Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒவ்வொரு பிரச்சனைக்கும் உலகில் ஒரு தீர்ப்பு உண்டு ஒவ்வொரு தீர்விலும் ஒரு புதிய பிரச்னை தொடர்வதுண்டு
Page 1 of 1 • Share
ஒவ்வொரு பிரச்சனைக்கும் உலகில் ஒரு தீர்ப்பு உண்டு ஒவ்வொரு தீர்விலும் ஒரு புதிய பிரச்னை தொடர்வதுண்டு
ஒவ்வொரு பிரச்சனைக்கும் உலகில் ஒரு தீர்ப்பு உண்டு ஒவ்வொரு தீர்விலும் ஒரு புதிய பிரச்னை தொடர்வதுண்டு
நிலமே நடுங்கி புரண்டாலும் நடுங்கி நிற்காது மனிதம்
கடலே பெருகி புகுந்தாலும் கலங்கி கதறாது மனிதம்
அன்பென்பது இன்பத்தின் வேர்
ஆசையே துன்பத்தின் வேர்
காமமே காதலின் வேர்
காதலே மனிதத்தின் வேர்
மலரும் ஒவ்வொரு பூவும் பூமி
இன்னும் சலிக்கவில்லை என்கிறது
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சாமி
இன்னும் சலிக்கவில்லை என்கிறது
மனித உறவுகளுக்கெல்லாம் ஆதாரமானது ஆதாமின் உடலுறவு
மனித துயரங்களுக்கெல்லாம் ஆரம்பமானது ஆதாமின் உடலுறவு
கவிதையும் காதலும் இளமையோடு உதிர்ந்து விடுகிறது
கயமையும் காமமும் முதுமையிலும் உலர்ந்து விடுவதில்லை
அலைகளின் மீது ஙரை போல ஆடிக்கொண்டிருக்கிருக்கும் உலகம்
ஆசைகளின் மீது அலை போல வாடிக்கொண்டிருக்கும் மனிதம்
நல்லவர் இறக்கும் போது ஆன்மா விடுதலையடைகிறது
தீயவர் இறக்கும் போது உலகம் விடுதலையடைகிறது
வளமை என்பதை மனித முன்னேற்றத்தின் சாட்சி என சொல்கிறார்
வறுமை என்பதை எந்த முன்னேற்றத்தின் சாட்சி என சொல்லுவார்
வரலாறு
மனிதம்
ஒற்றுமை
தேசம்
சமூகம்
நிலமே நடுங்கி புரண்டாலும் நடுங்கி நிற்காது மனிதம்
கடலே பெருகி புகுந்தாலும் கலங்கி கதறாது மனிதம்
அன்பென்பது இன்பத்தின் வேர்
ஆசையே துன்பத்தின் வேர்
காமமே காதலின் வேர்
காதலே மனிதத்தின் வேர்
மலரும் ஒவ்வொரு பூவும் பூமி
இன்னும் சலிக்கவில்லை என்கிறது
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சாமி
இன்னும் சலிக்கவில்லை என்கிறது
மனித உறவுகளுக்கெல்லாம் ஆதாரமானது ஆதாமின் உடலுறவு
மனித துயரங்களுக்கெல்லாம் ஆரம்பமானது ஆதாமின் உடலுறவு
கவிதையும் காதலும் இளமையோடு உதிர்ந்து விடுகிறது
கயமையும் காமமும் முதுமையிலும் உலர்ந்து விடுவதில்லை
அலைகளின் மீது ஙரை போல ஆடிக்கொண்டிருக்கிருக்கும் உலகம்
ஆசைகளின் மீது அலை போல வாடிக்கொண்டிருக்கும் மனிதம்
நல்லவர் இறக்கும் போது ஆன்மா விடுதலையடைகிறது
தீயவர் இறக்கும் போது உலகம் விடுதலையடைகிறது
வளமை என்பதை மனித முன்னேற்றத்தின் சாட்சி என சொல்கிறார்
வறுமை என்பதை எந்த முன்னேற்றத்தின் சாட்சி என சொல்லுவார்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஒவ்வொரு பிரச்சனைக்கும் உலகில் ஒரு தீர்ப்பு உண்டு ஒவ்வொரு தீர்விலும் ஒரு புதிய பிரச்னை தொடர்வதுண்டு
சமூகம்
மழலையை தந்தை காக்க வேண்டும்
மரத்தை உழவன் காக்க வேண்டூம்
குலத்தை வீரன் காக்க வேண்டும்
கொள்கையை தலைவன் காக்க வேன்டும்
ஒரு சங்கிலியின் தனி வளைய பலகீனம் கட்டையே தளர்த்தும்
ஒரு சமுதாயத்தின் தனி மனித துரோகமும் நாட்டையே சிதைக்கும்
காகம் போல் இன உணர்வு வளர்ப்போர் கல்லில் எழுத்தாக வாழ்வார்
நாகம் போல் பகை உணர்வு வளர்ப்போர் எரியில் தீயாக அழிவார்
விடுதலையென்பது விலை மதிக்க முடியாதது
எல்லாரிடமும் தரக்கூடாது
சுதந்திரமென்பது உயிர் மூச்சு
எல்லாரிடமும் தர முடியாது
தான் பெற்ற கல்வியை இழிவு செய்பவனை விட தாழ்ந்த மிருகமில்லை
தான் பெற்ற இனத்தை கேலி செய்பவனைவிட கீழான மிருகமில்லை
இதயத்தில் ஏற்படும் கருத்து மோதல்கள் இறுதியில் கவிதையாகும்
சமுதாயத்தில் ஏற்படும் கருத்து மோதல்கள் கடைசியில் கலவரமாகும்
மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஏமாற்றமே அடைகிறார்கள்
மாற்றத்தை எதிர்பார்த்தவர்கள் மகிழ்வே அடைகிறார்கள்
அனல் என்ற நெருப்பிலே அடுப்பெரிக்கவா சந்தனம்
ஊழல் என்று சுடலையிலே சுட்டெரிக்கவா சுதந்திரம்
பண்பாடு என்பது நல்ல பண்புகளால் எழதப்பட்ட ஏடு
கட்டுபாடு என்பது நல்ல கடமைகளால் கட்டப்பட்ட வீடு
மழலையை தந்தை காக்க வேண்டும்
மரத்தை உழவன் காக்க வேண்டூம்
குலத்தை வீரன் காக்க வேண்டும்
கொள்கையை தலைவன் காக்க வேன்டும்
ஒரு சங்கிலியின் தனி வளைய பலகீனம் கட்டையே தளர்த்தும்
ஒரு சமுதாயத்தின் தனி மனித துரோகமும் நாட்டையே சிதைக்கும்
காகம் போல் இன உணர்வு வளர்ப்போர் கல்லில் எழுத்தாக வாழ்வார்
நாகம் போல் பகை உணர்வு வளர்ப்போர் எரியில் தீயாக அழிவார்
விடுதலையென்பது விலை மதிக்க முடியாதது
எல்லாரிடமும் தரக்கூடாது
சுதந்திரமென்பது உயிர் மூச்சு
எல்லாரிடமும் தர முடியாது
தான் பெற்ற கல்வியை இழிவு செய்பவனை விட தாழ்ந்த மிருகமில்லை
தான் பெற்ற இனத்தை கேலி செய்பவனைவிட கீழான மிருகமில்லை
இதயத்தில் ஏற்படும் கருத்து மோதல்கள் இறுதியில் கவிதையாகும்
சமுதாயத்தில் ஏற்படும் கருத்து மோதல்கள் கடைசியில் கலவரமாகும்
மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஏமாற்றமே அடைகிறார்கள்
மாற்றத்தை எதிர்பார்த்தவர்கள் மகிழ்வே அடைகிறார்கள்
அனல் என்ற நெருப்பிலே அடுப்பெரிக்கவா சந்தனம்
ஊழல் என்று சுடலையிலே சுட்டெரிக்கவா சுதந்திரம்
பண்பாடு என்பது நல்ல பண்புகளால் எழதப்பட்ட ஏடு
கட்டுபாடு என்பது நல்ல கடமைகளால் கட்டப்பட்ட வீடு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஒவ்வொரு பிரச்சனைக்கும் உலகில் ஒரு தீர்ப்பு உண்டு ஒவ்வொரு தீர்விலும் ஒரு புதிய பிரச்னை தொடர்வதுண்டு
தேசம்
நம்மை மனிதனாக்கியது நம் தாய் வீடு
நம்மை புனிதனாக்கியது நம் தாய் நாடு
நல்ல மலர்கள் மலரும் தோட்டத்தில்
நறுமணம் இருக்கும்
நல்ல மனிதர்கள் வாழும் நாட்டினிலே
நற்குணம் மணக்கும்
தெய்வத்தின் மீது பாசம் வைப்போருக்கு
அருள் சேரும்
தேசத்தின் மீது வைப்போருக்கு
புகழ் சேரும்
தாயின் மீது பற்று வைத்தவன்
எல்லா தாய்களையும் மதிப்பான்
தேசத்தின் மீது பற்று வைத்தவன்
எல்லா நாடுகளையும் மதிப்பான்
தன்னைக் கொடுத்து
உன்னைக் காத்தவள் அன்னையே
உன்னை கொடுத்து
அன்னை தேசத்தைக் காக்கவேண்டும் நீயே
சொற்பமான அறிஞரும் குறைந்தால்
தேசம் தேயும்
அற்பமான கயவர்களும் நிறைந்தால்
தேசம் நாசமாகும்
பள்ளத்தை தேடும் வெள்ளமென
கள்ளத்தை நாடுவதென்ன உள்ளமே
விளக்கிலே விழும் விட்டிலேன
வீணரை தேர்வதென்ன மக்களே
மோசக்காரரும் நாசகாரரும்
வேசம் போட்டு ஆடுகின்றனர்
தேசாபிமானிகளும் பாசாபிமானிகளும்
கூசி நின்று வாடுகின்றனர்
பணம் என்ற பூட்டால் கயவர்
வாய் மூடப்பட்டது
பண்பு என்ற பூட்டால் அறிஞர்
வாய் மூடிக் கொண்டது
சுவரில்லாத அறைக்குள்
காற்று நிற்பதில்லை
வீரமில்லாத நாட்டுக்கு
விடுதலை நிலைப்பதில்லை
நம்மை மனிதனாக்கியது நம் தாய் வீடு
நம்மை புனிதனாக்கியது நம் தாய் நாடு
நல்ல மலர்கள் மலரும் தோட்டத்தில்
நறுமணம் இருக்கும்
நல்ல மனிதர்கள் வாழும் நாட்டினிலே
நற்குணம் மணக்கும்
தெய்வத்தின் மீது பாசம் வைப்போருக்கு
அருள் சேரும்
தேசத்தின் மீது வைப்போருக்கு
புகழ் சேரும்
தாயின் மீது பற்று வைத்தவன்
எல்லா தாய்களையும் மதிப்பான்
தேசத்தின் மீது பற்று வைத்தவன்
எல்லா நாடுகளையும் மதிப்பான்
தன்னைக் கொடுத்து
உன்னைக் காத்தவள் அன்னையே
உன்னை கொடுத்து
அன்னை தேசத்தைக் காக்கவேண்டும் நீயே
சொற்பமான அறிஞரும் குறைந்தால்
தேசம் தேயும்
அற்பமான கயவர்களும் நிறைந்தால்
தேசம் நாசமாகும்
பள்ளத்தை தேடும் வெள்ளமென
கள்ளத்தை நாடுவதென்ன உள்ளமே
விளக்கிலே விழும் விட்டிலேன
வீணரை தேர்வதென்ன மக்களே
மோசக்காரரும் நாசகாரரும்
வேசம் போட்டு ஆடுகின்றனர்
தேசாபிமானிகளும் பாசாபிமானிகளும்
கூசி நின்று வாடுகின்றனர்
பணம் என்ற பூட்டால் கயவர்
வாய் மூடப்பட்டது
பண்பு என்ற பூட்டால் அறிஞர்
வாய் மூடிக் கொண்டது
சுவரில்லாத அறைக்குள்
காற்று நிற்பதில்லை
வீரமில்லாத நாட்டுக்கு
விடுதலை நிலைப்பதில்லை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஒவ்வொரு பிரச்சனைக்கும் உலகில் ஒரு தீர்ப்பு உண்டு ஒவ்வொரு தீர்விலும் ஒரு புதிய பிரச்னை தொடர்வதுண்டு
ஒற்றுமை
அன்று சாதிகள் இனங்கள் மதங்கள் மனிதனை இனைத்தன
இன்று சாதிகள் இனங்கள் மதங்கள் மனிதனை பிரிக்கின்றன
நீ மற்றவரது நல்லதைக் கண்டால் ஒற்றுமை உருவாகும்
நீமற்றவரது தீமையைக் கண்டால் வேற்றுமை உருவாகும்
எல்லோர் இரத்தமும் சிவப்பே
எல்லோர் கண்ணீரும் உப்பே இதிலே பேதமெதற்கு
எல்லோரும் பிறந்துதான் வந்தோம்
எல்லோரும் இறந்துதான் போகிறாம் இடையே யுத்தமெதற்கு
நிலத்திலே நீரும் நெருப்பும் காற்றும் கூட சமாதானமாக வாழ்கிறதே
மானுடரெல்லாம் இனமும் மொழியும் சாதியும் மதமும் என சண்டை போட்டு சாகிறதே
இரும்புச் சங்கிலியின் பலம் அதன் இணைந்த வளையங்களால்
தேச வலிமையின் பலம் அதன் இனைந்த நெஞ்சங்களால்
வேற்றுமையில் இழிந்த பகையில்லை
தீண்டாமையில் இழிந்த தீமையில்லை
கொல்லாமையில் சிறந்த அறமில்லை
ஒற்றுமையில் சிறந்த உறவுமில்லை
ஒருமலர் மலரும் போது ஒரு விருட்சத்தின் விதை கருவாகிறது
ஒரு நட்பு மலரும் போது ஒரு வரலாற்றின் கதை உருவாகிறது
நாடுகளுக்கு நடுவே சாலை போட்டு இணைப்பவர் தலைவர்
ஊர்களுக்கு நடுவிலும் வேலி போட்டு பிரிப்பவர் கயவர்
அன்று சாதிகள் இனங்கள் மதங்கள் மனிதனை இனைத்தன
இன்று சாதிகள் இனங்கள் மதங்கள் மனிதனை பிரிக்கின்றன
நீ மற்றவரது நல்லதைக் கண்டால் ஒற்றுமை உருவாகும்
நீமற்றவரது தீமையைக் கண்டால் வேற்றுமை உருவாகும்
எல்லோர் இரத்தமும் சிவப்பே
எல்லோர் கண்ணீரும் உப்பே இதிலே பேதமெதற்கு
எல்லோரும் பிறந்துதான் வந்தோம்
எல்லோரும் இறந்துதான் போகிறாம் இடையே யுத்தமெதற்கு
நிலத்திலே நீரும் நெருப்பும் காற்றும் கூட சமாதானமாக வாழ்கிறதே
மானுடரெல்லாம் இனமும் மொழியும் சாதியும் மதமும் என சண்டை போட்டு சாகிறதே
இரும்புச் சங்கிலியின் பலம் அதன் இணைந்த வளையங்களால்
தேச வலிமையின் பலம் அதன் இனைந்த நெஞ்சங்களால்
வேற்றுமையில் இழிந்த பகையில்லை
தீண்டாமையில் இழிந்த தீமையில்லை
கொல்லாமையில் சிறந்த அறமில்லை
ஒற்றுமையில் சிறந்த உறவுமில்லை
ஒருமலர் மலரும் போது ஒரு விருட்சத்தின் விதை கருவாகிறது
ஒரு நட்பு மலரும் போது ஒரு வரலாற்றின் கதை உருவாகிறது
நாடுகளுக்கு நடுவே சாலை போட்டு இணைப்பவர் தலைவர்
ஊர்களுக்கு நடுவிலும் வேலி போட்டு பிரிப்பவர் கயவர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஒவ்வொரு பிரச்சனைக்கும் உலகில் ஒரு தீர்ப்பு உண்டு ஒவ்வொரு தீர்விலும் ஒரு புதிய பிரச்னை தொடர்வதுண்டு
வரலாறு
சினத்துடன் வாழ்ந்த மனிதர்கள் வரலாற்றின் தடைக்கற்கள்
புகழுடன் வாழ்ந்த புனிதர்கள் வரலாற்றின் மைல் கற்கள்
வரலாறு செல்வந்தர்களை நினைவில் வைப்பதில்லை
வரலாறு சொல்வேந்தர்களை நினைவில் மறப்பதில்லை
வரலாற்றை எழுதுவது வயோதிகர்கள் சாதனை
வரலாற்றை படைப்பதுவே வாலிபர்களின் சாதனை
நெருப்புமட்டுமல்ல நீரும் கூட மிகுந்து வந்தால் ஆபத்து
அதிகாரம் மட்டுமல்ல சுதந்திரம் கூட கயவர் கையில் ஆபத்து
நேற்று நடந்தது இன்று வரலாறு அதை நினைவில் வை
இன்று நடப்பது நாளைய வரலாறு அதை செயலில் வை
கொடிகளின் உச்சியிலே வளமை ஒளிந்து பறக்கிறது
கொடிகளின் அடியிலே வறுமை சுருண்டு கிடக்கிறது
கருத்துகளில் வலிமை குறைந்தவர்களே
கைகளுக்கு வலிமை தேடுகிறார்
கைகளிலும் வலிமை குன்றியவரே
ஆயுதங்களை நாடுகிறார்
சிலரை சில நேரம் சிலகாலம் சில இடத்தில் ஏமாற்றலாம்
பலரை பல நேரம் பல காலம் பல இடத்தில் ஏமாற்ற முடியாத
ஒவ்வொரு பிரச்சனைக்கும் உலகில் ஒரு தீர்ப்பு உண்டு
ஒவ்வொரு தீர்விலும் ஒரு புதிய பிரச்னை தொடர்வதுண்டு
சிறிய மனிதர்கள் ஒருவரை வதை செய்தாலும்
அதை குற்றம் என்கிறோம்
பெரிய நாடுகள் பலரை கொலை செய்தாலும்
அதை போரென புகழ்கிறோம்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
Posted by DrBALA SUBRA MANIAN
சினத்துடன் வாழ்ந்த மனிதர்கள் வரலாற்றின் தடைக்கற்கள்
புகழுடன் வாழ்ந்த புனிதர்கள் வரலாற்றின் மைல் கற்கள்
வரலாறு செல்வந்தர்களை நினைவில் வைப்பதில்லை
வரலாறு சொல்வேந்தர்களை நினைவில் மறப்பதில்லை
வரலாற்றை எழுதுவது வயோதிகர்கள் சாதனை
வரலாற்றை படைப்பதுவே வாலிபர்களின் சாதனை
நெருப்புமட்டுமல்ல நீரும் கூட மிகுந்து வந்தால் ஆபத்து
அதிகாரம் மட்டுமல்ல சுதந்திரம் கூட கயவர் கையில் ஆபத்து
நேற்று நடந்தது இன்று வரலாறு அதை நினைவில் வை
இன்று நடப்பது நாளைய வரலாறு அதை செயலில் வை
கொடிகளின் உச்சியிலே வளமை ஒளிந்து பறக்கிறது
கொடிகளின் அடியிலே வறுமை சுருண்டு கிடக்கிறது
கருத்துகளில் வலிமை குறைந்தவர்களே
கைகளுக்கு வலிமை தேடுகிறார்
கைகளிலும் வலிமை குன்றியவரே
ஆயுதங்களை நாடுகிறார்
சிலரை சில நேரம் சிலகாலம் சில இடத்தில் ஏமாற்றலாம்
பலரை பல நேரம் பல காலம் பல இடத்தில் ஏமாற்ற முடியாத
ஒவ்வொரு பிரச்சனைக்கும் உலகில் ஒரு தீர்ப்பு உண்டு
ஒவ்வொரு தீர்விலும் ஒரு புதிய பிரச்னை தொடர்வதுண்டு
சிறிய மனிதர்கள் ஒருவரை வதை செய்தாலும்
அதை குற்றம் என்கிறோம்
பெரிய நாடுகள் பலரை கொலை செய்தாலும்
அதை போரென புகழ்கிறோம்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
» இணைய உலகில் இன்று நிகழும் புதிய புரட்சி
» ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!-கிருபானந்த வாரியார்
» தமிழனின் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது...
» ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு ஃபீலிங்...!!
» இணைய உலகில் இன்று நிகழும் புதிய புரட்சி
» ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!-கிருபானந்த வாரியார்
» தமிழனின் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது...
» ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு ஃபீலிங்...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|