Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெய்யிலை வெல்லும் வெட்டிவேர்!
Page 1 of 1 • Share
வெய்யிலை வெல்லும் வெட்டிவேர்!
காயத்ரி
சித்த மருத்துவர்
சித்த மருத்துவர்
கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், ஒட்டுமொத்த உடலும் உஷ்ணமாகிவிடக்கூடும். சிவந்த கண்களும், வறண்ட தோலும், கரகரத் தொண்டையுமாக அவதிப்பட நேரிடும். நமது முன்னோர்கள் பயன்படுத்திவந்த, வெட்டிவேர் உஷ்ண நோய்களை விரட்டும் வெற்றிவேராகவே இருக்கிறது. இனிப்புச் சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்ட வெட்டிவேர், பார்ப்பதற்குத் தேங்காய் நார் போல இருக்கும். இது, பல மருத்துவக் குணங்களைக் கொண்டது. டெங்கு காய்ச்சல் குணமாகப் பயன்படுத்தப்படும் நில வேம்புக் கஷாயத்தில், வெட்டிவேர் ஒரு முக்கிய மருத்துவப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது. பல வாசனை வஸ்த்துக்களிலும் வெட்டிவேர் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
வெட்டிவேரைத் தண்ணீரில் ஊறவைத்துப் பருகலாம். இரண்டு முதல் எட்டு கிராம் வெட்டிவேர் பொடியை, 250 மி.லி பானைத் தண்ணீரில் ஊறவிட்டு, இரண்டு மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, வடிகட்டிப் பருகலாம். 10-12 மணி நேரத்துக்குள், இந்த நீரைப் பயன்படுத்திவிட வேண்டும். மீண்டும், புதிய நீர் மற்றும் வெட்டிவேர் பொடியைப் பயன்படுத்தலாம். இதற்கு, வெட்டிவேர் ஊறல் நீர் என்று பெயர்.
வெக்கை சூட்டைத் தணிக்கும். அபரிமிதமான தாகத்தைத் தணிக்கும். உடலுக்கு, குறிப்பாகக் கண்களுக்குக் குளிர்ச்சிதரும். அஜீரணம், அசிடிட்டி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பானப் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும்.
மூல நோய், உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் அருந்த ஏற்றது. சிறுநீரைப் பெருக்கும். வியர்வையை உண்டாக்கும்.
தொடர்ந்து பயன்படுத்திவர, மஞ்சள்காமாலை, காய்ச்சல், ஆண்மைக்குறைவு, கட்டி, கண்நோய் போன்றவை குணமாகும். அம்மை நோய்கள் அண்டாது.
வெட்டிவேரைப் பொடியாக்கி, தண்ணீரில் குழைத்து, சருமத்தில் தடவிவர, உடல் எரிச்சல் நீங்கி, சருமம் பொலிவு அடையும். வெயிலால் வரும் சரும நோய்கள் நீங்கும். தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தலையில் தேய்த்துவந்தால், உஷ்ணம் குறையும்.
திப்பிலி, வெட்டிவேர் இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, நெய் சேர்த்து, சூரணம்போல் உருட்டிச் சாப்பிட்டு, சிறிது வெந்நீர் பருக, நெஞ்சு எரிச்சல், வயிற்றுவலி தீரும்.
அரை டீஸ்பூன் வெட்டிவேர் பொடியுடன், ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு, பாதியாகச் சுண்டக்காய்ச்சி, வடிக்கட்டிப் பருகிவர, காய்ச்சல் குறையும்.
பாசிப்பருப்பு, கஸ்தூரி மஞ்சளுடன் வெட்டிவேர் சேர்த்து அரைத்து, குளியல் பொடியாகத் தயாரிக்கலாம். இந்தப் பொடியை, தினமும் தேய்த்துக் குளித்துவர, தோல் நோய்கள் குணமாகும். சிறந்த மணமூட்டியாகவும் செயல்படும்.
வெட்டிவேர் விற்பனைக்கு!
வெட்டிவேரில் செருப்பு, மாலை, தோரணம் எனப் பல்வேறு பொருட்கள் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. முன்பு வெயில் காலத்தில், வெட்டிவேர் விசிறி அதிக அளவில் விற்பனையாகும். வெயில் காலத்தில் அதன்மீது நீர் தெளித்து, விசிறிக்கொண்டால், உடல் எரிச்சல், நா வறட்சி, மன சஞ்சலங்கள் மறையும். தற்போது, ஏ.சி, ஏர் கூலர் என மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, வெட்டிவேரும் ‘விண்டோ ஸ்க்ரீனாக’ அவதாரம் எடுத்துள்ளது. ஜன்னல் வழியே வரும் காற்று, ஈரமான வெட்டிவேர் ஸ்க்ரீன் மீது படும்போது, வெயிலுக்கு இதமாகக் குளிர் காற்றினைத் தருகிறது. நல்ல வாசம் மன அழுத்தத்தை குறைக்கும்.
http://www.friendstamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வெய்யிலை வெல்லும் வெட்டிவேர்!
சூப்பர் பதிவுக்கு நன்றி அண்ணா.
எங்கள் வீட்டில் அந்த காலத்தில் மண் பானையில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த வெட்டி ஒரு சுத்தமான துணியில் கட்டி உள்ளே விடுவார்கள். அந்த தண்ணீரே மணம் வீசும். அதெல்லாம் ஒரு காலம் அண்ணா.
@முழுமுதலோன்
எங்கள் வீட்டில் அந்த காலத்தில் மண் பானையில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த வெட்டி ஒரு சுத்தமான துணியில் கட்டி உள்ளே விடுவார்கள். அந்த தண்ணீரே மணம் வீசும். அதெல்லாம் ஒரு காலம் அண்ணா.
@முழுமுதலோன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» வெட்டிவேர் செலவில்லாத சுத்திகரிப்பு கருவி!
» வாய்மையே வெல்லும்
» சிந்தனைதான் வெல்லும் ...!!!
» அன்பே வெல்லும்!
» ஞானத்தை ஞானமே வெல்லும்
» வாய்மையே வெல்லும்
» சிந்தனைதான் வெல்லும் ...!!!
» அன்பே வெல்லும்!
» ஞானத்தை ஞானமே வெல்லும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|