Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆண்களும் ஜீன்ஸ் அணியக் கூடாது!
Page 1 of 1 • Share
ஆண்களும் ஜீன்ஸ் அணியக் கூடாது!
தன் வயதுக்கே உரித்தான குறும்புத்தனங்களோடு துள்ளித்திரிய வேண்டிய பள்ளிக் குழந்தைகளுக்கு டை கட்டி, ஷூ அணிந்து கொள்ள நிர்ப்பந்திக்கிறோம். இளம்பருவத்தினர் தொடங்கி நடுத்தர வயதினர் வரையிலும் ஜீன்ஸின் மோகம் பரவிக்கிடக்கிறது. கார்பரேட் நிறுவனங்கள் ஷூ அணிந்து, டை கட்டி டக் இன் செய்து கொள்வதை தங்களது உடைக்குறியீடாக வைத்திருக்கின்றன. ‘கதரையே உடுத்துவோம்’ என்கிற சொல்லை தாரக மந்திரமாகக் கொண்டிருந்த இந்தியாவின் இப்போதைய உடைக் கலாசாரம் இதுதான்.
இவையெல்லாம் மேற்கத்திய நாடுகளின் மீதான மோகத்தில் விளைந்தவை. மேற்கத்திய சுற்றுலா பயணிகள் கூட நம் நாட்டுக்கு வரும்போது தளர்வான ஷாட்ஸ், டிஷர்ட் அணிந்திருப்பதை நாமே பார்த்திருக்கிறோம். குளிர்ப் பிரதேசங்களான அந்நாட்டு உடைகளை ஏ.சி. மற்றும் மின்விசிறிகளின் தயவின்றி வாழ முடியாத வெப்ப நாட்டில் வாழும் நாம் அணிவது சரியா? ‘மிகத் தவறு’ என்கிறது மருத்துவத்துறை. சரும நோய் மருத்துவர் வானதி திருநாவுக்கரசு இது குறித்து விளக்குகிறார்.
“வெப்பமான தட்பவெப்ப நிலையில் நம் உடலில் இருந்து அதிக அளவில் வியர்வை வெளியாகும். நாம் உடுத்தும் உடை வியர்வையை உறிஞ்சக்கூடிய தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்பதால் நம் நாட்டுக்கு ஏற்ற உடை என்றால் அது பருத்திதான். பருத்தி உடைகள் அணிந்தாலும் சாயம் போகாதபடியான தரமான உடை களை அணிய வேண்டும். ஏனெனில், வெளியேறும் சாயத் தால் textile dermatitis எனும் சரும நோய் ஏற்படும். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடை களை அணியும்போது சுரக்கிற வியர்வை வெளியேறாமல், அதிலிருந்து பாக்டீரியாக்கள் உற்பத்தியாகி, படர்தாமரை போன்ற சரும நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
நிக்கல் அலர்ஜி உள்ளவர்கள் ஜீன்ஸ் அணியும்போது அதன் பட்டனில் இருக்கும் நிக்கல் உலோகம் பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் நிலையில் தட்பவெப்பநிலை அதிகரித்து விந்து உற்பத்தி குறைவதற்கும் வாய்ப்பிருக்கிறது. உள்ளாடைகளில் உள்ள எலாஸ்டிக் இறுக்கமாக தோலோடு ஒட்டியிருப்பதால் தேமல் போன்றவை ஏற்படும். தளர்வான காட்டன் உள்ளாடைகளை அணிவதே நல்லது. பெண்கள் விரும்புகிற லெக்கிங்ஸ் உடையிலும் காட்டன் வகைகளை அணியலாம். குழந்தைகளுக்கு நாப்கின் உபயோகிப்பதில் கூட கவனம் தேவை. எந்த நாப்கினையும் மூன்று மணி நேரத்துக்குள் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் சரும அலர்ஜி ஏற்படும்.
நம் உடலிலேயே மிகப்பெரிய உறுப்பு தோல்தான். அதனைப் பராமரிக்க தினம் இரு வேளை குளிப்பதை வாடிக்கையாக்கிக் கொள்ளலாம். மனிதர்களின் தோலில் இயற்கையாகவே 5.5 pH Balance (அமிலம் மற்றும் காரத்தன்மை விகிதம்) அளவிலான அமிலத்தன்மை இருக்கிறது. இந்த அமிலத்தன்மை கிருமித்தொற்றுகளைத் தடுக்கும். இன்று நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் சோப்புகளில் 7 pH அளவுக்கு மேல் அமிலத்தன்மை இருக்கின்றன. அவையெல்லாம் தோலுக்கு உகந்தவையல்ல. சோப் வாங்கும்போது 7 ஜீபி அளவுக்கும் குறைவான சோப்பாக பார்த்து வாங்க வேண்டும்.
தோலில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும் வரையில்தான் கெட்ட பாக்டீரியாக்களின் தாக்குதல் இருக் காது. ஆன்டிபயாட்டிக் சோப் உபயோகிக்கும்போது அவை தோலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்து அழித்து விடுவதால் கெட்ட பாக்டீரியாக்களின்தாக்குதல் ஏற்படும். முடிந்த வரை தளர்வான காட்டன் உடைகளை அணிவதுதான் நமக்கு ஏற்றது. குறிப்பாக ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி, டஸ்ட் அலர்ஜி ஆகியவற்றை உள்ளடக்கிய Atopic Diathesisபிரிவினருக்கு தோல் நோய்கள் அதிக அளவில் ஏற்படும் என்பதால், இவர்கள் காட்டன் உடைகள் உடுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
ஷூ அணிவதும் நமக்கு உகந்ததல்ல. நீண்ட நேரம் ஷூ அணியும்போது விரல் இடுக்குகளில் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டு அதை குணப்படுத்துவது கடினமாகி விடும். துவைக்காத சாக்ஸை பயன்படுத்தும்போது வியர்வையின் மூலம் உற்பத்தியான கிருமிகளின் தாக்குதல் ஏற்படும். உணவு, உடை, வாழ்க்கைமுறை எல்லாம் நமது வாழிடத்தின் சூழலுக்கு ஏற்றபடிதான் அமைய வேண்டும். நமது சூழலுக்கு பொருந்தாத எதுவுமே கேடுதான்” என்கிறார் வானதி.
- தினகரன்
இவையெல்லாம் மேற்கத்திய நாடுகளின் மீதான மோகத்தில் விளைந்தவை. மேற்கத்திய சுற்றுலா பயணிகள் கூட நம் நாட்டுக்கு வரும்போது தளர்வான ஷாட்ஸ், டிஷர்ட் அணிந்திருப்பதை நாமே பார்த்திருக்கிறோம். குளிர்ப் பிரதேசங்களான அந்நாட்டு உடைகளை ஏ.சி. மற்றும் மின்விசிறிகளின் தயவின்றி வாழ முடியாத வெப்ப நாட்டில் வாழும் நாம் அணிவது சரியா? ‘மிகத் தவறு’ என்கிறது மருத்துவத்துறை. சரும நோய் மருத்துவர் வானதி திருநாவுக்கரசு இது குறித்து விளக்குகிறார்.
“வெப்பமான தட்பவெப்ப நிலையில் நம் உடலில் இருந்து அதிக அளவில் வியர்வை வெளியாகும். நாம் உடுத்தும் உடை வியர்வையை உறிஞ்சக்கூடிய தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்பதால் நம் நாட்டுக்கு ஏற்ற உடை என்றால் அது பருத்திதான். பருத்தி உடைகள் அணிந்தாலும் சாயம் போகாதபடியான தரமான உடை களை அணிய வேண்டும். ஏனெனில், வெளியேறும் சாயத் தால் textile dermatitis எனும் சரும நோய் ஏற்படும். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடை களை அணியும்போது சுரக்கிற வியர்வை வெளியேறாமல், அதிலிருந்து பாக்டீரியாக்கள் உற்பத்தியாகி, படர்தாமரை போன்ற சரும நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
நிக்கல் அலர்ஜி உள்ளவர்கள் ஜீன்ஸ் அணியும்போது அதன் பட்டனில் இருக்கும் நிக்கல் உலோகம் பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் நிலையில் தட்பவெப்பநிலை அதிகரித்து விந்து உற்பத்தி குறைவதற்கும் வாய்ப்பிருக்கிறது. உள்ளாடைகளில் உள்ள எலாஸ்டிக் இறுக்கமாக தோலோடு ஒட்டியிருப்பதால் தேமல் போன்றவை ஏற்படும். தளர்வான காட்டன் உள்ளாடைகளை அணிவதே நல்லது. பெண்கள் விரும்புகிற லெக்கிங்ஸ் உடையிலும் காட்டன் வகைகளை அணியலாம். குழந்தைகளுக்கு நாப்கின் உபயோகிப்பதில் கூட கவனம் தேவை. எந்த நாப்கினையும் மூன்று மணி நேரத்துக்குள் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் சரும அலர்ஜி ஏற்படும்.
நம் உடலிலேயே மிகப்பெரிய உறுப்பு தோல்தான். அதனைப் பராமரிக்க தினம் இரு வேளை குளிப்பதை வாடிக்கையாக்கிக் கொள்ளலாம். மனிதர்களின் தோலில் இயற்கையாகவே 5.5 pH Balance (அமிலம் மற்றும் காரத்தன்மை விகிதம்) அளவிலான அமிலத்தன்மை இருக்கிறது. இந்த அமிலத்தன்மை கிருமித்தொற்றுகளைத் தடுக்கும். இன்று நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் சோப்புகளில் 7 pH அளவுக்கு மேல் அமிலத்தன்மை இருக்கின்றன. அவையெல்லாம் தோலுக்கு உகந்தவையல்ல. சோப் வாங்கும்போது 7 ஜீபி அளவுக்கும் குறைவான சோப்பாக பார்த்து வாங்க வேண்டும்.
தோலில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும் வரையில்தான் கெட்ட பாக்டீரியாக்களின் தாக்குதல் இருக் காது. ஆன்டிபயாட்டிக் சோப் உபயோகிக்கும்போது அவை தோலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்து அழித்து விடுவதால் கெட்ட பாக்டீரியாக்களின்தாக்குதல் ஏற்படும். முடிந்த வரை தளர்வான காட்டன் உடைகளை அணிவதுதான் நமக்கு ஏற்றது. குறிப்பாக ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி, டஸ்ட் அலர்ஜி ஆகியவற்றை உள்ளடக்கிய Atopic Diathesisபிரிவினருக்கு தோல் நோய்கள் அதிக அளவில் ஏற்படும் என்பதால், இவர்கள் காட்டன் உடைகள் உடுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
ஷூ அணிவதும் நமக்கு உகந்ததல்ல. நீண்ட நேரம் ஷூ அணியும்போது விரல் இடுக்குகளில் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டு அதை குணப்படுத்துவது கடினமாகி விடும். துவைக்காத சாக்ஸை பயன்படுத்தும்போது வியர்வையின் மூலம் உற்பத்தியான கிருமிகளின் தாக்குதல் ஏற்படும். உணவு, உடை, வாழ்க்கைமுறை எல்லாம் நமது வாழிடத்தின் சூழலுக்கு ஏற்றபடிதான் அமைய வேண்டும். நமது சூழலுக்கு பொருந்தாத எதுவுமே கேடுதான்” என்கிறார் வானதி.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ஆண்களும் ஜீன்ஸ் அணியக் கூடாது!
ஆமாப்பா துவைக்க முடியல அணியாதீங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ஆண்களும் ஜீன்ஸ் அணியக் கூடாது!
ஏங்க பயமுறுத்தறீங்க...
என்னைப் போன்ற வாலிபர்கள் எல்லாம் இதைத்தானே விரும்பி அணிகிறோம்???!!!
என்னைப் போன்ற வாலிபர்கள் எல்லாம் இதைத்தானே விரும்பி அணிகிறோம்???!!!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஆண்களும் ஜீன்ஸ் அணியக் கூடாது!
ஜேக் wrote:ஏங்க பயமுறுத்தறீங்க...
என்னைப் போன்ற வாலிபர்கள் எல்லாம் இதைத்தானே விரும்பி அணிகிறோம்???!!!
Similar topics
» வயிற்றில் குழந்தை அசைவதை ஆண்களும் உணரலாம் - வீடியோ
» ஜீன்ஸ் துவைக்கும் வழிமுறைகள்
» கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !
» ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா?
» ஆண்களும் பெண்களும்“இந்த ஐந்தை” கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்!
» ஜீன்ஸ் துவைக்கும் வழிமுறைகள்
» கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !
» ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா?
» ஆண்களும் பெண்களும்“இந்த ஐந்தை” கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|