தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குமரன் கோட்டம் அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்

View previous topic View next topic Go down

குமரன் கோட்டம் அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர் Empty குமரன் கோட்டம் அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்

Post by முழுமுதலோன் Sun Dec 15, 2013 9:24 am

குமரன் கோட்டம் அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்

குமரன் கோட்டம் அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர் T_500_459

மூலவர் : சுவாமி நாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : குமரன் கோட்டம்
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

கார்த்திகை, சஷ்டி, சித்திரை வருடப்பிறப்பு, தைப்பூசம், பங்குனிஉத்திரம், விசாகம், பங்குனி உத்திரத்தில் பிரம்மோற்ஸவம் ஒரு வாரம்

தல சிறப்பு:

இங்குள்ள சுவாமி நாத சுவாமி திருக்கோயிலில் தான் ஆறுபடை வீடு முருகனும் ஒரே இடத்தில் தனிதனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். இதில் மிகப்பெரும் விசேஷம் என்னவென்றால் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருத்தணி, சுவாமிமலை, சோலைமலை மண்டபம் ஆகிய ஆறுபடைவீடுகளில் முருகப்பெருமான் எந்த பெயரில் எந்த திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாரோ, அதே பெயரில் அதே திசையில் இங்கும் அருள்பாலிக்கிறார். இந்த சுவாமிநாத சுவாமி திருக்கோயிலுக்கு வந்து இங்குள்ள ஆறு முருகப்பெருமானை தரிசித்தால் ஆறுபடைவீடும் சென்று தரிசித்த திருப்தி ஏற்படும். இக்கோயிலில் ஒரே கல்லினாலான நவக்கிரகம் அமைந்துள்ளது சிறப்பாகும்.

திறக்கும் நேரம்:

காலை5 மணி முதல்1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில், கோவை குமரன் கோட்டம், திருச்சி சாலை,கோயம்புத்தூர்-641 402 கோயம்புத்தூர் மாவட்டம்.

போன்:

-

பொது தகவல்:

இங்கு ஆறுகால பூஜை நடைபெறுகிறது.


பிரார்த்தனை

அறியாமை அகல, வலிமையும், ஊக்கமும் பெற, மனதில் வைராக்கியம் ஏற்பட, தீமைகள் அகல, மகிழ்ச்சி பெருக இங்கு பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் முருகனுக்கு அபிஷேம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

ஆறுமுகனின்ஆறுபணிகள்: தமிழ் மறை நூல்களில் முருகப்பெருமானின் ஆறுமுகங்கள்செய்யும் பணிகள்விளக்கப்பட்டுள்ளன.

1. அறியாமை அகற்றி ஞானம் வழங்குகிறது.

2. பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறது.

3. பக்தர்களுக்கு வலிமையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.

4.மறைந்துள்ள ரகசியங்களை வெளிக் கொணர்ந்து மனதில் வைராக்கியத்தை உண்டாக்குகிறது.

5.நல்லவர்களைக்காத்து தீயவர்களை அழிக்கிறது.

6.எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

முருகன் படைத்தல், காத்தல், அழித்தல் மற்றும் எல்லாத்தொழில்களையும் செய்கிறார் என்பது 12 கரங்களில் உள்ள ஆயுதங்களால் விளங்குகிறது. இந்த பூவுலகிலுள்ள ஒவ்வொரு மனிதப்பிறவியும் ஐம்பூதங்களாலும் உள்ளே இருக்கும் ஆன்மாவாலும் ஆனது.

இதே போல் முருகப்பெருமானுக்கு, சிவனின் நெற்றியிலிருந்து தோன்றிய தீப்பொறிகள் ஆன்மாவாவும், உடல் ஐம்பூதங்களாலும் அமைந்திருக்கிறது. இது இறைவன் மனிதப்பிறவி எடுக்கும் போது அதற்கேற்ற முறையில் அவரது உருவம் அமைவதை உணர்த்துகிறது.

தந்தைக்கே குருவானவன்: முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் நான்காம் படைவீடு சுவாமிமலை. தந்தையாகிய சிவ பெருமானுக்கு குருவாக இருந்து, "ஒம்' என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருளை உபதேசித்தவர் முருகன். இந்த சுவாமிநாத சுவாமியை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு ஞானமும் கிடைக்கும். ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது கல்விச்செல்வம். இத்தகைய கல்வி செல்வம் வற்றாமல் கிடைப்பதற்காகத்தான் குமரன் கோட்டத்தில் சுவாமிநாதசுவாமி கோயில் எழுந்தருளியிருக்கிறது.

கோயில் அமைப்பு: வெண்மை... தூய்மை.. என்பதற்கேற்ப கோயில் முழுவதுமே வெண்மைதான். ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரத்தின் உள்ளே சென்றதும் நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் நீங்கி, "நான்' என்பதை விட உயர்ந்தது இந்த ராஜகோபுரம் என்ற உணர்வு ஏற்படுகிறது. வலதுபக்கத்தில் வினைதீர்க்கும் விநாயகன் தனது தம்பியின் கோயிலில் முழுமுதற்கடவுளாக முதல் ஆளாக அமர்ந்திருக்கிறார். அடுத்ததாக குன்றிருக்கும் இடமெல்லாம் இருக்க கூடிய குமரன் சரவணப் பொய்கையில் அவதரித்ததை நினைவுகூறும் வகையில் பிரம்மாண்டமான தீர்த்த தொட்டியின் நடுவிலே தாமரை இதழ்களில் குழந்தை முருகனின் அவதார நிலை. இந்த சரவண பொய்கையை அஷ்டதிக் பாலகர்கள் காவல் காத்து வருகிறார்கள்.

முருகனை தரிசிப்பது என்றால் சாதாரண விஷயமா? உடனே அவனது தரிசனம் கிடைத்து விடுமா? எனவே நம்மிடம் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் என்ற பஞ்ச விகாரங்களையும் பலியிட்டு விட்டு முருகனிடம் செல்வதற்காக பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தையும் மயில் வாகனத்தையும் தாண்டி சென்றால் உலக நாயகனான தந்தை ஈசனுக்கே பாடம் சொன்ன சுவாமிநாத சுவாமி சந்தனக்காப்புடன் ராஜ அலங்காரத்தில் "நானே அழகு' என்பது போல் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். முருகனுக்கு மயில்தானே வாகனம். ஆனால் இங்கோ சுமாமிமலையில் இருப்பது போலவே யானை வாகனமாக உள்ளது. முருகனின் அழகை பார்க்கலாம்... பார்க்கலாம்... பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு அழகு. எதையெதையோ முருகனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நாம் செல்வோம். ஆனால் சுவாமிநாதனை பார்த்தவுடனேயே அவனைப்பார்த்தாலே போதும் அனைத்தையும் அடைந்து விட்ட திருப்தி ஏற்பட்டுவிடும்.

அறுபடை வீடு: மூலஸ்தான சுவாமிநாதனை தரிசித்து விட்டு வலம் வந்தால் திருத்தணிகை வேலன், வள்ளி- தெய்வானையுடன் தனி சன்னதியில் அருள்புரிவதை தரிசிக்கலாம். அவரை தரிசித்து விட்டு நகர்ந்தால் சூரனை வதம் செய்த திருச்செந்தூர் செந்திலாண்டவர் வேலுடன் தனி சன்னதியில் காட்சிதருகிறார். அடுத்து சென்றால் தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கேட்டதையெல்லாம் கொடுக்கும் வள்ளலாக வீற்றிருக்கிறார். தனக்கு வேண்டிய மாம்பழத்தை தன் அண்ணனுக்கு கொடுத்ததற்காக கோபித்து சென்ற பழநி தண்டாயுதபாணி, கையில் தண்டம் ஏந்தி, "எதற்கும் ஆசைப்படாதே' என நமக்கு அறிவுறுத்துவது போல் அவரே துறவியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இல்வாழ்க்கை இனிமையாக அமைய என்னை வணங்கு என்பதைப் போல், வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியர் தனி சன்னதியில் அருளாசி அள்ளி வழங்குகிறார்.

இப்படி ஆறுபடை வீடு திருமுருகனும் ஒரே இடத்தில் தனித்தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிப்பதை பார்க்க பார்க்க, நாம் வாழ்வதற்கு தேவையான அனைத்து வளங்களும் ஒரே இடத்தில் கிடைத்து விட்ட நிம்மதி ஏற்படும். ஆறுபடைமுருகனை தரிசித்து விட்டு வந்தால் முருகனின் பெற்றோர்கள் காசி விஸ்வநாதர் - விசாலாட்சி தனி சன்னதிகளில் நம்மை ஆசீர்வதிக்கிறார்கள். அத்துடன் 63 நாயன்மார்களும், ஒரே கல்லினாலான நவக்கிரகமும் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.

தல வரலாறு:

-

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலில் ஒரே கல்லினாலான நவக்கிரகம் அமைந்துள்ளது சிறப்பாகும்.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மருதமலை அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
» செஞ்சேரி அருள்மிகு வேதாயுத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
» கிணத்துக்கடவு அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
» பொள்ளாச்சி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
» எழுமாத்தூர் அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோயில், ஈரோடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum