Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!
Page 1 of 1 • Share
புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!
எச்சரிக்கை
தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட புகையிலை எச்சரிக்கை விளம்பரப் படத்தில் தோன்றிய முகேஷை தெரியாதவர்களே இருக்க முடியாது. புகையிலைப் பொருளை பயன்படுத்தியதால் வாய் புற்றுநோய்க்கு ஆளாகி இருப்பதாக வாக்குமூலம் அளிக்கும் முகேஷின் விளம்பரப் படம் அனைத்து திரையரங்குகளிலும் ஓராண்டுக்கு மேல் ஓடியது.. புகையிலைப் பழக்கத்தை திரைப்படங்கள் தூண்டுகின்றன என்பதற்காக, இது போன்ற விழிப்புணர்வு விளம்பரங்களையும், புகைக்கும் காட்சிக்குக் கீழே ‘புகையிலை உயிரைப் பறிக்கும் என்கிற எச்சரிக்கை வாசகத்தையும் வெளியிட வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு விளம்பரங்கள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பதில், முகேஷ் விளம்பரம் திரையிட்டபோதெல்லாம் மக்கள் கைதட்டி, விசிலடித்து ஆர்ப்பரித்தனர். சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தின் டீஸரில் கூட அந்த விளம்பரத்தை கிண்டலடித்திருந்தனர். இதுபோன்ற நடவடிக்கைகளினால் புகையிலை பயன்பாட்டை எந்த அளவுக்கு கட்டுப்படுத்திவிட முடியும்? புகையிலையைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை என்ன? புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? போன்ற கேள்விகளுக்கு விடை தேடினோம்... அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் சுரேந்திரன் பேசுகிறார்...
‘‘உலக அளவில் ஆண்டுக்கு 60 லட்சம் பேரும், இந்தியாவில் 8 முதல் 9 லட்சம் பேரும் புகையிலைப் பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உயிரிழப்பு, மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் வேகமாக உயருகின்றது. இந்தியாவில் 56.4 சதவிகித ஆண்களுக்கும், 44.9 சதவிகித பெண்களுக்கும் புகையிலை பழக்கத்தால் புற்று நோய் ஏற்பட்டிருக்கிறது. ‘Diagnostic and statistical mental disorders’ என்ற அமைப்பு புகைப்பழக்கத்தை ஒரு மனப் பிரச்னை என்று அறிவித்துள்ளது. அடையாறு புற்று நோய் மருத்துவமனை புகையிலையின் விளைவுகள் குறித்து பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை புகைப்பழக்கத்திலிருந்து மீள நினைப்பவர்களுக்கு இலவசமாக கவுன்சலிங் கொடுத்து வருகிறோம். ‘நிகோடின்‘ என்கிற ரசாயனம் தான் ஒருவரை புகைக்கு அடிமையாக்குகிறது. புகைபிடிக்கும்போது நிகோடினுடன் சேர்த்து தார், கார்பன் மோனாக்சைடு, பெயின்ட், நாப்தலின் பால், எறும்பு பொடி, சயனைடு போன்ற 4 ஆயிரம் வகையான நச்சுப்பொருட்கள் உடலுக்குள் சென்று விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதில் புற்றுநோயை உண்டு பண்ணக்கூடிய சிகிஸிசிமிளிழிளிநிணிழிஷி எனப்படும் ரசாயனம் அதிகளவில் இருக்கிறது. புகைப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்களுக்காக, தேவையான நிகோடினை மட்டும் பெற்றுக்கொள்ள நிகோடின் மாத்திரைகளும் சூயிங்கங்களும் விற்கப்பட்டு வருகின்றன. அவர்கள் இதனை மாற்றாக பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றவர் புகையிலையின் விளைவுகள் குறித்து பட்டியலிட்டார்...
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!
மெல்லும் புகையிலைப் பொருட்களில் 3 ஆயிரம் வகையான நச்சுப்பொருட்கள் இருக்கின்றன.
நுரையீரல், வாய், தொண்டை, வயிறு, மூச்சுக்குழல் ஆகிய இடங்களில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு பெரிதளவில் இருக்கிறது. உலகிலேயே புகையிலைப் பழக்கத்தால் வாய்ப் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளவர்கள் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளனர்.
200 சிகரெட் குடிக்கும்போது 7 - 8 கிராம் வரையிலும் நுரையீரலில் தார் படிகிறது.
இதயம் மற்றும் ரத்தக்குழாய் நோய்கள், ரத்த அழுத்தம், மாரடைப்பு, மார்புவலி, இதயக்கோளாறுகளால் ஏற்படும் திடீர் மரணம், மூளைத்தாக்கு நோய், கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்படும் தசை அழிப்பு நோய் ஆகியவற்றுக்கு புகையிலைப் பயன்பாடே முக்கியக் காரணமாக இருக்கிறது.
சிகரெட் அல்லது பீடிகளை அதிகளவு புகைப்பவர்களுக்கு, டியூபர்குளோஸிஸ் எனப்படும் காசநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
உடல் முழுவதும் ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனி எனும் ரத்தக்குழாய் சுவர்களை புகையிலை சேதப்
படுத்துகிறது.
புகைப்பழக்கம் இல்லாதவர்கள் கூட புகைப்பவருடன் இருக்கும்போது இரண்டாம் நிலைப் புகை தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
புகையிலை பயன்பாடு இல்லாதவர்களைக் காட்டிலும் புகையிலையை பயன்படுத்துவோருக்கு இதயநோய்
மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 2 முதல் 3 மடங்கு அதிகமாக உள்ளது.
ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பதையும் குறைக்கிறது.
புகைக்கும் பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது, மூளைத்தாக்கு நோய் ஏற்பட அதிகளவில் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
கர்ப்பிணிகள் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும்போது கரு கலைவதற்கும், குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கும், பிறந்த குழந்தை திடீரென இறப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது.
நுரையீரல், வாய், தொண்டை, வயிறு, மூச்சுக்குழல் ஆகிய இடங்களில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு பெரிதளவில் இருக்கிறது. உலகிலேயே புகையிலைப் பழக்கத்தால் வாய்ப் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளவர்கள் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளனர்.
200 சிகரெட் குடிக்கும்போது 7 - 8 கிராம் வரையிலும் நுரையீரலில் தார் படிகிறது.
இதயம் மற்றும் ரத்தக்குழாய் நோய்கள், ரத்த அழுத்தம், மாரடைப்பு, மார்புவலி, இதயக்கோளாறுகளால் ஏற்படும் திடீர் மரணம், மூளைத்தாக்கு நோய், கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்படும் தசை அழிப்பு நோய் ஆகியவற்றுக்கு புகையிலைப் பயன்பாடே முக்கியக் காரணமாக இருக்கிறது.
சிகரெட் அல்லது பீடிகளை அதிகளவு புகைப்பவர்களுக்கு, டியூபர்குளோஸிஸ் எனப்படும் காசநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
உடல் முழுவதும் ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனி எனும் ரத்தக்குழாய் சுவர்களை புகையிலை சேதப்
படுத்துகிறது.
புகைப்பழக்கம் இல்லாதவர்கள் கூட புகைப்பவருடன் இருக்கும்போது இரண்டாம் நிலைப் புகை தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
புகையிலை பயன்பாடு இல்லாதவர்களைக் காட்டிலும் புகையிலையை பயன்படுத்துவோருக்கு இதயநோய்
மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 2 முதல் 3 மடங்கு அதிகமாக உள்ளது.
ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பதையும் குறைக்கிறது.
புகைக்கும் பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது, மூளைத்தாக்கு நோய் ஏற்பட அதிகளவில் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
கர்ப்பிணிகள் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும்போது கரு கலைவதற்கும், குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கும், பிறந்த குழந்தை திடீரென இறப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: புகையிலை உற்பத்தியை முடக்கினால் தான் உயிர்கள் பிழைக்கும்!
புகையிலை கட்டுப்பாட்டுக்காக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன?
மாநில புகையிலை கட்டுப்பாட்டு அலுவலர் வடிவேலனிடம் கேட்டோம். ‘‘எந்த ஒரு புகையிலைப் பொருளையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு புகையிலைப் பொருட்களின் மீதும் புகையிலை ஏற்படுத்தும் தீங்கு குறித்த படங்கள் 40 சதவிகித அளவுக்கு அச்சிட வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களுக்கு அருகே 300 அடி சுற்றளவுக்கு புகையிலையை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டிருக்கிறது. பொது இடங்களில் புகைப்பிடிப்பது சட்டப்படி குற்றமாக்கப்பட்டிருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவிலேயே அதிகமாக நம் தமிழ்நாட்டில்தான் பொது இடங்களில் புகைப்பிடித்தோரிடம் 1.10 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. புகையிலையால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஒவ்வொரு பள்ளி யிலும் முகாம் நடத்தப்பட்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்குக் கீழானவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்கக்கூடாது என்றும் புகையிலை குறித்த வியாபாரிகள் சங்கங்களிடத்திலும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன’’ என்றார்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக இன்று பெட்டிக்கடைகளில் கூட கிடைக்கின்றன. இந்த கள்ளச் சந்தைக்கு வணிகர்கள் துணை நிற்கிறார்களே?தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் த.வெள்ளையனிடம் கேட்டபோது, ‘‘பள்ளிக்கு அருகே நூறு மீட்டர் சுற்றளவில் எங்கும் புகையிலைப் பொருட்கள் விற்கக்கூடாது என்பதை நாங்களே நேரடியாகச் சென்றும் வலியுறுத்தி வருகிறோம். ‘கொக்ககோலா, பெப்சி விற்காதீர்கள்’ என்று நீண்ட காலத்துக்கு முன்பே நாங்கள் வணிகர்களிடம் சொன்னபோது, ‘மக்கள் கேட்பதைத்தானே நாங்கள் விற்க முடியும்’ என்று எங்களைத் திருப்பிக்கேட்டார்கள்.
புகையிலைப் பொருட்கள் விற்பனையும் இந்த அடிப்படையிலானதுதான். புகையிலை கட்டுப்பாடு குறித்து அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களுக்கான தடைச்சட்டம் போடப்பட்டிருக்கிறது. இருந்தும் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டுவது மட்டுமே இதற்கான தீர்வு’’ என்றார்.புகையிலை கட்டுப்பாட்டுக்கான முறையான நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும்?புகையிலை கட்டுப்பாட்டிற்கான தமிழக மக்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் சிரில் அலெக்ஸாண்டரிடம் கேட்டோம்..
‘‘ஐ.நா.சபையின் உலக சுகாதார நிறுவனம் அறிவித்த சர்வதேச புகையிலை தடுப்புச் சட்டத்தில் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்துவதாக இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கை படங்கள் போட வலியுறுத்தல், பொது இடங்களில் புகைப்பிடித்தலை சட்டப்படி குற்றமாக்கல், புகையிலை பொருட்கள் தொடர்பான நேரடி அல்லது மறைமுக விளம்பரங்களுக்குத் தடை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் புகையிலை நிறுவனங்கள் மறைமுகமாக தங்களது விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றன. புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கை படம் போடுவதாலும், திரையரங்கங்களில் விளம்பரம் திரையிடுவதாலும் யாரும் புகைப்பழக்கத்தை கைவிட்டு விடவில்லை. புகையிலைப் பொருட்களின் உற்பத்தியை தடுத்து நிறுத்தி முற்றிலுமாக ஒழிப்பதுதான் ஒரே தீர்வு.
நமது இந்திய அரசிடம் மிகப்பெரிய முரண்பாடு என்னவெனில் இங்கு புகையிலை கட்டுப்பாட்டு வாரியமும் இருக்கிறது, புகையிலை வளர்ச்சி வாரியமும் இருக்கிறது. ஒரு புறம் புகையிலைப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்னொரு புறம், புகையிலை உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கான பணிகளும் நடந்து வருகின்றன. புகையிலை வளர்ச்சி வாரியத்தை மூட வேண்டும். தமிழகத்தின் பல இடங்களில் புகையிலை பெருமளவில் விளைவிக்கப்படுகிறது. இந்த உற்பத்தியை தடுக்கும் வகையில் புகையிலைக்கு மாற்றாக அந்தந்த மண் வகைகளுக்கேற்ற மாற்றுப்பயிர்களை விளைவிக்க அரசு உத்தரவிட வேண்டும். பீடி சுற்றும் தொழிலை நம்பி தமிழ்நாட்டில் 6 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடைகளில் சென்று பறிமுதல் செய்வதைக் காட்டிலும் உற்பத்தியாகிற இடத்திலேயே முடக்கி விட வேண்டும்.’’ என்றார்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=2986&Cat=500
மாநில புகையிலை கட்டுப்பாட்டு அலுவலர் வடிவேலனிடம் கேட்டோம். ‘‘எந்த ஒரு புகையிலைப் பொருளையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு புகையிலைப் பொருட்களின் மீதும் புகையிலை ஏற்படுத்தும் தீங்கு குறித்த படங்கள் 40 சதவிகித அளவுக்கு அச்சிட வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களுக்கு அருகே 300 அடி சுற்றளவுக்கு புகையிலையை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டிருக்கிறது. பொது இடங்களில் புகைப்பிடிப்பது சட்டப்படி குற்றமாக்கப்பட்டிருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவிலேயே அதிகமாக நம் தமிழ்நாட்டில்தான் பொது இடங்களில் புகைப்பிடித்தோரிடம் 1.10 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. புகையிலையால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஒவ்வொரு பள்ளி யிலும் முகாம் நடத்தப்பட்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்குக் கீழானவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்கக்கூடாது என்றும் புகையிலை குறித்த வியாபாரிகள் சங்கங்களிடத்திலும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன’’ என்றார்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக இன்று பெட்டிக்கடைகளில் கூட கிடைக்கின்றன. இந்த கள்ளச் சந்தைக்கு வணிகர்கள் துணை நிற்கிறார்களே?தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் த.வெள்ளையனிடம் கேட்டபோது, ‘‘பள்ளிக்கு அருகே நூறு மீட்டர் சுற்றளவில் எங்கும் புகையிலைப் பொருட்கள் விற்கக்கூடாது என்பதை நாங்களே நேரடியாகச் சென்றும் வலியுறுத்தி வருகிறோம். ‘கொக்ககோலா, பெப்சி விற்காதீர்கள்’ என்று நீண்ட காலத்துக்கு முன்பே நாங்கள் வணிகர்களிடம் சொன்னபோது, ‘மக்கள் கேட்பதைத்தானே நாங்கள் விற்க முடியும்’ என்று எங்களைத் திருப்பிக்கேட்டார்கள்.
புகையிலைப் பொருட்கள் விற்பனையும் இந்த அடிப்படையிலானதுதான். புகையிலை கட்டுப்பாடு குறித்து அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களுக்கான தடைச்சட்டம் போடப்பட்டிருக்கிறது. இருந்தும் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டுவது மட்டுமே இதற்கான தீர்வு’’ என்றார்.புகையிலை கட்டுப்பாட்டுக்கான முறையான நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும்?புகையிலை கட்டுப்பாட்டிற்கான தமிழக மக்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் சிரில் அலெக்ஸாண்டரிடம் கேட்டோம்..
‘‘ஐ.நா.சபையின் உலக சுகாதார நிறுவனம் அறிவித்த சர்வதேச புகையிலை தடுப்புச் சட்டத்தில் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்துவதாக இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கை படங்கள் போட வலியுறுத்தல், பொது இடங்களில் புகைப்பிடித்தலை சட்டப்படி குற்றமாக்கல், புகையிலை பொருட்கள் தொடர்பான நேரடி அல்லது மறைமுக விளம்பரங்களுக்குத் தடை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் புகையிலை நிறுவனங்கள் மறைமுகமாக தங்களது விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றன. புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கை படம் போடுவதாலும், திரையரங்கங்களில் விளம்பரம் திரையிடுவதாலும் யாரும் புகைப்பழக்கத்தை கைவிட்டு விடவில்லை. புகையிலைப் பொருட்களின் உற்பத்தியை தடுத்து நிறுத்தி முற்றிலுமாக ஒழிப்பதுதான் ஒரே தீர்வு.
நமது இந்திய அரசிடம் மிகப்பெரிய முரண்பாடு என்னவெனில் இங்கு புகையிலை கட்டுப்பாட்டு வாரியமும் இருக்கிறது, புகையிலை வளர்ச்சி வாரியமும் இருக்கிறது. ஒரு புறம் புகையிலைப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்னொரு புறம், புகையிலை உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கான பணிகளும் நடந்து வருகின்றன. புகையிலை வளர்ச்சி வாரியத்தை மூட வேண்டும். தமிழகத்தின் பல இடங்களில் புகையிலை பெருமளவில் விளைவிக்கப்படுகிறது. இந்த உற்பத்தியை தடுக்கும் வகையில் புகையிலைக்கு மாற்றாக அந்தந்த மண் வகைகளுக்கேற்ற மாற்றுப்பயிர்களை விளைவிக்க அரசு உத்தரவிட வேண்டும். பீடி சுற்றும் தொழிலை நம்பி தமிழ்நாட்டில் 6 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடைகளில் சென்று பறிமுதல் செய்வதைக் காட்டிலும் உற்பத்தியாகிற இடத்திலேயே முடக்கி விட வேண்டும்.’’ என்றார்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=2986&Cat=500
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» புகையிலை ஒரு தாவரம் தான்!!! ஆனால் அது மனித உயிரை அழிக்கும் நச்சுத் தாவரம்!!!
» புகையிலை... பகையிலை!
» ஆயிரம் காலத்து உயிர்கள்...!1
» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
» காற்றாலை மின் உற்பத்தியை கொள்முதல் செய்ய வசதி இல்லை: மின்வாரிய அதிகாரி தகவல்
» புகையிலை... பகையிலை!
» ஆயிரம் காலத்து உயிர்கள்...!1
» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
» காற்றாலை மின் உற்பத்தியை கொள்முதல் செய்ய வசதி இல்லை: மின்வாரிய அதிகாரி தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|