Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
செங்கலுக்கு மாற்றான ஏ.சி.சி. கற்கள்
Page 1 of 1 • Share
செங்கலுக்கு மாற்றான ஏ.சி.சி. கற்கள்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் புதிது புதிதான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் களம் அமைத்துத் தந்தது. கட்டுமானத் துறையிலும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் ஏ.சி.சி. கற்கள் (Autoclaved Aerated Concrete Blocks). 1924-ம் ஆண்டு ஜோகன் ஆக்செல் எரிக்ஸன் என்னும் சுவீடன் நாட்டுக் கட்டிடக் கலை வல்லுநர் இதைக் கண்டுபிடித்தார். அந்தக் காலத்தில் மரங்களே கட்டுமானப் பொருளாக அதிகமாகப் பயன்பட்டுவந்தன. அதற்கு மாற்றாக ஒரு பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி அவர் இந்த ஏ.சி.சி. கற்களைக் கண்டுபிடித்தார். இந்த வகைக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்ட உடனே பெரும் வரவேற்பைப் பெற்றன.
சாம்பல் (அல்லது கிரானைட் துகள்கள்), ஜிப்ஸம், சிமெண்ட் ஆகியவற்றுடன் நீர் கலந்து ஒரு கலவை முதலில் உருவாக்கப்படுகிறது. இந்தக் கலவையுடன் 0.05 சதவீதத்திலிருந்து 0.08 சதவீத அளவுக்கு அலுமினியப் பவுடர் கலக்கப்படுகிறது. நம்முடைய நாட்டில் அனல் மின் நிலையத்தில் கிடைக்கும் அதிகப்படியான சாம்பல் கழிவுகளை ஏ.சி.சி. கற்கள் தயாரிப்பில் கிரானைட் துகள்களுக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள்.
கலவையுடன் அலுமினியப் பவுடர் இணைந்து வேதிவினை புரிவதால் கலவையின் எடை குறைகிறது. அலுமினியக் கலவையில் உள்ள கால்சியம் ஹைட்ராக்ஸைடுடன் நீர் வேதிவினை புரிந்து ஹைட்ரஜனை உண்டாக்குகிறது. இந்த ஹைட்ரஜன் வாயுவால் கலவையில் 3 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட குமிழ்கள் உண்டாகின்றன. மறுபடியும் மேற்கொள்ளப்படும் தயாரிப்பு முறையில் ஹைட்ரஜன் வாயு வெளியேறி, அந்தத் துளைகளில் காற்று வந்து அடைந்துகொள்கிறது. இந்தக் காற்றுக் குமிழ்களால் கலவையின் எடை குறைந்துவிடுகிறது.
அடுத்ததாக லேசாக்கப்பட்ட கலவை ஆட்டோகிளைவ் சேம்பரில் வைக்கப்பட்டு 190 டிகிரி வெப்பநிலையில் நீராவி செலுத்தப்படுகிறது. கால்சியம் ஹைட்ராக்சைடு, கால்சியம் சிலிகா ஹைட்ரேட் ஆக மாறி, உறுதியாகிறது.
முதலில் ஐரோப்பாவில் மட்டும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட இந்த வகைக் கற்கள், இப்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா, பஹ்ரைன், சீனா, இஸ்ரேல், அமெரிக்காவிலும் இந்த வகைக் கற்கள் அதிகமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகைக் கற்கள் செங்கல்லைக் காட்டிலும் மிகவும் எடை குறைவானது. அதாவது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எடை உடையது. சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் கட்டப்படும் பல அடுக்குக் கட்டிடங்களுக்கு எடை மிகக் குறைவாக இருப்பதால் இந்த வகைக் கற்கள் ஏற்புடையதாக இருக்கும். கையாள்வதற்கும் எளிது என்பதால் பணிகள் மிக விரைவாக நடப்பதற்கும் ஏதுவாக இருக்கும். இக்கற்களை எளிதாக உடைக்கலாம், துளையிடலாம். அதனால் வயரிங், பிளம்பிங், டெகரேஷன் செய்வதும் சுலபம். இன்றைய சுற்றுச் சூழலுக்கு ஏற்றவகையில் ஏ.சி.சி. கற்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு கட்டப்படுகின்றன.
நுண் துகளுடைய (Porous Structure) இதன் கட்டமைப்பு ஏ.சி.சி. கற்களுக்கு எளிதில் தீப்பிடிக்காத தன்மையைத் தருகின்றன. பாரம்பரியமாகப் பயன்பட்டுவரும் செங்கல் போல் கட்டுமானத்திற்குத் தகுந்தவாறு உடைக்க வேண்டிய அவசியமல்ல. மேலும் அப்படிச் செங்கல்லை உடைக்கும்போது வீணாகும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் இந்த வகைக் கற்களை எளிதாகக் கட்டுமானத்திற்குத் தகுந்தவாறு வெட்டிக் கொள்ளலாம், கல்லும் வீணாகாது.
ஏ.சி.சி. கற்கள் அறையின் வெப்பத்தையும் குளிரையும் சமநிலையில் வைத்திருக்கும். லேசான எடை உள்ளதாக இருப்பினும் இந்தக் கற்கள் உறுதியானவை. அதனால் மழை நீர் கசிவு ஏற்பட வாய்ப்பில்லை.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: செங்கலுக்கு மாற்றான ஏ.சி.சி. கற்கள்
பயனுள்ள தகவலுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சிறுநீரக கற்கள் கரைய
» பயன்மிகு ஃபோமிங் கற்கள்
» சிறுநீர் கற்கள் ஏன் உருவாகின்றன?
» கிட்னி கற்கள் யாருக்கு வரும் ???
» சிறுநீர் கற்கள் எப்படி உண்டாகிறது?
» பயன்மிகு ஃபோமிங் கற்கள்
» சிறுநீர் கற்கள் ஏன் உருவாகின்றன?
» கிட்னி கற்கள் யாருக்கு வரும் ???
» சிறுநீர் கற்கள் எப்படி உண்டாகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|