தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


‘மெட்ராஸ் ஐ’ உஷார்

View previous topic View next topic Go down

‘மெட்ராஸ் ஐ’ உஷார் Empty ‘மெட்ராஸ் ஐ’ உஷார்

Post by நாஞ்சில் குமார் Mon Oct 27, 2014 9:29 pm

‘மெட்ராஸ் ஐ’ உஷார் 96hov7
 

கண்களின் வெளிசவ்வு அழற்சியே சிவந்த கண் அல்லது மெட்ராஸ் ஐ எனப்படுகிறது. அடினோ வைரஸ் என்ற ஒரு வகை வைரஸ்தான் இதற்கு  முக்கிய காரணம். இது பருவநிலை மாறுபாட்டால் வரும் ஒரு நோய். இந்த வைரஸ் சூடான, ஈரப்பதமான சூழ்நிலையில் மிக வேகமாக பரவக்கூடியது.  இது அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளியை போன்றது. இதை ‘பிங்க் ஐ‘ என்று அழைக்கப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரையும் இது பாதிக்கக்கூடியது.

மெட்ராஸ் ஐ என பெயர் வரக்காரணம் 1918ல் சென்னையில் ஒரு புதுவிதமான கண்நோய் வேகமாகப் பரவியது. அந்த நோய்க்கான காரணத்தை  சென்னை மருத்துவமனையில் ஆராய்ந்து, அதற்கு மூல காரணமாக இருப்பது ‘அடினோ’ வைரஸ் எனும் கிருமி என கண்டுபிடிக்கப்பட்டது.  சென்னையில் முதலில் இந்த நோய் கண்டுபிடிக்கப் பட்டதால், இதற்கு ‘மெட்ராஸ் ஐ‘ என்று பெயரிடப்பட்டது. இந்நோய் பாதித்தவர்களுக்கு கண்கள்  சிவப்பாக இருக்கும். ரத்த வீக்கம் காணப்படும். கண்ணில் இருந்து நீர் வடியும். கண் உருத்தல் இருக்கும்.

மெட்ராஸ் ஐ வகைகள்

பாக்டீரியா மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, ரசாயனம் மூலம் பரவும் மெட்ராஸ்  ஐ என பல வகைகள் உள்ளது.

அலர்ஜி: சுற்றுச்சூழலில் பெருகி வரும் தூசு, மாசினால் வெகு சுலபமாக நமக்கு அலர்ஜி ஏற்படுகிறது. இதனால் கண்ணில் அரிப்பு ஏற்படும். கண்  உறுத்தும். சில சமயம் வீக்கத்துடன் நீர் வழிய செய்யும்.

வைரஸ் மூலம்: இந்த வகை மெட்ராஸ் ஐ சளி பிடித்தல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்னைகளால் ஏற்படும். இது பொதுவாக ஒரு கண்ணில்  தோன்றி அடுத்த கண்ணுக்கும் பரவும். இது அரிப்புடன் நீர் வழியும் தன்மை உடையது.

பாக்டீரியா மூலம்: இந்த வகையில் சீழ் போன்ற ஒரு திரவம் வடியும். இந்த வகை மெட்ராஸ் ஐ காலையில் எழும்போது கண்களைத் திறக்க  முடியாமல் இமைகள் ஒட்டிக் கொள்ளும். கண்ணில் ஏதோ விழுந்தது போன்ற ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கும்.

ரசாயனம் மூலம்: இந்த வகையில் கண் உறுத்தலும், வலியும் அதிகமாக இருக்கும். அரிப்போ நீர், சீழ் வடிதல் போன்றவை இருக்காது.

பரவும் முறை: கண்ணில் இருந்து வடியும் நீரினால் இந்நோய் மற்றவர்களுக்கு பரவும். கிருமி பாதிப்புள்ள அந்த நீர் பிறர் கையில் படும்போது  அவருக்கு இந்நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கும் வரும். கண் நோய் பாதித்தவர்கள்  படுக்கை, துண்டு போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. அதன் மூலமும் அவை பரவும்.

சிகிச்சை: மெட்ராஸ் ஐ பெரும்பாலும் 2 முதல் 5 நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இதற்கென பெரிய சிகிச்சைகள் எதுவும் இல்லை. ஆனால்  கண் மருத்துவரை சந்தித்தால் அவர் நோயின் தீவிரத்தை பொறுத்து மருந்து கொடுப்பார். இது கண்ணுக்கு சற்று இதமளிக்கும். மெட்ராஸ் ஐ  பரவக்கூடியது என்பதால் இந்நோய் வந்தவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க கறுப்பு கண்ணாடி அணிவது நல்லது. அடிக்கடி குளிர்ந்த நீரில்  கண்களை கழுவலாம். கண்ணை துடைக்க சுத்தமான மெல்லிய துணி அல்லது டிஷ்யூ பேப்பர் உபயோகப்படுத்தலாம். டிவி, கம்ப்யூட்டர் பார்த்தோ,  அல்லது புத்தகம் படித்தோ கண்களை சிரமப்படுத்தாமல் கண்களுக்கு வெளிச்சம் குறைவான இடத்தில் படுத்து ஓய்வெடுக்க வேண்டும்.

தடுக்கும் முறை: மெட்ராஸ் ஐ வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோய் பரவும் காலங்களில் மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு செல்வதை  தவிர்க்கலாம். மெட்ராஸ் ஐ கண்ணுக்கு கண் நேராக பார்த்து பரவுவது இல்லை. நம்மை அறியாமல் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் தன் கண்களை  துடைத்துக் கொண்ட கைகளால் தொட்ட ஏதேனும் ஒரு பொருளை நாம் தொட்டுவிட்டு அதே கைகளால் நம் கண்களைத் தொடும்போது பரவுகிறது.  அதனால் நம் கைகளை அடிக்கடி கழுவுதல் நல்லது. கையால் கண்ணை துடைப்பதை விட டிஷ்யூ பேப்பர் உபயோகிப்பது நல்லது.

கருப்பு கண்ணாடி போடுவதால் பிறருக்கு பரவாது என்பது தவறு. கண்ணாடி போடுவதால் அதிகப்படியான சூரிய வெளிச்சம் மூலம் வரும் எரிச்சலை  மட்டுமே தடுக்க முடியும். ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியை மற்றவர் பயன்படுத்தக்கூடாது. கண் சொட்டு மருந்தை ஒரு நாளைக்கு 6முதல்  8முறை மருத்துவர் ஆலோசனைப்படி போட வேண்டும். தும்மல், இருமல் மூலமும் இந்த வைரஸ் பரவும், எனவே வாயில் துணி வைத்து இரும  வேண்டும். மிதமான வெந்நீரில் துண்டை நனைத்து ஒத்தடம் கொடுக்கவும்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

‘மெட்ராஸ் ஐ’ உஷார் Empty Re: ‘மெட்ராஸ் ஐ’ உஷார்

Post by முரளிராஜா Thu Oct 30, 2014 11:06 am

எச்சரித்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

‘மெட்ராஸ் ஐ’ உஷார் Empty Re: ‘மெட்ராஸ் ஐ’ உஷார்

Post by செந்தில் Thu Oct 30, 2014 4:52 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

‘மெட்ராஸ் ஐ’ உஷார் Empty Re: ‘மெட்ராஸ் ஐ’ உஷார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum