தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்களா?

View previous topic View next topic Go down

பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்களா? Empty பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்களா?

Post by முரளிராஜா Wed Oct 09, 2013 9:46 am

பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்களா? 5958ca33-fa96-4d30-8a58-fb0247fe0c2b_S_secvpfபிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்களா? 5958ca33-fa96-4d30-8a58-fb0247fe0c2b_S_secvpf

பிள்ளைகளை வளர்க்கும் விஷயத்தில் பெற்றோர் எப்போதுமே பாசமாகவும் அக்கறையாகவும் இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு அவர்கள் காட்டும் அந்த அக்கறை தான் பிள்ளைகளை பெற்றோர் நினைத்துப் பார்க்கும் உயரத்தில் நிறுத்தி வைத்து அழகு பார்க்கிறது.

ஆனால் பலரும் ஆலோசனை என்ற பெயரிலோ, கட்டளை என்ற பெயரிலோ பிள்ளைகளை தங்கள் எதிர்பார்ப்புக்கேற்ற விதத்தில் வளைக்கப் பார்க்கிறார்கள். இந்த திணிப்பு பல நேரங்களில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளியை அதிகரிக்கப் பண்ணி விடுகிறது.

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை விட, அவர்களை எப்படியெல்லாம் வளர்க்கக்கூடாது என் பதைத்தான் முதலில் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டும். சில அப்பாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வந்திருப்பார்கள்.

இவர்கள் தங்கள் பிள்ளைகளின் மாணவப் பருவத்தில் தங்கள் கடந்த கஷ்டகாலம் சொல்லி படுத்தி எடுத்து விடுவார்கள். 'இப்ப நீ கார்ல ஸ்கூலுக்குப் போறே! நானெல்லாம் நடந்தே நாலு மைல் தொலைவில் இருக்கிற பள்ளிக்கூடம் போயிருக்கேன் தெரியுமா?' என்று ஆரம்பிப்பார்கள்.

ஒரு கட்டம் வரை இதற்கு அமைதி காக்கும் பிள்ளைகள், அப்புறமாய் இவர்கள் ஆரம்பிக்கும் போதே முகம் சுழிக்கத் தொடங்கி விடுவார்கள். டைனிங் டேபிளில் வகைவகையாய் உணவு வகைள் பரப்பி வைக்கப்பட்டிருக்கும். பிள்ளைகள்ஆசையாய் சாப்பிடத் தொடங்குவார்கள். அப்போது இந்த அப்பா ஆரம்பிப்பார்.

'எங்களுக்கெல்லாம் அப்ப கஞ்சி தான். கூட்டுக்கு துவையல் மட்டும் தான் இருக்கும்' என்பார்கள். அப்படியானால் இப்போதும் அதைத்தான் சாப்பிட வேண்டும் என்று அப்பா வற்புறுத்துகிறாரா? என்று பிள்ளைகள் யோசனை ஓடும். இதை சொல்லித்தான் ஆக வேண்டுமென்றால் கொஞ்சம் மாற்றி 'இப்ப இருக்கிற உணவு வகைகளில் சத்துங்கறதே கிடையாது.

எங்க காலத்துல பழைய கஞ்சி தான் காலை சாப்பாடு. துவையலை சேர்த்துக்கிட்டு குடல் குளிரக்குளிர அதை சாப்பிடறது தனி ருசி. அதோடு கைக்குத்தல் அரிசிங்கறதால சத்தும் அதிகம்' என்று சொன்னாலாவது அப்பா இன்னொரு சத்துணவை அறிமுகப்படுத்துகிறார் என்பதாக எண்ணிக்கொள்வார்கள்.

நாம் இப்போது இருக்கும் நிலையில் இன்னும் எந்தவிதமாக சிறப்பு சேர்க்கலாம் என்கிற மாதிரியான தன்னம்பிக்கை பேச்சுக்குத்தான் இன்றைய தலைமுறை காது கொடுக்கிறார்கள். பெற்றோர் கஷ்டப்பட்டு முன்னேறி தான் தங்கள் வாழ்க்கையை சிறப்புற அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பிள்ளைகளுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

அதை நாசூக்காக பிள்ளைகள் மனதில் பதிகிற மாதிரி ஒருமுறை சொன்னாலே போதும். இன்றைய செம ஷார்ப் பிள்ளைகள் உடனே அதை புரிந்து கொண்டு விடுவார்கள். இந்த வசதி வாய்ப்பு சும்மா வந்ததல்ல, நம் பெற்றோரின் கடின உழைப்பில்வந்தது என்பதை அவர்களாக புரிந்து கொள்ளும்போது 'இது அவசியம் இது அனாவசியம்' என்பதை அவர்களாகவே முடிவு செய்து தேவையற்றதை தவிர்த்து விடுவார்கள்.

சில பெற்றோர் இருக்கிறார்கள். குடும்பத்தில் என்ன கஷ்டம் என்றாலும் அதை பிள்ளைகளிடம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். பிள்ளைகள் நம் குடும்பம் நல்ல நிலையில் இருக்கிறது என்பதாக எண்ணிக் கொண்டு அதே ஆடம்பரத்தில் வாழ்வார்கள்.

இந்த மாதிரியான சூழலில் பிள்ளைகளை தனியாக அழைத்து குடும்பத்தின் சூழலை விளக்கி விடலாம். தப்பில்லை. அப்புறமாய் அந்தப் பிள்ளைகளும் குடும்பத்தின் நெருக்கடி நிலையை புரிந்து கொண்டு பெற்றோருக்கு உறுதுணையாக செயல்படத் தொடங்கி விடுவார்கள்.

சில பெற்றோர் பெருமையாக எங்கள் குடும்பத்தில் நானும் என் பிள்ளைகளும் நண்பர்கள் போல் பழகுகிறோம் என்பார்கள். உண்மையில் நண்பன் என்ற ஸ்தானம் வேறு. எந்த விஷயத்தையும் தப்பாக பார்க்கத் தோன்றாது நண்பனின் மனம்.

அப்படி தவறாகவே இருந்தாலும் அதற்கும் ஒரு நியாயம் கற்பித்துக் கொண்டு நண்பனை விட்டுக் கொடுக்க முடியாத நண்பர்கள் தான் இங்கே அதிகம். அதனால் பெற்றோர் ஒருபோதும் பிள்ளைகளின் நண்பனாக முடியாது. சில நேரங்களில் பிள்ளைகளின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்படும்போது அதை கண்டித்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் பெற்றோருக்கு ஏற்படும்.

அப்போது நண்பன் மாதிரி கண்டு கொள்ளாமல் நீ செய்தால் சரியாகத்தான் இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நேசம் பாராட்டுங்கள். அதே நேரம் தவறு செய்தால் தண்டனை உண்டு என்ற பெற்றோர் முகமும் காட்டத்தானே வேண்டி வரும். அப்போது உங்கள் 'நண்பன் லாஜிக்' அடிபட்டுப் போகுமே.

அதனால் நாங்கள் நல்ல நண்பர்கள் மாதிரி என்றெல்லாம் சொல்லி கண்டிப்பான அப்பாக்கள் காணாது போய் விடாதீர்கள். ‘எந்த தந்தையாவது அப்பம் கேட்ட மகனுக்கு கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்ட மகனுக்கு பாம்பைக் கொடுப்பானா?’ என்று பிள்ளைகள் மீதான பெற்றோரின் நேசத்தை அக்கறைப்படுத்தும் பைபிளில், 'பிரம்பைக் கையாடாதவன் தன் மகனை (மகளை) பகைக்கிறான்' என்றும் சொல்லியிருக்கிறது.

இதன் பொருள், அன்பு காட்டும் நேரத்தில் அன்பைக் காட்டுங்கள். கண்டித்து உணர்த்த வேண்டிய கட்டங்களில் கண்டிப்பை வெளிப் படுத்துங்கள் என்பது தான். சில வீடுகளில் பிள்ளைகளின் மதிப் பெண் விஷயத்தில் ரொம்பவே கவன மாக இருப்பார்கள். 'நீ நல்ல மதிப்பெண் எடுத்தால் மட்டுமே முன்னேற முடியும்' என்பதை வேதம் போல காதுக்குள் ஓதிக்கொண்டே இருப்பார்கள்.

இது பிள்ளைகளுக்கு எரிச்சலான விஷயம். ஒரு நாள் 'நீங்கள் எத்தனை மதிப்பெண் எடுத்தீர்கள் அப்பா?' என்று கேட்கும் பிள்ளைகளிடம் உங்களால் பதில் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடும். படிப்பதை உற்சாகப் படுத்துங்கள். புரியாத பாடங்களுக்கு டியூஷன் வையுங்கள்.

உங்கள் அக்கறையை பார்க்கும்போதே சுமாராக படிக்கும் பிள்ளைகளும் நமக்காக இல்லாவிட்டாலும் நம் பெற்றோரின் எதிர்பார்ப்புக்காகவாவது அதிக மதிப்பெண்களை எடுத்தாக வேண்டும் என்ற எண்ணத்துக்குள் வந்து விடுவார்கள்.

தங்களை வருத்திக் கொண்டு படிக்கத் தொடங்குவார்கள். இப்படி அதிக மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சாதித்த பலரின் பின்னணியில் பெற்றோரின் மீதான பிள்ளைகள் அன்பு இருப்பதை மறந்து விடக்கூடாது. பாலியல் விஷயம் பற்றி பிள்ளைகளிடம் பேசுவது மாபாதகம் என்பதாக இப்போதும் பல பெற்றோருக்குள் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருக்கிறது.

உரிய நேரத்தில் பிள்ளைகளிடம் அதுபற்றி சொல்லவேண்டியது பெற்றோரின் கடமை. குறிப்பாக பெண் பிள்ளைகள் வளரும்போது அம் மாக்கள் அவர்களின் தோற்றமாற்றம் பற்றி, பருவப்பெண் நிலைக்கு அவர்கள் வளர்ந்து கொண்டிருப்பதையெல்லாம் உணர்த்த வேண்டும்.

வயதுக்கு வரும்போதும், வந்த பிறகும் பெண் பிள்ளைகளிடம் தாயின் அன்பும் அக்கறையும் இன்னும் அதிகரிக்க வேண்டும். இந்த அன்பு தான் பெண் பிள்ளைகளுக்கான நிஜமான பாதுகாப்பு கவசம். உங்கள் பிள்ளைகள் பற்றிய விரும்பத்தகாத செய்திகள் உங்களை அடைந்தால் உடனே பதறாமல் மனம் சிதறாமல் அதன் 'மூலம்' பற்றி முதலில் அறிய முற்பட வேண்டும்.

அதற்குப் பதிலாக என் பிள்ளை இதை ஒருபோதும் செய்திருக்கவே மாட்டான் என்று பிடிவாதமாய் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கக் கூடாது. உங்கள் கணிப்பையும் மீறி பிரச்சினைக்குரிய தவறை உங்கள் வாரிசு செய்திருந்தால் அதற்கான பரிகாரத்தை ஏற்று செயல்படுத்துவதோடு, உங்கள் வாரிசிடம் இன்னும்.

அதிக தோழமையை ஏற்ப டுத்திக் கொள்ளுங்கள். காலப்போக்கில் மாசு அகன்று மாசுமருவற்ற உங்கள் பிள்ளையை பார்ப்பீர்கள். மாறாக, 'நீ நம் குடும்ப கவுரவத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டாய்'என்பதாக வானத்துக்கும் பூமிக்கும் எகிறிக்குதிக்கும் பெற்றோரால் தான் பல பிள்ளைகள் தடம் மாறிப்போய் விடும் விபரீதம் நடந்து விடுகிறது.

நன்றி மாலை மலர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்களா? Empty Re: பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்களா?

Post by ஸ்ரீராம் Wed Oct 09, 2013 3:12 pm

நல்லதொரு பகிர்வு முரளி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்களா? Empty Re: பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்களா?

Post by kanmani singh Wed Oct 09, 2013 4:08 pm

பெண் பிள்ளைகள் வளரும்போது அம் மாக்கள் அவர்களின் தோற்றமாற்றம் பற்றி, பருவப்பெண் நிலைக்கு அவர்கள் வளர்ந்து கொண்டிருப்பதையெல்லாம் உணர்த்த வேண்டும்.
நிஜமான வரிகள்.. நன்றி!

கண்மணி sing
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்களா? Empty Re: பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்களா?

Post by sawmya Wed Oct 09, 2013 4:31 pm

நாசூக்காக பிள்ளைகள் மனதில் பதிகிற மாதிரி ஒருமுறை சொன்னாலே போதும். இன்றைய செம ஷார்ப் பிள்ளைகள் உடனே அதை புரிந்து கொண்டு விடுவார்கள். இந்த வசதி வாய்ப்பு சும்மா வந்ததல்ல, நம் பெற்றோரின் கடின உழைப்பில்வந்தது என்பதை அவர்களாக புரிந்து கொள்ளும்போது 'இது அவசியம் இது அனாவசியம்' என்பதை அவர்களாகவே முடிவு செய்து தேவையற்றதை தவிர்த்து விடுவார்கள். 
சூப்பர் 
பயனுள்ள தகவலுக்கு நன்றி!புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்களா? Empty Re: பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்களா?

Post by ஸ்ரீராம் Wed Oct 09, 2013 5:52 pm

நல்லதொரு பகிர்வு முரளி. பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்களா? Empty Re: பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» பெண் பிள்ளைகளை நல்லொழுக்கத்துடன் வளர்க்க வேண்டும்
» பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளை புரிந்துகொள்வது எப்படி?
» உங்கள் பிள்ளைகளை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றுவது எப்படி?
» உங்கள் பெண் பிள்ளைகளை சுய மதிப்புடன் வளர்ப்பதற்கான சில வழிமுறைகள்…
» பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum