தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள்

View previous topic View next topic Go down

அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள் Empty அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள்

Post by ஸ்ரீராம் Sat May 11, 2013 8:49 pm

[You must be registered and logged in to see this image.]

சிலுவையும் சீடர்களும்
ஒரு முறை சட்டமன்றத்தில் நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு டில்லி செல்வதாக இருந்ததால் அவரைப் பாராட்டி வாழ்த்திப் பேசினார். கழக உறுப்பினர் ஒருவர் சி.சுப்ரமணியத்தை இயேசு பெருமானோடு ஒப்பிட்டு வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினார்.

குறுக்கிட்ட சுப்ரமணியம் இயேசுநாதரைப் போல் சிலுவையில் அறையாமல் இருந்ததால் சரி என்றார். இயேசு நாதருடைய சீடர்தான் அவரைக் காட்டிக்கொடுத்தார் என்று உடனே எழுந்துக் கூறினார் அண்ணா! அவையில் சிரிப்பொலி எழுந்தது.

உங்கள் கட்சிக்காரர்களால்தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற தொந்தரவு ஏற்படலாமே தவிர எங்களால் அல்ல என்பதை இவ்வளவு அழகாக நகைச்சுவையுடன் அண்ணா குறிப்பிட்டார்.

சம்பந்தி சண்டையா?
சட்டமன்றத்தில் வினாயகம் என்பவர் எழுந்து, மிருகக்காட்சி சாலையில் நான் கொடுத்த ஆண் புலிக்குட்டியை சரியாகக் கண்காணிப்பதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். கொடுத்த பெண் புலிக்குட்டி நன்றாக வளர்க்கப்படுகிறதே!” என்று புகார் கூறினார்.

உடனே அண்ணா, ”சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்” என்று பதில் கூறினார். புகார் கூறியவர் உட்பட அனைவரும் சிரித்தனர்.


புளியமரத்தின் சாதனை
பேரறிஞர் அண்ணா தமிழக மக்களின் நல்லாதரவைப் பெற்று, முதல்வராக வீற்றிருந்த சமயம், ”விலைவாசி குறைந்துள்ளது” என்று அண்ணாவும் உறுப்பினர்களும் கூறியதைக் கேட்ட எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் கேலியாக – புளி விலை குறைந்துள்ளதே அது யார் சாதனை? என்று கேட்கிறார்.

அண்ணா அமைதியாக எழுந்து ”அது புளியமரத்தின் சாதனை” என்றார். அவை சிரிப்பில் முழ்குகிறது! கேட்பவருக்கு எப்படி இருந்திருக்கும்?


ஊசி போட்டாச்சா?
அறிஞர் அண்ணா தோழர் இராசகோபால் என்பவரை அடிக்கடி கிண்டல் செய்து கொண்டேயிருப்பார். ஒரு சமயம் தோழர் இராசகோபால் அவர்கள் அண்ணாவிடம் வந்து தம்மை இரவு எலி ஒன்று கடித்து விட்டதாகக் கூறினார்.

அண்ணா அவர்கள் சிரித்துக் கொண்டே எலியா? உன்னையா? என்று கேட்டார்.

« ஆமாங்க! என்னைத்தான் எலி கடித்துவிட்டது!” என்று தோழர் இராசகோபால் இரக்கம் தோன்றக் கூறினார்.

« ஊசி போடனுமே! ஊசி போட்டாச்சா?” என்று அண்ணா கேட்க, உடனே இராசகோபால் இன்னும் போட்டுக்கலிங்க! என்று கூறினார்.

உடனே அண்ணா யாருக்கு ஊசி என்று இராசகோபாலைப் பார்த்துக் கேட்டார். எனக்குத்தான்! என்று இராசகோபால் அவசரமாகக் கூறினார்.

அண்ணா அவர்கள் சிர்த்துக்கொண்டே உனக்கல்ல! அந்த எலிக்கு ஊசி போட்டாச்சா என்றுதான் கேட்டேன்! என்றார்.

« எலிக்கு ஏன் ஊசி?” என்று இராசகோபால் கேட்க, அதற்கு அண்ணா, அதனுடைய விஷம் உன்னைப் பாதிப்பதை விட, உன்னுடைய விஷம் அதனை அகிமாகப் பாதிக்கச் செய்திருக்கும்!” என்று சிரித்துக் கொண்டே கூறினார். இருவரும் நகைத்தார்கள்.

நாட்கள் எண்ணப்படுகின்றன
ஒரு முறை சட்டமன்றத்தில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த வினாயகம் என்பவர் அண்ணாவைப் பார்த்து, « Your Days are numbered » (உங்களுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன) என்று கூறினார்.
அண்ணா அவர்கள் புன்முறுவல் பூத்த முகத்துடன் அமைதியாக எழுந்து, « My Steps are measured » (என்னுடைய காலடிகளை எடுத்து வைக்கிறேன்) என்றார்.

ஆட்டிறைச்சி மட்டும் வேண்டாம்
ஒரு முறை அறிஞர் அண்ணாவைப் பார்க்க சிலம்புச் செல்வர் ம.பொ.சி அண்ணா இல்லத்துக்கு வந்தார். அண்ணா ம.பொ.சி.க்கு விருந்தளிக்க எண்ணி அசைவ உணவுக்குச் சொல்லி அனுப்பினார்.
உடனே ம.பொ.சி “ஆட்டு இறைச்சி மட்டும் வேண்டாம்.” என்றார்.
“எதற்கு? ” என்றார் அண்ணா. “டாக்டர் கொலஸ்ட்ரல் (கொழுப்பு) ஜாஸ்த்தியா இருக்குன்னுட்டார்” என்றார் சிலம்பு செல்வர்.
உடனே அண்ணா நகைச்சுவையாக ”அடடே, அந்த விஷயம் அவருக்கும் தெரிஞ்சு போச்சா? ” என்றார்.

நன்றி முகநூல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள் Empty Re: அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun May 12, 2013 6:29 am

சுப்பர் மணியான நகைசுவை ......நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள் Empty Re: அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 12, 2013 8:24 am

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள் Empty Re: அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள்

Post by முழுமுதலோன் Sun May 12, 2013 9:54 am

சூப்பர் கைதட்டல் கைதட்டல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள் Empty Re: அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum