Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திக்.. திக்.. (இதயம் பலவீனமாயிருப்பவர்கள் இந்தக் கதையை படிக்க வேண்டாம்..)
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
திக்.. திக்.. (இதயம் பலவீனமாயிருப்பவர்கள் இந்தக் கதையை படிக்க வேண்டாம்..)
சிவா காயத்ரியை உயிருக்கு உயிராக நேசித்தான். அவளும் அப்படிதான். ஒருவர் இல்லாமல் ஒருவர் வாழவே முடியாது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாக உருவானது. அவர்கள் காதல் நாளுக்கு நாள் வலுவாக, ஆழமாக, சுவாசமாக வளர்ந்துகொண்டே போனது..
சிவாவின் குடும்ப நிலை.. காயத்ரியின் படிப்பு.. இது தான் அவர்களுக்கு தடையாக இருந்தது. எவ்வளவு நாட்களானாலும் காத்திருக்க தயாராக இருந்தனர், மாறாத காதலுடன்.
திடீரென்று அவளுடைய அப்பாவுக்கு அவர்கள் காதல் தெரிய வந்தது. வழக்கமான அப்பா தான். அடி உதை மிரட்டல்.. வீட்டில் சிறை வைக்கப்பட்டாள். அவர்களால் சந்திக்கவே முடியவில்லை. வேறு வழியில்லாமல் அவள் அப்பாவிடம் அவளை பெண் கேட்டு சிவா வீட்டிற்கே போனான். சொந்த பந்தங்கள் சேர்ந்து அவனை விரட்டி விட்டது..
அன்று இரவு தொலைபேசியில் இருவரும் அழுதனர். மறுநாள் காலை வீட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்தனர்.
யாருக்கும் தெரியாமல் சிவா ரயில் நிலையம் வந்து அவளுக்காக காத்திருந்தான். நேரம் கடந்தது.. காயத்ரி வரவில்லை. காத்திருந்தான்.. வரவே இல்லை.
குழம்பிய அவன் அவளுடைய வீட்டிற்கு சென்று பார்க்க முடிவு செய்து புறபட்டான். வழியில் அவன் நண்பர்கள் வழிமறுத்து, அந்த அதிர்ச்சியான தகவலை அவனிடம் கூறினர்.
“காயத்ரி தற்கொலை செய்துகொண்டாள்“
ஆம்.. காயத்ரி கிளம்பும்போது அவளுடைய தந்தை பார்த்துவிட்டதாகவும் அவளை அடித்ததாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார்.
அவன் அவனாக இல்லை.. வெறி பிடித்தவனாய் ஓடினான். அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. காயத்ரியை புதைத்து விட்டார்கள்.
அழுதான்.. அழுதான்.. அவனால் அதை மட்டும் தான் செய்ய முடிந்தது..
பல நேர தேற்றளுக்குப் பிறகு வீடு வந்தான்..
வெகுநேரம் பித்துப் பிடித்தவன் போல இருந்தவன், திடீரென கத்தியால் தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டான். ஆனால் விதி வலியது. காப்பாற்றப்பட்டுவிட்டான்.
வேறு வழி? காலம் போன போக்கில் நடைபிணமாய் நடமாடினான்.
ஒரு நாள் மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தான். காயத்ரியின் நினைவில் இருந்து அவனால் மீள முடியவில்லை..
"ஏன் என்னை தனியா விட்டுட்டுப் போன காயத்ரி? நான் என்ன தப்பு பணினேன்?" கதறி அழுதான்.
அப்போது திடீரென்று தொலைபேசி சிணுங்கவே எடுத்து பார்த்தான். Display-ல் காயத்ரி என்று வந்தது.. குழப்பத்தில் நெற்றியைச் சுருக்கினான் சிவா.
ஒருவேளை அவள் வீட்டிலிருந்து வேறு யாரவது அழைக்கலாம் என்று காதில் வைத்து..
"ஹலோ" என்றான்.
"சிவா.. சிவா... " என்று அழுகுரல் கேட்டது.
ஒரு நிமிடம் நடுங்கித்தான் போனான்.. உடல் சட்டென வியர்த்தது..
"இது.. இது... என் காயத்ரியின் குரல்.. ஆனால்.. ஆனால்.. எப்படி?" பதறினான்.. பயந்தான்..
என்ன செய்வதென அறியாமல் அழைப்பை துண்டித்து விட்டான்..
தனக்கு ஏற்பட்டது கனவாக, பிரமையாக கூட இருக்கலாம். சதா காயத்ரியையே நினைத்துக்கொண்டிருப்பதால் ஏற்பட்ட உளைச்சலாக இருக்கலாமென ஆறுதல் படுத்தினான்.
மீண்டும் அங்கு மௌனம் நிலவியது. நிமிடங்கள் கரைந்தன..
ஒன்று.. இரண்டு.. மூன்று..
முழுதாக பதினைந்து நிமிடத்திற்குப் பின் மீண்டும் மணி ஒலித்தது.
அதே காயத்ரி..
உள்ளூர பயம் இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான் சிவா.
சிவா: "ஹலோ.."
காயத்ரி: "சிவா.. சிவா.. எப்படி இருக்கீங்க?"
மீண்டும் அதே குரல்.. யாராவது தன்னை காயத்ரி குரல் மாதிரி பேசி ஏமாற்றுகிறார்களோ???
இல்லை சத்தியமாக இல்லை. காயத்ரியின் குரல் அவனுக்கு அத்துப்படி. எத்தனையோ நாட்கள் காதலாகக் கேட்டு மயங்கிய அதே குரல்.. நிச்சயம் இது காயத்ரி தான். ஆனால்.... ஆனால்...
ஆயிரம் கேள்விக் கணைகள் அவனுள் எழ ஆரம்பித்த நொடி.. மீண்டும் அந்தக் குரல்..
காயத்ரி: “ப்ளீஸ் சிவா.. பேசுங்க.. ஏன் எங்கிட்ட பேச மாட்டீங்கிறீங்க??”
தொண்டைக்குழியில் ஏற்பட்ட நடுக்கத்தை அடக்கிக்கொண்டு பேசினான் சிவா.
சிவா: "நீ........ நீ இறந்துட்டனு சொன்னங்க.. ஆனா ...." குரலில் பயம் தெரிந்தது..
"புதைச்ச இடத்துக்கு கூட நான் வந்து பாத்தேனே... பின்ன எப்படி..." புரியாத புதிராய் கேட்டான்.
காயத்ரி: "ஹா ஹா ஹா ”..
பேரொளியாய், இடியென ஒரு சிரிப்பொலி எழுந்து அடங்கியது..
மீண்டும் பேச ஆரம்பித்தாள்.. ”புதைச்சா என்ன? நான் எங்க இருந்தாலும் உங்க காயத்ரி தான். என்னால உங்க கூட பேசாம இருக்கவே முடியாது.. செத்தாலும் கூட.."
முகத்தில் வியர்வை வழிய, துடைக்க மறந்தவனாய் பயத்தில் உறைந்தவனாய் சிவா..
சிவா: “எ... எ... என்ன சொல்ற?? அதெப்படி முடியும்???”
அப்போது... அப்போது.. திடீரென ஒரு குரல் கேட்கிறது...
அது....
அது...
எங்களுடைய டவர் எங்கும் இருக்கும்...
ஏர்டெல்.. ஒரு அற்புதமான நெட்வொர்க்..
டின் டி டி டின் டின்….
----------------------
இன்னும் என்ன பாக்குறீங்க??? கதை அவ்ளோ தான்.
(பின்ன தலைப்பு ஏன் அப்படி வச்சிருக்கனு கேக்குறீங்களா??? பதிவு தான் டெரரா இல்ல.. தலைப்பாவது டெரரா இருக்கட்டுமேனு தான்... எப்பூடிஈஈஈஈ...)
போய் வேலையப் பாருங்க.
(மறக்காம பின்னூட்டம் போடுங்க.. இல்லேனா இந்த மாதிரி நெறைய கதை சொல்ல ஆரம்பிச்சிடுவேன்.. ஜாஆஆஆஆக்கிரதை..)
.நன்றி -இந்திரா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: திக்.. திக்.. (இதயம் பலவீனமாயிருப்பவர்கள் இந்தக் கதையை படிக்க வேண்டாம்..)
யார் இந்த சிவா???? நம்ம சிவாவா?
Re: திக்.. திக்.. (இதயம் பலவீனமாயிருப்பவர்கள் இந்தக் கதையை படிக்க வேண்டாம்..)
நம்ம சிவாவ ஒரு பொண்ணு காதலிச்சாலெமகா பிரபு wrote:யார் இந்த சிவா???? நம்ம சிவாவா?
அது தற்கொலைக்கு சமம்தானே
Re: திக்.. திக்.. (இதயம் பலவீனமாயிருப்பவர்கள் இந்தக் கதையை படிக்க வேண்டாம்..)
கேரளாவில் இருந்து சிவா வருவதற்குள்
Re: திக்.. திக்.. (இதயம் பலவீனமாயிருப்பவர்கள் இந்தக் கதையை படிக்க வேண்டாம்..)
எங்களுடைய டவர் எங்கும் இருக்கும்...
ஏர்டெல்.. ஒரு அற்புதமான நெட்வொர்க்..
டின் டி டி டின் டின்….
நல்லா கெளப்புறிங்க பீதியை......
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Re: திக்.. திக்.. (இதயம் பலவீனமாயிருப்பவர்கள் இந்தக் கதையை படிக்க வேண்டாம்..)
ரானுஜா wrote:எங்களுடைய டவர் எங்கும் இருக்கும்...
ஏர்டெல்.. ஒரு அற்புதமான நெட்வொர்க்..
டின் டி டி டின் டின்….
நல்லா கெளப்புறிங்க பீதியை......
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
» திக்! திக்! திக்! கிணறு...
» படிக்க படிக்க மனது தெளிவாகும்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» மீண்டும் தீவிரவாத கதையை இயக்கும் மணிரத்னம்!
» திக்! திக்! திக்! கிணறு...
» படிக்க படிக்க மனது தெளிவாகும்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» மீண்டும் தீவிரவாத கதையை இயக்கும் மணிரத்னம்!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|