தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடுமையான வார்த்தைகள்.. காணாமல் போகும் குழந்தைகள்..

View previous topic View next topic Go down

கடுமையான வார்த்தைகள்.. காணாமல் போகும் குழந்தைகள்.. Empty கடுமையான வார்த்தைகள்.. காணாமல் போகும் குழந்தைகள்..

Post by முரளிராஜா Mon Jan 06, 2014 3:06 pm

கடுமையான வார்த்தைகள்.. காணாமல் போகும் குழந்தைகள்.. C4eb803f-a328-46aa-8c49-eccc6662efed_S_secvpf

இன்றைய குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்கு தடைகள் வரும் போது அவர்கள் வீட்டை விட்டு ஓடிப்போகிறார்கள். இந்த உதாரணத்தை பார்க்கலாம். சமீபத்தில் நடந்த விபரீதம் இது. லோகேஷ், பவ்யா என்ற இரண்டு சிறுவர்கள் திடீரென்று காணாமல் போய்விட்டார்கள். 

யாரோ பணத்திற்காக கடத்திச் சென்றுவிட்டார்கள் என்ற பயத்தில் அவர்களது பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தார்கள். போலீஸ் தேடுதல் வேட்டையை தொடங்கியது. பல வழிகளில் தோண்டித் துருவிப் பார்த்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

ஒரு வாரமாக தேடியலைந்து நிம்மதியைத் தொலைத்த பெற்றோர்கள், ‘குழந்தைகள் இருவரும் இறந்து போயிருப்பார்களோ’ என்று அஞ்ச தொடங்கினார்கள். திடீரென்று வியாபாரி ஒருவர் வந்து, பக்கத்து ஊரில் இரண்டு குழந்தைகளை பார்த்தேன் என்றார். போலீஸ் விரைந்து சென்றது. காணாமல் போன அந்த குழந்தைகள் இருவரும் கிடைத்தனர். 

அவர்களிடம் போலீசார், ‘ஏன் வீட்டைவிட்டு வெளியேறினீர்கள்?’ என்று காரணத்தை கேட்டனர். அம்மா அப்பா திட்டியது தான் காரணம் என்றார்கள். பெற்றோரை பழிவாங்கும் நோக்கத்தோடு திட்டம் போட்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். 

இருவரும் பூங்காவிற்கு விளையாடச் சென்றபோது தங்களுக்கு பெற்றோர் மீதிருக்கும் கோபத்தை பற்றி வெளிப்படையாக விவாதித்திருக்கிறார்கள். மற்றவர்கள் முன்பு அவமரியாதை செய்யும் பெற்றோருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று, ‘காணாமல் போகும்’ இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். 

மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று ஆறு சிறுமிகள் ஒன்றாக வீட்டைவிட்டு ஓடி விட்டார்கள். பதறிப் போன பெற்றோர் காவல் துறையின் உதவியை நாட, அவர்கள் அதிவேகமாக நகரெங்கும் தேடி, அந்த சிறுமிகளை கண்டுபிடித்து வீடு கொண்டு போய் சேர்த்தனர். ‘பெற்றோர் எப்போதும் எங்களை படி படி என்று உயிரை எடுக்கிறார்கள். 

விளையாடச் செல்லும் நேரத்தில் வீட்டு வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள். அதனால் எங்களால் தோழிகளுடன் சேர்ந்து விளையாட முடியவில்லை. நாங்கள் ஏதாவது தப்பு செய்தால் கடுமையாக திட்டி அடிக்கிறார்கள். 

எங்கள் உணர்வுகளை காயப்படுத்தும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கத்தான் எல்லோருமாய் சேர்ந்து வீட்டைவிட்டு ஓடினோம்..’ என்று காரணங்களை வரிசைப்படுத்திய அவர்கள், மீண்டும் பெற்றோருடன் செல்ல சில நிபந்தனைகளையும் விதித்தனர். நிபந்தனைகள் என்ன தெரியுமா? ‘இனி அடிக்க மாட்டோம். திட்டமாட்டோம்.

வீட்டுவேலை செய்யச்சொல்ல மாட்டோம் என்று வாக்குறுதி தரவேண்டும்’ என்றார்கள்! (போலீஸ் மத்தியிலே இந்த பஞ்சாயத்து நடந்தது) பிள்ளைகள் சொன்னதைக் கேட்டு பெற்றோர் அதிர்ந்துபோனார்கள். போலீஸ் அதிகாரிகள் முன்னிலையிலே, ‘இந்த குழந்தைகளை எப்படி கண்டிக்காமல் எங்களால் வளர்க்க முடியும்? பெண் குழந்தைகள் வீட்டு வேலைகளை தெரிந்திருக்க வேண்டியது அவசியம்தானே. 

சின்னச்சின்ன வேலைகளை செய்ய குழந்தைகளை பழக்கப்படுத்தித்தானே ஆகவேண்டும்’ என்று கூறினர் பெற்றோர். பின்பு போலீசார் பேம்லி கவுன்சலிங்குக்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த சிறுமிகளுக்கும், பெற்றோர்களுக்கும் வாழ்வியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பெற்றோரின் கண்டிப்பு குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தேவை என்பதை அவர்களுக்கு பக்குவமாக உணர்த்தினார்கள். 

குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பெற்றோருக்கும் வலியுறுத்தினார்கள். சிறுவர்- சிறுமிகள் மனதளவில் தளர்ந்து, வீட்டை விட்டு வெளியேற, அவர்களது பெற்றோர்களுக்குள் நிரந்தரமாக நடக்கும் சண்டையும் ஒரு காரணம். 

வீட்டில் அமைதி இல்லாமல் போவதும், குடும்பப் பிரச்சினைகளும் குழந்தைகளின் மன நிலையை கெடுக்கின்றன. பெரியவர்களிடம் இருப்பது போன்ற குணாதிசயங்களை சிறுவர், சிறுமியர்களிடம் எதிர்பார்க்கக்கூடாது. பெற்றோர்களிடம் மிகுந்த அன்பு இருக்கும். 

ஆனால் அந்த அன்பை புரிந்துகொள்ளும் பக்குவம் குழந்தைகளிடம் கிடையாது. அதனால் பெற்றோர் தங்களை திட்டினாலோ, தண்டித்தாலோ அதை மிகப்பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, பெற்றோருக்கு தங்கள் மீது அன்பே இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். 

அப்படிப்பட்ட முடிவுக்கு வரும் குழந்தைகளை பெற்றோர் மேலும் திட்டினால் அவர்கள் மனதில் அது ஆழமான காயத்தை உருவாக்குகிறது. சிறுவர், சிறுமியர்களுக்கு தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய பெரிய சிந்தனை எதுவும் இருக்காது. சாதிக்கவேண்டும் என்ற வெறியும் பெரியவர்களைப்போல் இருக்காது. 

அவர்களது விருப்பம் எல்லாம் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதில்தான் இருக்கிறது. அதற்கான சூழலை பெற்றோர் அமைத்து தரவேண்டும். மாறாக பெற்றோர் தங்கள் சுமைகளையும், எதிர்பார்ப்புகளையும் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். திணிப்புதான் பிரச்சினையின் தொடக்கமாக இருக்கிறது. திணிக்கும் வாழ்க்கை இனிக்காது. 

குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுங்கள். நல்லவை கெட்டவைகளை மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள். தோழமையோடு எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். பதிலுக்கு அவர்களும் தோழமையோடு எல்லா விஷயங்களையும் உங்களோடு பகிர்ந்துகொள்வார்கள். 

நீங்கள் சொல்வதையெல்லாம் அவர்கள் கேட்டே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள். பிடிவாதம் பிடித்தால் உங்களை குழந்தைகள் வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். பெற்றோர் தங்கள் பிரச்சினைகளை எல்லாம் குழந்தைகளிடம் கூறி எந்நேரமும் புலம்பிக்கொண்டே இருக்கக்கூடாது. ‘உனக்காக நான் இதை செய்தேன். அதை செய்தேன்..’ என்று தொந்தரவு செய்துகொண்டும் இருக்கக்கூடாது.


நன்றி மாலை மலர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கடுமையான வார்த்தைகள்.. காணாமல் போகும் குழந்தைகள்.. Empty Re: கடுமையான வார்த்தைகள்.. காணாமல் போகும் குழந்தைகள்..

Post by Kingstar Tue Jan 28, 2014 12:18 pm

குழந்தையை சிறப்பாய் வளர்க்க பயனுள்ள கட்டுரை.
நன்றி
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

கடுமையான வார்த்தைகள்.. காணாமல் போகும் குழந்தைகள்.. Empty Re: கடுமையான வார்த்தைகள்.. காணாமல் போகும் குழந்தைகள்..

Post by செந்தில் Tue Jan 28, 2014 1:26 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கடுமையான வார்த்தைகள்.. காணாமல் போகும் குழந்தைகள்.. Empty Re: கடுமையான வார்த்தைகள்.. காணாமல் போகும் குழந்தைகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum