Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
படிச்சு பாருங்க சிரிப்பீங்க
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
படிச்சு பாருங்க சிரிப்பீங்க
என்னடா முனியா நான் ஊர்ல இல்லாதப்ப ஏதும் விசேஷம் உண்டா…?
பெருசா ஒன்னும் இல்லீங்க நம்ம நாய் செத்துப்போச்சு...
அடக்கடவுளே எப்படிடா திடீர்ன்னுசெத்துச்சு…?
கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடுச்சுங்க….
மாட்டுக்கறி எங்கடா கிடைச்சது அதுக்கு…?
நம்ம வீட்ல தாங்க…
நாம தான் மாட்டுக்கறி திங்கிறதில்லையே …!!?
நெருப்புல அவிஞ்சி போன மாடு மூணு நாலா கிடந்து கெட்டுப்போச்சுங்க. அதைத்தான் நாய் தின்னிடுச்சு….
நம்ம மாடா…?
ஆமாங்க…
அய்யய்யோ….!! எப்படிடா எரிஞ்சி போச்சு..!?
நம்ம வீடு எறியும் பொது நெருப்பு பறந்து மாட்டுக்கொட்டகை யில் விழுந்துரிச்சு. …
வீடு எப்படிடா எரிஞ்சது….?
குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்சுங்க....
குத்து விளக்கு ஏத்துற பழக்கமே நம்ம வீட்டுல கிடையாதேடா…!
அதுக்காக… செத்தவங்க தலைக்கு விளக்கு வைய்க்காம இருக்க முடியுமா…?
யார்ரா செத்தது…?
உங்க அம்மா…
எப்படிடா செத்தாங்க…?
தூக்கு போட்டுக்கிட்டு. ..
ஏன்டா…?
அவமானத்தில்தான் …
என்னடா அவமானம்…?
வீட்டுல இருக்குற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித்துப்பாதா...?
ஓடிப்போனது யாருடா…?
உங்க பொண்டாட்டிதான்..:த
நன்றி ;மயூரேசன்
பெருசா ஒன்னும் இல்லீங்க நம்ம நாய் செத்துப்போச்சு...
அடக்கடவுளே எப்படிடா திடீர்ன்னுசெத்துச்சு…?
கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடுச்சுங்க….
மாட்டுக்கறி எங்கடா கிடைச்சது அதுக்கு…?
நம்ம வீட்ல தாங்க…
நாம தான் மாட்டுக்கறி திங்கிறதில்லையே …!!?
நெருப்புல அவிஞ்சி போன மாடு மூணு நாலா கிடந்து கெட்டுப்போச்சுங்க. அதைத்தான் நாய் தின்னிடுச்சு….
நம்ம மாடா…?
ஆமாங்க…
அய்யய்யோ….!! எப்படிடா எரிஞ்சி போச்சு..!?
நம்ம வீடு எறியும் பொது நெருப்பு பறந்து மாட்டுக்கொட்டகை யில் விழுந்துரிச்சு. …
வீடு எப்படிடா எரிஞ்சது….?
குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்சுங்க....
குத்து விளக்கு ஏத்துற பழக்கமே நம்ம வீட்டுல கிடையாதேடா…!
அதுக்காக… செத்தவங்க தலைக்கு விளக்கு வைய்க்காம இருக்க முடியுமா…?
யார்ரா செத்தது…?
உங்க அம்மா…
எப்படிடா செத்தாங்க…?
தூக்கு போட்டுக்கிட்டு. ..
ஏன்டா…?
அவமானத்தில்தான் …
என்னடா அவமானம்…?
வீட்டுல இருக்குற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித்துப்பாதா...?
ஓடிப்போனது யாருடா…?
உங்க பொண்டாட்டிதான்..:த
நன்றி ;மயூரேசன்
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
மன நோயுற்ற ஒருவன் மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து வரப்பட்டான். அவன் பிரச்சினை என்னவென்று கேட்க அவன் தந்தை சொன்னார் அவன் தான் இறந்து விட்டதாகக் கூறிக் கொண்டிருக்கிறான். எங்காவது வெளியே போகச் சொன்னால் இறந்தவன் எப்படி வெளியே செல்ல முடியும் என்று கேட்கிறான்.
என்ன சொல்லி சமாதானப் படுத்தினாலும் அதை ஏற்க மறுக்கிறான் அதனால் தான் உங்களிடம் அழைத்து வந்தோம். மருத்துவரும் இது ஒன்றும் பெரிய விசயமில்லை அவனை எளிதில் நான் சரி செய்து விடுவேன் என்றார் பின் அவர் அவனிடம்திருபி கேட்டார் இறந்த மனிதனுக்கு உடலிலிருந்து இரத்தம் வருமா? அவன் சொன்னான் வராது.
மருத்துவரும் ஒரு கத்தியை எடுத்து அவன் உடலில் இலேசாகக்கீற இரத்தம் பீறிட்டது. அவன் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர், மருத்துவர் பார்த்தாயாஉன் உடலிலிருந்து இரத்தம் வருகிறது எனவே நீ இறக்கவில்லை.புரிகிறதா என்று கேட்டார்.
அவன் மிக அமைதியாக சொன்னான் : இதுவரை நான் இறந்தவர்கள் உடலிலிருந்து இரத்தம் வராது என்று நம்பி வந்தேன் இப்போதுதான் தெரிந்து கொண்டேன், இறந்தவர் உடலிலிருந்தும் இரத்தம் வரும்
நன்றி ;மயூரேசன்
என்ன சொல்லி சமாதானப் படுத்தினாலும் அதை ஏற்க மறுக்கிறான் அதனால் தான் உங்களிடம் அழைத்து வந்தோம். மருத்துவரும் இது ஒன்றும் பெரிய விசயமில்லை அவனை எளிதில் நான் சரி செய்து விடுவேன் என்றார் பின் அவர் அவனிடம்திருபி கேட்டார் இறந்த மனிதனுக்கு உடலிலிருந்து இரத்தம் வருமா? அவன் சொன்னான் வராது.
மருத்துவரும் ஒரு கத்தியை எடுத்து அவன் உடலில் இலேசாகக்கீற இரத்தம் பீறிட்டது. அவன் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர், மருத்துவர் பார்த்தாயாஉன் உடலிலிருந்து இரத்தம் வருகிறது எனவே நீ இறக்கவில்லை.புரிகிறதா என்று கேட்டார்.
அவன் மிக அமைதியாக சொன்னான் : இதுவரை நான் இறந்தவர்கள் உடலிலிருந்து இரத்தம் வராது என்று நம்பி வந்தேன் இப்போதுதான் தெரிந்து கொண்டேன், இறந்தவர் உடலிலிருந்தும் இரத்தம் வரும்
நன்றி ;மயூரேசன்
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
நாராயணசாமிக்கு தற்போது பார்த்துவரும் பணியை தொடர முடியாத சிக்கல் எழுந்துள்ளதால், ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
ஒரு நாள் நேர்காணலுக்கும் அழைக்கப்பட்டார்.
அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார்,
“புயல் வருமானால் என்ன செய்வீர் ?” என்று.
நாராயணசாமி சொன்னார்,
“நங்கூரத்தை நாட்டுவேன்”என்று.
“முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர் ?”
“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்”
இப்படியே கேள்வி பதில் சென்று கொண்டிருக்கையில்,
“…பத்தாவது புயல் !” என்றார் தேர்வு நடத்தியவர்.
“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்”
“ஆனால் இத்தனை நங்கூரத்தை நீர் எங்கிருந்து பெறுவீர் ?”
நாராயணசாமி சொன்னார்,
“தாங்கள் எங்கிருந்து புயல்களை பெறுவீர்களோ அங்கிருந்துதான்”
நன்றி ;மயூரேசன்
ஒரு நாள் நேர்காணலுக்கும் அழைக்கப்பட்டார்.
அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார்,
“புயல் வருமானால் என்ன செய்வீர் ?” என்று.
நாராயணசாமி சொன்னார்,
“நங்கூரத்தை நாட்டுவேன்”என்று.
“முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர் ?”
“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்”
இப்படியே கேள்வி பதில் சென்று கொண்டிருக்கையில்,
“…பத்தாவது புயல் !” என்றார் தேர்வு நடத்தியவர்.
“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்”
“ஆனால் இத்தனை நங்கூரத்தை நீர் எங்கிருந்து பெறுவீர் ?”
நாராயணசாமி சொன்னார்,
“தாங்கள் எங்கிருந்து புயல்களை பெறுவீர்களோ அங்கிருந்துதான்”
நன்றி ;மயூரேசன்
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
இவர திருத்தவே முடியாதுங்க ….?
ஒரு வாஸ்து சாஸ்திர நிபுணர் என்று தன்னையே
தொலைக்காட்சி விளம்பரம் செய்யும் ஒருவர் இருந்தார் …
கணவன் மனைவி அவரிடம் சென்றால் ..உங்கள் வீட்டில் அக்கினி மூலை சரியில்லை அதானால் தான்
உங்களுக்குள் சண்டை என்பார் …!
யாரும் நோய் என்று சென்றால் …!
வீட்டில் வாயு மூலை சரியில்லை அதானால் தான் உங்களுக்கு வாயு தொல்லைகள் என்பார் …!
ஒருநாள் திடீர் என ஒரு அறிக்கை விட்டார் …!
மனிதனுக்கு இருதயம் வலது பக்கம் இருக்கிறது என்றார்..பாருங்களேன் …! அப்படி இருந்தால் தான் வாழமுடியும் . வாஸ்து சாஸ்திரப்படி அவன் வாழமுடியும் …என்றார் ..!
இவருக்கு விளக்கம் கொடுக்க பலர் முன் வந்து
ஐயா இருதயம் பக்கம் இடது இருக்கிறது என்றார்கள் ..அவர் நம்புவதாக இல்லை .
அவரை அழைத்துக்கொண்டு ஒரு வைத்தியாசாலையில் இறந்தவரின் உடலை வெட்டி காட்டி பார்த்தீர்களா ..? இருதயம் பக்கம் இடது இருக்கிறது..என்றனர் ..!
இவருக்கு வாஸ்து சாஸ்திரப்படி வலது பக்கம் இருக்காததால்தான் இவர் இறந்து விட்டார் என்றார் …பாருங்களேன் …!
இவர திருத்தவே முடியாதுங்க ….!
படித்ததில் பிடிப்பு
ஒரு வாஸ்து சாஸ்திர நிபுணர் என்று தன்னையே
தொலைக்காட்சி விளம்பரம் செய்யும் ஒருவர் இருந்தார் …
கணவன் மனைவி அவரிடம் சென்றால் ..உங்கள் வீட்டில் அக்கினி மூலை சரியில்லை அதானால் தான்
உங்களுக்குள் சண்டை என்பார் …!
யாரும் நோய் என்று சென்றால் …!
வீட்டில் வாயு மூலை சரியில்லை அதானால் தான் உங்களுக்கு வாயு தொல்லைகள் என்பார் …!
ஒருநாள் திடீர் என ஒரு அறிக்கை விட்டார் …!
மனிதனுக்கு இருதயம் வலது பக்கம் இருக்கிறது என்றார்..பாருங்களேன் …! அப்படி இருந்தால் தான் வாழமுடியும் . வாஸ்து சாஸ்திரப்படி அவன் வாழமுடியும் …என்றார் ..!
இவருக்கு விளக்கம் கொடுக்க பலர் முன் வந்து
ஐயா இருதயம் பக்கம் இடது இருக்கிறது என்றார்கள் ..அவர் நம்புவதாக இல்லை .
அவரை அழைத்துக்கொண்டு ஒரு வைத்தியாசாலையில் இறந்தவரின் உடலை வெட்டி காட்டி பார்த்தீர்களா ..? இருதயம் பக்கம் இடது இருக்கிறது..என்றனர் ..!
இவருக்கு வாஸ்து சாஸ்திரப்படி வலது பக்கம் இருக்காததால்தான் இவர் இறந்து விட்டார் என்றார் …பாருங்களேன் …!
இவர திருத்தவே முடியாதுங்க ….!
படித்ததில் பிடிப்பு
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
நாராயணசாமியும், அவரது நண்பர் மண்ணுசாமியும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
உயரமான கட்டடத்தின் உச்சிக்குச் சென்ற ஒரு ஆள் அங்கிருந்த குதிக்கப் பார்ப்பதாக ஒரு காட்சி. பரபரப்பான இந்தக் கட்டத்தில் இடைவேளை விடப்பட, வெளியே வந்த இருவரும் இந்த காட்சி பற்றியே விவாதித்தார்கள்.
பேச்சுவாக்கில் “அந்த ஆள் கீழே குதிக்கப் போகிறான் கால் எலும்பு முறியப் போகுது” என்று பந்தயமே கட்டினார் மண்ணுசாமி.
நாராயணசாமியும் விடவில்லை. “பந்தயத்துக்கு நானும் தயார். அவன் கண்டிப்பாக கீழே குதிக்கமாட்டான்” என்றார் நம்பிக்கையோடு
பந்தயத்தில் தோற்பவர், வெல்பவருக்கு விருந்து தரவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு இருவரும் தியேட்டருக்குள் போனார்கள்.
நாராயணசாமிதான் பாவம் அந்த ஆள் உச்சியிலிருந்து கீழே குதித்துவிட்டான்.
பந்தயத்தின்படி, வென்ற மண்ணுசாமிக்கு விருந்து வைத்தார் நாராயணசாமி.
அப்போது மண்ணுசாமி,
“உங்களை நான் எமாத்திட்டதா என்னோட மனச்சாட்சி உறுத்துது. அந்த ஆள் கீழே குதிக்கப்போறது எனக்கு முன்னாடியே தெரியும். படத்தை நான் எற்கெனவே பார்த்துட்டேன்” என்றார்.
அதற்கு நாராயணசாமி வருத்தத்தோடு சொன்னார்,
“நானும்தான் படத்தைப் பார்த்திருந்தேன். ஆனால் அந்த முட்டாள் மறுபடியும் இப்படிக் கீழே குதிப்பான்னு துளிகூட நான் எதிர்பார்க்கலை”
உயரமான கட்டடத்தின் உச்சிக்குச் சென்ற ஒரு ஆள் அங்கிருந்த குதிக்கப் பார்ப்பதாக ஒரு காட்சி. பரபரப்பான இந்தக் கட்டத்தில் இடைவேளை விடப்பட, வெளியே வந்த இருவரும் இந்த காட்சி பற்றியே விவாதித்தார்கள்.
பேச்சுவாக்கில் “அந்த ஆள் கீழே குதிக்கப் போகிறான் கால் எலும்பு முறியப் போகுது” என்று பந்தயமே கட்டினார் மண்ணுசாமி.
நாராயணசாமியும் விடவில்லை. “பந்தயத்துக்கு நானும் தயார். அவன் கண்டிப்பாக கீழே குதிக்கமாட்டான்” என்றார் நம்பிக்கையோடு
பந்தயத்தில் தோற்பவர், வெல்பவருக்கு விருந்து தரவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு இருவரும் தியேட்டருக்குள் போனார்கள்.
நாராயணசாமிதான் பாவம் அந்த ஆள் உச்சியிலிருந்து கீழே குதித்துவிட்டான்.
பந்தயத்தின்படி, வென்ற மண்ணுசாமிக்கு விருந்து வைத்தார் நாராயணசாமி.
அப்போது மண்ணுசாமி,
“உங்களை நான் எமாத்திட்டதா என்னோட மனச்சாட்சி உறுத்துது. அந்த ஆள் கீழே குதிக்கப்போறது எனக்கு முன்னாடியே தெரியும். படத்தை நான் எற்கெனவே பார்த்துட்டேன்” என்றார்.
அதற்கு நாராயணசாமி வருத்தத்தோடு சொன்னார்,
“நானும்தான் படத்தைப் பார்த்திருந்தேன். ஆனால் அந்த முட்டாள் மறுபடியும் இப்படிக் கீழே குதிப்பான்னு துளிகூட நான் எதிர்பார்க்கலை”
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
நாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும் மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நன்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர்.
விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி.
நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும் ? என்று.
அதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் ” நான் எனது கணவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.
அது தான் காரணம்!” என்று.
அன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம்” இதுவரை உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை..
இன்று நீங்கள் மறைத்த உண்மை ஒன்று சொல்லுங்களேன்” என்று கேட்டாள்.
கணவன் படுக்கைக்கு அடியிலிருந்த ஒரு பெட்டியை எடுத்து கட்டில் மேல் திறந்து வைத்தான்.
உள்ளே ஒரு முட்டையும் ஒரு லட்ச ருபாய் பனமும் இருந்தது.
அதை பார்த்து “இது என்ன?” என்று கேட்ட மனைவிக்கு கணவன் கொடுத்த பதில்
” உனக்கு எப்பொழுதெல்லாம் துரோகம் செய்கிறேனோ..
அப்பொழுதெல்லம் இந்த பெட்டியில் ஒரு முட்டை வைப்பேன்
“கணவன் செய்த ஒரே ஒரு தப்பை மன்னித்த மனைவிக்கு மீண்டும் ஒரு சந்தேகம்”
சரி அதில் ஒரு லட்ச ரூபாய் என்ன?
கணவன் சொன்னான்.
அது எல்லாம் முட்டை வித்து சேத்து வச்ச காசு” என்று.
விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி.
நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும் ? என்று.
அதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் ” நான் எனது கணவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.
அது தான் காரணம்!” என்று.
அன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம்” இதுவரை உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை..
இன்று நீங்கள் மறைத்த உண்மை ஒன்று சொல்லுங்களேன்” என்று கேட்டாள்.
கணவன் படுக்கைக்கு அடியிலிருந்த ஒரு பெட்டியை எடுத்து கட்டில் மேல் திறந்து வைத்தான்.
உள்ளே ஒரு முட்டையும் ஒரு லட்ச ருபாய் பனமும் இருந்தது.
அதை பார்த்து “இது என்ன?” என்று கேட்ட மனைவிக்கு கணவன் கொடுத்த பதில்
” உனக்கு எப்பொழுதெல்லாம் துரோகம் செய்கிறேனோ..
அப்பொழுதெல்லம் இந்த பெட்டியில் ஒரு முட்டை வைப்பேன்
“கணவன் செய்த ஒரே ஒரு தப்பை மன்னித்த மனைவிக்கு மீண்டும் ஒரு சந்தேகம்”
சரி அதில் ஒரு லட்ச ரூபாய் என்ன?
கணவன் சொன்னான்.
அது எல்லாம் முட்டை வித்து சேத்து வச்ச காசு” என்று.
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
இந்தியன் பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.
”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார்.
யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.
”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.
அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, ”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்.
”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்” என்றார் அவர்.
#யாருகிட்ட…நாங்கெல்லாம்…..
”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார்.
யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.
”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.
அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, ”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்.
”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்” என்றார் அவர்.
#யாருகிட்ட…நாங்கெல்லாம்…..
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
நம்ம நாராயணசாமி புகை வண்டியிலிருந்து இறங்கி வெளியே வந்தார்.
அவரை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள்.
அவரைப் பார்த்ததும் மனைவி , “என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்?” என்று கவலையோடு கேட்டாள்.
அதற்கு நாராயணசாமி, “ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன்.காற்று பலமாக முகத்தில் மோதியது எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது” என்றார்.
“அப்படியானால்… நீங்கள் யாரிடமாவது
கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே… உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ?” என்றாள் அவர் மனைவி.
மனைவியின் கேள்விக்கு பதில் சொன்னார் நாராயணசாமி,
“அது எனக்கு தெரியாதா…நான் அப்படித்தான் நினைத்தேன்… ஆனால் என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை..காலியாக இருந்தது… அப்படி இருக்கும்போது நான் யாரிடம் சென்று இருக்கையை மாற்றிக்கொள்ளக் கேட்பது?
அவரை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள்.
அவரைப் பார்த்ததும் மனைவி , “என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்?” என்று கவலையோடு கேட்டாள்.
அதற்கு நாராயணசாமி, “ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன்.காற்று பலமாக முகத்தில் மோதியது எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது” என்றார்.
“அப்படியானால்… நீங்கள் யாரிடமாவது
கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே… உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ?” என்றாள் அவர் மனைவி.
மனைவியின் கேள்விக்கு பதில் சொன்னார் நாராயணசாமி,
“அது எனக்கு தெரியாதா…நான் அப்படித்தான் நினைத்தேன்… ஆனால் என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை..காலியாக இருந்தது… அப்படி இருக்கும்போது நான் யாரிடம் சென்று இருக்கையை மாற்றிக்கொள்ளக் கேட்பது?
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தார் நம்ம நாராயணசாமி.
டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு,
“ஹலோ” என்றார்.
“என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா…” என்றது மறுமுனை.
“எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா…”
“இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க…”
“ஒண்ணு போதுமா டார்லிங்… இரண்டா எடுத்துக்கோ..”
“சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா…”
“ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார் மேஜையில் வைத்தார் நாராயணசாமி.
சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியத்துடன்,
“என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்ண சரின்னு சொல்லிட்ட… நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க… கிரேட் மச்சி…’ என்றார்கள்.
ஆனால் நாராயணசாமியோ பக்கத்து மேஜையில் அமர்ந்து இருந்தவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தார்,
“எக்ஸ்கிஸ் மி சார் … இந்த மொபைல் போன் யாரோடது…?”
டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு,
“ஹலோ” என்றார்.
“என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா…” என்றது மறுமுனை.
“எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா…”
“இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க…”
“ஒண்ணு போதுமா டார்லிங்… இரண்டா எடுத்துக்கோ..”
“சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா…”
“ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார் மேஜையில் வைத்தார் நாராயணசாமி.
சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியத்துடன்,
“என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்ண சரின்னு சொல்லிட்ட… நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க… கிரேட் மச்சி…’ என்றார்கள்.
ஆனால் நாராயணசாமியோ பக்கத்து மேஜையில் அமர்ந்து இருந்தவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தார்,
“எக்ஸ்கிஸ் மி சார் … இந்த மொபைல் போன் யாரோடது…?”
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
MBA படிச்சஒருத்தன் கிராமத்துக்குபோறான்..
அங்கே ஒருசெக்குமாடு மட்டும்தனியா செக்கு சுத்திட்டுஇருக்கு..
அவனுக்குஆச்சரியமாஇருக்கு..,
பக்கத்திலஒருகுடிசைக்குள்ள ஒரு விவசாயிசாப்பிட்டுட்டு
இருந்தாரு..
அவர்கிட்டகேட்டான்…
MBA : மாடுமட்டும்தனியாசெக்கு சுத்திட்டுஇருக்கே..?
விவசாயி: அதுபழகினமாடுதம்பி..,அதுவே சுத்திக்கும்..,
MBA : நீங்கஉள்ளேவந்தஉடனே அது சுத்தறதநிறுத்திட்டா…!
எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: அதுகழுத்திலஒருசலங்கை இருக்குதம்பி.., சுத்தறதை நிறுத்திட்டாஅந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சிகண்டுபிடிச்சிடுவேன்..
MBA : அதுசுத்தறதைநிறுத்திட்டு.,ஒரே இடத்துலநின்னு.., தலைய மட்டும்ஆட்டினா..! அப்ப எப்படிகண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: இதுக்குதான்தம்பி., நான் என்மாட்டைகாலேஜூக்கெல்லாம்
படிக்க அனுப்பலை..!
அங்கே ஒருசெக்குமாடு மட்டும்தனியா செக்கு சுத்திட்டுஇருக்கு..
அவனுக்குஆச்சரியமாஇருக்கு..,
பக்கத்திலஒருகுடிசைக்குள்ள ஒரு விவசாயிசாப்பிட்டுட்டு
இருந்தாரு..
அவர்கிட்டகேட்டான்…
MBA : மாடுமட்டும்தனியாசெக்கு சுத்திட்டுஇருக்கே..?
விவசாயி: அதுபழகினமாடுதம்பி..,அதுவே சுத்திக்கும்..,
MBA : நீங்கஉள்ளேவந்தஉடனே அது சுத்தறதநிறுத்திட்டா…!
எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: அதுகழுத்திலஒருசலங்கை இருக்குதம்பி.., சுத்தறதை நிறுத்திட்டாஅந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சிகண்டுபிடிச்சிடுவேன்..
MBA : அதுசுத்தறதைநிறுத்திட்டு.,ஒரே இடத்துலநின்னு.., தலைய மட்டும்ஆட்டினா..! அப்ப எப்படிகண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: இதுக்குதான்தம்பி., நான் என்மாட்டைகாலேஜூக்கெல்லாம்
படிக்க அனுப்பலை..!
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
ஒரு குளத்துல 20 எறும்புகள் குளித்துக் கொண்டு இருந்ததாம்! அப்ப ஒரு யானை டக்குனு குளத்துல குதித்ததாம். தண்ணி தெறிச்ச வேகத்துல 19 எறும்புகள் குளத்துக்கு வெளியே வந்து விழுந்ததாம்.
ஒரு எறும்பு மட்டும் யானை தலை மேல ஏறிடுச்சாம். அப்ப கரையில இருந்த 19 எறும்புகளும் கோரசா கத்துச்சாம்.
என்னன்னு கத்துச்சாம்…..?
டேய் மாப்ள! அவன அப்டியே தண்ணில போட்டு அமுக்கிப் புடிடா!!!
ஒரு எறும்பு மட்டும் யானை தலை மேல ஏறிடுச்சாம். அப்ப கரையில இருந்த 19 எறும்புகளும் கோரசா கத்துச்சாம்.
என்னன்னு கத்துச்சாம்…..?
டேய் மாப்ள! அவன அப்டியே தண்ணில போட்டு அமுக்கிப் புடிடா!!!
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
ஒரு முன் ஜென்ம கதை…
********************************
ஒரு காட்டில சிங்க ராஜாவின் ஆட்சியில் எல்லா மிருகங்களும் ஒற்றுமையா வசித்து வந்துச்சாம். தினமும் ஒரே மாதிரி வாழ்க்கை இருந்ததால மிருகங்களெல்லாம் சலிச்சுப் போய் ஒரு விரக்க்தியுடன் இருந்துச்சாம். இதைக் கவனிச்ச சிங்க ராஜா, எல்லா மிருகங்களும் சந்தோசமாக வாழ என்ன வழி செய்யலாம் என யோசிச்சு, அனைத்து மிருகங்களையும் ஒன்றா கூட்டிச்சாம்.
மிருகங்களைப் பார்த்து சிங்கம், எனதருமை சகோதரர்களே, இன்று முதல் நாம் எல்லாரும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாகவும் இருக்க வேண்டும் . அது மட்டுமில்ல மற்றவர்களையும் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும். அப்பிடி இருப்பவர்கள் மட்டுமே இந்தக் காட்டில இருக்கலாம். அதுக்கு ஆரம்பமாக இன்று ஒவ்வொரு மிருகங்களும் தனக்குத் தெரிந்த நல்ல ஜோக் ஒன்று சொல்ல வேண்டும். ஆனா, நீங்க சொல்லும் ஜோக்குக்கு யாராவது ஒரு மிருகமாவது சிரிக்காம இருந்தா ஜோக் சொன்ன மிருகத்தை நான் அடிச்சு சாகக் கொன்று விடுவேன். எனவே ஒவ்வொருவராக வந்து ஜோக் சொல்லுங்க என்று சொல்லிச்சு.
முதல்ல குரங்கை ஜோக் சொல்ல சிங்கம் அழைச்சுது. பயந்து கொண்டே வந்த குரங்கு மிகவும் அருமையான ஜோக் சொல்லிச்சு. எல்லா மிருகங்களும் விழுந்து விழுந்து சிரித்தன.சிங்கமும் சிரிச்சுக் கொண்டே நிமிர்ந்து பார்க்க ஆமை மட்டும் சிரிக்காம் உம்முனு இருந்திச்சு. என்ன செய்யிறது. ஒரு மிருகம் சிரிக்காதபடியால, சிங்கம் குரங்கை அடிச்சுகொன்னுடிச்சு.
பின்னர் கரடியை ஜோக் சொல்ல சிங்கம் அழைச்சுது. கரடியும் வந்து குரங்கைவிட நல்ல ஜோக் ஒன்று சொல்லிச்சு. அதுக்கும் சிங்கம் உட்பட எல்லா மிருகங்களும் சிரிக்க ஆமை மட்டும், ஊகூம்…… சிரிக்கவேயில்லை. கரடியும் செத்திச்சு. அடுத்தது யானை, அதுக்கும் அப்பிடியே நடந்துது.ஆமை சிரிக்கவேயில்லை யானையையும் சிங்கம் அடிச்சு கொன்டுடிச்சு
.
பிறகு கழுதை வந்திச்சு, வந்து “ஒரு ஊரில …” என்று ஜோக் சொல்ல ஆரம்பிக்கு முன்னரே ஆமை விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கிச்சு.சிங்கத்துக்கும் மத்த எல்லா மிருகங்களுக்கும் ஆச்சரியமும் கோவமும் வந்திச்சு.
சிங்கம் ஆமையிடம் கேட்டிச்சு, ” இவ்வளவு நேரமும் சிரிக்காம இருந்திட்டு, இப்ப கழுதை ஜோக் சொல்லவே ஆரம்பிக்க இல்ல, ஆனா நீ இப்படி விழுந்து, விழுந்து சிரிக்கிறியே”.
அதுக்கு ஆமை சொல்லிச்சாம்,
“இல்ல குரங்கு சொன்ன ஜோக்குக்கு சிரிப்பு வந்திச்சு, அதுதான் சிரிச்சேன்.
********************************
ஒரு காட்டில சிங்க ராஜாவின் ஆட்சியில் எல்லா மிருகங்களும் ஒற்றுமையா வசித்து வந்துச்சாம். தினமும் ஒரே மாதிரி வாழ்க்கை இருந்ததால மிருகங்களெல்லாம் சலிச்சுப் போய் ஒரு விரக்க்தியுடன் இருந்துச்சாம். இதைக் கவனிச்ச சிங்க ராஜா, எல்லா மிருகங்களும் சந்தோசமாக வாழ என்ன வழி செய்யலாம் என யோசிச்சு, அனைத்து மிருகங்களையும் ஒன்றா கூட்டிச்சாம்.
மிருகங்களைப் பார்த்து சிங்கம், எனதருமை சகோதரர்களே, இன்று முதல் நாம் எல்லாரும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாகவும் இருக்க வேண்டும் . அது மட்டுமில்ல மற்றவர்களையும் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும். அப்பிடி இருப்பவர்கள் மட்டுமே இந்தக் காட்டில இருக்கலாம். அதுக்கு ஆரம்பமாக இன்று ஒவ்வொரு மிருகங்களும் தனக்குத் தெரிந்த நல்ல ஜோக் ஒன்று சொல்ல வேண்டும். ஆனா, நீங்க சொல்லும் ஜோக்குக்கு யாராவது ஒரு மிருகமாவது சிரிக்காம இருந்தா ஜோக் சொன்ன மிருகத்தை நான் அடிச்சு சாகக் கொன்று விடுவேன். எனவே ஒவ்வொருவராக வந்து ஜோக் சொல்லுங்க என்று சொல்லிச்சு.
முதல்ல குரங்கை ஜோக் சொல்ல சிங்கம் அழைச்சுது. பயந்து கொண்டே வந்த குரங்கு மிகவும் அருமையான ஜோக் சொல்லிச்சு. எல்லா மிருகங்களும் விழுந்து விழுந்து சிரித்தன.சிங்கமும் சிரிச்சுக் கொண்டே நிமிர்ந்து பார்க்க ஆமை மட்டும் சிரிக்காம் உம்முனு இருந்திச்சு. என்ன செய்யிறது. ஒரு மிருகம் சிரிக்காதபடியால, சிங்கம் குரங்கை அடிச்சுகொன்னுடிச்சு.
பின்னர் கரடியை ஜோக் சொல்ல சிங்கம் அழைச்சுது. கரடியும் வந்து குரங்கைவிட நல்ல ஜோக் ஒன்று சொல்லிச்சு. அதுக்கும் சிங்கம் உட்பட எல்லா மிருகங்களும் சிரிக்க ஆமை மட்டும், ஊகூம்…… சிரிக்கவேயில்லை. கரடியும் செத்திச்சு. அடுத்தது யானை, அதுக்கும் அப்பிடியே நடந்துது.ஆமை சிரிக்கவேயில்லை யானையையும் சிங்கம் அடிச்சு கொன்டுடிச்சு
.
பிறகு கழுதை வந்திச்சு, வந்து “ஒரு ஊரில …” என்று ஜோக் சொல்ல ஆரம்பிக்கு முன்னரே ஆமை விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கிச்சு.சிங்கத்துக்கும் மத்த எல்லா மிருகங்களுக்கும் ஆச்சரியமும் கோவமும் வந்திச்சு.
சிங்கம் ஆமையிடம் கேட்டிச்சு, ” இவ்வளவு நேரமும் சிரிக்காம இருந்திட்டு, இப்ப கழுதை ஜோக் சொல்லவே ஆரம்பிக்க இல்ல, ஆனா நீ இப்படி விழுந்து, விழுந்து சிரிக்கிறியே”.
அதுக்கு ஆமை சொல்லிச்சாம்,
“இல்ல குரங்கு சொன்ன ஜோக்குக்கு சிரிப்பு வந்திச்சு, அதுதான் சிரிச்சேன்.
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளியாக நாராயணசாமி சென்றுருந்தார்! ! ! !
கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்..
”இங்கே காபிபொடியும் இல்லை..சர்க்கரை யும் இல்லை..”அடுப்ப ங்கரையிலிருந்து சத்தமிட்டார்…
”எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டுதான ்..”கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறான்…
”இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா..” என்று அழ ஆரம்பித்தாள்…
இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார்..நாராயணசாமி
அவர் வெளியேறிவிட்டதும் ”கொல்” என சிரித்தனர் கணவனும் மனைவியும்…
”எப்படி இருந்தது என் நடிப்பு..அடிப்பது போல்அடித்தேனே.. .”என்றான் கணவன்..
”ஆஹா..அழுவது போல் அழுதேனே..எப்படி இருந்தது. என் நடிப்பு…”என்றாள் மனைவி…
”பிராமாதம்..” என்றான் கணவன்…
பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது…
”நானும் போவதுபோல் போய்விட்டு திரும்பி விட்டேன்.. என்றார் ” நாராயணசாமி ………….
கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்..
”இங்கே காபிபொடியும் இல்லை..சர்க்கரை யும் இல்லை..”அடுப்ப ங்கரையிலிருந்து சத்தமிட்டார்…
”எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டுதான ்..”கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறான்…
”இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா..” என்று அழ ஆரம்பித்தாள்…
இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார்..நாராயணசாமி
அவர் வெளியேறிவிட்டதும் ”கொல்” என சிரித்தனர் கணவனும் மனைவியும்…
”எப்படி இருந்தது என் நடிப்பு..அடிப்பது போல்அடித்தேனே.. .”என்றான் கணவன்..
”ஆஹா..அழுவது போல் அழுதேனே..எப்படி இருந்தது. என் நடிப்பு…”என்றாள் மனைவி…
”பிராமாதம்..” என்றான் கணவன்…
பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது…
”நானும் போவதுபோல் போய்விட்டு திரும்பி விட்டேன்.. என்றார் ” நாராயணசாமி ………….
Re: படிச்சு பாருங்க சிரிப்பீங்க
ரயில் பிரயாணி ஒருவர், பிளாட்பாரத்தில் டீ விற்றுக் கொண்டு போனவனைக் கூப்பிட்டு டீ வாங்கிக் கொண்டு, வேண்டுமென்றே, காசு கொடுக்காமல் தாமதப்படுத்தினார்.
ரயில் அதற்குள் பறப்பட்டுவிட்டது. டீ விற்கும் பையனுக்குக் காசும் கிடைக்கவில்லை. பிளாஸ்டிக் டீ தம்ளரும் நஷ்டம்.
பக்கத்திலிருந்த அவனது நண்பன் அவனைச் சமாதானம் செய்தான்.
”கவலைப்படாதே..! கடவுள் அந்த ஆளைக் கவனித்துக் கொள்வார்..!”
டீ விற்ற பையன் சொன்னான்.
”கடவுளுக்கு எதற்கு சிரமம்.
என் ‘டீ’யே
கவனித்துக் கொள்ளும்…!
ரயில் அதற்குள் பறப்பட்டுவிட்டது. டீ விற்கும் பையனுக்குக் காசும் கிடைக்கவில்லை. பிளாஸ்டிக் டீ தம்ளரும் நஷ்டம்.
பக்கத்திலிருந்த அவனது நண்பன் அவனைச் சமாதானம் செய்தான்.
”கவலைப்படாதே..! கடவுள் அந்த ஆளைக் கவனித்துக் கொள்வார்..!”
டீ விற்ற பையன் சொன்னான்.
”கடவுளுக்கு எதற்கு சிரமம்.
என் ‘டீ’யே
கவனித்துக் கொள்ளும்…!
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்கா ....
» நிச்சயம் பார்த்தா சிரிப்பீங்க
» படிச்சு சிரிச்சிட்டுதான் போகணும்!
» தூங்குவதை பாருங்க
» அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பாருங்க...!!
» நிச்சயம் பார்த்தா சிரிப்பீங்க
» படிச்சு சிரிச்சிட்டுதான் போகணும்!
» தூங்குவதை பாருங்க
» அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பாருங்க...!!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|