தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி!

View previous topic View next topic Go down

அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி! Empty அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி!

Post by செந்தில் Mon Sep 07, 2015 9:02 pm

அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி!
அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி!
அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்பு க்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால்
நம்மை எச்சரிக்கை மணிஅடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினா லும் விழித்திருந்தாலும் எதிராளிதொல்லை கொடுத்தால், உடனே தோலைச்சொறிய வே ண்டும் என்ற உணர்வைத்தூண்டுகிற ஓர் எதிர்வினைஇது. இதுசிலநேரம் இதமாகவும் , இன்பமாகவும் இருக்கும். அதுவே பலநேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவ தாக மாறிவிடும் .
உடலியல்ரீதியில்சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பா டு. இதைச்செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’. எதிர்ப்புப் புரதம் அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரண ம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உரு வாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை ‘இம்யூனோகுளோபுலின்–ஈ(IgE) என்பர். இப்புரதத்தை ரத்தசெல்கள் உருவாக்குகின் றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும். மீண்டும் அதே ஒவ்வாத பொரு ள் உடலுக்குள் நுழையும் போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட்செல்களைத்தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட்செல்க ள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச்செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத்தாக்கு ம். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்ப து போன்றவை ஏற்படுகின்றன.பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப் படுத்தமுடியாது. பொதுஇடம் என்று கூடப் பார்க் காமல் சொறியத் தொடங்கி விடுவோம். சொறிய ச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும்விடுகிறது. எப்படி? ‘லேன்ட்- லைன்’ போன் வேலை செய்யும் மெக்கானிஸம் போன்றதுஇது. லேன்ட்லைன்போனில், எதிரெதிர் முனைகளில் உள்ளவர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பிதான். எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண்ணில் இரண்டு பேர்தான் பேச முடியும். இது போல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளை க்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறி ய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே ‘நரம்பு கேபிள்’ தான். நாம் சொறிய ஆரம்பித்ததும், சொறி கிற உணர்வையும் இந்த நரம்புதான் மூளைக்கு எடுத்துச் செல்கிறது. ஒருநேரத்தில் ஒரு தகவலை மட்டுமே இது மூளைக் கு எடுத்துச் செல்லும் என்பதால், அரிப்பு உணர்வை மூளைக்கு எடுத்துச்செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, சொறியும் உணர்வை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச் செல் கிறது. இதனால் அரிப்பு குறைகிறது.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி! Empty Re: அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி!

Post by செந்தில் Mon Sep 07, 2015 9:03 pm

என்ன காரணம்?

அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்தி ருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி! Images?q=tbn:ANd9GcT_Hjrmu-hRGP8hiRIRAtg4Y11EtOlx3yiX2XColhG1jdRBgHL4
வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன் றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப் பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும். குழந் தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என் றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக் கடிகார நாடா, பெயிண் ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ் டிக் வளையல், தங்கநகை, கவரிங் நகைக ளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, ‘நிக்க ல்’ வகை நகை களால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவை க்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜெ ன்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜி யாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது. அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப் பாகிக் கறுத்துப்போகி றது. இந்த இடங்களைச் சொறியச்சொறிய நீர்க்கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் ‘கரப்பா ன் நோய்’ (Eczema)என்று பெயர். இது வந்துவி ட்டால்நாள் முழுவதும் அரிப்பைஏற்படுத்தும்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி! Empty Re: அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி!

Post by செந்தில் Mon Sep 07, 2015 9:04 pm

குளிரும் ஆகாது!
சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற் படுத்தும். வெயில்காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜி யாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத்தோல் வறண்டு அரிப்பு உண்டாகு ம். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதான மானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக் கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.
தொடை இடுக்கு அரிப்பு
காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும். அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படை போலத் தோன்றும். கால் விரல் இடுக்குகளில் வருகிற சேற்றுப் புண்ணும் அரிப்பை ஏற்படுத்துகிற ஒரு காரணிதான். தண்ணீரில் அதிகம் புழங்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும். அடுத்து, உடல் பருமன் உள்ள வர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்க ளின் அடிப்பகுதி… இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்து கொண் டால், ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) தோன்று ம். இதுவும் அரிப் பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான். இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்து போ வது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி! Empty Re: அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி!

Post by செந்தில் Mon Sep 07, 2015 9:04 pm

வயதானால் வரும் அரிப்பு
முதுமையில் வருகிற அரிப்புக்கு வேறு காரணம் இருக்கி றது. வயதானவ ர்களுக்குத் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பு ஏற்படும். எச்சரிக்கும் நோய்கள் உடலில் இருக்கும் எந்த வொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவா சப்பாதை அழற்சி, சிறு நீரகப் பாதை அழற்சி போன் றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு ‘நூல் புழு’ காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்பட லாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம். தவிர, நீரிழிவுநோய், ரத்தசோகை, மஞ்சள் காமா லை , சிறு நீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சனை, பித்தப்பைப் பிரச்சினை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலி ரோஸிஸ்’எனும் மூளைநரம்புப் பிரச்சனை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.
உணவும் மருந்தும் நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல்மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டு ப் பதப்படுத் தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந் துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசு லைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டி பயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி! Empty Re: அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி!

Post by செந்தில் Mon Sep 07, 2015 9:05 pm

மனப் பிரச்சினைகள்
அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்க ளும் இருக்கின்றன. ‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் உள்ளவர்கள் உடலில் பூச்சி ஊறுவதைப்போல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால் எந் நேரமும் உடலைச் சொறிந்துகொண்டே இருப் பார்கள். இவர்களது மன நோய் குணமானால்தான் அரிப்பும் சரியாகும். ‘உடம்பு அரித்தால் ஒரு ‘அவில்’ போட்டுக்கோ’ என்று சாதாரணமாக வீடுகளில் சொல்வார்கள். அதேவே ளையில் எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றால்தான், அரிப்பு முற்றிலுமாகக் கட்டுப்படும். நாமாக மருந்து சாப்பிடுவது, ஆபத்துக்கு அழைப்பு விடுப்பதைப் போல.அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி! Images?q=tbn:ANd9GcRLvFIN72u5uV0eCnTZpbvAZbwZNZtd2weQSYNaIOdQBbeN1XcD
நன்றி -மருத்துவர் கணேசன் (gganesan95@gmail.com)+
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி! Empty Re: அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி!

Post by முரளிராஜா Tue Sep 08, 2015 10:18 am

அரிப்பு பற்றிய விரிவான விளக்கத்துக்கு நன்றி செந்தில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி! Empty Re: அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி!

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 08, 2015 11:12 am

அரிப்பு பற்றிய விரிவான விளக்கத்துக்கு நன்றி செந்தில்

ஆம் நல்ல பதிவு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி! Empty Re: அரிப்பு! – நம்மை எச்ச‍ரிக்கும் எச்சரிக்கை மணி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum