Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பகிர்தல் கணவன்-மனைவி உறவுக்கு நல்லது
Page 1 of 1 • Share
பகிர்தல் கணவன்-மனைவி உறவுக்கு நல்லது
பகிர்தல் நல்லது எனக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறோம். ஆனால், அதற்கு முன் எந்த வகையான பகிர்தல் கணவன்-மனைவி உறவுக்கு நல்லது என்பதை அவர்கள் அறிய வேண்டியது அவசியம். தம்பதியருக்கிடையிலான பகிர்தலில் 2 வகைகள் உள்ளன. சொல்ல வேண்டியதைக்கூட முழுமையாகச் சொல்லாத ‘அண்டர் ஷேரிங் குணம்’ ஒன்று. துணையிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளக் கூடியவற்றை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிற ‘ஓவர் ஷேரிங் குணம்’ இன்னொன்று. கணவன்- மனைவி உறவுக்கு இந்த இரண்டுமே நல்லதல்ல.
விவாகரத்து என முடிவு செய்துவிட்ட நிலையில் என்னிடம் கவுன்சலிங் வந்தார்கள் ஐ.டி.யில் வேலை பார்க்கிற அந்த தம்பதி. ‘‘நானும்தான் அவருக்கு சமமா வேலை பார்க்கறேன். நானும் அவரும் சேர்ந்து வாழப் போற ஒரு வீட்டைப் பத்தி என்கிட்ட பேசி முடிவெடுக்காம, அவங்கப்பாகிட்ட பேசியிருக்கார். அது மட்டுமில்லாம எனக்குத் தெரியாம ஒரு இடத்தையும் வாங்கி, அப்பாவை வச்சுக்கிட்டே ரெஜிஸ்ட்ரேஷன் வரை முடிச்சிட்டார். இத்தனை பெரிய விஷயத்தை என்கிட்ட சொல்லாம மறைச்ச இவர்கூட இனி சேர்ந்து வாழறதுல அர்த்தமில்லைனு நினைக்கிறேன்... என்றார். மனைவியிடம் அவசியம் பகிர்ந்திருக்க வேண்டிய தகவலை கணவர் பகிராமல் விட்டதன் விளைவு!
துணையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியதை பகிராமலும், துணையிடம் மட்டுமே பகிர வேண்டியனவற்றை மற்றவர்களிடம் போட்டு உடைத்தலும் எப்படிப்பட்ட பிரச்னைகளைக் கொண்டு வரும் தெரியுமா?
தன்னை தன் துணை மதிக்கவில்லை என்றும், தான் தன்னவருக்கு முதன்மையான இடத்தில் இல்லை என்றும் நினைக்க வைக்கும். துணை ஒரு அயோக்கியர், பொய்யர் என்கிற உணர்வை ஏற்படுத்தும். துணையிடம் பகிராமல் விட்டதை நேர்மையாக ஏற்றுக் கொள்வதற்குப் பதில், ‘மறந்துட்டேன்’ என அலட்சியமாகச் சொல்வார்கள் சிலர். இது துணைக்குத் தன் மேலுள்ள நம்பிக்கையை சிதைக்கும் என அறிய மாட்டார்கள். ஒரு சில விஷயங்களை துணையிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். அதைப் பொதுவிடத்தில் போட்டு உடைப்பது துணைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.
உதாரணத்துக்கு, கணவர், தன் நண்பர்களிடம், ‘அவதான் என்னைத் துரத்தித் துரத்தி லவ் பண்ணினா’ என காமெடியாக சொல்வார். ஆனாலும், 4 பேர் முன்னிலையில் கணவரின் அந்த வார்த்தைகள் மனைவியை மிக மோசமாகக் காயப்படுத்தி யிருக்கும். அதே போல உடல்நலம், பொருளாதாரம் உள்ளிட்ட சிலதை ரகசியமாக வைத்திருக்க தம்பதியரில் ஒருவர் நினைக்கலாம். இன்னொரு வர் அதை பகிரங்கப்படுத்தும் போது உறவில் சிக்கல் வெடிக்கும். ஜோக் என்கிற பெயரில் இருவருக்குமான அந்தரங்க உறவைப் பற்றி மற்றவர் முன்னிலையில் பேசுவதும் இப்படித்தான் பிரச்னைக்கு முதல் விதை போடும்.
என்னதான் தீர்வு?
எதை எதை பொதுவெளியில் பேசலாம்... எவை எல்லாம் இருவருக்கிடையில் மட்டும் இருக்க வேண்டும் என்பதை தம்பதி இருவரும் பேசி முடிவு செய்யலாம்.
சில விஷயங்களை துணையிடம்தான் முதலில் பகிர்ந்து கொள்ள வேண்டும். ‘பார்ட்னர் ஃபர்ஸ்ட்’ என்பதுதான் இருவரது மந்திரமாகவும் இருக்க வேண்டும். பிசினஸ், புதிய வேலை, கருத்தரிப்பு உள்ளிட்ட சிலவற்றை முதலில் துணையிடம் மட்டும்தான் தெரிவிக்க வேண்டும். இதை முறையான ஒரு வழக்கமாகப் பின்பற்றப் பழகினால், காலப் போக்கில் எவை ரகசியமாக வைக்கப்பட வேண்டியவை, எவை பகிரங்கப்படுத்தப்பட வேண்டியவை என்பது புரிபடும்.
‘பார்ட்னர் எக்ஸ்க்ளூசிவ்’ என உங்களுக்குள் ஒரு ஏரியாவை வைத்துக் கொள்ளுங்கள். இருவரில் ஒருவருக்கு வேலை போனது, உறவின ரின் பிரிவு, குழந்தையின் திறமையின்மை, செக்ஸ், உடல்நலம், கல்யாண விவாதம் போன்றவை பற்றிய பகிர்தல்களை இந்த ஏரியாவை விட்டு வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள். நீங்கள் இருவரும் சேர்ந்து, இன்னன்ன விஷயங்களை வேறு யாரிடமாவது பகிர்ந்து கொள்ளலாம் என முடிவெடுத்தால் மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இது பொதுவெளியில் பகிரக் கூடியது... இது ரகசியம் காக்கப்பட வேண்டியது என இருவரும் தாமாக ஒரு கணிப்புக்கு வரக்கூடாது. இருவரும் சேர்ந்து பேசும் போது, ‘இது நமக்குள் மட்டும் இருக்கட்டும்’ என்கிற வார்த்தைகளைக் கட்டாயம் வலியுறுத்த வேண்டும். மூன்றாம் நபர் நம்மைப் பற்றி வெளிப்படுத்துகிற சில தகவல்களாலும் பல நேரங்களில் நமக்கு சிக்கல்கள் வருவதுண்டு. அப்படி மூன்றாம் நபரின் முன்னிலையில் துணை அவமானப்படுத்தப்படும் போது, உங்கள் ரியாக்ஷன் எப்படியிருக்க வேண்டும்?
‘‘நாங்க ரெண்டு பேரும் வேலை பார்க்கறோம். என் மாமியார் எங்க வீட்டுக்கு யார் வந்தாலும், ‘அந்த கம்பெனியிலதான் செக்யூரிட்டியா இருக்காரு...’னு கிண்டலா சொல்றாங்க. கூனிக்குறுகிப் போறேன் சார் என்றார் ஒரு நண்பர். அந்த இடத்தில் அவரது மனைவி என்ன செய்ய வேண்டும்? சும்மா வேடிக்கை பார்க்கலாமா? அம்மாவுடன் சேர்ந்து சிரிக்கலாமா? அல்லது அம்மாவைக் கண்டிக்கலாமா? அநாகரிகமாக பேசுகிற அம்மாவை அந்த இடத்திலேயே அந்த நிமிடமே தெளிவுப்படுத்த வேண்டும். ‘என் கணவரைப் பத்தி இனிமே இப்படிப் பேசாதீங்க’ எனக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். அசட்டு சிரிப்பு சிரித்து மழுப்புவதோ, எதிர்த்துப் பேசுவதோ, மவுனமாக இருப்பதோ கூடாது.
இதே நிலை இன்னும் நான்கைந்து நபர்கள் முன்னிலையில் நடக்கும் போது என்ன செய்ய வேண்டும்? ‘அவருக்கு சொல்லியா கொடுக்கணும்? எல்லாம் அவரே சமாளிச்சிடுவார்’ என நினைக்கக் கூடாது. அந்தச் சூழ்நிலையில் துணையின் தன்மானத்தைக் காக்கும் முதல் நபராக நீங்கள்தான் நிற்க வேண்டும். மற்றவர் முன்னால் தான் அவமானப்படுத்தப்படுவதை தன் துணையால் சகித்துக் கொள்ள முடியாது என இன்னொரு துணை நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை அவர்களது நெருக்கத்தை அதிகரிக்கும். இதெல்லாம் படித்த, பகுத்தறிவுள்ள, பண்புள்ள தம்பதியருக்கான விதிகள். அதுவே ஒரு கணவர் உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பிரச்னை கொடுப்பவர் என்கிற பட்சத்தில் அவரைக் காப்பாற்ற முன் நிற்க வேண்டியதில்லை.
செய்ய வேண்டியவை
கிசுகிசு பேசுங்கள்
உங்கள் துணையைப் பற்றி நிறைய கிசுகிசு பேசுங்கள். கிசுகிசு என்றதும் நடிகர், நடிகைகளைப் பற்றி நீங்கள் அடிக்கடி கேள்விப்படுகிற பொய்யான தகவல்கள் போல கற்பனை செய்ய வேண்டாம். உங்களவரைப் பற்றிய பாசிட்டிவான விஷயங்களை, அவரது நல்ல குணங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், முடிகிற இடங்களில் எல்லாம் பரப்புங்கள். எக்காரணம் கொண்டும் அவரைப் பற்றிய நெகட்டிவ் கிசுகிசுவுக்கு இடமளிக்க வேண்டாம். நீங்கள் பரப்புகிற பாசிட்டிவ் கிசுகிசுவானது, யார் யார் மூலமோ அவர் காதுகளுக்கே போகும் போது, அவருக்குள் உண்டாகிய உணர்வு, உறவை அன்னியோன்யமாக்குவதில் பெரியளவில் உதவும்.
பொதுவெளியில் பாராட்டுங்கள்
நான்கு பேர் முன்னிலையில் உங்கள் துணையைப் பாராட்டிப் பாருங்கள்... அன்றைய பொழுது அவருக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் சிறப்பானதாகவே இருக்கும். குறைகளைச் சொல்லிக் குட்டுவது என்பது எப்போதும் அந்தரங்கத்திலும், நிறைகளைச் சொல்லிப் பாராட்டு வது என்பது பொதுவெளியிலும் இருக்கட்டும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பகிர்தல் கணவன்-மனைவி உறவுக்கு நல்லது
புரிதலும் விட்டுக் கொடுத்தலுமே இல்வாழ்வின் ரகசியம்...
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: பகிர்தல் கணவன்-மனைவி உறவுக்கு நல்லது
முற்றிலும் உண்மையான கருத்து.kanmani singh wrote:புரிதலும் விட்டுக் கொடுத்தலுமே இல்வாழ்வின் ரகசியம்...
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|