தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தகவல் களஞ்சியம்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

தகவல் களஞ்சியம் Empty தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:02 pm

* 16-ம் நூற்றாண்டில் தங்கம் அரிய ரசாயனப் பொருளாக இருந்துள்ளது.

* பிரமாண்ட உயிரினமான திமிங்கலத்தினால், பின்பக்கமாக நீச்சலடிக்க முடியாது.

* தூக்க மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு கனவுகள் பெரும்பாலும் குறைவாகத்தான் வருமாம்.

* இங்கிலாந்தில் 1942-ம் ஆண்டில் எல்லா மக்களுக்கும் ரேஷன் முறையில் சோப் வினியோகம் செய்யப்பட்டது.

* உலக மக்கள் தொகையில் சுமார் 25 சதவீதத்தினர் சீனர்கள்.

* சுத்தமான உறைபனியைவிட, அசுத்த உறைபனி வெகுவேகமாக உருகியோடும்.

* 1896-ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் ஜான்சிபார் ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த போர் வெறும் 38 நிமிடங்களிலேயே முடிந்தது.

* சுவீடன் நாட்டில் சுமார் 40 சதவீத மக்களின் பெயர்கள் `ஷீஸீ' என்றே முடிகிறது.

* மிகப்பெரிய தீவுகளில் 8-வது இடத்தில் பிரிட்டன் உள்ளது.

* ஆண்களைவிட பெண்கள்தான் அதிக சத்தத்துடன் குறட்டை விடுகிறார்களாம்.

* நைட்டிங்கேல் பறவையில் ஆண் இனம் மட்டுமே பாடும் தன்மை கொண்டது.

* உலகிலேயே சீனாவில்தான் அதிகம் சைக்கிள்கள் உள்ளன. அங்குள்ள மொத்த சைக்கிள்களின் எண்ணிக்கை 21 கோடியை தாண்டி விட்டதாம்.

* அங்கேரி நாட்டில் அதிக அளவில் ஏற்றுமதியாகும் உயிரினம்? - நீர்யானை.

* `சாக் கடல்' என்று அழைக்கப்படுவது உண்மையில் ஒரு கடல் அல்ல; அது ஏரியாகும்.

* உலகில் அதிகமாக பார்வையற்றவர்களை கொண்ட நாடு? -
சீனா.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:03 pm

* பிரான்ஸ் நாட்டில் `டன்கிரிக்' என்னும் வரலாற்று சிறப்புமிக்க ஊர் ஒன்று உள்ளது. அதாவது ஒரே நாளில் மூன்று நாட்டினரிடம் இந்த ஊர் கைமாறியது. 1658-ம் ஆண்டு ஜுன் 29-ம் தேதி காலையில் ஸ்பானியர்கள் வசம் டன்கிரிக் இருந்தது. மதியம் நடந்தப் போரில் பிரெஞ்சுக்காரர்கள் வெற்றி பெற்று தனதாக்கினார்கள். மாலையிலோ ஆங்கிலேயர்கள் தாக்குதல் நடத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


* சாதாரணமாக சில நிமிட நேரங்களே வானவில் தெரிவது வழக்கம். ஆனால் 1979-ம் ஆண்டில் ஆகஸ்டு 14-ம் தேதியன்று இங்கிலாந்தின் வேல்ஸ் அருகே `கிளைடு' என்ற இடத்தில் தெரிந்த வானவில் சுமார் 3 மணி நேரம் காட்சி தந்தது. உலக வரலாற்றிலே அதிக நேரம் நீடித்த வானவில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

* நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு நார்வே என்று பலருக்கு தெரியும். இங்கு, கோடைக் காலத்தில் தொடர்ந்து 105 நாட்களுக்கு சூரியன் பிரகாசித்துக் கொண்டே இருக்கும்.

* பூமியின் எடை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பூமியில் கோடிக்கணக்கான டன்கள் எடையுள்ள தூசி படிவதாலும் மற்றும் வேறு பல காரணங்களாலும் பூமியின் எடை அதிகரித்து வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

* பிப்ரவரி மாதத்திற்கு 28 நாட்கள் என்பதும், நான்கு வருடத்திற்கு ஒரு முறை வரும் லீப் ஆண்டில் மட்டும் 29 நாட்கள் என்பதும் பலருக்கும் தெரியும். ஆனால், ஒரு வருடத்தில் பிப்ரவரி மாதத்திற்கு வெறும் 19 நாட்களே இருந்துள்ளதாக கூறுகிறார்கள். 1752-ம் ஆண்டில் மட்டும் பிப்ரவரி மாதத்திற்கு 19 நாட்களே இருந்ததாம்.

* மருத்துவமனையை ஆங்கிலத்தில் `ஹாஸ்பிடல்' என்கிறோம். ஆனால், ஆரம்பத்தில் `ஹாஸ்பிடல்' என்பது தங்கும் விடுதி என்ற பொருளிலேயே விளங்கியது. அதன் பின்பு தான் தங்கும் விடுதிக்கு `ஹாஸ்டல்' என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது.

*அணில்கள் தூங்கும்போது உடலை சுருட்டி மடக்கி பஞ்சு போன்ற தனது வாலால் உடலை மூடிக்கொள்ளும். இரண்டு அணில்கள் ஒன்றாக தூங்கும்போது ஒன்றையொன்று கட்டித் தழுவியபடி உறங்கும். அணில்கள் எந்த நாட்டை சேர்ந்தவையாக இருந்தாலும் இப்படித் தான் துயில்கிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:04 pm

1. மனிதன் இறக்கும் போது உடலில் இருந்து கடைசியாக விலகும் புலன் கேட்டல் ஆகும். பார்வையே முதலில் பிரியா விடை பெறும் புலனாகும்.

2. ஸ்ட்ராபரி பழங்களில் மட்டுமே விதைகள் பழத்திற்கு வெளியே முளைக்கின்றன.

3. ஆனைக்கொய்யா (Avacado) விலேயே பழங்களில் அதிக கலோரிகள் உள்ளன. ஒவ்வொரு 100 கிராமிலும் 167 கலோரிகள் உள்ளன.

4. ஆகாயப்பரபில் இருந்து விழும் தூசு துணிக்கைகளால் பூமியின் எடை ஆண்டொன்றுக்கு 100 டன்களால் அதிகரிக்கின்றது.

5. புவியீர்ப்பு விசைகாரணமாக பூமியில் உள்ள மலைகள் 15,000 மீட்டருக்கு மேல் உயரமாக இருப்பது சாத்தியப்படாது.

6. விண்வெளியில் மேலதிகமாக எடுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 530 கிலோ கிராம் மேலதிக எரிபொருள் தேவை.

7. ஒவ்வொரு ஆண்டும் சந்திரன் பூமியை விட்டு இரண்டு அங்குலம் அப்பால் விலகிக் செல்கிறது.

8. மனித உடலில் உள்ள குருதிக்குழாய்களை அடுத்தடுத்து ஒவ்வொன்றாக அடுக்க முடிந்தால் அதனை 12,000 மைல்கள் நீளத்திற்கு நீட்ட முடியும்.

9. பௌர்ணமி முழு நிலவில் பிரகாசம் அரை நிலவிலும் 9 மடங்கு அதிகம். 


10. உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஒரு முறையேனும் தொலைபேசியில் பேசியதில்லை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:05 pm

* மின்சார பல்பை கண்டுபிடித்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயம்!

* சூதாட்டம் விளையாடுபவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை `கிங்'. சீட்டுகளில் இருக்கும் 'கிங்'குகள் யார்...யார் தெரியுமா?

ஸ்பேட்ஸ் சீட்டில் இருப்பது கிங் டேவிட், கிளப்ஸில் இருப்பது கிங் அலெக்சாண்டர், ஹார்ட்ஸில் இருப்பது கிங் சார்லிமேக்னே, டயமண்ட்ஸில் இருப்பது கிங் ஜுலியஸ் சீஸர்.


* வாத்துகள் விடும் `க்வாக்...க்வாக்' சத்தம் எதிரொலிப்பதில்லை. ஏன் என்று யாருக்கும் தெரியவில்லை!


* உலகிலேயே மகிழ்ச்சிக்காக உடலுறவு கொள்வது இரண்டு உயிரினம் மட்டுமே! மனிதன் மற்றும் டால்பின்கள்!

* மலர்களில் அமர்ந்து தேனை உறிஞ்சும் வண்ணத்து பூச்சிகளுக்கு சுவையுணர்வு நரம்புகள் அதன் பாதத்தில் உள்ளன!


* உலகில் உள்ள அனைத்து பனிக் கரடிகளும் இடதுகை பழக்கம் உள்ளவையே!


* நமது உடம்பில் அதிக வலிமையான தசை நாக்கு!


* விலங்குகளில் தாண்டி குதிக்க முடியாத மிருகம் யானை!


* முதன்முதலாக ஆங்கிலேயர்கள், ஆஸ்திரேலிய கண்டத்தில் இறங்கியபோது, அங்கு துள்ளிக் குதித்து ஓடிய கங்காருகளை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். இது என்ன விலங்கு? என்று அங்கிருந்த பழங்குடியின மக்களிடம் கேட்டனர். அவர்கள் தங்களது மொழியில், ``கன்..கு..ரூ'' என்று கூறியுள்ளனர். அப்படி என்றால் `நீங்க சொல்றது எங்களுக்கு புரியவில்லை' என்று அர்த்தம்! அதையே பெயராக மாற்றி விட்டனர் ஆங்கிலேயர்கள்!


* கல்லறை என்பதை குறிக்கும் `சிமெட்ரி' என்ற ஆங்கிலச் சொல் கிரேக்கத்திலிருந்து வந்தது. கிரேக்க மொழியில் கொய்மெட்ரியன் என்பதற்கு தூங்குமிடம் என்று அர்த்தம்! இதுவே மருவி இப்படி ஆகிவிட்டது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:06 pm

முதன் முதலாக பெண்கள் ஓட்டுப் போட உரிமை அளித்த நாடு நிïசிலாந்து.

***

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்தான் ஆகாய வìமானத்தில் பயணம் செய்த முதல் ஜனாதிபதி ஆவார்.

***

துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் தான் உலகிலேயே அதிகமான மசூதிகள் உள்ளன.

***

உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ள நகரம், `லே'.

***

ஜப்பானில் மாணவர்கள் இரண்டு கைகளாலும் எழுதுவதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

* உலகிலேயே மிகவும் அமைதியான நகரம் என்று அழைக்கப்படுவது- ரங்கூன்.

* பறவைகளுக்கு வியர்வை சுரப்பி கிடையாது.

* சுறா மீனுக்கு இரண்டு கருப்பைகள் உள்ளன.

* உயரமாக வளர்ந்தாலும் மூங்கில், புல் வகையைச் சேர்ந்தது தான்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:08 pm

* பசிபிக் கடலில் உள்ள சில மீன்கள் பஞ்ச வர்ணங்களில் உள்ளன. "கிளி மீன்கள்'' என்று இவைகள் அழைக்கப்படுகின்றன. இவற்றின் பற்கள் கிளியின் அலகு போல, உதட்டுக்கு வெளியே நீண்டு கொண்டிருக்கும். இவைகள் சங்கு, கிளிஞ்சல் போன்றவைகளை விழுங்கி தொண்டையில் வைத்துக் கொண்டு பின்னர் நொறுக்கி சாப்பிடுகிறதாம்.

* ஆஸ்திரேலியாவில் உள்ள கோலா எனப்படும் கரடி இனம் தண்ணீரே குடிப்பதில்லை. வெறும் யூகலிப்டஸ் மரத்தின் பட்டையைத் தின்றே உயிர் வாழ்கிறது.

*உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வாழ்பவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அப்பாவின் பெயரைத்தான் இனிஷியலாகப் போடுகிறார்கள். ஆனால் ஸ்பெயின் நாட்டில் மட்டும் அம்மாவின் பெயரை இனிஷியலாகப் பயன்படுத்துகிறார்கள்.

*நாம் முகவரியுடன் சேர்த்து பின்கோடையும் குறிப்பிடுவோம். இதில் உள்ள 6 எண்களில் முதல் எண் மாநிலத்தையும், அடுத்த இரண்டு எண்கள் துணை வட்டத்தையும், கடைசி 3 எண்கள் குறிப்பிட்ட தபால் நிலையங்களையும் குறிக்கிறது.

* ஐரோப்பாவில் ஏவப்படும் ராக்கெட்டுகள் "ஏரியன்'' என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. `ஏரியன்' என்பதற்கு ராக்கெட் என்பது பொருள்.

* ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள போர்த் என்னும் ரெயில்வே பாலம் குளிர்காலத்தில் இருப்பதைவிட கோடை காலத்தில் ஒரு மீட்டர் அதிகமாய் நீண்டு காணப்படுகிறதாம்.

* பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த நிலை கோபுரத்தைப் போல, வேறு சில கோபுரங்களும் இருக்கின்றன. 1560-ம் ஆண்டில் ருமேனியாவில் கட்டப்பட்ட கோபுரம் ஒன்றும், 1573-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டில் கட்டப்பட்ட பெரிய கோபுரம் ஒன்றும், பைசா நகரக் கோபுரம் போல சாய்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறது.


* நீர்க்கோழியின் ஆயுட்காலம்? - 50 ஆண்டுகள்.



* விமானம் மூலம் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் பணி முதன் முதலில் அமெரிக்காவில் உள்ள `ஓஹையோ' மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டது. லெப்டினன்ட் ஜான் மேக்ரெடி என்பவர் விமானம் மூலம், கம்பளி பூச்சிகளை ஒழிக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளை ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் தெளித்தார்.

* நத்தை தன் இருப்பிடத்தை விட்டு எவ்வளவு தூரம் சென்றாலும் வந்த வழியை மறப்பதில்லை. எங்கு சென்றாலும் திரும்பவும் தன் பழைய இடத்துக்கே வந்து விடுகிறது. கிட்டத்தட்ட 15 கிராம் எடை கொண்ட நத்தைக்கு, தன்னை விட 30 மடங்கு கனமுள்ள பொருளை இழுத்து செல்லும் ஆற்றலும் உள்ளதாம்.

* இத்தாலியின் பைசா நகர சாய்ந்த கோபுரம் புவி ஈர்ப்பு சம்பந்தப்பட்ட ஆய்வுக்கும் உதவி உள்ளது. அதாவது அறிவியல் விஞ்ஞானியான கலிலியோ, இந்த கோபுரத்தின் மீது ஏறி நின்று பல பொருட்களை கீழே வீசி எறிந்து, பூமியின் ஈர்ப்பு சக்தியை உலகுக்கு நிரூபித்துக் காட்டினார்.

* பற்பசை என்று அழைக்கப்படும் `டூத் பேஸ்ட்', டிïப்பில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதற்கான `டிïப்'பை லண்டனைச் சேர்ந்த, வாஷிங்டன் ஷெப்பீல்டு என்பவர் கண்டுபிடித்தார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:09 pm

* ஆசியாவின் இத்தாலி என அழைக்கப்படும் நாடு இந்தியா.

* தேசியக் கொடி இல்லாத நாடு மாசிடோனியா.

* நமது உடலில் வேர்க்காத பகுதி உதடு.

* தோலினால் சுவாசிக்கும் பிராணி மண்புழு, அட்டை.

* இயற்கைக் கவிஞர் எனப் புகழ் பெற்றவர் வில்லியம் வேட்ஸ்.

* புகழ் வாய்ந்த வால் நட்சத்திரம் ஹாலி.

* உலகின் முதல் உயிரினம் 57 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. அதன் பெயர் அமீபா.

* நல்ல முத்து என்றால் பாலில் மிதக்கும்.

* இந்தியர்கள் விசா இல்லாமல் போகும் வெளிநாடு பூடான்.

* நீர் அருந்தாத ஜீவராசி பல்லி.

* இரும்பை விட நான்கு மடங்கு கனமான வாயு ரேடான்.

* விண்வெளியைச் சுற்றிய முதல் செயற்கைக்கோள் ஸ்பூட்னிக்.

* உலகையே வெற்றி கொள்ள நினைத்த நெப்போலியன் செயின்ட் ஹெலனா தீவில் கைதியாக இருந்து போது உயிர் விட்டார்.

* சனி நீராடு என்றால் ஆண்கள் சனிக்கிழமை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பது அல்ல. சனி என்றால் குளிர்ச்சி என்று பொருள். சனி நீராடு என்றால் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பதாகும்.

* எவரெஸ்டில் ஏறிய மிக வயதான மனிதர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யூச்சிரோ ம்யூரர் என்பவர். அவருடைய வயது 70.

* எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை இதுவரை 65 நாடுகளைச் சேர்ந்த 1,300 பேர் இது வரை எட்டியுள்ளனர். 176 பேர் சிகரம் ஏறும் போது மரணமடைந்துள்ளனர்.

* எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜுங்கோ டெபி. 1975-ம் ஆண்டில் இவர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

* எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன்முதலில் சென்றடைந்தவர்கள் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹில்லாரியும், திபெத் நாட்டைச் சேர்ந்த டென்சிங் நார்கேயிலும் தான். 1953 மே 20-ம் தேதி காலை 11.30 மணியளவில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:10 pm

* பத்து மீட்டர் முதல் 30,000 மீட்டர் வரை, அதாவது, 30 கிலோ மீட்டர் பரவி வியாபித்திருக்கும் அலையே சிற்றலை என அழைக்கப்படுகிறது.

* தானாக இயங்கும் ஆட்டோமெடிக் சிக்னல் விளக்குகள் முதன்முதலில் இங்கிலாந்தில் உள்ள வுல்வர் ஹாம்ப்டன் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

* மின்சார விளக்கை 1835-ம் ஆண்டில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் லிண்ட்சே என்பவர் கண்டுபிடித்தார்.

* 1844-ல் முதன்முதலில் சர்வதேச கிரிக்கெட் பந்தயம் நடைபெற்றது. பங்கு பெற்ற நாடுகள் கனடா, அமெரிக்கா.

* 1810-ம் ஆண்டுதான் முதன்முதலில் ரஷ்யாவில் சர்க்கஸ் அறிமுகம் ஆனது.

* பசிபிக் சமுத்திரம் தான் உலகிலேயே மிகவும் பெரியது. இதன் பரப்பளவு 700 லட்சம் சதுர மைல். இதன் ஆழம் சராசரியாக 14 ஆயிரத்து 40 அடி இருக்கும். இரண்டாவது இடத்தை அட்லாண்டிக் சமுத்திரம் பெற்றுள்ளது. இதன் பரப்பு 410 லட்சம் சதுர மைல். சராசரி ஆழம் 12 ஆயிரத்து 900 அடியாகும்.

* தன் தலையை முழுவதும் திருப்பக் கூடிய பறவை ஆந்தை.

* பெரிய கடல் பறவை அல்பெட்ராஸ்.

* மிக அறிவுள்ள விலங்கு சிம்பன்ஸி குரங்கு.

* வேகமாக ஓடக் கூடிய விலங்கு சிறுத்தை.

* இறகு இல்லாத பறவை கிவி.

* வேகமாக ஓடக் கூடிய பறவை ஈமு.

*பிளாடிபஸ் விசித்திரமான உடலமைப்புடைய பிராணி. உடல் நீர் நாயைப் போன்றும், நகங்கள் நாய்களுக்கு இருப்பதைப் போலவும், அகன்ற தட்டையான அலகு வாத்தையும் போல ஒத்திருக்கும். இதற்கு சவ்வுள்ள கால்களும் இருக்கும்.


* முதன்முதலில் ஆங்கில அகராதியைத் தயாரித்தவர் நோஹ்வெப்ஸ்டர் என்ற அமெரிக்கர்.

* பேச்சு வழக்கில் சொல்லப்படும் ஒரு காத தூரம் என்பது பத்து மைல்களாகும்.

* ஒட்டும் அஞ்சல் தலைகள் முதன்முதலில் 1840-ம் ஆண்டில் அறிமுகமாயின.

* ரஷ்யாவில் ரப்பரால் கட்டப்பட்ட அணை உள்ளது.

* எகிப்தில் அதிகமாகப் பேசும் மொழி அராபி.

* விண்வெளியைச் சுற்றிய முதல் செயற்கைக்கோள் ஸ்பூட்னிக்
.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:11 pm

* உலகில் தோன்றிய முதல் பூச்சியினம் தட்டிரம் பூச்சிதான். முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த பூச்சிகள் மிகவும் பிரம்மாண்டமானதாக இருந்ததாம். இந்தப் பூச்சியினம் தோன்றி 15 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பறவைகளே தோன்றியதாம்.

* உலகிலேயே கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்படும் நாடு இஸ்ரேல்.

* உலகிலேயே மிக நீளமான தேசிய கீதம் உள்ள நாடு கிரீஸ்.

* உலகிலேயே மிகப் பெரிய ரயில் நிலையம் நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் டெர்மினல்ட்.

* உலகிலேயே காபி அருந்தும் நபர்கள் அதிகம் உள்ள நாடு அமெரிக்கா.

* உலகிலேயே மிகப் பெரிய மிருகக்காட்சி சாலையின் பெயர் க்ரூக்கர் நேஷனல் பார்க்.

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல்ஸ் நீர்வீழ்ச்சி.

"குலசை' க.மீ.நஜ்முதீன், காயல்பட்டினம்.

* பாம்பு, பல்லி, ஆமை, முதலை போன்ற ஊர்வனவற்றில் ஏறத்தாழ ஐந்தாயிரம் வகைகள் உள்ளன.

* ஐ.நா.சபை 1945 ஜூன் 26-ம் தேதி நிறுவப்பட்டது.

* ஸ்காட்லாந்துக்கு அருகிலிருக்கும் ஸ்டாபா தீவில் உள்ள பிங்கல் எனும் குகையில் எழுப்பப்படும் எதிரொலிகள் இசைக் கருவிகளில் இருந்து மீட்டும் இசை போல நீண்ட நேரம் கேட்கிறதாம்.

* 1900-ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள மெர்மான்ட் மாநிலத்தில் குதிரைகளுக்கு பெயின்ட் அடிப்பது சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்டது.

* ரஷ்யாவில் மகா பீட்டருடைய ஆட்சிக் காலத்தில், தாடி வைத்துக் கொண்டால், அதற்கு ஒரு சிறப்பு வரி செலுத்த வேண்டும் என்று சட்டம் உருவாக்கப்பட்டது.

* உலகிலேயே மிகப் பெரிய வைரச் சுரங்கத்தின் பெயர் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி.

* இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின்.

* உலகில் மிக அதிகமாக பேசப்படும் மொழி மாண்டரின்.

* பனிக் கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் அண்டார்டிகா.

* கிரகங்களின் சுழற்சியைக் கண்டறிந்தவர் கெப்ளர்.

* ஒரு மின்னலின் சராசரி நீளம் 6 கி.மீட்டர்.

* கனடா நாட்டின் தேசிய மலர் லில்லி பூ.

* சாக்பீஸின் வேதிப் பெயர் கால்சியம் கார்பனேட்.

* ஏரி மாவட்டம் என்றழைக்கப்படுவது செங்கல்பட்டு.

* வெள்ளைத் தங்கம் என்றழைக்கப்படுவது பருத்தி.

* நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா ஒன்றுதான்.

* நத்தை ஒரு மைல் தூரத்தைக் கடக்க மூன்று வாரம் ஆகும்.

* ஓநாய்கள் மணிக்கு 40 மைல் வேகத்தில் ஓடக் கூடியது.

* சில ரக எட்டுக்கால் பூச்சிகளுக்கு 8 கண்கள் உண்டு.

* ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில் 7 எலும்புகளே இருக்கும்.

* பறவைகளின் கண்கள் நீண்டிராமல் வட்டமாய் இருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:12 pm



* கிளிகளில் ஆணும், பெண்ணும் ஒரே மாதிரி இருக்கும்.

* கழுதைப் புலி நொறுக்கித் தின்னும்.

* யானை ஒரே இடத்தில் 8 மணி நேரம் கூட நிற்கும்.

* கழுகு தன் எடை போல் மூன்று பங்கு இறைச்சி தின்னும்.

* உலகிலேயே மிகப் பெரிய ரயில் பயணிகள் விடுதி சீனாவில் உள்ள பீஜிங் ரயில்வே ஸ்டேஷனில் உள்ளது. இது 1959-ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில், ஒரே சமயத்தில் பதினோராயிரம் பயணிகள் தங்கி ஓய்வெடுக்கலாம்.

* நாளிதழ்களுடன் இலவச இணைப்பை முதன்முதலாக வழங்கிய ஏடு "தி நியூயார்க் டைம்ஸ்'.

* தாவரங்கள் பொதுவாக ஒரே இடத்தில் தான் இருக்கின்றன. அவ்வாறு இல்லாமல் இடம் விட்டு இடம் நகரும் ஒருவகை தாவரமும் உள்ளது. அந்தத் தாவரத்தின் பெயர் கிளைமடோமோனஸ். இது பாசி இனத்தை சேர்ந்தது. தண்ணீரின் மூலம் நகர்ந்து செல்கிறது.

* ஒரு யுகம் என்பது 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள்.

* இந்தியாவில் 11 கோடி சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர்.

* கிரீன்லாந்தின் உறைபனி படலம் முழுமையாக உருகி விடுமானால் உலகெங்கிலும் உள்ள கடல் மட்டம் ஆறு முதல் ஏழு மீட்டர் வரை உயர்ந்து விடும்.

* நாய்களுக்கு உடலில் வியர்ப்பது கிடையாது.

* இங்கிலாந்து அரசியின் காருக்கு நம்பர் பிளேட் கிடையாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:13 pm

* தாய்லாந்து நாட்டு மொழிக்கு எழுத்துகள் கிடையாது.

* ஆமைக்குப் பற்கள் கிடையாது.

* சிறுத்தை நீரைக் கண்டால் கூச்சப்பட்டது போல ஒதுங்கிவிடும்.

* புலிக்கு வெள்ளையாக எதைப் பார்த்தாலும் பயம் ஏற்பட்டு விடும்.

* யானைக்குத் துதிக்கையில் காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக ஆறவே ஆறாது.

* நியூசிலாந்தில் உள்ள ராட்சதப் பல்லிகளின் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர ஓர் ஆண்டு காலம் ஆகிறது.

* குதிரைகளுக்கு 18 ஜோடி விலா எலும்புகள் உள்ளது.

* பூரானுக்கு நாற்பது கால்கள் உள்ளன.

*கரையான் புற்றில் கோடிக்கணக்கான கரையான்கள் இருக்கும். தாய் கரையான் தான் சர்வாதிகாரம் செலுத்தும். கரையான்கள் ஒருவித திரவத்தை சுரந்து எறும்புகளைச் செயலிழக்கச் செய்கின்றன. எறும்புகளுடன் இவை போராடும் போதே வேலைக்கார கரையான்களுக்கும் செய்தி பரவி, அவை புற்றின் எல்லா ஓட்டைகளையும் அடைத்து விடுமாம். சாகும் வரை 24 மணி நேரமும் கரையான்கள் வேலை செய்கின்றன.

* பாலில் இரும்புச் சத்து கிடையாது.

* தொழுநோய் மனிதனைத் தவிர வேறு விலங்குகளுக்குப் பரவுவது கிடையாது.

* ஆஸ்திரேலியா கண்டத்தில் எரிமலைகள் இல்லை.

* காளானில் பச்சையம் இல்லை.

* சவுதி அரேபியாவில் நதிகள் இல்லை.

* நியூசிலாந்து நாட்டில் காகம் இல்லை.

* பூனையின் பழக்கங்கள் இரண்டு கோடி ஆண்டாக மாறவில்லை.

* பிக்மி மர்சோசெட் குரங்கு அரை அடி நீளமே இருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:15 pm

இங்கிலாந்து நாட்டு கரன்ஸியின் பெயர் பவுன்ட்.

* ரஷ்ய நாட்டு கரன்ஸியின் பெயர் ரூபிள்.

* இத்தாலி நாட்டு கரன்ஸியின் பெயர் லிரா.

* பிரான்சு நாட்டு கரன்ஸியின் பெயர் பிராங்க்.

* அமெரிக்க நாட்டு கரன்ஸியின் பெயர் டாலர்.

* சீனா நாட்டு கரன்ஸியின் பெயர் யென்.

* பசிபிக் கடலின் ஐந்தாயிரம் மீட்டர் ஆழத்தில் வாழும் லேம்ப் ஃபிஷ்ஷின் உடலில் உள்ள புள்ளிகளில் இருந்து மஞ்சள், சிகப்பு, நீலம், பச்சை ஆகிய வண்ண ஒளிகள் உண்டாகும்.

* டால்பின்களுக்கு குரல்வளை கிடையாது. எனினும், காற்றை ஊதி 32 விதமான ஒலிகளை வெளிப்படுத்துகின்றன.

* அமெரிக்கக் கடல் பகுதியில் வாழும் எலக்ட்ரிக் ஈல் எனப்படும் ஒருவகை மீன் 10 மின் விளக்குகளை ஒரே சமயத்தில் எரியச் செய்யும் அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை.

* கொலம்பியாவில் உள்ள ஷனீகர் என்ற நதியில் மீன்களே இல்லை.

* கர்னார்டு என்ற வகை மீன் மனிதனிடம் பிடிபட்டதும் உடனே தன் கோபத்தை உறுமிக் காட்டும். ஆழ்கடலில் மட்டுமே இந்த வகை மீன்கள் காணப்படுகின்றன.

* கடல் மட்டத்திற்கு கீழேயுள்ள நாடு டென்மார்க்.

* ஒட்டகப் பால் மூன்று மாதங்களானாலும் கெட்டுப் போகாது.

* எவரெஸ்ட் சிகரத்தில் பிராண வாயு கிடையாது.

* மோனலிசாவிற்கு புருவம் இல்லாதது ஒரு குறை.

* பூனையின் உரோமம் நச்சுத்தன்மை வாய்ந்தது.

* எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்க்கு அடிக்கடி தலைவாரிக் கொள்ளும் பழக்கம் இருந்தது.

* நமது கண்களில் அமைந்துள்ள விழித்திரையில் 1,30,000,000 ஒளி உணர்வுள்ள செல்கள் ஒன்பது அடுக்குகளாக உள்ளன. அவை இழை நரம்புகளால் நடுவிழி நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளன.

* இமயமலை பல மலைகளை உடையது. இதில் ஏழாயிரம் மீட்டருக்கு மேல் உயரம் உடைய மலைகள் 250 உள்ளன. எட்டாயிரம் மீட்டருக்கு மேல் உயரம் உடைய மலைகள் பதினான்கு இருக்கின்றன.

* பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் முதல் அரசு வங்கியாக 1955-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

* பிரிட்னி ஸ்பியர்ஸ் பாப் இசைப் பாடகிகளில் அதிகளவு சம்பாதித்த முதல் பாடகியாவார்.

* உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் சவுதி அரேபியாவில் உள்ளது.

* "பாரடே' என்ற வார இதழ் மூன்று கோடியே 59 லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது.

* அண்டார்டிகா கண்டத்தில் ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளே இல்லை.

* ஜார்ஜ் குக்கர் எனும் ஹாலிவுட் இயக்குனர் தன் 81-வது வயதில் 50-வது படத்தை இயக்கினார்.

* அமைதியின் சின்னம் புறா ஓவியம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதனை முதன்முதலில் வரைந்தவர் புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோ.

* போலியோ எனும் இளம்பிள்ளை வாதத்திற்கு முதலில் மருந்து கண்டுபிடித்தவர் ஜோன்ஸ் சால்க் என்பவர்.

* சர்வதேச இசை வித்வான்கள் விரும்பும் "கடம்' மானாமதுரையில் தயாரிப்பவை.

* இந்தியாவில் 1,25,000 கிராமங்களில் இன்னும் மின்சார வசதி கிடையாது.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:16 pm

* லெனின் பரிசு பெற்ற இந்தியர் சர்.சி.வி.ராமன்.

* இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர் கமலா சுவாமிநாதன்.

* குளிர்பிரதேசங்களில் பல்லிகள் இருக்காது.

* இந்தியாவின் மிகப் பெரிய குகைக் கோயில் எல்லோரா குகைக் கோயிலாகும்.

* சீனாவில் வெள்ளை நிறம் துக்கத்தை வெளிப்படுத்தும் நிறமாகக் கருதப்படுகிறது.

* பெண் கொசு ஒரு தடவைக்கு 300 முட்டை வரை இடும்.

* லோப்ஸ்டர்கள் ஒரே சமயம் லட்சம் முட்டை இடும்.

* ஆமைகள் 300 ஆண்டுகள் வரை கூட உயிர் வாழும்.

* முட்டையிட்டு பால் தரும் விலங்கு பிளாடிபஸ்.

* பெரும்பாலான அட்டைகள் சுத்த நீரில் வாழ்பவை.

* பேன் இறக்கையில்லாத பூச்சி. மேலும், அதற்கு பார்வையும் கிடையாது.

* தலையில் முடிக்குப் பதிலாக, "விக்' அணியும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் பிரான்சு நாட்டு மன்னர்கள்.

* கார்கள், வாகனங்களைப் பதிவு செய்து எண் வழங்கும் முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.

* ஒற்றைக் கொம்புள்ள காண்டாமிருகம் அசாம் மற்றும் நேபாளம் பகுதிகளில் காணப்படுகின்றன.

* இரட்டைக் கொம்புள்ள காண்டாமிருகங்கள் சுமத்ரா தீவில் அதிகம் காணப்படுகின்றன.

* ஒட்டகச் சிவிங்கியின் நாக்கு சுமார் 45 செ.மீ. நீளமுள்ளது. மணிக்கு சுமார் 45 கி.மீ. வேகத்தில் ஓடுகின்றன.

* ஒரு யானையின் துதிக்கையில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன.

* போகைன்வில்லி தீவில் பேசப்படும் ரோட்போகாஸ் மொழியில் 11 எழுத்துகளே உள்ளன.

* மத்திய வியட்நாம் மொழியான செடாங்கில் 55 உயிரெழுத்துகள் உள்ளன.

* விதவித ஓசையுள்ள மொழி செக் மொழியாகும்.

* சீன மொழியில் "ஐ' என்ற எழுத்தை 84 விதங்களில் உச்சரிக்கலாம்.

* வார்த்தைகள் அதிகமுள்ள மொழி ஆங்கிலம்.

* இங்கிலாந்து நாட்டு கரன்ஸியின் பெயர் பவுன்ட்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:17 pm

1. முதன்முதலில் மிதக்கும் அணு உலையை உருவாக்கிய நாடு எது? - ரஷியா.

2. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியர்? - மிஹிர்சென்.

3. "நீலப் புத்தகம்'' எந்த நாட்டின் அரசாங்கப் புத்தகம்? - இங்கிலாந்து.

4. நீர் மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தவர் யார்? - டேவிட் புஷ்னல்.

5. `லிப்ட்' யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? - ஓட்டிஸ்.

6. தங்கவாசல் நகரம் என்று அழைக்கப்படுவது? - சான்பிரான்சிஸ்கோ.

7. மலேசியாவின் தேசிய மலர் எது? - செம்பருத்திப்பூ.

8. உலகிலேயே மிகப்பெரிய அஞ்சல் துறை உள்ள நாடு? - இந்தியா.

9. "வந்தே மாதரம்'' என்னும் பாடல் எந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது? - ஆனந்தமடம்.

10. இந்தியாவின் முதல் மக்களவை சபாநாயகர் யார்? - மாவ்லங்கர்.

11. `பெர்சியா' தற்போது எப்படி அழைக்கப்படுகிறது? - ஈரான்.

12. "வாயு லிங்க'' ஸ்தலம் என்று அழைக்கப்படுவது? - காளஹஸ்தி.

13. நோபல் பரிசை நிறுவிய `நோபல்' எந்த நாட்டைச் சேர்ந்தவர்? - சுவீடன்.

14. கங்கையும், யமுனையும் சங்கமிக்கும் நகரம்? - அலகாபாத்.

15. பழங்கால இந்தியாவின் சிறந்த வான நூல் அறிஞர்? - ஆரியப்பட்டர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:18 pm

இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட பெண்மணிகளுள் ஒருவரான அன்னிபெசன்ட் அம்மையார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.

***

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி அமைய அடித்தளமாக இருந்த வர்களில் ஒருவரான ராபர்ட் கிளைவ், கிழக்கிந்தியக் கம்பெனியில் ஒரு குமாஸ்தாவாக இந்தியா வந்தவர்.

***

முஸ்லிம்லீக் தலைவராக இருந்தவர் முகம்மது அலி ஜின்னா. பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்த இவரே அந்நாட்டின் தந்தையாக மதிக்கப்படுகிறார்.

***

இந்தியாவில் போர்த்துக்கீசிய ஆட்சியைத் தோற்றுவித்தவர், அல் பூகர்க். கி.பி. 1510-ல் இந்தியாவில் போர்த்துக்கீசிய ஆட்சியின் தலைமையிடமாக கோவாவை உருவாக்கினார்.

***

இந்தியாவில் சந்திரகுப்த விக்ரமாதித்தன் காலத்தில் வாழ்ந்த ஆரியபட்டா, சிறந்த வன ஆராய்ச்சியாளர்; கணித மேதை.

***

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் குரு நானக். இவர் கி.பி. 1469-ல் தால்வண்டியில் பிறந்தார்
.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:19 pm

* கொரியாப் போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட சியோல் நகரம், இன்று உலகின் நான்காவது பெரிய நகரமாக வளர்ந்துள்ளது. ஷாங்காய், மெக்சிகோ, டோக்கியோ ஆகியவை, பெரிய நகரங்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* மிகக் குறைந்த காலத்தில் சுதந்திரம் பெற்ற நாடு வங்காளதேசம்தான். அங்குள்ள மக்கள் சுதந்திரப் போராட்டத்தை தீவிரப்படுத்தி, சுமார் ஒரு ஆண்டு ஆவதற்குள் சுதந்திரம் கிடைத்தது.

* பிரான்ஸ் நாட்டின் நாணயம் `பிராங்க்' என்று அழைக்கப்படுகிறது. பிராங்க் என்பதற்கு விடுதலை என்று பொருளாகும். 14-ம் நூற்றாண்டின் போது இரண்டாம் ஜான், என்ற பிரெஞ்சு மன்னரை ஆங்கிலேயர்கள் சிறைப் பிடித்தனர். அவரை மீட்பதற்கு தேவையான பணத்தை செலுத்துவதற்காக இந்த நாணயத்தை தயாரித்துள்ளனர். அதனால்தான் இந்த நாணயத்திற்கு `விடுதலை' என்று பெயர் வந்தது.

* 1952-ம் ஆண்டில் உலகின் முதல் முப்பரிமாண திரைப்படம் வெளியானது.

* பெண்களை விட ஆண்களுக்கு இருமடங்கு அதிகம் வியர்க்கிறது.

* பீதியைக் கிளப்பும் "பறவைக் காய்ச்சல்'' நோய் முதன் முதலில், இத்தாலியில்தான் கண்டறியப்பட்டது.

* மனித மொத்த எடையில், தோல் பகுதியின் எடை மட்டும் 16 சதவீதம்.

5. மாத்திரை வடிவில் விற்பனை செய்யப்பட்ட முதல் மருந்து `ஆஸ்பிரின்'.


* காய்கறி வகைகளிலேயே, அதிக சர்க்கரைச் சத்து கொண்டது பீட்ரூட்.

* மே 12-ம் தேதியன்று உலக வரைபடத்தில் `இஸ்ரேல்' சேர்க்கப்பட்டது.

* 'டைட்டானிக்' கப்பல் விபத்து ஏப்ரல் 14-ம் தேதியன்று நடந்தது.

* வெயில் காலத்தை விட, குளிர்காலத்தில் நகங்கள் மெதுவாக வளருகின்றன.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by rammalar Mon Feb 24, 2014 12:20 pm


* சீன மொழியில் "ஐ' என்ற எழுத்தை 84 விதங்களில் உச்சரிக்கலாம்..!!

-
இங்கே இந்தியில் க.ச என்ற எழுத்தை கொஞ்சம் வித்தியாசமா
எழுதி நாலுவிதமான உச்சரிப்பில் உச்சரிக்க வேண்டியிருக்கு...!!
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:22 pm

[b]* சீன மக்கள் தொகையில் பத்து சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

* பிலிப்பைன்ஸ் நாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பேசும் எல்லா மொழிகளும் அந்நாட்டின் தேசிய மொழிகளாகும்.

* சுதந்திரம் அடைந்ததும் இந்தியா வெளியிட்ட முதல் தபால் தலையின் விலை மூன்றரை அணா. "ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையுடன் அந்த ஸ்டாம்ப் 1947 நவம்பர் 21-ம் தேதி வெளியிடப்பட்டது.

* புகழ் பெற்ற ஈஃபில் டவரின் பிளானை வரைய 6,000 மீட்டர் காகிதம் தேவைப்பட்டதாம்.


* விமான அஞ்சல் நிலையங்களில் தான் நீல நிறத்திலான அஞ்சல் பெட்டிகளைக் காண முடியும்.

* மயிரிழை என்பது ஓர் அங்குலத்தில் 48-ல் ஒரு பங்காகும்.

* சிறுத்தை ஒரு மணிக்கு 112 கி.மீ. வேகத்திலும், மான் 72 கி.மீ. வேகத்திலும், குதிரை 100 கி.மீ. வேகத்திலும் ஓடும் திறமை பெற்றிருக்கின்றன.

* உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

* இந்தியாவிலேயே மிகவும் பழமையான தேவாலயம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறது. இது, 1680-ம் ஆண்டு கட்டப்பட்டது.

* அமெரிக்க, பிரெஞ்சு மொழியியல் வல்லுநர்கள் உலகில் பேசப்படும் 2,796 மொழிகளை வரிசைப் படுத்தியுள்ளனர்.
[/b]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:24 pm

* பிணம் திண்ணும் கழுகுகள் வாயிலிருந்து எந்த சத்தமும் வராது. உலகிலேயே சத்தம் போட முடியாத உயிரினம் இதுதான்.

* கனடா நாட்டில் ஓநாயை வேட்டையாடி விரட்டிச் சென்ற ஒருவரை ஓநாய் கடித்துக் குதறியது. பின்னர், ஓநாய் தப்பி ஓடியது. ஓநாய் கடிபட்டவர், நாய் கடித்தால் எப்படி மரணமடைவார்களோ, அப்படி சில நாள்களில் உயிரிழந்தார். நாயைப் போலவே ஓநாயும் விஷமுள்ள மிருகம் தான்.

* ஐரோப்பாவில் உள்ள ஒருவகை சுண்டெலி, வருடத்தில் ஆறுமாதம் தான் விழித்திருக்கும். மீதி ஆறு மாதங்கள் அவை தூக்கத்தில் தான் இருக்கும்.

* ஆர்மடில்லோ என்பது சிறிய விலங்குதான். ஆனால், இதன் வாயில் நூறு பற்கள் வரை இருக்கும். இது ஒவ்வொரு முறையும் நான்கு குட்டிகள் போடும்.

* உலகிலுள்ள பெருங்கடல்களுள் ஒன்று ஆர்டிக் பெருங்கடல். இது பெயரளவில் தான் பெரியதே தவிர மிகச் சிறியது. நீர் சூழ்ந்த பகுதி. இதில் அலைகள் பாய்வதில்லை. கப்பல் போக்குவரத்தும் இதில் நடைபெறுவதில்லை.


* கோலா கரடி தவறி நீர் அருந்திவிட்டால் குடல்வால் வீங்கி மரணமடைந்து விடும்.

* பலத்த சப்தம் கேட்டால் அந்த அதிர்ச்சியில் பிளாடிபஸ் இறந்து விடும்.

* எறும்புகள் மோப்ப சக்தியை இழந்து விட்டால் இறந்து விடும்.

* தவளை இரண்டு, மூன்று நிமிடங்கள் வாயைத் திறந்திருப்பின் இறந்து விடும்.

* திமிங்கலங்கள் நீரை விட்டு வெளியே வந்தால் இறந்து விடும்.
* சுறா மீன் நீந்திக் கொண்டே இருக்காவிட்டால் செத்து விடும்.

* ஆசியாவின் வைரம் என்று அழைக்கப்படும் நாடு இலங்கை.

* பிரமிடுகள் அதிகம் உள்ள நாடு எகிப்து.







இன்னும் வளரும் ......




[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by rammalar Mon Feb 24, 2014 12:25 pm

படிக்க சுவையான தகவல் தொகுப்பு... கைதட்டல் கைதட்டல் 
-

* உலகில் அதிகமாக பார்வையற்றவர்களை கொண்ட நாடு? -சீனா.

-
அதிக அளவில் கண் தானம் செய்யும் நாடு எது..?
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:47 pm

rammalar wrote:படிக்க சுவையான தகவல் தொகுப்பு... [You must be registered and logged in to see this image.]  
-

* உலகில் அதிகமாக பார்வையற்றவர்களை கொண்ட நாடு? -சீனா.

-
அதிக அளவில் கண் தானம் செய்யும் நாடு எது..?



உலக அளவில்..... இலங்கை 


  இந்தியாவில் .......குஜராத் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by kanmani singh Mon Feb 24, 2014 4:36 pm

அனைத்தும் அருமையான தகவல்கள்.. நன்றி நண்பா!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முரளிராஜா Mon Feb 24, 2014 4:53 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by mohaideen Tue Feb 25, 2014 1:39 pm

அனைத்தும்  சூப்பர்  சூப்பர்

அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:11 am

[size=15.555556297302246]* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்ப்ïட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள். 

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறார்.

* அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் 50 டன் உணவைச் சாப்பிடுகிறார்கள். 13 ஆயிரம் கேலன் திரவப் பொருளைச் சாப்பிடுகிறார்கள்.

* ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது[/size]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் Empty Re: தகவல் களஞ்சியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum