தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடவுளின் காலத்தில்

View previous topic View next topic Go down

கடவுளின் காலத்தில் Empty கடவுளின் காலத்தில்

Post by நாஞ்சில் குமார் Sat May 31, 2014 11:43 pm




நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையிலான ஒரு பாதையில்தான் கோவில்களுக்கும் தர்ஹாக்களுக்கும் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் எனக்குத் தேவையான நம்பிக்கை, ஆற்றல் மற்றும் வரத்தை அவை தந்திருக்கின்றன. பல சமயங்களில் வெறுமையையும் அசூயையையும் அளித்திருக்கின்றன. பெரும்பாலான மக்களுக்கு இது பொதுவான அனுபவமாகவே இருக்கும்.

ஆனால் திருவிழாக் காலங்கள், சிறப்பு நாட்களில் கோவிலுக்குச் செல்வதும், கூட்டத்தோடு முண்டியடித்துத் தரிசனம்செய்வதும் இன்னமும் அசௌகரியத்துக்குரியதாகவே இருக்கிறது. ஆனால் வாழ்க்கை போலவே - அனுபவங்கள் சார்ந்து எல்லாமும் திரும்பத் திரும்ப நிகழ்கிறது என்றாலும் தவிர்த்துவிட முடிவதில்லை.

எனக்கு அப்போது ஐந்து வயது இருக்கலாம். எங்கள் ஒன்றுவிட்ட அண்ணனுக்கு அரசு வேலை கிடைத்ததற்கு திருச்செந்தூர் கோவிலில் நேர்த்திக்கடனாகக் காவடி எடுத்தனர். கோவிலின் இருண்ட உட்பிரகாரத்தில் தொடங்கிய காவடி ஆட்டம் கடலுக்கு அருகே இருக்கும் பிரகாரத்துக்கு வந்தது. அருள் வந்த மூர்க்கத்தில் வேகமாக ஓடிச்சென்ற என் அண்ணனை உறவினர்கள் எல்லாரும் சேர்ந்து கடலில் தாழ்த்திக் கொல்லப்போகிறார்கள் என்று அந்தப் பருவத்தில் உண்மையாகவே நினைத்தேன்.

இதுபோன்ற கோவில் சடங்குகள், உற்சவங்களைப் பொறுத்தவரையில் எப்போது என்ன அசம்பாவிதம் நேருமோ என்ற பயத்தையே குழந்தைப்பருவத்திலிருந்து உணர்ந்து வந்திருக்கிறேன். என் பூர்வ நினைவில் கோவில் அச்சத்துக்குரிய இருண்ட படிமமாக உறைந்து இருக்கலாம்.

பொதுக் காலம்

ஆலயங்களைப் பொறுத்தவரை அங்கு நுழைந்தவுடன் ஏழை, பணக்காரர், குழந்தை, பெண், முதியவர்கள், ஊனமுற்றவர் எல்லோரும் அவரவர் உலகங்களிலிருந்தும், அவரவர் காலப்பிரமாணத்திலிருந்தும் வெளியேறிவிடுகிறார்கள். சில, பல வித்தியாசங்கள் இருந்தாலும் ஒப்பீட்டளவில் ஒரு ‘பொது’ உலகம் மற்றும் ‘பொது’க் காலத்தில் அவர்கள் நிற்கிறார்கள்.

இருட்டு, கசகசப்பு, விளக்க இயலாத காத்திருப்பு, உணர்வுகள், மனிதர்கள், வியர்வைகள், பாலினங்கள், வர்க்கங்கள், அசூயை, காமம், தண்டனை அனைத்தும் கலந்த சகதியில் கடவுளை நோக்கி யாத்திரை செய்கிறோம். பெரும்பாலான இந்தியர்களுக்கு இன்னும் தீர்த்த தலங்களும் உண்டு. தீர்த்த யாத்திரைகளும் உண்டு. வாழ்க்கை யாத்திரையைக் குறுகிய வடிவில் பிரதிபலிப்பதாக இருக்கின்றன கோயில்கள். புல்லாய், பூடாய், புழுவாய் மரமாகி, வல் அசுரராய் தேவராய் சொல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் பிறந்திளைக்கிறோம்.

கடவுளின் வீட்டில் குளிர்சாதன வசதி

இன்று பிரபலமான கோவில்கள் பலவற்றிலும் மூலவரைத் தவிர வேறு சந்நதிகளைப் பெரும்பாலான சமயங்களில் பக்தர்கள் தரிசிப்பதற்கு அனுமதி இல்லை. அத்துடன் பக்தர்களின் வருகை அதிகரித்த கோவில்களில் மூலவரின் இருப்பிடம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏழையையும், பணக்காரரையும் அதிகாரம் உள்ளவரையும் அதிகாரம் அற்றவரையும் பிரிப்பதும், பரஸ்பரம் இரு உலகங்களையும் மூடிவைத்திருப்பதும் குளிர்சாதன அறையின் கதவுகள் தாம். அதனால் கடவுளின் அறையும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

இன்று பிரபலமான கோவில்கள் பலவற்றிலும் மூலவரைத் தவிர வேறு சந்நதிகளைப் பெரும்பாலான சமயங்களில் பக்தர்கள் தரிசிப்பதற்கு அனுமதி இல்லை. அத்துடன் பக்தர்களின் வருகை அதிகரித்த கோவில்களில் மூலவரின் இருப்பிடம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏழையையும், பணக்காரரையும் அதிகாரம் உள்ளவரையும் அதிகாரம் அற்றவரையும் பிரிப்பதும், பரஸ்பரம் இரு உலகங்களையும் மூடிவைத்திருப்பதும் குளிர்சாதன அறையின் கதவுகள் தாம். அதனால் கடவுளின் அறையும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

தரிசனம்

கடைசியில் கடவுளின் கருவறைக்குள் எல்லாரும் அனுமதிக்கப்படுகிறோம். கடவுளின் காலப்பிரமாணத்திற்கு வெகு அருகே துல்லியமாக வந்துவிட்டோம். அத்தனை புராணங்களும் நம் பெருமிதங்களும் நம் ஆசையும் சேர்ந்த எல்லையற்ற அதிகாரம் கொண்ட மகாராஜா வடிவில் கடவுள் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார். ஓரிரு நிமிடங்கள் வித்தியாசம் இருக்கலாம். இதுதான் வேண்டுதலின், துய்ப்பின், காத்திருப்பின் உச்சம். இதற்கு மேல் ஒன்றும் இல்லை. எல்லாரும் மலையிலிருந்து இறங்கித்தான் ஆகவேண்டும். கடவுள் விடைகொடுக்கிறார். ஒரு களைப்பும் நிறைவும் வெறுமையும் சேர்ந்து சூழ்கிறது. கடவுளின் அரசாங்கத்திலிருந்து கடைசிக் காற்று எனது முதுகை வருடுகிறது.

கடவுளின் அருகிலும் சுற்றுப்பிரகாரங்களிலும்

கோவிலில் பணிபுரிபவர்களுக்கு அது ஒரு அலுவலகம் போல இருக்கிறது. சுற்றி கடை வைத்திருப்பவர்கள், பூ விற்பவர்கள், ஒவ்வொரு முகமாகப் பார்த்து பக்தர்களின் இரக்கத்தின் எல்லை வரை பின்தொடரும் யாசகப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் யாருக்கும் இதுவரை கடவுள் என்ற நபரே அறிமுகமாகவில்லை. கடவுளுக்கும், கடவுளின்மைக்கும் இடைப்பட்ட பாதையில் என் வாகனத்தில் ஏறி வீடு திரும்புகிறேன்.


நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கடவுளின் காலத்தில் Empty Re: கடவுளின் காலத்தில்

Post by முரளிராஜா Sun Jun 01, 2014 8:59 pm

நன்றி நாஞ்சில் குமார்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum