Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கண்களை கொஞ்சம் கவனியுங்கள்...
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
கண்களை கொஞ்சம் கவனியுங்கள்...
[You must be registered and logged in to see this image.]
பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பொருட்களை கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் என சொல்வது வழக்கம். கண் பத்திரமாக, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய உறுப்பு. ஏனென்றால், உள்ளத்து உணர்ச்சிகளைப் அப்படியே கண்ணாடி போன்று பிரதிப்பலிப்பவை கண்கள். கண்களில் உண்டாகிற பிரச்னைகள் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, அழகுக்கும் நல்லதல்ல. கண்ணழகு தொடர்பான சில பிரச்னைகளையும், அவற்றிற்கான தீர்வுகளும்...
சுருக்கங்கள் மற்றும் கோடுகள்: கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மென்மையாக இருக்கும். சீக்கிரமே வறண்டு போய்விடும். 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டலாம். கண்களைச் சுற்றி ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவி வரலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் செய்யலாம். கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களை கசக்கக்கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக்கிவிடும். சுருக்கம் அதிகம் இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்லது பாதாம் ஆயில் பயன்படுத்தலாம். மோதிர விரலால் மிக மென்மையாக மசாஜ் செய்து துடைக்கலாம். தேயிலை கொதித்து வைத்த தண்ணீரை வடிகட்டி அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் ஒத்தடம் கொடுத்தல் சுருக்கங்கள், கோடுகள் மறையும். இதை போன்று தினமும் செய்யவும்.
கருவளையம்: சருமத்தின் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஹைப்போ டெர்மிஸ் கண்கள் சுற்றியுள்ள பகுதியில் மிக குறைவு. பரம்பரை வாகு, தூக்கமின்மை, சரிவிகித உணவு உண்ணாதது, கம்ப்யூட்டர், டி.வி முன் அதிக நேரம் இருப்பது என கருவளையங்கள் உருவாக காரணம். துவக்கத்திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டால் சரி செய்யலாம். முதலில் 8 மணி நேரம் தூக்கம் தேவை. பகல் நேரத்தில் உள்ளங்கை குவித்து கண்களின் மேல் வைத்து மூடியபடி அடிக்கடி செய்யலாம். கண்களை வேகமாக மூடித் திறந்தால் அது ஒருவித மசாஜ்.
கண்களை இறுக மூடவும், பிறகு அகலமாகத் திறக்கவும். இதைப்போன்று 5 முறை செய்யவும். புருவங்களை குறுக்காமல், கண் இமைகளை மட்டும் மூடி, மூடி திறக்கவும். நெற்றி, முகத் தசைகள் சாதாரணமாக இருக்கட்டும். இந்த பயிற்சி கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கான பயிற்சி. கருவளையத்தை போக்க இதை தொடர்ந்து செய்யலாம். கருவளையம் அதிகமாக இருந்தால் பியூட்டி பார்லர்களில் ஐ மசாஜ் செய்தால் பலனளிக்கும்.
கண்களுக்கான மேக்கப் நீக்க வேண்டிய அவசியம்: இரவு படுக்கும் முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்றவேண்டும். செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்றவேண்டும். தற்போது, ஐ மேக்கர் ரிமூவரும் கிடைக்கிறது. பஞ்சைத் தொட்டு கண்களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கி துடைக்க வேண்டும். இரண்டு, மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். பிறகு கண்களைத் திறந்து, வேறொரு பஞ்சால் கண்களின் உள் பக்கத்தையும், கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். கண்ணில் மேக்கப் முழுக்க அகற்றப்படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி கண்கள் சிவந்து போகுமாறு செய்யும்.
சிவந்து, கண்ணீர் வடியும் கண்கள்: கண்களுக்கு உபயோக்கின்ற மை, பிரஷ், ஐ லைனர், மஸ்காரா போன்ற ஏதேனும் அலர்ஜியானால் இப்படி கண்ணீர் வடியலாம். வாயில் துணியை வைத்து ஊதி கண்களின் மேல் வைக்கக்கூடாது. எச்சில் மூலம் தொற்றுக் கிருமிகள் கண்களுக்குள் போகும். கண்களை கழுவி விட்டு அப்படியே காத்திருக்கலாம். அலர்ஜி காரணமாக உண்டாகியிருந்தால் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம். கண்களுக்கான மேக்கப் சாதனங்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும்.
கண்களை பராமரிக்க டில டிப்ஸ்: சுத்தமான தண்ணீரால் அடிக்கடி கண்களை கழுவவும். சாதாரண மையில் ஆரம்பித்து, ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்காரா என எல்லாமே தரமான தயாரிப்புகளாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும். கண்களுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பச்சை, நீல நிறங்களை சிறிது நேரம் பார்க்கலாம். தினமும் 8 மணி நேர தூக்கம் மற்றும் 10 முதல் 12 டம்ளர் தண்ணீர் குடித்தால் நல்லது. பின்னர், கண்கள் வசீகரமாக தோற்றமளிக்கும்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கண்களை கொஞ்சம் கவனியுங்கள்...
பயனுள்ள தகவல்கள்.
தூக்கம்தான் கம்மியாக இருக்கிறது.
தூக்கம்தான் கம்மியாக இருக்கிறது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கண்களை கொஞ்சம் கவனியுங்கள்...
மிக்க பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கண்களை கொஞ்சம் கவனியுங்கள்...
சகோதர சகோதரிகளுக்கு நன்றி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|