Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மாற்றம் தேவை
Page 1 of 1 • Share
மாற்றம் தேவை
சென்ற வாரம் பள்ளியிலிருந்து வந்த என் மகன் "நான் என்.எஸ்.எஸ்-லிருந்து விலகிவிட்டேன்' என்றான். நான் ஆச்சரியத்துடன் "நீயாகத்தானே விரும்பி என்.எஸ்.எஸ்-இல் சேர்ந்தாய், என்.எஸ்.எஸ்-க்குத் தேவையான சீருடை எல்லாம் ஆர்வமாய் வாங்கி வந்தாயே! என்ன ஆனது?' என்றேன்.
"பள்ளியில் இன்று நடைபெற்ற விழா முடிவில் என்.எஸ்.எஸ். மாணவர்களை அழைத்து குப்பைகளையும், காலியான தேநீர் கோப்பைகளையும் எடுக்கச் சொன்னார்கள். அவ்வாறு செய்யும்போது, பிற மாணவர்கள் என்னை ஏளனம் செய்தார்கள். என்.எஸ்.எஸ். என்றாலே குப்பை பொறுக்கி என்று கிண்டல் செய்தார்கள். அதனால் இனிமேல் நான் என்.எஸ்.எஸ்}ஸூக்கு போக மாட்டேன்' என்றான்.
ஆம், இன்றைய காலச் சூழ்நிலையில் மக்களின் எண்ணவோட்டங்கள் ஏராளமாக மாறியிருக்கின்றன. மாணவர்களின் மன இயல்புகள் மாற்றம் கண்டிருக்கின்றன.
பள்ளியில் குப்பை, கூளம் என்றால் கூப்பிடு என்.எஸ்.எஸ். மாணவனை என்கிற வழக்கம் களையப்பட வேண்டும்.
பள்ளியில் பயில்கின்ற அனைத்து மாணவ - மாணவியரும் அந்தப் பள்ளியின் சுற்றுப்புறச் சுகாதாரத்திற்குப் பொறுப்புடையவர்கள் என்கிற எண்ணம் வளர்ந்தோங்க வேண்டும்.
பள்ளி வளாகத் தூய்மை என்பது ஒரு கூட்டு முயற்சியே. ஓர் அமைப்பின் வேலை அல்ல. இது ஒவ்வொரு மாணவனின், ஆசிரியரின் மனத்திலும் பதியப்பட வேண்டும்.
அவ்வாறின்றி, பள்ளியின் அசுத்தங்களை அகற்ற, குப்பைகளைக் களைய என்.எஸ்.எஸ். மாணவர்கள் மட்டுமே பொறுப்பு என்று கூறி அம் மாணவர்களை தனிமைப்படுத்தப்படக் கூடாது.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையும், தமிழக பள்ளிக் கல்வித் துறையும்,
என்.எஸ்.எஸ். அமைப்பின் பணி பள்ளியை சுத்தம் செய்வது என்கின்ற கண் மூடித்தனமான பழக்கம் மண் மூடிபோகச் செய்ய வேண்டும் என்பதையே விரும்புகிறது.
அப்பணிக்கு மாற்றாக, ஒவ்வொரு மாணவனின் தலைமைப் பண்புகளை வளர்ப்பதே சாலச் சிறந்தது என்கிற மாற்றுச் சிந்தனையை வலியுறுத்துகிறது கல்வித் துறை.
மாணவர்களிடையே பொதிந்துள்ள திறமைகளை வெளிக்கொணரும் வகையில், என்.எஸ்.எஸ். திட்டங்கள் தீட்ட வேண்டும்.
மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, மனமும், உடலும் மேன்மை பெறும் வகையில் யோகா, உடற்பயிற்சி வகுப்புகள் சொல்லித் தரப்பட வேண்டும்.
பிரச்னைகளை தீர்ப்பது எப்படி, நெருக்கடியான சூழ்நிலையில் முடிவெடுப்பது எப்படி, உறவுகளை கையாள்வது எப்படி, நேர நிர்வாகம் - இவ்வாறான பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.
நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எங்ஙனம்? குழு விவாதங்களில் பங்கேற்பது எவ்வாறு? உரையாடும் கலையில் திறமை பெறுவது எப்படி? இது போன்ற பல்வேறு பயிற்சிப் பட்டறைகளை அடிக்கடி நடத்திட வேண்டும்.
நவீன தொழில்நுட்பங்களான கணினி, செல்பேசி போன்றவற்றை இயக்குதலும், பராமரித்தலும் எப்படி என்று குறுகிய கால பயிற்சி நடத்தலாம்.
+2 முடித்த பிறகு வேலைவாய்ப்பு பெறும் வகையில் எந்தெந்த துறைகள் இருக்கின்றன. சுயதொழில் தொடங்குவது எப்படி. போட்டித் தேர்வுகள் விவரம் போன்றவை குறித்து தகவல்களைத் தர கருத்தரங்குகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஒரு மாணவன் தனித்துவம் மிக்க தலைசிறந்த குடிமகனாக ஆவதற்குரிய வகையில், என்.எஸ்.எஸ். அமைப்புகள் பல்வேறு செயல்பாடுகளைச் செய்யவேண்டும் என்பதே தற்போதைய தேவை.
என்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்தால், அம் மாணவனுக்குரிய அனைத்துத் தேவைகளும் நிறைவுபெறும் என்கிற நிலை உருவானால், மாணவர்கள் என்.எஸ்.எஸ்-இல் சேர அதிகமாக ஆர்வம் கொள்வர். சமுதாய சேவை சிந்தனையுடைய ஒரு மாணவன், என்.எஸ்.எஸ்-இல் சேரும்போது, அவனை மேலும் மெருகேற்றும் வகையில்தான் பயிற்சிகள் தரப்பட வேண்டுமே தவிர, அவனை சிறுமைப்
படுத்துவதாக அமையும் செயல்பாடுகளினால் ஒரு நன்மையுமில்லை.
- தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» மாற்றம்
» கால மாற்றம்...
» உடல் அறிகுறிகளாக மாற்றம்
» மாற்றம் - ஒரு பக்க கதை
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
» கால மாற்றம்...
» உடல் அறிகுறிகளாக மாற்றம்
» மாற்றம் - ஒரு பக்க கதை
» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|