Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
Page 1 of 1 • Share
அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க ஸ்கரப் -- அழகு குறிப்புகள்.,
பெண்களின் முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் அவர்களின் அழகையே கெடுத்துவிடும். இத்தகைய ரோமங்களை போக்குவதற்கு பெண்கள் நிறைய வழிகளை பின்பற்றி வந்தாலும், அவற்றில் பெரும்பாலான முறைகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுவதில்லை என்பதே உண்மை.
உடலில் உள்ள ஹார்மோன் மாற்றங்களினால் சில பெண்களுக்கு அதிகமான ரோம வளர்ச்சி ஏற்படும். பெரும்பாலும் உதட்டுக்கு மேல், காதுகளுக்கு அருகில் மற்றும் தாடை பகுதிகளில் அதிகமாக வளரும் இத்தகைய ரோமைங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது சற்று கடினம் தான் என்றாலும் முறையான குறிப்புகளை பயன்படுத்தி இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். முகத்திலிருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்ற இதோ சில எளிய டிப்ஸ்...
• சிறிதளவு சக்கரை, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும். இந்த ஸ்கரப்பை முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தில் கீழிருந்து மேலாக தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம். பருக்கள் உள்ளவர்களும் இந்த முறையை பின்பற்றினால் பருக்களை படிப்படியாக மறையும்.
• சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளுடன், தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக குழைத்து ரோமங்களின் மீது பூசவும். இந்த கலவையை சுமார் ஒரு 10 நிமிடங்களுக்கு முகத்தில் தேய்த்து, காய்ந்த பிறகு கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும். இந்த ஸ்கரப்பை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும்.
• சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு தேன் சேர்த்து நன்றாக குழைத்துகொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் சுத்தமடைவதோடு, தேவையற்ற ரோமங்களின் வளர்ச்சியும் படிப்படியாக குறையும்.
பெண்களின் முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் அவர்களின் அழகையே கெடுத்துவிடும். இத்தகைய ரோமங்களை போக்குவதற்கு பெண்கள் நிறைய வழிகளை பின்பற்றி வந்தாலும், அவற்றில் பெரும்பாலான முறைகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுவதில்லை என்பதே உண்மை.
உடலில் உள்ள ஹார்மோன் மாற்றங்களினால் சில பெண்களுக்கு அதிகமான ரோம வளர்ச்சி ஏற்படும். பெரும்பாலும் உதட்டுக்கு மேல், காதுகளுக்கு அருகில் மற்றும் தாடை பகுதிகளில் அதிகமாக வளரும் இத்தகைய ரோமைங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது சற்று கடினம் தான் என்றாலும் முறையான குறிப்புகளை பயன்படுத்தி இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். முகத்திலிருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்ற இதோ சில எளிய டிப்ஸ்...
• சிறிதளவு சக்கரை, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும். இந்த ஸ்கரப்பை முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தில் கீழிருந்து மேலாக தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம். பருக்கள் உள்ளவர்களும் இந்த முறையை பின்பற்றினால் பருக்களை படிப்படியாக மறையும்.
• சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளுடன், தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக குழைத்து ரோமங்களின் மீது பூசவும். இந்த கலவையை சுமார் ஒரு 10 நிமிடங்களுக்கு முகத்தில் தேய்த்து, காய்ந்த பிறகு கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்படுவதோடு முகம் பட்டுப்போல் பொலிவடையும். இந்த ஸ்கரப்பை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும்.
• சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு தேன் சேர்த்து நன்றாக குழைத்துகொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் சுத்தமடைவதோடு, தேவையற்ற ரோமங்களின் வளர்ச்சியும் படிப்படியாக குறையும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
வியர்வை நாற்றம் நீங்க...
* சந்தனப் பொடியுடன், வெட்டி வேர் பொடியும் கலந்து குளித்தால், வியர்வை நாற்றம் இல்லாமல் இருக்கும்.
* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி, குப்பைமேனி இலைகளை வெயிலில் நன்றாக காய வைத்து, தூளாக்கி, பாலில் குழைத்து, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், வேர்க்குரு வராமலும், வெயிலால் முகம் கறுத்துப் போகாமலும் இருக்கும்.
* புருவத்தில் முடி குறைந்திருந்தால், சுத்தமான, விளக்கெண்ணெய் இரண்டு மூன்று சொட்டுகள் புருவ முடி மீது பூசி, மசாஜ் செய்தால், நாளடைவில் முடி கருகருவென்று வளரும்.
* வெயிலில் அலைந்து திரிந்து விட்டு, வீட்டுக்கு வந்து கண்ணாடியில் முகம் பார்த்தால் கறுத்த முகம் பயமுறுத்தும். கறுப்பை நீக்கி, பளிச்சென்று மாற உடனடி ஆக்ஷனில் இறங்குங்கள். முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, துடைத்து, மாயிஸ்சுரைŒரைப் பரவலாக பூசவும். பின் வெளி வெப்பம் உள்ளே புகாதபடிக்கு, முகத்தை ஏதாவது ஒரு துணியால் மூடவும். இருபது நிமிடங் களுக்குப் பின், வெது வெதுப்பான நீரால், முகத்தை கழுவ, உங்கள் முகத்தின் பிரகாசம் பார்த்து, கண்ணாடிக்கும் கண்கூசும்.
* சந்தனப் பொடியுடன், வெட்டி வேர் பொடியும் கலந்து குளித்தால், வியர்வை நாற்றம் இல்லாமல் இருக்கும்.
* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி, குப்பைமேனி இலைகளை வெயிலில் நன்றாக காய வைத்து, தூளாக்கி, பாலில் குழைத்து, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், வேர்க்குரு வராமலும், வெயிலால் முகம் கறுத்துப் போகாமலும் இருக்கும்.
* புருவத்தில் முடி குறைந்திருந்தால், சுத்தமான, விளக்கெண்ணெய் இரண்டு மூன்று சொட்டுகள் புருவ முடி மீது பூசி, மசாஜ் செய்தால், நாளடைவில் முடி கருகருவென்று வளரும்.
* வெயிலில் அலைந்து திரிந்து விட்டு, வீட்டுக்கு வந்து கண்ணாடியில் முகம் பார்த்தால் கறுத்த முகம் பயமுறுத்தும். கறுப்பை நீக்கி, பளிச்சென்று மாற உடனடி ஆக்ஷனில் இறங்குங்கள். முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, துடைத்து, மாயிஸ்சுரைŒரைப் பரவலாக பூசவும். பின் வெளி வெப்பம் உள்ளே புகாதபடிக்கு, முகத்தை ஏதாவது ஒரு துணியால் மூடவும். இருபது நிமிடங் களுக்குப் பின், வெது வெதுப்பான நீரால், முகத்தை கழுவ, உங்கள் முகத்தின் பிரகாசம் பார்த்து, கண்ணாடிக்கும் கண்கூசும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
சருமம் பொலிவுக்கு எளிய வழிகள் --- அழகு குறிப்புகள்.,
பீட்ரூட்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சியில் இட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். இந்த பீட்ரூட் சாறைப் பிழிந்து அதை முகத்தில் பூசி ஐந்து நிமிடம் மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.
சந்தனப் பொடியை ரோஸ் வாட்டருடன் குழைத்து அதனுடன் நான்கு(அ)ஐந்து துளி பால் விட்டு முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
தேனை சூடு செய்து அதனுடன் எலுமிச்சை சாற்றைக் கலந்து முகத்தில் தடவுங்கள். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
காலையில் எழுந்ததும் தண்ணீரில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இது சருமத்தைப் பொலிவாகவும், மென்மையாகவும் இருக்க உதவும்.
பீட்ரூட்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சியில் இட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். இந்த பீட்ரூட் சாறைப் பிழிந்து அதை முகத்தில் பூசி ஐந்து நிமிடம் மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.
சந்தனப் பொடியை ரோஸ் வாட்டருடன் குழைத்து அதனுடன் நான்கு(அ)ஐந்து துளி பால் விட்டு முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
தேனை சூடு செய்து அதனுடன் எலுமிச்சை சாற்றைக் கலந்து முகத்தில் தடவுங்கள். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
காலையில் எழுந்ததும் தண்ணீரில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இது சருமத்தைப் பொலிவாகவும், மென்மையாகவும் இருக்க உதவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
பட்டு போன்ற மேனி வேண்டுமா? --- அழகு குறிப்புகள்.
ஒரு நாளைக்கு, ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு, வயிற்றுப் பிரச்னை வராது.
வயிறு நலமாக இருந்தால், நம் உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.
குளிப்பதற்கு முன், ஒரு வாளித் தண்ணீரில், ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக, "லெமன் பாத்' எடுங்கள். இது, புத்துணர்வையும், சரும மினு மினுப்பையும் தரும்.
நாட்டு மருந்துக் கடைகளில், கார்போக அரிசி என்று கேட்டால் தருவர். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும், இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு, பேஸ்ட் மாதிரி செய்து, தோலின் மீது பூசவும். விரைவில், தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்!
நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்சியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி, எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்கலாம்.
ஒரு நாளைக்கு, ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு, வயிற்றுப் பிரச்னை வராது.
வயிறு நலமாக இருந்தால், நம் உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.
குளிப்பதற்கு முன், ஒரு வாளித் தண்ணீரில், ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக, "லெமன் பாத்' எடுங்கள். இது, புத்துணர்வையும், சரும மினு மினுப்பையும் தரும்.
நாட்டு மருந்துக் கடைகளில், கார்போக அரிசி என்று கேட்டால் தருவர். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும், இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு, பேஸ்ட் மாதிரி செய்து, தோலின் மீது பூசவும். விரைவில், தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்!
நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்சியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி, எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்கலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
சரும பராமரிப்பில் விளக்கெண்ணை --- அழகு குறிப்புகள்.,
விளக்கெண்ணை எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும்.
• தினமும் கைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் படிப்படியாக மறைந்து விடும். மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணெயை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.
• விளக்கெண்ணெய்யை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்து இல்லாமல் காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வரலாம்.
• குதிகால வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணெய் தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் காணாமல் போய்விடும்.
• கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயை பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சீவக்காய் போட்டு குளித்தால், கூந்தல் நன்கு வளர்ச்சியடையும்.
• வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியைப் போக்குவதற்கு, விளக்கெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் மென்மையாவதோடு, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.
• இரண்டு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில், 15 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதம் மூலம் சருமத்தில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை படிப்படியாக போக்கலாம்.
• சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். அவர்கள் விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படும்.
விளக்கெண்ணை எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும்.
• தினமும் கைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் படிப்படியாக மறைந்து விடும். மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணெயை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.
• விளக்கெண்ணெய்யை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்து இல்லாமல் காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வரலாம்.
• குதிகால வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணெய் தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் காணாமல் போய்விடும்.
• கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயை பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சீவக்காய் போட்டு குளித்தால், கூந்தல் நன்கு வளர்ச்சியடையும்.
• வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியைப் போக்குவதற்கு, விளக்கெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் மென்மையாவதோடு, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.
• இரண்டு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில், 15 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதம் மூலம் சருமத்தில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை படிப்படியாக போக்கலாம்.
• சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். அவர்கள் விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
கூந்தல் உதிர்வதை தடுக்க ஆயுர்வேத குறிப்புகள் --- ஹெல்த் ஸ்பெஷல்,
• வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து முதல் நாள் இரவு நீரில் வேகவைத்து அடுத்த நாள் வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும். இவ்வாறு வாரம் இரு செய்து வர வேண்டும். ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
• கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை சம அளவு கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
• வெந்தயம், குன்றிமணியை சம அளவு எடுத்து பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெயில் ஊறவைக்க வேண்டும். இந்த பொடி ஒரு வாரத்திற்கு நன்றாக ஊற வேண்டும். பின்னர் இந்த எண்ணெயை தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
• மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளித்து வந்தால் செம்பட்டை முடி நிறம் மாறும். இவ்வாறு வாரம் இரு முறை செய்து வரலாம்.
• ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரைத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சிவும். இந்த எண்ணெயை தலையில் தினமும் தொடர்ந்து தேய்த்து வந்தால் கூந்தல் நீளமாக வளரும்.
• வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து முதல் நாள் இரவு நீரில் வேகவைத்து அடுத்த நாள் வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும். இவ்வாறு வாரம் இரு செய்து வர வேண்டும். ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
• கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை சம அளவு கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
• வெந்தயம், குன்றிமணியை சம அளவு எடுத்து பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெயில் ஊறவைக்க வேண்டும். இந்த பொடி ஒரு வாரத்திற்கு நன்றாக ஊற வேண்டும். பின்னர் இந்த எண்ணெயை தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
• மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளித்து வந்தால் செம்பட்டை முடி நிறம் மாறும். இவ்வாறு வாரம் இரு முறை செய்து வரலாம்.
• ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரைத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சிவும். இந்த எண்ணெயை தலையில் தினமும் தொடர்ந்து தேய்த்து வந்தால் கூந்தல் நீளமாக வளரும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
ஆப்பிள் பேஸ் பேக் -- அழகு குறிப்புகள்.,
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் பளபளப்பாக மாறுவதை காணலாம்.
* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, இந்த கலவையை பஞ்சில் தொட்டு முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வரலாம்.
* ஆப்பிள் விழுது 1 ஸ்பூன் எடுத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 15 ஊற வைத்து பின் முகத்தை கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கருமை நிறம் படிப்படியாக மறைவும்.
* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும். கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டு போல் இருக்கும்.
* ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகவும், நீளமாகவும் வளரும்.
* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் பளபளப்பாக மாறுவதை காணலாம்.
* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, இந்த கலவையை பஞ்சில் தொட்டு முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வரலாம்.
* ஆப்பிள் விழுது 1 ஸ்பூன் எடுத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 15 ஊற வைத்து பின் முகத்தை கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கருமை நிறம் படிப்படியாக மறைவும்.
* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும். கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டு போல் இருக்கும்.
* ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகவும், நீளமாகவும் வளரும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
அளவுக்கதிகமான பருத் தொல்லைக்கு...
* ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து, வெயிலில் காய வைத்து பொடி செய்து, காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். இதில், ஒரு தேக்கரண்டி எடுத்து, முல்தானி மிட்டி, ஒரு தேக்கரண்டி தயிர் கலந்து, வாரம் இருமுறை அல்லது மூன்று முறை உபயோகிக்கவும். இதை, அரை மணி நேரம் காயவிட்டு, பிறகு விரல்களை ஈரப்படுத்தி, லேசாகத் தேய்த்து, குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவவும். தீராத பருத்தொல்லை கூட இந்த முறையில் குணமாகும்.
* ஒரு தேக்கரண்டி கோதுமை மாவை, தண்ணீரில் குழைத்து, முகத்தில் தடவி, ஈரமான விரல்களால் தேய்த்து கழுவினாலும் பருக்கள் குறையும். கோதுமைத் தவிடு ஒரு தேக்கரண்டி, சந்தனப் பவுடர் ஒரு தேக்கரண்டி, சிறிது பன்னீர் கலந்து, முகத்தில் தடவிக் காய்ந்ததும் எடுத்து விடவும்.
* நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஐஸ் கட்டிகளால் முகத்தை தேய்க்கவும். இது, சருமத்திலுள்ள அதிகப் படியான எண்ணெய் பசையை அகற்றும்.
* பருத்தொல்லைக்கு பொடுகும் ஒரு முக்கிய காரணம். கூந்தலை வெதுவெதுப்பான எண்ணெயால் மசாஜ் செய்து, தயிர் உபயோகித்துக் குளித்து வந்தால், பொடுகு நீங்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
முடி கருமையாக --- அழகு குறிப்புகள்.,
தேவையான பொருள்கள்:
முசுமுசுக்கை இலைச்சாறு.
நல்லெண்ணெய்.
செய்முறை:
முசுமுசுக்கை இலைகளை எடுத்து அரைத்து சாறு பிழிந்து அந்த சாற்றை நல்லெண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி பத்திரப்படுத்தி சிறிதளவு எடுத்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் இளநரை வராமல் தடுக்கலாம். முடி கருமையாகும்.
தேவையான பொருள்கள்:
முசுமுசுக்கை இலைச்சாறு.
நல்லெண்ணெய்.
செய்முறை:
முசுமுசுக்கை இலைகளை எடுத்து அரைத்து சாறு பிழிந்து அந்த சாற்றை நல்லெண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி பத்திரப்படுத்தி சிறிதளவு எடுத்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் இளநரை வராமல் தடுக்கலாம். முடி கருமையாகும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
முகம் பளபளப்பாக மாற--அழகு குறிப்புகள்.,
தேவையான பொருள்கள்:
துளசி இலை.
வேப்பங்கொழுந்து.
கடலை மாவு.
எலுமிச்சை பழச்சாறு.
செய்முறை:
துளசி இலை மற்றும் வேப்ப மரத்தின் கொழுந்து இலைகள் இரண்டையும் பறித்து சுத்தம் செய்து நன்கு கழுவி நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்து பொடி செய்து அதனுடன் கடலை மாவு சேர்த்து சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறைந்து முகம் பளபளப்பாக மாறும்.
தேவையான பொருள்கள்:
துளசி இலை.
வேப்பங்கொழுந்து.
கடலை மாவு.
எலுமிச்சை பழச்சாறு.
செய்முறை:
துளசி இலை மற்றும் வேப்ப மரத்தின் கொழுந்து இலைகள் இரண்டையும் பறித்து சுத்தம் செய்து நன்கு கழுவி நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்து பொடி செய்து அதனுடன் கடலை மாவு சேர்த்து சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறைந்து முகம் பளபளப்பாக மாறும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
உதடுகள் அழகாக...அழகு குறிப்புகள்.,
பத்து கிராம் ரோஜா இதழ்களையும், பத்து கிராம் டீத்தூளையும், தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இதை ஆற வைத்து, உதடுகளுக்கு ஒத்தடம் கொடுத்தால், கறுத்த உதடுகள் சிவந்து காணப்படும்.
* பீட்ரூட் மற்றும் மாதுளம் பழத்தின் சாற்றை, முறையாக உதடுகளின் மேல் தடவி வர, உதடுகள் அழகாகும்.
* தினமும், உதடுகளின் மேல், நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால், உதடு கள் வறண்டு போகாமல் இருக்கும்.
* ஆலிவ் ஆயிலுடன், சிறிது தேனும், பன்னீரும் கலந்து தடவி வந்தால், சொர சொரப்பான உதடுகள் பொலிவு பெறும்.
* கொத்தமல்லி சாற்றை, தினமும் இரவு படுக்க செல்வதற்கு முன், உதடுகளில் தடவி வந்தால், உதடுகள் லிப்ஸ்டிக் உதவியின்றி இயற்கை சிவப்பழகு பெறும்.
* உதடுகளில் போட்ட லிப்ஸ்டிக்குடன் தூங்கச் செல்லக் கூடாது. முகத்தை நன்றாக கழுவிய பின்னரே, தூங்க செல்ல வேண்டும்.
* உதடுகளை கடிப்பது மற்றும் நாக்கினால் ஈரப்படுத்திக் கொண்டே இருப்பது போன்ற பழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
பத்து கிராம் ரோஜா இதழ்களையும், பத்து கிராம் டீத்தூளையும், தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இதை ஆற வைத்து, உதடுகளுக்கு ஒத்தடம் கொடுத்தால், கறுத்த உதடுகள் சிவந்து காணப்படும்.
* பீட்ரூட் மற்றும் மாதுளம் பழத்தின் சாற்றை, முறையாக உதடுகளின் மேல் தடவி வர, உதடுகள் அழகாகும்.
* தினமும், உதடுகளின் மேல், நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால், உதடு கள் வறண்டு போகாமல் இருக்கும்.
* ஆலிவ் ஆயிலுடன், சிறிது தேனும், பன்னீரும் கலந்து தடவி வந்தால், சொர சொரப்பான உதடுகள் பொலிவு பெறும்.
* கொத்தமல்லி சாற்றை, தினமும் இரவு படுக்க செல்வதற்கு முன், உதடுகளில் தடவி வந்தால், உதடுகள் லிப்ஸ்டிக் உதவியின்றி இயற்கை சிவப்பழகு பெறும்.
* உதடுகளில் போட்ட லிப்ஸ்டிக்குடன் தூங்கச் செல்லக் கூடாது. முகத்தை நன்றாக கழுவிய பின்னரே, தூங்க செல்ல வேண்டும்.
* உதடுகளை கடிப்பது மற்றும் நாக்கினால் ஈரப்படுத்திக் கொண்டே இருப்பது போன்ற பழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
நரைமுடி குறைபாட்டை நீக்கும் எளிய முறைகள் ! -- ஹெல்த் ஸ்பெஷல்,
வயதானவுடன் தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால் பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு நரை தோன்ற ஆரம்பித்து விடும். இதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும் ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. இளம் வயதில் நரை ஏற்பட்டால் அதனைத் தவிர்த்து சரி பண்ண முடியும்.
இந்த குறைபாட்டை நீக்க....
• சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களைத் தலைக்குப் குளிக்க பயன்படுத்தலாம்.
• இரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவற்றைச் சரிவிகிதமாக தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு வந்தால் நரைமுடியை 10 சதவீதம் தவிர்க்க முடியும்.
• பி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்துள்ள உணவுகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
• கூந்தலுக்கு எப்பொழுதும் எண்ணெய்ப்ப்பசையும், நீர்ச்சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி நரைமுடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும்பொழுது முறையான பயிற்சி வேண்டும். சரியான முறையில் ஹென்னாவைச் சேர்த்துப் போட வேண்டும்.
ஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும்பொழுது ஒரு கோப்பை தண்ணீரில் ஷாம்பூவைக் கலந்து பின்பு பயன்படுத்த வேண்டும். அப்பொழுது ஒரே இடத்தில் ஷாம்பூ இல்லாமல் பரவலாக இருக்கும்.
வயதானவுடன் தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால் பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு நரை தோன்ற ஆரம்பித்து விடும். இதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும் ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. இளம் வயதில் நரை ஏற்பட்டால் அதனைத் தவிர்த்து சரி பண்ண முடியும்.
இந்த குறைபாட்டை நீக்க....
• சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களைத் தலைக்குப் குளிக்க பயன்படுத்தலாம்.
• இரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவற்றைச் சரிவிகிதமாக தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு வந்தால் நரைமுடியை 10 சதவீதம் தவிர்க்க முடியும்.
• பி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்துள்ள உணவுகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
• கூந்தலுக்கு எப்பொழுதும் எண்ணெய்ப்ப்பசையும், நீர்ச்சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி நரைமுடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும்பொழுது முறையான பயிற்சி வேண்டும். சரியான முறையில் ஹென்னாவைச் சேர்த்துப் போட வேண்டும்.
ஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும்பொழுது ஒரு கோப்பை தண்ணீரில் ஷாம்பூவைக் கலந்து பின்பு பயன்படுத்த வேண்டும். அப்பொழுது ஒரே இடத்தில் ஷாம்பூ இல்லாமல் பரவலாக இருக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்புகள்..
கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்---அழகு குறிப்புகள்.,
கடலை மாவு சமையலறையில் பயன்படும் பொருளாக மட்டுமல்லால், ஒரு அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இதுவரை இந்த கடலை மாவை குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக தான் பயன்படுத்தி வந்தோம். அதே கடலை மாவை வைத்து ஃபேஸ் பேக் செய்தால், கரும்புள்ளிகள், முகப்பரு, பழுப்பு நிற சருமம் போன்றவை நீங்கிவிடும்.
மேலும் சருமத்திற்கு எந்த பாதிப்பையும் தராது. 1/2 கப் பாலுடன் மஞ்சள் கடலை மாவை சேர்த்து, சற்று கெட்டியான பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் இந்த கலவையின் போது சிறிது தேனை சேர்த்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.
பாதாமை இரவில் படுக்கும் முன் ஊற வைத்து, பின் காலையில் அதனை நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து, எலுமிச்சை சாற்றை விட்டு, ஒரு டீஸ்பூன் கடலை மாவை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து பின் கழுவிட வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும கரும்புள்ளிகள் நீங்கி, முகம் நன்கு பளிச்சென்று காணப்படும்.
இந்த ஃபேஸ் பேக்கில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளன. முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால், அதற்கு முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அத்துடன் ஒரு ஸ்பூன் கடலை மாவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
இதனால் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கி, முகம் அழகாக இருக்கும். தயிரை கடலை மாவுடன் கலந்து முகத்தில் தடவி, ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
கடலை மாவுடன் தயிர் கலந்து ஃபேஸ் பேக் செய்தால், சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. உடலில் அதிகமாக சூடு இருந்தால், அதனை சரிசெய்ய இந்த ஃபேஸ் மாஸ்க் சிறந்தது. ஏனெனில் அதில் உள்ள தயிர் வெப்பத்தை தணித்துவிடும்
[You must be registered and logged in to see this link.]
கடலை மாவு சமையலறையில் பயன்படும் பொருளாக மட்டுமல்லால், ஒரு அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இதுவரை இந்த கடலை மாவை குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக தான் பயன்படுத்தி வந்தோம். அதே கடலை மாவை வைத்து ஃபேஸ் பேக் செய்தால், கரும்புள்ளிகள், முகப்பரு, பழுப்பு நிற சருமம் போன்றவை நீங்கிவிடும்.
மேலும் சருமத்திற்கு எந்த பாதிப்பையும் தராது. 1/2 கப் பாலுடன் மஞ்சள் கடலை மாவை சேர்த்து, சற்று கெட்டியான பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் இந்த கலவையின் போது சிறிது தேனை சேர்த்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.
பாதாமை இரவில் படுக்கும் முன் ஊற வைத்து, பின் காலையில் அதனை நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து, எலுமிச்சை சாற்றை விட்டு, ஒரு டீஸ்பூன் கடலை மாவை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து பின் கழுவிட வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும கரும்புள்ளிகள் நீங்கி, முகம் நன்கு பளிச்சென்று காணப்படும்.
இந்த ஃபேஸ் பேக்கில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளன. முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால், அதற்கு முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அத்துடன் ஒரு ஸ்பூன் கடலை மாவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
இதனால் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கி, முகம் அழகாக இருக்கும். தயிரை கடலை மாவுடன் கலந்து முகத்தில் தடவி, ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
கடலை மாவுடன் தயிர் கலந்து ஃபேஸ் பேக் செய்தால், சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. உடலில் அதிகமாக சூடு இருந்தால், அதனை சரிசெய்ய இந்த ஃபேஸ் மாஸ்க் சிறந்தது. ஏனெனில் அதில் உள்ள தயிர் வெப்பத்தை தணித்துவிடும்
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்----அழகு குறிப்புகள்
» அழகுக்கு அழகு சேர்க்க உதவும் அழகு குறிப்புகள்
» அழகுக்கு அழகு சேர்க்க .....
» அழகுக்கு அழகு சேர்க்க
» அழகுக்கு அழகு சேர்க்க
» அழகுக்கு அழகு சேர்க்க உதவும் அழகு குறிப்புகள்
» அழகுக்கு அழகு சேர்க்க .....
» அழகுக்கு அழகு சேர்க்க
» அழகுக்கு அழகு சேர்க்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|