விற்றுப் பணமாக்க முயற்சி செய்தால் போலிஸ் என்னைப் பிடித்து உள்ளே போட்டுவிடும்!’ என்றும் அவருடைய உள்மனது சொன்னது. இந்த விஷயத்தில் தெளிவான ஒரு முடிவெடுக்கமுடியாமல் திணறினார்.
அடுத்த ஒன்றிரண்டு நாள்கள் அவர் கவலையோடு சுற்றிக்கொண்டிருந்தார். கடைசியில் பிரச்னையே வேண்டாம் என்று அந்தப் பெட்டியைக் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டார். அன்று மாலை, அவர் தியானத்தில் அமர்ந்தபோது, கடவுள் அவர்முன்னே தோன்றினார். ‘பெட்டி நிறைய செல்வம் அனுப்பினேனே, பெற்றுக்கொண்டாயா?’ என்று கேட்டார்.
அச்சச்சோ! அது நீ அனுப்பினதா? சொல்லவே இல்ல!’ என்றார் பக்தர். ‘அதைப் போலிஸ்ல கொடுத்துட்டேனே!’
நீதான் அந்தப் பெட்டி கைக்கு வந்தபிறகு தியானமும் செய்யவில்லை, தவமும் செய்யவில்லை, ஒரு நிமிஷம் கண் மூடி நிற்கக்கூட இல்லை!’ என்று சிரித்தார் கடவுள். ‘செல்வம் கிடைப்பதற்கு முன்னால் மாதக்கணக்கில் தவம் செய்து என்ன புண்ணியம்? அது கிடைத்தபிறகு ஏற்பட்ட குழப்பத்தை உன்னால் தீர்க்கமுடியவில்லையே!’
மன்னிக்கவேண்டும் கடவுளே, இப்போது நான் என்ன செய்வது?’ புலம்பிய பக்தருக்குப் பதில் சொல்லக் கடவுள் அங்கே இல்லை!
தியானத்தை ஒரு வாழ்க்கை முறையாகக் கருதுவதுதான் ஜென். அப்படியில்லாமல் கடவுளிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்கான சாதனமாக அதை உபயோகித்தால் இதுபோன்ற விபரீதங்களைத் தவிர்க்கமுடியாது!
நன்றி
ஜெகநாதன்
பக்தருக்கு உடம்பெல்லாம் பரவசம். கடவுளுக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு, ‘நிறைய செல்வம் வேண்டும்!’ என்றார்.
அப்படியே ஆகட்டும்!’ என்று ஆசிர்வாதம் செய்தார் கடவுள். மறுவிநாடி, அவரைக் காணவில்லை. ஆனால், செல்வமும் கிடைக்கவில்லை! பக்தர் குழம்பிப்போனார். ஒருவேளை, நாளைக்குக் கிடைக்குமோ என்று யோசித்தபடி வீட்டுக்கு வெளியே வந்து திண்ணையில் உட்கார்ந்தார். எதேச்சையாகத் தெருவைப் பார்த்தால் அங்கே ஒரு பெட்டி கிடந்தது. அக்கம்பக்கத்தில் யாரையும் காணோம்! ஆச்சர்யத்தோடு அந்தப் பெட்டியை நெருங்கினார் பக்தர். திறந்துபார்த்தார், உள்ளே முழுவதும் தங்கம், வெள்ளி, வைர நகைகள்!
அவர் படாரென்று பெட்டியை மூடினார். அதை வீட்டுக்குள் கொண்டுவந்தார். ’ஒருவேளை, இதுதான் கடவுள் சொன்ன செல்வமாக இருக்குமோ?’ ம்ஹூம், இது அநேகமாக யாரோ திருடிய சொத்து. நான் இதை விற்றுப் பணமாக்க முயற்சி செய்தால் போலிஸ் என்னைப் பிடித்து உள்ளே போட்டுவிடும்!’ என்றும் அவருடைய உள்மனது சொன்னது. இந்த விஷயத்தில் தெளிவான ஒரு முடிவெடுக்கமுடியாமல் திணறினார்.
அடுத்த ஒன்றிரண்டு நாள்கள் அவர் கவலையோடு சுற்றிக்கொண்டிருந்தார். கடைசியில் பிரச்னையே வேண்டாம் என்று அந்தப் பெட்டியைக் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டார். அன்று மாலை, அவர் தியானத்தில் அமர்ந்தபோது, கடவுள் அவர்முன்னே தோன்றினார். ‘பெட்டி நிறைய செல்வம் அனுப்பினேனே, பெற்றுக்கொண்டாயா?’ என்று கேட்டார்.
அச்சச்சோ! அது நீ அனுப்பினதா? சொல்லவே இல்ல!’ என்றார் பக்தர். ‘அதைப் போலிஸ்ல கொடுத்துட்டேனே!’
நீதான் அந்தப் பெட்டி கைக்கு வந்தபிறகு தியானமும் செய்யவில்லை, தவமும் செய்யவில்லை, ஒரு நிமிஷம் கண் மூடி நிற்கக்கூட இல்லை!’ என்று சிரித்தார் கடவுள். ‘செல்வம் கிடைப்பதற்கு முன்னால் மாதக்கணக்கில் தவம் செய்து என்ன புண்ணியம்? அது கிடைத்தபிறகு ஏற்பட்ட குழப்பத்தை உன்னால் தீர்க்கமுடியவில்லையே!’
மன்னிக்கவேண்டும் கடவுளே, இப்போது நான் என்ன செய்வது?’ புலம்பிய பக்தருக்குப் பதில் சொல்லக் கடவுள் அங்கே இல்லை!
தியானத்தை ஒரு வாழ்க்கை முறையாகக் கருதுவதுதான் ஜென். அப்படியில்லாமல் கடவுளிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்கான சாதனமாக அதை உபயோகித்தால் இதுபோன்ற விபரீதங்களைத் தவிர்க்கமுடியாது!
நன்றி
ஜெகநாதன்
Re: குட்டிக்கதை
முள் மரம்
********
" என்ன முனியா? கையெல்லாம் இரத்தம்? " என்று வேலைக்காரனைப் பார்த்துக் கேட்டார் தணிகாசலம்.
" ஐயா! வாசலின் அருகே வளர்ந்திருந்த முள் மரத்தை வெட்டும்போது கையைக் கிழித்துவிட்டது." என்று சொன்னான் முனியன்.
' இதுக்குத்தான் அது செடியாக இருக்கும்போதே வெட்டிவிடு என்று சொன்னேன்; நீதான் கேட்கவில்லை. நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய செடியைக் கோடரி கொண்டு வெட்டும்படி செய்துவிட்டாய்! அதனால்தான் அது உன் கையைக் கிழித்துவிட்டது. எப்போதும் ஒரு தீமையை , அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும். தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்; ஞாபகத்தில் வைத்துக்கொள்." என்று முனியனுக்கு அறிவுரை வழங்கினார்.
பேசிக்கொண்டே இருந்த தணிகாசலம் திடீரென்று இருமத் தொடங்கினார். நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு இருமிக் கொண்டே வாஷ்பேஸின் அருகில் சென்றார். வாஷ்பேஸினில் எச்சிலைத் துப்பினார். அவர் துப்பிய எச்சிலில் இரத்தம் கலந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்பாவின் இருமல் சத்தம் கேட்டு அங்கு வந்த கீதா , அப்பா துப்பிய எச்சிலில் இரத்தம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
" என்ன அப்பா இது? குடிக்கவேண்டாம் என்று டாக்டர் பலமுறை சொல்லியும் கேட்காமல் குடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்; வியாதியை முற்ற விட்டுவிட்டீர்கள். இப்போது பார்த்தீர்களா?நீங்கள் இருமும்போது இரத்தம் வருகிறது. முனியனுக்கு நீங்கள் கூறிய அறிவுரை உங்களுக்கும் பொருந்தும்.எப்போதும் ஒரு தீமையை, அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும்;தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்." என்றால் கீதா.
கீதா சொல்லி முடிக்கும் முன்பாக , அவளுடைய அம்மா அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தாள். " பாவி மகளே! +2 தேர்வில் நீ எல்லாப் பாடத்திலும் பெயிலாகி விட்டாய் ; இப்பதான் இன்டர்நெட்டில் உன்னுடைய ரிசல்டைப் பார்த்தேன்; எதிர் வீட்டுப் பையனுடன் காதல், கத்திரிக்காய் என்று அலையாதேன்னு தலபாடாய் அடிச்சுகிட்டேனே! கேட்டாயா நீ! இந்த லட்சணத்துல அப்பாவுக்கு அறிவுரை சொல்ல வந்துட்டா! அப்பாவுக்கு நீ சொன்ன அறிவுரை உனக்கும் பொருந்தும். ஒரு தீமையை , அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும்; தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.ஞாபகத்தில் வைத்துக்கொள். " என்று கீதாவின் அம்மா பொரிந்து தள்ளினாள்.
குறள் :
=======
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.(பகைத்திறம் தெரிதல் -879 )
முட்செடியை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்;அது முற்றி வயிரம் பாய்ந்துவிட்டால், வெட்டுபவனின் கையைத் தைத்துத் துன்பப்படுத்தும்.
***********************
நன்றி ;இளமதி . (தனிமதி )
தமிழ் முற்றம் தளம்
********
" என்ன முனியா? கையெல்லாம் இரத்தம்? " என்று வேலைக்காரனைப் பார்த்துக் கேட்டார் தணிகாசலம்.
" ஐயா! வாசலின் அருகே வளர்ந்திருந்த முள் மரத்தை வெட்டும்போது கையைக் கிழித்துவிட்டது." என்று சொன்னான் முனியன்.
' இதுக்குத்தான் அது செடியாக இருக்கும்போதே வெட்டிவிடு என்று சொன்னேன்; நீதான் கேட்கவில்லை. நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய செடியைக் கோடரி கொண்டு வெட்டும்படி செய்துவிட்டாய்! அதனால்தான் அது உன் கையைக் கிழித்துவிட்டது. எப்போதும் ஒரு தீமையை , அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும். தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்; ஞாபகத்தில் வைத்துக்கொள்." என்று முனியனுக்கு அறிவுரை வழங்கினார்.
பேசிக்கொண்டே இருந்த தணிகாசலம் திடீரென்று இருமத் தொடங்கினார். நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு இருமிக் கொண்டே வாஷ்பேஸின் அருகில் சென்றார். வாஷ்பேஸினில் எச்சிலைத் துப்பினார். அவர் துப்பிய எச்சிலில் இரத்தம் கலந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்பாவின் இருமல் சத்தம் கேட்டு அங்கு வந்த கீதா , அப்பா துப்பிய எச்சிலில் இரத்தம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
" என்ன அப்பா இது? குடிக்கவேண்டாம் என்று டாக்டர் பலமுறை சொல்லியும் கேட்காமல் குடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்; வியாதியை முற்ற விட்டுவிட்டீர்கள். இப்போது பார்த்தீர்களா?நீங்கள் இருமும்போது இரத்தம் வருகிறது. முனியனுக்கு நீங்கள் கூறிய அறிவுரை உங்களுக்கும் பொருந்தும்.எப்போதும் ஒரு தீமையை, அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும்;தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்." என்றால் கீதா.
கீதா சொல்லி முடிக்கும் முன்பாக , அவளுடைய அம்மா அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தாள். " பாவி மகளே! +2 தேர்வில் நீ எல்லாப் பாடத்திலும் பெயிலாகி விட்டாய் ; இப்பதான் இன்டர்நெட்டில் உன்னுடைய ரிசல்டைப் பார்த்தேன்; எதிர் வீட்டுப் பையனுடன் காதல், கத்திரிக்காய் என்று அலையாதேன்னு தலபாடாய் அடிச்சுகிட்டேனே! கேட்டாயா நீ! இந்த லட்சணத்துல அப்பாவுக்கு அறிவுரை சொல்ல வந்துட்டா! அப்பாவுக்கு நீ சொன்ன அறிவுரை உனக்கும் பொருந்தும். ஒரு தீமையை , அது முளைவிடும் முன்னரே அழித்துவிட வேண்டும்; தீமையை வளரவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.ஞாபகத்தில் வைத்துக்கொள். " என்று கீதாவின் அம்மா பொரிந்து தள்ளினாள்.
குறள் :
=======
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.(பகைத்திறம் தெரிதல் -879 )
முட்செடியை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்;அது முற்றி வயிரம் பாய்ந்துவிட்டால், வெட்டுபவனின் கையைத் தைத்துத் துன்பப்படுத்தும்.
***********************
நன்றி ;இளமதி . (தனிமதி )
தமிழ் முற்றம் தளம்
Re: குட்டிக்கதை
கண்ணீர் சுவடுகள்
**************
"டேய் மாப்பு போச்சுடா" என்று அலறியபடி ஓடி வந்தான் ஜெய். "ஏன்டா இப்படி அடிச்சு பிரண்டு ஓடி வர்ற?" என்று ரமேஷ் கேட்டான் அலட்சியமாக. "ரிசல்ட் வந்துடுச்சுடா நோட்டீஸ் போர்ட்ல ஒட்டிருகானுகடா" என்றான் ஜெய் பதற்றமாய்.
ஐயோ என்றனர் நண்பர்கள் ஒன்றாய்." அது மட்டும் இல்லடா யாரெல்லாம் 3 பாடம் அதுக்கு மேல பெயில் ஆயிருக்கான்களோ அவங்க வீட்டுக்கு மார்க் சீட் அனுப்ப போறாங்களாம் டா.
அதுல நாம பாரென்ட் சைன் வாங்கிட்டு வரணுமம்டா". என்றான். உடனே கணேஷ் "சோதனை மேல் சோதனை" என்று பாட ஆரம்பித்தான்." வாங்கடா முதல்ல ரிசல்ட் பார்போம்" என்றான் விக்கி. சரிதாண்டா என்று எல்லாரும் ஓடினர் நோட்டீஸ் பார்க்க.
நால்வரும் எதோ 3 பாடத்தில் கோட்டை விட்டிருந்தனர். இப்போ என்னடா பண்றது என்று ஒருவர் முகத்தை ஒருவர் பாத்து கொண்டனர். "எங்கப்பா என் முதுகுல டின் கட்டிருவர்டா" என்றான் ஜெய். "போடா எங்கப்பா சும்மாவே ஸ்பானர் வச்சு கழட்டுவார்டா இந்த விஷயம் மட்டும் தெரிஞ்சுது சைலேன்செர் வைச்சு சுட்ட்ருவர்டா" என்றான் ரமேஷ் அழாத குறையாய்
. "பாருடா மெக்கானிக் பையன் நிரூபிக்றான் பாரு அடி வாங்குறதுல கூட ஸ்பேர் பார்ட்ஸ் பேரா உதிக்க்றான் பாரேன்" என்றான் கணேஷ் ." இப்போ ரொம்ப முக்கியம் இது" என்று கணேஷை கடிந்தான் விக்கி.
"டேய் எனக்கு ஒரு சூப்பர் யோசனை டா" என்றான் கணேஷ். "முதல யோசனையை சொல்லு சூப்பரா என்னனு நாங்க சொல்றோம்" என்றான் ரமேஷ். "பேசாம வீட்ட விட்டு ஓடிட்டா" என்றான்." டேய் நம்ம எல்லாரையும் ஒரேடியா மேல அனுப்ப வழி பாக்ரியாடா? வாயை மூடுடா" என்றான் ஜெய்.
கொஞ்ச நேரம் அமைதிக்கு பின் விக்கி வாயை திறந்தான். "டேய் மச்சி இப்படி பண்ணா எப்படிடா" என்றான் எப்டிரா என்றனர் அனைவரும் ஆர்வமாய்." மார்க் சீட் கண்டிப்பா நாளைக்கு இல்ல அதுக்கு அடுத்த நாள் வீட்டுக்கு வந்துடும் ஓகே வா. நாம என்ன பண்றோம் அதுக்குள்ள போஸ்ட் மேன் கைல காலுல விழுந்தோ இல்ல எப்டியோ மார்க் சீட்ட நம்ம வாங்குறோம் நாம அப்பாவோட கை எழுத்தை போடுறோம் எஸ்கேப் ஆகுறோம்
எப்படிடா" என்றான். சூப்பர் மச்சி பின்னிட்டடா என்றனர். "சரிடா நாளைக்கு மாட்டினா பால் என்ற நிலைமைக்கு வந்துட்டோம் சோ இன்னைக்கு நாம சந்தோசமா பொழுதை கழிக்க போறோம்" என்றான் விக்கி.
"என்னடா சொல்ற" என்றான் ரமேஷ்." ஆமாம்டா எப்டியும் மாட்டினா சங்கு தான். அதனால இன்னைக்கு குரூப் ஸ்டடி அப்டின்னு சொலிட்டு எல்லாரும் இன்னைக்கு தேட்டர் போயிட்டு அப்புறம் எங்க வீட்டுக்கு போறோம் அப்புறம் ஆளுக்கு ஒரு பீர போடுறோம் எப்படிடா ?" என்றான் விக்கி. முதலில் தயங்கிய ரமேஷ் அப்புறம் ஒத்து கொண்டான்.
எல்லாரும் சினிமா பார்த்து விட்டு வெளியே வந்தனர். "இருடா ரமேஷ் நாங்க போய் பைக் எடுத்துட்டு வரேண்டா வெளியே வெயிட் பண்ணுடா" என்றனர். சரிடா என்று வெளியே நின்றான். எதிரில் ஒரு டீவீஎஸ் 50 நின்று கொண்டிருந்தது. அட அப்பா வண்டி மாதிரி இருக்கே என்று சற்று உற்று நோக்கி பார்த்தான். சந்தேகமில்லை அது அப்பாவின் வண்டிதான். அருகில் ஒரு டாஸ்மாக் கடை இருந்தது
ஓஹோ அப்பாவுக்கு இந்த பழக்கம் இருக்கா? நம்மள மட்டும் ஒழுங்கா இருக்கா சொல்றது இவங்க மட்டும் இஷ்டத்துக்கு இருக்குறது என்று கடிந்த படி கடை உள்ளே சென்றான் அவனுடை அப்பா காணாத படி மறைந்து நின்றான். அப்பா யாருடனோ பேசி கொண்டிருந்தார்.
கூர்ந்து கேட்டான். "என்ன ஆறுமுகம் பணத்தை கொண்டு வந்துட்டியா ?" என்றான். "இந்தாங்க சார் பணம் 15000 இருக்கு சார்." என்றார் ரமேஷின் அப்பா ஆறுமுகம்." இதோ பாருயா யாருக்கும் நாங்க 30000 டெபாசிட் வாங்காம குடுக்ரதில்ல சரி நம்ம ஆறுமுகம் ஆச்சே நம்ம கடைக்கு எத்தனையோ வண்டிய சர்வீஸ் பாத்ருக்க அதான் தரேன். கடைலே வைச்சே குடுத்ருப்பேன்யா அப்புறம் எவனாது ஏதாது சொல்வான் அதன் ஏன்டா பிரச்சனைன்னு உன்னை இங்க வர சொன்னேன் தப்பா நினைக்காதப்பா" என்றான்.
" அதெல்லாம் ஒன்னும் இல்லையா" என்றார் ஆறுமுகம்." சரி வந்துட்ட ஒரு கட்டிங் போடுயா" என்றான் அவன். " அயோ வேணாம் சார் என்றார்"." ஏன்யா பழக்கம் இல்லையா" என்றான் அவன்." ஒரு காலத்துல இருந்துது சார் எப்போ பயனுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சுதோ அப்போ விட்டேன் சார் படிக்குற பையன் அப்பாவே குடிக்கிறாரே நாமளும் குடிச்சா என்னனு கேட்டு போயிற கூடாதுல சார்" என்றார் பாவமாய்.
ரமேஷுக்கு பளீரென யாரோ அறைந்தது போலிருந்தது. இருந்தாலும் அப்பா இவனுக்கு என் ரூபா தறார் என பார்த்தான். "சரி ஆறுமுகம் மிச்ச பணத்தை கரெக்டா கட்டிடு. அப்புறம் புது வண்டி ஜமாய் என்று ஆறுமுகம் தோளை தட்டி விட்டு இப்போவாது உனக்கு இந்த பழைய டீவீஎஸ் 50 விடனுனு தோனுச்சே" என்றான். "அட போங்கயா எனக்கு எதுக்குயா புது வண்டிலாம் நமக்கு இதுவே போதும்யா" என்றார். " அப்புறம் யாருக்குயா?" என்றான் "என் மகனுக்கு தாங்க சார்" என்றார் பாசமாக. "சரியா இந்தா வண்டி சாவி பிடி வெளில நிக்குது எடுத்துக்கோ" என்று கை கொடுத்துவிட்டு கூடவே வந்தான் வெளியே. ரமேஷ் மறைந்து நின்று கொண்டான்.
அவர்க்கு நன்றி சொல்லிவிட்டு சாவி போட்டு வண்டியை தள்ளி கொண்டே போனார் ஆறுமுகம். "யோவ் ஆறுமுகம் ஏன்யா தள்ளிட்டு போற வண்டிக்கு பெட்ரோல் எலாம் போற்றுக்கியா ஏறி போ" என்றான் "வேனாம்யா ரமேஷ்கு வண்டினா உசிரு முதல அவனே ஏறி போகடும்யா நான் அத கண் குளிர பார்க்கணும் பக்கதுல தான இத விட்டுடு வந்து என் வண்டிய எடுதுகுரென்யா" என்றார். "இந்த வண்டி விசயத்த என் மவன்கிட்ட
சொலிராதிங்கயா அப்புறம் படிக்க மாட்டான் இந்த வண்டிய ஷெட்ல வைசுருந்து அவன் படிப்பு முடிஞ்சதும் குடுப்பேன் சார்" என்றார். இதை கேட்டதும் ரமேஷ் சிலையாய் நின்றான் . வரேன்யா என்றபடி ஆறுமுகம் உருட்டி கொண்டே போனார். அவர் பாத சுவடுகள் படிந்திருந்த சாலையில் ரமேஷின் கண்ணீர் நிறைத்து கண்ணீர் சுவடுகள் ஆகியது
நன்றி ;பர்த்தி
நிலா முற்றம்
**************
"டேய் மாப்பு போச்சுடா" என்று அலறியபடி ஓடி வந்தான் ஜெய். "ஏன்டா இப்படி அடிச்சு பிரண்டு ஓடி வர்ற?" என்று ரமேஷ் கேட்டான் அலட்சியமாக. "ரிசல்ட் வந்துடுச்சுடா நோட்டீஸ் போர்ட்ல ஒட்டிருகானுகடா" என்றான் ஜெய் பதற்றமாய்.
ஐயோ என்றனர் நண்பர்கள் ஒன்றாய்." அது மட்டும் இல்லடா யாரெல்லாம் 3 பாடம் அதுக்கு மேல பெயில் ஆயிருக்கான்களோ அவங்க வீட்டுக்கு மார்க் சீட் அனுப்ப போறாங்களாம் டா.
அதுல நாம பாரென்ட் சைன் வாங்கிட்டு வரணுமம்டா". என்றான். உடனே கணேஷ் "சோதனை மேல் சோதனை" என்று பாட ஆரம்பித்தான்." வாங்கடா முதல்ல ரிசல்ட் பார்போம்" என்றான் விக்கி. சரிதாண்டா என்று எல்லாரும் ஓடினர் நோட்டீஸ் பார்க்க.
நால்வரும் எதோ 3 பாடத்தில் கோட்டை விட்டிருந்தனர். இப்போ என்னடா பண்றது என்று ஒருவர் முகத்தை ஒருவர் பாத்து கொண்டனர். "எங்கப்பா என் முதுகுல டின் கட்டிருவர்டா" என்றான் ஜெய். "போடா எங்கப்பா சும்மாவே ஸ்பானர் வச்சு கழட்டுவார்டா இந்த விஷயம் மட்டும் தெரிஞ்சுது சைலேன்செர் வைச்சு சுட்ட்ருவர்டா" என்றான் ரமேஷ் அழாத குறையாய்
. "பாருடா மெக்கானிக் பையன் நிரூபிக்றான் பாரு அடி வாங்குறதுல கூட ஸ்பேர் பார்ட்ஸ் பேரா உதிக்க்றான் பாரேன்" என்றான் கணேஷ் ." இப்போ ரொம்ப முக்கியம் இது" என்று கணேஷை கடிந்தான் விக்கி.
"டேய் எனக்கு ஒரு சூப்பர் யோசனை டா" என்றான் கணேஷ். "முதல யோசனையை சொல்லு சூப்பரா என்னனு நாங்க சொல்றோம்" என்றான் ரமேஷ். "பேசாம வீட்ட விட்டு ஓடிட்டா" என்றான்." டேய் நம்ம எல்லாரையும் ஒரேடியா மேல அனுப்ப வழி பாக்ரியாடா? வாயை மூடுடா" என்றான் ஜெய்.
கொஞ்ச நேரம் அமைதிக்கு பின் விக்கி வாயை திறந்தான். "டேய் மச்சி இப்படி பண்ணா எப்படிடா" என்றான் எப்டிரா என்றனர் அனைவரும் ஆர்வமாய்." மார்க் சீட் கண்டிப்பா நாளைக்கு இல்ல அதுக்கு அடுத்த நாள் வீட்டுக்கு வந்துடும் ஓகே வா. நாம என்ன பண்றோம் அதுக்குள்ள போஸ்ட் மேன் கைல காலுல விழுந்தோ இல்ல எப்டியோ மார்க் சீட்ட நம்ம வாங்குறோம் நாம அப்பாவோட கை எழுத்தை போடுறோம் எஸ்கேப் ஆகுறோம்
எப்படிடா" என்றான். சூப்பர் மச்சி பின்னிட்டடா என்றனர். "சரிடா நாளைக்கு மாட்டினா பால் என்ற நிலைமைக்கு வந்துட்டோம் சோ இன்னைக்கு நாம சந்தோசமா பொழுதை கழிக்க போறோம்" என்றான் விக்கி.
"என்னடா சொல்ற" என்றான் ரமேஷ்." ஆமாம்டா எப்டியும் மாட்டினா சங்கு தான். அதனால இன்னைக்கு குரூப் ஸ்டடி அப்டின்னு சொலிட்டு எல்லாரும் இன்னைக்கு தேட்டர் போயிட்டு அப்புறம் எங்க வீட்டுக்கு போறோம் அப்புறம் ஆளுக்கு ஒரு பீர போடுறோம் எப்படிடா ?" என்றான் விக்கி. முதலில் தயங்கிய ரமேஷ் அப்புறம் ஒத்து கொண்டான்.
எல்லாரும் சினிமா பார்த்து விட்டு வெளியே வந்தனர். "இருடா ரமேஷ் நாங்க போய் பைக் எடுத்துட்டு வரேண்டா வெளியே வெயிட் பண்ணுடா" என்றனர். சரிடா என்று வெளியே நின்றான். எதிரில் ஒரு டீவீஎஸ் 50 நின்று கொண்டிருந்தது. அட அப்பா வண்டி மாதிரி இருக்கே என்று சற்று உற்று நோக்கி பார்த்தான். சந்தேகமில்லை அது அப்பாவின் வண்டிதான். அருகில் ஒரு டாஸ்மாக் கடை இருந்தது
ஓஹோ அப்பாவுக்கு இந்த பழக்கம் இருக்கா? நம்மள மட்டும் ஒழுங்கா இருக்கா சொல்றது இவங்க மட்டும் இஷ்டத்துக்கு இருக்குறது என்று கடிந்த படி கடை உள்ளே சென்றான் அவனுடை அப்பா காணாத படி மறைந்து நின்றான். அப்பா யாருடனோ பேசி கொண்டிருந்தார்.
கூர்ந்து கேட்டான். "என்ன ஆறுமுகம் பணத்தை கொண்டு வந்துட்டியா ?" என்றான். "இந்தாங்க சார் பணம் 15000 இருக்கு சார்." என்றார் ரமேஷின் அப்பா ஆறுமுகம்." இதோ பாருயா யாருக்கும் நாங்க 30000 டெபாசிட் வாங்காம குடுக்ரதில்ல சரி நம்ம ஆறுமுகம் ஆச்சே நம்ம கடைக்கு எத்தனையோ வண்டிய சர்வீஸ் பாத்ருக்க அதான் தரேன். கடைலே வைச்சே குடுத்ருப்பேன்யா அப்புறம் எவனாது ஏதாது சொல்வான் அதன் ஏன்டா பிரச்சனைன்னு உன்னை இங்க வர சொன்னேன் தப்பா நினைக்காதப்பா" என்றான்.
" அதெல்லாம் ஒன்னும் இல்லையா" என்றார் ஆறுமுகம்." சரி வந்துட்ட ஒரு கட்டிங் போடுயா" என்றான் அவன். " அயோ வேணாம் சார் என்றார்"." ஏன்யா பழக்கம் இல்லையா" என்றான் அவன்." ஒரு காலத்துல இருந்துது சார் எப்போ பயனுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சுதோ அப்போ விட்டேன் சார் படிக்குற பையன் அப்பாவே குடிக்கிறாரே நாமளும் குடிச்சா என்னனு கேட்டு போயிற கூடாதுல சார்" என்றார் பாவமாய்.
ரமேஷுக்கு பளீரென யாரோ அறைந்தது போலிருந்தது. இருந்தாலும் அப்பா இவனுக்கு என் ரூபா தறார் என பார்த்தான். "சரி ஆறுமுகம் மிச்ச பணத்தை கரெக்டா கட்டிடு. அப்புறம் புது வண்டி ஜமாய் என்று ஆறுமுகம் தோளை தட்டி விட்டு இப்போவாது உனக்கு இந்த பழைய டீவீஎஸ் 50 விடனுனு தோனுச்சே" என்றான். "அட போங்கயா எனக்கு எதுக்குயா புது வண்டிலாம் நமக்கு இதுவே போதும்யா" என்றார். " அப்புறம் யாருக்குயா?" என்றான் "என் மகனுக்கு தாங்க சார்" என்றார் பாசமாக. "சரியா இந்தா வண்டி சாவி பிடி வெளில நிக்குது எடுத்துக்கோ" என்று கை கொடுத்துவிட்டு கூடவே வந்தான் வெளியே. ரமேஷ் மறைந்து நின்று கொண்டான்.
அவர்க்கு நன்றி சொல்லிவிட்டு சாவி போட்டு வண்டியை தள்ளி கொண்டே போனார் ஆறுமுகம். "யோவ் ஆறுமுகம் ஏன்யா தள்ளிட்டு போற வண்டிக்கு பெட்ரோல் எலாம் போற்றுக்கியா ஏறி போ" என்றான் "வேனாம்யா ரமேஷ்கு வண்டினா உசிரு முதல அவனே ஏறி போகடும்யா நான் அத கண் குளிர பார்க்கணும் பக்கதுல தான இத விட்டுடு வந்து என் வண்டிய எடுதுகுரென்யா" என்றார். "இந்த வண்டி விசயத்த என் மவன்கிட்ட
சொலிராதிங்கயா அப்புறம் படிக்க மாட்டான் இந்த வண்டிய ஷெட்ல வைசுருந்து அவன் படிப்பு முடிஞ்சதும் குடுப்பேன் சார்" என்றார். இதை கேட்டதும் ரமேஷ் சிலையாய் நின்றான் . வரேன்யா என்றபடி ஆறுமுகம் உருட்டி கொண்டே போனார். அவர் பாத சுவடுகள் படிந்திருந்த சாலையில் ரமேஷின் கண்ணீர் நிறைத்து கண்ணீர் சுவடுகள் ஆகியது
நன்றி ;பர்த்தி
நிலா முற்றம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|