தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படிக்க படிக்க மனது தெளிவாகும்

View previous topic View next topic Go down

படிக்க படிக்க மனது தெளிவாகும் Empty படிக்க படிக்க மனது தெளிவாகும்

Post by முழுமுதலோன் Thu Aug 08, 2013 5:12 pm

படிக்க படிக்க மனது தெளிவாகும்


அனுபவம்


வாலால் தே ளும் வாயால் பாம்பும் விடமென அறிந்து
அடி முதல் முடிவரை ஆய்ந்து பாராது படுது பாடே

மனிதனை கயவானாக்குவது வளமையும் அதிகாரமும்தான்
மனிதனை புனிதனாக்குவது அறிவும் அனுபவமும்தான்

ஆசிரியரோ போதித்த பிறகே தண்டிக்கிறார்
அணுபவமோ தண்டித்த பிறகே போதிக்கிறது

காற்றுக்கு ஏற்ப மாறாதவன் கடலில் மூழ்குவான்
காலத்துக்கு தக்க மாறாதவன் கவலையில் மூழ்குவான்

தெளிந்தது கொண்டு தெளிய அறிவது நம்பி உறுதி கொண்டு
சிறிது சிறிதாக அறிவினை வளர்த்து அனுபவம் பெறுவார் அறிஞர்

சுட்ட தங்கமும் துயர் பட்ட மனமும் புகழ் பெறுமே
துட்ட மனமும் தரம் கெட்ட மனிதரும் இதழ்பெறுவாரே

உலகை புத்தகத்தில் படிப்பது நிழலை காதலிப்பதாகும்
உலகையே புத்தமாக படிப்பது நிலவையே காதலிப்பதாகும்

கல்லிலும் நார் உரிப்பவர் கயவர்
கவலையிலும் பாடம் கற்பவர் அறிஞர்

பிறர் அனுபவத்தை பாடமாக கேட்பவன் காது உள்ளவன்
பிறர் பாடத்தை அனுபவமாக பார்ப்பவன் கண் உள்ளவன்

நம் பாதையை மறிப்பவர் எல்லாம் திருடருமல்ல
ஆபத்தை தவிர்ப்பவராகலாம்
நம் கருத்தை மறுப்பவர் எல்லாம் பகைவருமல்ல
நம் அழிவை தடுப்பவராகலாம்


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

திட்டமிடுதல்

தன்னையும் தன் குறிக் கோளையும் கண்டுணர்ந்தவர் அறிஞர்
பிறரையும் அவர் செயல்திறனையும் கண்டறிந்தவர் பேரறிஞர்

வீணாக ஓடும் ஆற்றையும் நீரையும் பாதை மாற்றினர் வயல் செழிக்கும்
வீணாகப் போகும் ஆற்றலையும் நேரத்தையும்
பயன் படுத்தினால் வாழ்வு செழிக்கும்

சிந்தித்தபின் செயல் படுப‌வர் பறவையென பறந்து திரிவார்
செய்தபின் சிந்திப்பவர் படுகுழியில் வீழ்ந்து கிடப்பார்

சொல்லும் சொல்லை தெளிந்த பின் சொல்ல வேண்டும்
செய்யும் செயலை புரிந்த பின் செய்ய வேண்டும்

சாத்தியா சாத்தியம் அறிகுறி பல ஆராய்ந்து அறிந்து
அறிவால் ஆற்றும் திறமையுள்ள ஊக்க‌மே யோகம்

தேவை என்ன என்று தெரியாமல் எத்தனை நூல் கற்றும் பயனேது
தேடுவது என்ன என்று புரியாமல் எத்தனை ஊர் சுற்றியும் பயனேது

தோல்விக்கான காரணங்களை காண்பதை
விட மருந்தை கண்டுபிடியுங்கள்

ஒவ்வொருவரும் யாரோ போல ஆக விரும்புகிறார் தானாக ஆக விரும்புவதில்லை
ஒவ்வொருவரும் யாரோ போல மாறச் சொல்கிறார் தன்னைப்போல எனவாழ்வதில்லை

பிரச்னையை தவிர்ப்பது என்பது தற்காலிகத் தீர்வு
பிரச்னையைசந்திப்பதுஎன்பதுவே நிரந்தரத்தீர்வு

தீர்மானமில்லாதவன் கஷ்டப்படுவான்
திட்டமில்லாதவன் நஷ்டப்படுவான்

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


தெளிவு

மற்றவர் பேசும் போது காதை திறப்பவர் புரிந்து கொள்வார்
மற்றவர் பேசும் போது வாயை திறப்பவர் குழம்பி கொள்வார்

மற்றவர் குறைகளை கண்டுபிடிப்பிவன் குற்றவாளி
தனது குறைகளை கண்டறிந்தவன் அறிவாளி

நல்ல உடலைக் காண நல்ல விழி போதும்
நல்ல உள்ளத்தைக் காண நல்ல உள்ளம் வேண்டும்

நாணம் என்பது தன் குறை கண்டு --நளிவது
ஞானம் என்பது தன் குற்றம் கண்டு தெளிவது

கல்லை கல் என்பவன் கல்லாதவன் அதை விலை என்பவன் வியாபாரி
கல்லை சிலை என்பவன் கலைஞன் அதை இறை என்பவன் பக்தன்

முறுக்க முறுக்க கயிறு உறுதியாகும்
படிக்க படிக்க மனது தெளிவாகும்

நீ வந்த வழியை தெளிவாக நினைவில் வைத்திரு அது
நீ போகும் வழியாக தெளிவாக காட்டித் தந்தடும்

வெள்ளம் திரண்டு வர வயல் பள்ளம் தூர்ந்து போகும்
உள்ளம் தெளிந்து வர கயமை கள்ளம் தீர்ந்து போகும்

அறிந்தது நான்கு அதில் தெரிந்தது மூன்று
புரிந்தது இரண்டு அதில் தெளிந்தது ஒன்றுமில்லை

கற்றது அதிகம் உற்றது நிறைய‌
வாழ்வில் செய்தது ஒன்றுமில்லை

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


அறிவு

புத்தியே ச‌கல சக்தியும்
நினைத்தவை அனைத்தும் நிறைவேற்றிடும்

அறிவு என்பது சொல்லும் சொல் தெளிவாகச் சொல்லுதல்
செறிவு என்பது சொன்ன சொல் மாறாது இருத்தல்

ஆயுளின் அருமை நீளத்தில் இல்லை அகலத்தால் அளக்கப்படுகிறது
அறிவின் பெருமை சத்தத்தில் இல்லை சுத்தத்தால் அறியப்படுகிறது

கத்தியது கூரானால் தான் பொருள்கள் சரியாக வெட்டப்படும்
புத்தியது கூரானால் தான் செயல்கள் தெளிவாக செய்யப்படும்

குடமளவு நீரென அறிவிருந்தாலும் பயன்பட்டால் பெருமை
கடலளவு நீரென பரந்திருந்தாலும் பயன்படாததால் சிறுமை

அலங்காரம் இல்லாத அழகே இனிமையானது
அகங்காரம் இல்லாத அறிவே முழுமையானது

ஒரு நூறு மரத்தின் விலையை விட ஒரு பொன் முடிக்கே மதிப்பு
ஒரு நூறுமூடரின் கருத்தைவிட ஒரு அறிஞர் முடிவே தெளிவு

புத்தகம் மேய்ந்தவர் பதவியில் அமர்த்தப்படுவார்
நுனிப்புல்லை மேய்ந்தவர் பட்டியல் அடைக்கப்படுவார்

விடிய விடிய கண்ணுக்கு பொருட்கள் புலப்படும்
படிக்க படிக்க நமக்கு அறியாமை புலப்படும்

கருத்தில்லாத பேச்சை கேட்பது
கண்ணில்லாத முகத்தை பார்ப்பது போல‌வேதனை
கற்பில்லாத பெண்ணை பார்ப்பது
தலையில்லாத உடலைப் பார்ப்பது போல வேதனை


----------------------------------------------------------------------------------------------------------------
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படிக்க படிக்க மனது தெளிவாகும் Empty Re: படிக்க படிக்க மனது தெளிவாகும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 08, 2013 7:15 pm

தெளிவின் உச்சம்...

பகிர்வுக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum