தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஏழை, நடுத்தர மக்களுக்கு குதிரைக் கொம்பாகிவிட்டது ரயில் முன்பதிவு டிக்கெட்

View previous topic View next topic Go down

ஏழை, நடுத்தர மக்களுக்கு குதிரைக் கொம்பாகிவிட்டது ரயில் முன்பதிவு டிக்கெட் Empty ஏழை, நடுத்தர மக்களுக்கு குதிரைக் கொம்பாகிவிட்டது ரயில் முன்பதிவு டிக்கெட்

Post by நாஞ்சில் குமார் Fri Sep 12, 2014 10:33 pm

ஏழை, நடுத்தர மக்களுக்கு குதிரைக் கொம்பாகிவிட்டது ரயில் முன்பதிவு டிக்கெட் 33yl10m

ஏழை, நடுத்தர மக்களுக்கு ரயில் முன்பதிவு டிக்கெட் குதிரைக் கொம்பாகிவிட்டது. இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதள வேகம் அதிகரிப்பால், கவுன்ட்டர்களில் ஒருசிலரைத் தவிர மற்றவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைப்பதில்லை.

இந்த அதிரடி நடவடிக்கையால், ரயில்வேக்கு வருவாய் இரட்டிப்பாகி உள்ளது. ஆனால், பயணிகளுக்கோ பாதிப்பு இருமடங்காகியிருக்கிறது.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் எடுப்பதற்கான வேகம் நிமிடத்துக்கு 1,200 டிக்கெட்டுகளில் இருந்து 7,200 டிக்கெட்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இணையதளத்தில் டிக்கெட் எடுப்பவர்கள் பெரிதும் பயனடைகின்றனர். ஆனால், கவுன்ட்டரில் டிக்கெட் எடுக்க பல மணி நேரம் காத்திருக்கும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து விசாரித்தபோது பல உண்மைகள் தெரியவந்தன.

டிக்கெட் கவுன்ட்டர் காலை 8 முதல் இரவு 8 மணி வரை மட்டும் திறந்திருக்கும். ஐஆர்சிடிசி இணையதளத்தில் இரவு 11.30 மணி முதல் 12.30 வரை ஒருமணி நேரம் தவிர, 23 மணி நேரமும் டிக்கெட் எடுக்கலாம். டிக்கெட் கவுன்ட்டரில் காலை 8 மணிக்குத்தான் முன்பதிவு டிக்கெட் படிவம் கம்ப்யூட்டர் திரையில் வரும். ஆனால், ஐஆர்சிடிசி இணையதளத்தில் எல்லா நேரத்திலும் முன்பதிவு டிக்கெட் படிவம் தயாராக இருக்கும். கவுன்ட்டரில் ஒருவர் டிக்கெட் எடுக்க வரும்போது, அவரது தகவல்களை கம்ப்யூட்டரில் உள்ள முன்பதிவு படிவத்தில் டைப் அடித்து பூர்த்தி செய்கையில், அத்தகவல்களை உறுதி செய்வதற்கான சங்கேத வார்த்தைகள் (captcha) இரு இடங்களில் கேட்கப்படும். அதுபோல, ஐஆர்சிடிசி முன்பதிவு டிக்கெட் படிவத்தில் சங்கேத வார்த்தைகள் கேட்கப்படுவதில்லை.

இதன் காரணமாக கவுன்ட்டரில் ஒருவருக்கு டிக்கெட் கொடுக்க 20 விநாடிகள் வரை ஆகிறது. அதுவே ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஏற்கெனவே தகவல்களை டைப் செய்து தயாராக இருந்தால் ஒரே கிளிக்கில் அதாவது ஒரு நொடியில் டிக்கெட் எடுக்க முடியும்.

ஐஆர்சிடிசி இணையதள வேகம் அதிகரிப்பால், அதில் டிக்கெட் எடுக்கும் ஏராளமானோருக்கு உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு டிக்கெட் கிடைக்கிறது. ஆனால், ஓபன் டே (பயணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு) டிக்கெட் எடுக்கவும், தட்கல் டிக்கெட் எடுக்கவும் முதல்நாள் இரவிலிருந்தே கவுன்ட்டரில் காத்திருப்பவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைக்கிறது. மற்ற எல்லோருக்கும் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுதான் கிடைக்கிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர்.

இப்போது புதிதாக இயக்கப்படும் பிரீமியம் ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட், பயணிகள் பட்டியல் தயாரிக்கும் வரை ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே எடுக்க முடியும். பயணிகள் பட்டியல் தயாரித்த பிறகு, காலியிடம் இருந்தால் மட்டுமே அந்த டிக்கெட்டுகள் கவுன்ட்டரில் விற்கப்படும்.

தபால் நிலையங்களிலும் ரயில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பதில்லை என்று பயணிகள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஐஆர்சிடிசி இணையதள வேகம் அதிகரிப்பால், கவுன்ட்டரில் சிலருக்கு மட்டுமே உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைப்பது உண்மைதான். தட்கல் டிக்கெட் எடுப்பவர்களுக்கும் இதேநிலைதான். தெற்கு ரயில்வேயில் கடந்த மே மாதம் இணையதளம் மூலம் 40 சதவீத தட்கல் டிக்கெட்களும், கவுன்ட்டர்களில் 60 சதவீத தட்கல் டிக்கெட்களும் விற்கப்பட்டன. ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஐஆர்சிடிசி இணையதள வேகம் அதிகரிப்பால், இணையதளம் மூலம் 69 சதவீத தட்கல் டிக்கெட்களும், கவுன்ட்டர்களில் 31 சதவீத தட்கல் டிக்கெட்களும் விற்றுள்ளன.

நாடு முழுவதும் 316 தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட் விற்கப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள தபால் நிலையத்தில் ரயில் டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், அங்கிருந்தவர்கள் கவுன்ட்டரைப் பூட்டிவிட்டு, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு டிக்கெட் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் குறிப்பிட்ட அளவு டிக்கெட்கள் அல்லது குறித்த நேரத்தில் மட்டுமே டிக்கெட் விற்பனை என்ற நிலையை உருவாக்கினால்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றார் அவர்.

கவுன்ட்டர் டிக்கெட் விற்பனை வருவாய் குறைந்தது

இந்தியா முழுவதும் ரயில் முன்பதிவு டிக்கெட் எடுப்பதற்காக 3,050 கணினி முன்பதிவு மையங்கள் உள்ளன. அவற்றில் 8,500 கவுன்ட்டர்கள் இருக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் மொத்த கவுன்ட்டர்களில் விற்பனையான டிக்கெட்டுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.1,092 கோடி. இது, ஜூலை மாதம் ரூ.975 கோடியாகக் குறைந்தது. கடந்த ஏப்ரல் மாதம் ஐஆர்சிடிசி இணையதளத் தில் விற்கப்பட்ட டிக்கெட்டுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.997 கோடி. இது, ஜூலை மாதம் ரூ.1,246 கோடியாக அதிகரித்துள்ளது. ஐஆர்சிடிசி இணையதள வேகம் அதிகரிப்பால் அதன் வருவாய் அதிகரித்துள்ளது. அதேநேரம், கவுன்ட்டர்களில் டிக்கெட் விற்பனை நேர் எதிராக மாறியிருக்கிறது என்று ரயில்வே அதிகாரி குறிப்பிட்டார்.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஏழை, நடுத்தர மக்களுக்கு குதிரைக் கொம்பாகிவிட்டது ரயில் முன்பதிவு டிக்கெட் Empty Re: ஏழை, நடுத்தர மக்களுக்கு குதிரைக் கொம்பாகிவிட்டது ரயில் முன்பதிவு டிக்கெட்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 13, 2014 9:35 am

இப்ப எல்லாம் இணையம் வழியே புக் பண்ணி விடுகிறேன்...

ஒரு சந்தேகம்

முன்பதிவு இல்லாத சாதாரண டிக்கட்டையும் எடுக்கலாம் என்று சொல்லியிருந்தார்கள்... இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லையா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஏழை, நடுத்தர மக்களுக்கு குதிரைக் கொம்பாகிவிட்டது ரயில் முன்பதிவு டிக்கெட் Empty Re: ஏழை, நடுத்தர மக்களுக்கு குதிரைக் கொம்பாகிவிட்டது ரயில் முன்பதிவு டிக்கெட்

Post by செந்தில் Sat Sep 13, 2014 12:41 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஏழை, நடுத்தர மக்களுக்கு குதிரைக் கொம்பாகிவிட்டது ரயில் முன்பதிவு டிக்கெட் Empty Re: ஏழை, நடுத்தர மக்களுக்கு குதிரைக் கொம்பாகிவிட்டது ரயில் முன்பதிவு டிக்கெட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ரயில் டிக்கெட் முன்பதிவு: விரும்பிய இருக்கையை தேர்வு செய்வதற்கு புதிய வசதி
» ரயில் டிக்கெட் முன்பதிவில் பயண காப்பீடு…
» நடுத்தர வயதினர் சந்திக்கும் நெருக்கடிகள்..
» ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய புதுவசதி அறிமுகம்
» நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum