தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்கும் கருவி!

View previous topic View next topic Go down

தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்கும் கருவி! Empty தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்கும் கருவி!

Post by பகவதி Fri Sep 07, 2012 9:36 pm

தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்கும் கருவி! 526131_464250420281247_794397274_n

அரிசி, பருப்பு, காய்கறிகள் என எல்லாப் பொருட்களின் விலைகளும் ஏறிக் கொண்டே போகும் காலம் இது. கல்வி, மருத்துவச் செலவுகளும் அதிகம். ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டே போகும் வீட்டு வாடகை.

இவற்றைச் சமாளிக்க வீட்டில் உள்ள ஆண் மட்டும் அல்ல, பெண்ணும் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். இல்லத்தரசிகள் தங்கள் "அரசி' பட்டத்தைத் துறந்துவிட்டு அவசர அவசரமாக அலுவலகத்துக்குப் பஸ் பிடிக்க வேண்டிய நிலைமை. பாலுக்கு அழும் குழந்தையை அமர்த்தவும் நேரம் இல்லை.

"தாய்ப் பால் கொடுங்கள்... தாய்ப்பால் கொடுங்கள்' என்று மருத்துவர்கள் அறிவுரை சொன்னாலும், இந்த மாதம் முதல் வாரத்தில் உலகமெங்கும் "உலகத் தாய்ப்பால் வாரம்' என்று அறிவித்துக் கொண்டாடினாலும், வேலைக்குப் போகும் பெண்களுக்குத் தாய்ப்பால் கொடுக்க நேரம் ஏது?
தாய்ப்பால் கொடுக்க முடியாததால் அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்கு ஏற்படும் உடல், மனநலப் பிரச்னைகள் வேறு.

இவற்றுக்கெல்லாம் தீர்வாக அலுவலக நேரங்களில் சுரக்கும் தாய்ப்பாலை உறிஞ்சி எடுத்து, பாதுகாத்து வைத்து, வீட்டில் உள்ள குழந்தைக்குப் பயன்படுத்தும்முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது சென்னையில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள அந்த மருத்துவக் கல்லூரியின் குழந்தை மருத்துவத்துறையின் பேராசிரியர் டாக்டர் எல்.என்.பத்மா சினியிடம் பேசினோம்.

""இப்போது பெண்கள் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பேறுகால விடுமுறை முடிந்து 3 மாதங்களுக்குள் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். இதனால் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை. வீட்டிலுள்ளவர்கள் பாக்கெட் பாலை வாங்கிக் காய்ச்சி குழந்தைக்குக் கொடுக்கிறார்கள்.

ஆனால் பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு தாய்ப்பாலுடன் பிற உணவுகளைச் சேர்த்துக் கொடுக்கலாம். குறைந்தது 2 ஆண்டுகள் வரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தருவது அவசியம்.

குழந்தைகளின் மூளை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் தருவது அவசியம். தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். ஊட்டச்சத்து குறைபாடு, ஒவ்வாமை, மூச்சு இழுப்பு நோய் போன்றவை வராது.

குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்த உடல்நிலையைத் தாய் பெறுவதற்கும் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். எட்டு மணி நேரத்துக்கு மேல் தாய்ப்பால் கொடுக்காவிட்டால் பால் கட்டிக் கொள்ளும். அதனால் ஏற்படும் வலியும், குழந்தைக்குப் பால் கொடுக்க முடியவில்லையே என்று மனதில் ஏற்படும் வலியும் ஒரு தாய்க்கு ரொம்பவும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அவர்களால் அலுவலக வேலைகளை முழுக் கவனத்துடன் செய்யவும் முடியாது.

சுரக்கின்ற தாய்ப்பாலைக் கொடுக்காமல் இருந்தால், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும் தாய்ப்பால் சுரப்பு 3 மாதத்துக்குப் பிறகு குறைந்துவிடும். மிக விரைவில் நின்றுவிடும். இதனால் வேலை முடிந்து வீட்டுக்குப் போனாலும் பசியால் அழும் குழந்தைக்குக் கொடுக்கத் தாய்ப்பால் இருக்காது.

வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஏற்படும் இம்மாதிரியான பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு நாங்கள் ஒரு புதுமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

அலுவலகத்தில் வேலை செய்யும் குழந்தை பெற்ற பெண்களுக்குச் சுரக்கும் தாய்ப்பாலை, கருவிகளின் மூலம் உறிஞ்சி எடுத்து, அதைப் பாதுகாத்து வீட்டுக்கு எடுத்து சென்று பயன்படுத்தும் முறையே அது.
தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்கக் கூடிய கருவி, கிருமி நீக்கம் செய்யும் கருவி, குளிர்சாதனப் பெட்டி, உறிஞ்சப்பட்ட தாய்ப்பாலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஓர் ஐஸ் பாக்ஸ், ஒரு தனி அறை ஆகியவையே இதற்குத் தேவை.

இதனால் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பாலை எடுத்துப் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். வேலை முடிந்து வீட்டுக்குப் போகும்போது அதை ஐஸ் பாக்ஸில் எடுத்துச் சென்று வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் வேலைக்கு வந்த பின்பு வீட்டிலுள்ளவர்கள் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து தாய்ப்பாலை எடுத்து குழந்தைக்குக் கொடுக்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் 48 மணி நேரம் வரை தாய்ப்பாலை பாதுகாத்து வைக்கலாம். கெட்டுப் போகாது.

இந்த முறையின் மூலம் பல நன்மைகள் உள்ளன. தாய்ப்பால் அருந்தாத குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமற் போய்விடும். அதனால் அலுவலகத்துக்கு வரும் பெண்கள் அடிக்கடி விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும். இதனால் அலுவலகத்தில் வேலை பாதிக்கப்படும். சில பெண்களுக்கு குழந்தையை வளர்ப்பதற்காக வேலையை விட்டுவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நிறுவனத்துக்கும் இதனால் இழப்பு. நன்கு வேலை செய்யக் கூடிய பயிற்சியுள்ள பணியாளரை நிறுவனம் இழக்க நேரிடும்.

இவற்றையெல்லாம் தவிர்க்க, நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த முறையை ஒவ்வோர் அலுவலகத்திலும் ஏற்படுத்த வேண்டும்.

தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்கும் உயர்தரமான கருவியின் விலை ரூ.1 லட்சம். ஒரு தனி அறை ஏற்பாடு செய்து அதில் குளிர்சாதனப் பெட்டியை வைக்க வேண்டும். இவற்றை ஒவ்வோர் அலுவலகமும் செய்து கொடுத்தால், வேலை செய்யும் இளம் தாய்மார்களின் மிகப் பெரிய பிரச்னையை எளிதில் தீர்த்துவிடலாம்'' என்கிறார்.

நன்றி தினமணி
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்கும் கருவி! Empty Re: தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்கும் கருவி!

Post by செந்தில் Sat Sep 08, 2012 8:40 pm

:5335fd: பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே :5335fd:
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்கும் கருவி! Empty Re: தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்கும் கருவி!

Post by Manik Sat Sep 08, 2012 8:50 pm

பகிர்ந்தமைக்கு நன்றி கபிலன்

Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்கும் கருவி! Empty Re: தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்கும் கருவி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum