தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு}

View previous topic View next topic Go down

இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} Empty இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு}

Post by முழுமுதலோன் Sun Aug 03, 2014 3:55 pm

இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} 144இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} 146இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} 141இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} 141இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} 141பதிவு 


இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} Blomsterkrukken



நீங்கள் எதையாவது சொல்லி, யாராவது இப்படிக் கேட்டார்கள் என்றால், நீங்கள் உங்களைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்று அர்த்தம். வேறொன்றுமில்லை. “என்ன சொன்னீங்க” என்று யாரும் கேட்டால், நீங்கள் சொன்ன விஷயம் தெளிவாகப் புரியவில்லை என்பது தெளிவாகிறது. சொல்ல விரும்பியதை சரியாகவும் சரளமாகவும் சொல்லத் தெரிந்தால்தான் வெற்றிக்கான வாசல் திறக்கும்.




பதட்டத்தின் காரணமாக வேகமாகவும் தெளிவின்றியும் நீங்கள் வார்த்தைகளை உச்சரிப்பதால் இந்த சிரமம் ஏற்படலாம். அல்லது, மனதில் இருப்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் விதமாய் சொல்ல முடியாவிட்டாலும் இந்த நிலை ஏற்படலாம்.


இவை இரண்டும் தனித்தனி காரணங்களா? இல்லை. ஒன்றைத் தெளிவாக சொல்ல முடியாது என்கிற அச்சம் உள்மனதில் உள்ளதாலேயேகூட நீங்கள் பதட்டமடையக் கூடும்.


அப்படியானால், பதட்டத்தின் காரணம் பயிற்சியின்மை. எந்தக் குறையையும் பயிற்சியாலும், முயற்சியாலும் மாற்றமுடியும் என்பது பாலபாடம். பயிற்சியை உற்சாகமாக, உடனே தொடங்குங்கள்.


உதாரணமாக, சரளமாக ஆங்கிலம் பேசுவதில் தடை ஏற்படுகிறதா? எளிய ஆங்கிலத்தில் உள்ள புத்தகம் எதையாவது படியுங்கள். இரண்டு பக்கங்கள் படித்துவிட்டு, நீங்கள் படித்ததன் சாரத்தை உங்கள் நடையில் உங்கள் வார்த்தைளில் சொல்லிப் பாருங்கள். அந்தப் புத்தகத்தைப் படிக்க முடியாத ஒருவருக்கு, நீங்கள் படித்துச் சொல்வதான பாவனையில் நிதானமாக சொல்லுங்கள். பிறகு, உங்கள் நடையில் எழுதிப் பாருங்கள். நாளுக்கு ஒரு மணி நேரமாவது இந்தப் பயிற்சி மேற்கொள்வீர்களென்றால் மிக விரைவிலேயே வித்தியாசத்தை உணர்வீர்கள்.


மொழி ஆளுமை கைவரத் தொடங்கியதுமே பலர் நீளமாகவும் அடர்த்தியாகவும் பேசவேண்டும் என்று நினைக்கிறார்கள். எந்த மொழி பேசினாலும் இந்த எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் தவறில்லாமல் நம்பிக்கையோடு பேசவேண்டுமென்றால் சின்னச் சின்ன வாசகங்களாகப் பேசவேண்டும். “நான் அமெரிக்கா செல்வதற்காக சென்னை போனபோது ரமேஷை சந்தித்தபோது உங்களைப் பற்றி விசாரித்தவுடன் உங்கள் எண் கிடைத்தது”. இதில் யார் விசாரித்தார்கள், யாருக்கு எண் கிடைத்தது என்பதை ஆராய்ச்சி செய்துதானே அறிந்து கொள்ள வேண்டும்.


இதற்குப் பதிலாக, “அமெரிக்கப் பயணத்திற்காக சென்னை போய்க் கொண்டிருந்தேன். வழியில் ரமேஷைப் பார்த்தேன். உங்கள் தொலைபேசி எண்ணைக் கேட்டேன். கொடுத்தார். உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்”. இப்படிச் சொல்கிறபோது விஷயம் தெளிவாகிறது. சொல்ல விரும்புவதை மனதுக்குள்ளே ஒழுங்குபடுத்திக் கொள்ளும்போது துல்லியமாகவும் தெளிவாகவும் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது.


எதிரே இருப்பவர் சொல்வது நமக்கு சரியாகப் புரியாத போதும்கூட அவர் கேட்பது ஒன்றாகவும் நாம் சொல்வது ஒன்றாகவும் ஆகிவிட வாய்ப்பிருக்கிறது. சொல்வதை முதலில் நிதானமாகக் கேளுங்கள். கேட்ட அடுத்த விநாடியே பதிலைக் கொட்ட வேண்டிய அவசியமில்லை. விஷயத்தை நன்றாக உள்வாங்கி, சரியான கோணத்தில் சிந்தித்து, தெளிவான பதிலை சொல்லுங்கள்.


ஒரு விஷயத்தை விளக்க வேண்டும் என்றதுமே அதற்காக ஏராளமான தகவல்களைத் திரட்டிக் கொள்ள விரும்புவது இயற்கை. ஒன்று விரிவாக விளக்குவது என்பதைவிட, சுவாரசியமாக எடுத்துச் சொல்வது என்பதே முக்கியம். இதற்கு ஆரம்ப காலத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயத்தை நண்பர்கள் மத்தியில் விளக்குங்கள். உங்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் கலையை ஆர்வத்துடன் செய்யுங்கள்.


எல்லாவற்றையும்விட, கலகலப்பான மனிதனாக, பல விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிற மனிதராக இருங்கள். இயல்பாக உங்கள் கவனத்திற்கு வருகிற விஷயங்களை சிரத்தையுடன் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். அவற்றைப் பொருத்தமான நேரங்களில் சொல்லுங்கள்.




இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} 9இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} 9இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} 9இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} 9இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} 9இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} 9இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} 9இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} 9இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} 9இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} 9இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} 9
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு} Empty Re: இன்னொரு தடவை சொல்லுங்க!{சிறப்பு பதிவு}

Post by ஸ்ரீராம் Mon Aug 04, 2014 11:27 am

மிக அருமையானதொரு பதிவு அண்ணா 

35000 மைல் கல் பெரிய சாதனை அண்ணா... வாழ்த்துக்கள். 

http://www.amarkkalam.net/t26989-35000
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum