Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோமாதா எங்கள் குலமாதா..!!
Page 1 of 1 • Share
கோமாதா எங்கள் குலமாதா..!!
மாடுகளோடு மூர்க்கத்தனமாய் கத்தியோடும் கவசத்தோடும் சண்டையிட்டு கொல்லும் ஸ்பானிய காட்டுக் கலாச்சாரம் இருக்கிறது. மாடுகளைக் கதறக்கதற வெட்டி வீழ்த்தி, அதன் கொழுப்பை தின்று கொழுத்து திரியும், வெறிப் பிடித்த கூட்டத்தையும் நாம் உலகம் முழுதும் பார்த்து வருகிறோம். அந்த மாடுகளுக்காக ஒரு நாளை ஒதுக்கி, அதைக் குளிப்பாட்டி அழகுபடுத்தி, அதைத் தெய்வமாய் வழிபடும் ஒரு கலாச்சாரத்தை எங்கு பார்க்கலாம்..?!
பசுவைக் 'கோ' என்ற ஒற்றைச் சொல்லில் அரசன்/ இறைவன் தானத்தில் வைத்துப் போறறுவது செம்மொழியான எம் தமிழ். பசு என்பது நம் தாயைப் போன்ற தன்னிகரற்ற உயர்ந்த சீவன். தொன்றுதொட்டு தமிழர் நாகரீகம் பசுக்களையும், எருதையும், உழவையும் ஒட்டியே வளர்ந்திருக்கிறது. தமிழ்மறையான திருக்குறளில், ஆசான் திருவள்ளுவப் பெருமான் உழவு எனும் அதிகாரத்தை உழவிற்குத் தந்தமை தமிழர்கள் உழவை எவ்வாறு போற்றினர் என்பதற்குச் சான்று பகரும்.
பசுவின் பால் தாய்ப்பாலை மிகவும் ஒத்திருப்பதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள். சைவ உணவு உண்பவர்களும் பாலை பருகுவதுண்டு. பசுவின் இரத்தம்தானே அதன் உடல் ரீதியான இரசாயன மாற்றங்களால் பாலாய் மாறுகிறது..?! அதன் பாலை அது நமக்கு வேண்டி விரும்பியா தருகிறது..?! அதன் கன்றைக் காட்டி, திருடியல்லவா எடுக்கிறோம். அதற்கு பரிகாரமாய் பசுக்களை போற்றி வழிபடுவதன் மூலம் அப்பாவச் செயலுக்கு நாம் பரிகாரம் செய்துக் கொள்கிறோம். ஒரு பொருளை திருடியதற்காக அபராதம் செலுத்துகிறோம்.
சிலர் ஒரு கேள்வி கேட்கலாம்..?! அது என்ன மாட்டுக்கு மட்டும் தனி மரியாதை? மாட்டுப் பொங்கல் மாடுகளுக்கு மட்டுமல்ல கால்நடைகள், பறவைகள் என்று நம்மை சுற்றி உள்ள உயிரனங்களுக்கும் தான். நம் கலாசாரம் அனைத்தையும் தழுவிக் கொள்வது. நான் மனிதன், நான் மட்டுமே நுட்பமான அறிவுள்ளவன், ஆகையால் அனைத்தையும் அடிமைப்படுத்தி அரசாளுவேன் என்று நம் முன்னோர்கள் நினைத்ததில்லை.
மாறாக நாம் வாழ்வது ஒருவரை ஒருவர் சார்ந்த உலகம். விலங்குகளும் இயற்கையும் நம் வாழ்வில் இன்றியமையாதவை என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்தவர்கள் நம் முன்னோர்கள்.
நாம் மற்ற உயிர்களையும் மதித்து விழா எடுக்கும் கோப்பொங்கல் (மாட்டுப்பொங்கல்) என்பது தமிழர் நாம் கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் முதிர்ச்சி அடைந்த ஒரு சமுதாயம் என்பதையும், தன் சுற்றுப்புறத்தோடு ஒன்றினைந்து வாழ்ந்த, வாழ வழிகாட்டிய இனம் என்பதையும் பெருமையுடன் குறித்து நிற்கின்றது. இது தங்கள் தகுதியை உயர்த்தி பிடிப்பதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் அறிவிக்கும் "க்ரீன் டே" போன்ற பெருமை சார்ந்த தினம் இல்லை.
ஒரு பாமரனும் தன் சுற்றுப்புறத்தை மதித்தும் போற்றியும் வாழ்வதற்காக வரையறுக்கப்பட்ட தினம் தான் இந்த மாட்டுப் பொங்கல். இன்று சகல சீவராசிகளும் நன்றி செலுத்தும் நன்னாள். இந்நாளில் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துவோம்.
நன்றி: பேஸ்புக்
பசுவைக் 'கோ' என்ற ஒற்றைச் சொல்லில் அரசன்/ இறைவன் தானத்தில் வைத்துப் போறறுவது செம்மொழியான எம் தமிழ். பசு என்பது நம் தாயைப் போன்ற தன்னிகரற்ற உயர்ந்த சீவன். தொன்றுதொட்டு தமிழர் நாகரீகம் பசுக்களையும், எருதையும், உழவையும் ஒட்டியே வளர்ந்திருக்கிறது. தமிழ்மறையான திருக்குறளில், ஆசான் திருவள்ளுவப் பெருமான் உழவு எனும் அதிகாரத்தை உழவிற்குத் தந்தமை தமிழர்கள் உழவை எவ்வாறு போற்றினர் என்பதற்குச் சான்று பகரும்.
பசுவின் பால் தாய்ப்பாலை மிகவும் ஒத்திருப்பதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள். சைவ உணவு உண்பவர்களும் பாலை பருகுவதுண்டு. பசுவின் இரத்தம்தானே அதன் உடல் ரீதியான இரசாயன மாற்றங்களால் பாலாய் மாறுகிறது..?! அதன் பாலை அது நமக்கு வேண்டி விரும்பியா தருகிறது..?! அதன் கன்றைக் காட்டி, திருடியல்லவா எடுக்கிறோம். அதற்கு பரிகாரமாய் பசுக்களை போற்றி வழிபடுவதன் மூலம் அப்பாவச் செயலுக்கு நாம் பரிகாரம் செய்துக் கொள்கிறோம். ஒரு பொருளை திருடியதற்காக அபராதம் செலுத்துகிறோம்.
சிலர் ஒரு கேள்வி கேட்கலாம்..?! அது என்ன மாட்டுக்கு மட்டும் தனி மரியாதை? மாட்டுப் பொங்கல் மாடுகளுக்கு மட்டுமல்ல கால்நடைகள், பறவைகள் என்று நம்மை சுற்றி உள்ள உயிரனங்களுக்கும் தான். நம் கலாசாரம் அனைத்தையும் தழுவிக் கொள்வது. நான் மனிதன், நான் மட்டுமே நுட்பமான அறிவுள்ளவன், ஆகையால் அனைத்தையும் அடிமைப்படுத்தி அரசாளுவேன் என்று நம் முன்னோர்கள் நினைத்ததில்லை.
மாறாக நாம் வாழ்வது ஒருவரை ஒருவர் சார்ந்த உலகம். விலங்குகளும் இயற்கையும் நம் வாழ்வில் இன்றியமையாதவை என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்தவர்கள் நம் முன்னோர்கள்.
நாம் மற்ற உயிர்களையும் மதித்து விழா எடுக்கும் கோப்பொங்கல் (மாட்டுப்பொங்கல்) என்பது தமிழர் நாம் கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் முதிர்ச்சி அடைந்த ஒரு சமுதாயம் என்பதையும், தன் சுற்றுப்புறத்தோடு ஒன்றினைந்து வாழ்ந்த, வாழ வழிகாட்டிய இனம் என்பதையும் பெருமையுடன் குறித்து நிற்கின்றது. இது தங்கள் தகுதியை உயர்த்தி பிடிப்பதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் அறிவிக்கும் "க்ரீன் டே" போன்ற பெருமை சார்ந்த தினம் இல்லை.
ஒரு பாமரனும் தன் சுற்றுப்புறத்தை மதித்தும் போற்றியும் வாழ்வதற்காக வரையறுக்கப்பட்ட தினம் தான் இந்த மாட்டுப் பொங்கல். இன்று சகல சீவராசிகளும் நன்றி செலுத்தும் நன்னாள். இந்நாளில் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துவோம்.
நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» கோமாதா
» கோமாதா வழிபாடு ஏன்?
» கோமாதா 108 தமிழ்ப் போற்றி
» எங்கள் நாட்டு மக்களுக்கு...
» அனுதினமும் இங்கே எங்கள் தினமே!
» கோமாதா வழிபாடு ஏன்?
» கோமாதா 108 தமிழ்ப் போற்றி
» எங்கள் நாட்டு மக்களுக்கு...
» அனுதினமும் இங்கே எங்கள் தினமே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|