Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எண்ண அலைகளின்றி பயத்தைப் பார்க்க முடியுமா?
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
எண்ண அலைகளின்றி பயத்தைப் பார்க்க முடியுமா?
உண்மையிலேயே எதையும் அறிந்து கொள்ள தீவிர ஆர்வமுடையவராக நான் இருந்தால், ஏன் இத்தனை உணர்வுநிலை பயங்களும் ஆழ்மனப் பயங்களும் உள்ளன என்பதைக் கண்டறிய விருப்பம் கொள்வேன். ஏன் இந்தப் பயம் வந்தது, இந்தப் பயத்தின் மையக் காரணி எது என்ற கேள்விகளோடு சுய விசாரணை செய்வேன். எப்படி விசாரணை செய்வது என்பதை இங்கு உங்களுக்குச் சுட்டிக்காட்ட முயற்சி செய்கிறேன்.
என் மனம், நான் பயப்படு கிறேன் என்பதை அறிவேன் என்று சொல்கிறது. இருட்டைப் பார்த்தால் பயம், தண்ணீரைப் பார்த்தால் எனக்குப் பயம்; நான் உயரமாய், அழகாய் இருக்க வேண்டும் என்று ஆசை ஆனால், அப்படி இல்லையே- அதனால் பயம். நான் இப்போது அவற்றைப் பற்றி விசாரணை செய்து கொண்டிருக்கிறேன். ஆக, எனக்கு நிறைய பயங்கள் உள்ளன. ஆழ்மனப் பயங்களும் மேலோட்டமான பயங்களும் எனக்கு இருக்கின்றன என்பதும் எனக்குத் தெரியும். அவை இரண்டைப் பற்றியும் அறிந்துகொள்ள விரும்புகிறேன். அவை எப்படி இருப்பு கொள்கின்றன, அவை எப்படித் தோன்றுகின்றன, அவற்றின் வேராக இருப்பது எது என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காண முற்படுகிறேன்.
பயத்தைப் பற்றி எப்படி அறிந்துகொள்வது? பயத்தைப் பற்றிய ஆய்வில், ஒவ்வொரு படியாக மெதுவாக ஏறி முன்னேறப் பார்க்கலாம். முதல் படியாக, பயந்துகொண்டு வாழ்வது என்பது மன இறுக்கத்தோடு பதற்றத்தோடு இருப்பது மட்டுமல்ல, மிகுந்த அழிவையும் அது கொண்டு வருகிறது என்ற உண்மையை மனம் முதலில் பார்க்க வேண்டும்.
நான் மன இறுக்கத்துடன் இருப்பதையும், அதன் காரணமாக, பதற்றமான செயல்பாடுகள் தொடர் வதையும் அவை அழிவைக் கொண்டு வருவதையும் மனம் பார்க்க வேண்டும். பயந்து போயிருக்கும் மனம், ஒருபோதும் நேர்மையாக நடந்து கொள்ளாது. கெட்டியாகப் பற்றிக் கொள்ள ஏதோ ஒரு அனுபவத்தை அல்லது ஒரு கற்பனையைக் கண்டுபிடித்து, பயந்த மனம் அதைப் படித்துக் கொள்ளும். ஆக, பயம் இருக்கும்வரை, துன்பம் இருக்கும் என்பதை முழுமையாக, தெளிவாக நான் பார்க்க வேண்டும். நீங்கள் அவ்வாறு பார்க்கிறீர்களா? அவ்வாறு பார்த்தல், முதல் தேவையாக இருக்கிறது. அதுவே முதலாம் உண்மையாகவும் இருக்கிறது. பயம் இருக்கும் வரை, இருள் இருக்கும்; இருளில் இருந்துகொண்டு நான் செய்வதெல்லாம் இருளாகவே இருக்கும், குழப்பமாகவே இருக்கும். இவ்வுண்மையைத் தெளிவாக, முழுமையாக நான் பார்க்கிறேனா?
ஏற்றுக்கொள்வதோ மறுப்பதோ பிரச்சினை இல்லை. நீங்கள் இருட்டில் வாழ்கிறீர்கள் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா? ஆமோதித்தீர்களென்றால், அதனுடன் வாழுங்கள். நீங்கள் போகுமிடமெல்லாம் இருளைச் சுமந்து செல்கிறீர்கள், இருளில் வாழ்கிறீர்கள், அவ்வளவுதான். அதோடு திருப்தி அடைந்துவிடுங்கள்.
- ஜே. கிருஷ்ணமூர்த்தி
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: எண்ண அலைகளின்றி பயத்தைப் பார்க்க முடியுமா?
ஏற்றுக்கொள்வதோ மறுப்பதோ பிரச்சினை இல்லை. நீங்கள் இருட்டில் வாழ்கிறீர்கள் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா? ஆமோதித்தீர்களென்றால், அதனுடன் வாழுங்கள். நீங்கள் போகுமிடமெல்லாம் இருளைச் சுமந்து செல்கிறீர்கள், இருளில் வாழ்கிறீர்கள், அவ்வளவுதான். அதோடு திருப்தி அடைந்துவிடுங்கள்.
Similar topics
» எதிர்ப் பார்க்க முடியுமா?
» எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
» உங்களின் பார்வைக்கு சில படங்கள்
» உங்களின் பார்வைக்கு
» எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
» உங்களின் பார்வைக்கு சில படங்கள்
» உங்களின் பார்வைக்கு
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|