Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காதலனால் சீரழிந்தேன்: நடிகை லீனா பரபரப்பு வாக்குமூலம்
Page 1 of 1 • Share
காதலனால் சீரழிந்தேன்: நடிகை லீனா பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: இந்திப்படத்தில் கதாநாயகியாக்கி, பாலிவுட்டில் பெரிய நடிகை ஆக்குகிறேன் என்று காதலன் ஆசை காட்டி ஏமாற்றியதாகவும், காதலனின் மோசடியில் சொகுசு வாழ்க்கை கிடைத்ததால், எனக்கு அது கசக்கவில்லை என்றும் மலையாள நடிகை லீனா பரபரப்பு வாக்குமூலம் போலீசிடம் அளித்துள்ளார்.
ரூ.19 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகை லீனாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று சென்னை கொண்டு வந்தனர். தலைமறைவாக உள்ள அவரது காதலனுடன் சேர்ந்து மோசடி செய்தது குறித்து நடிகை லீனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், தனது காதலர் சுகாஷ் மீது லீனா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். மற்றவர்களை ஏமாற்றி கோடி, கோடியாக பணம் சம்பாதித்தது போலவே, சுகாஷ் என்னையும் ஏமாற்றினார் என்று தெரிவித்தார்.
போலீசாரிடம் நடிகை லீனா அளித்த வாக்குமூலம் இதோ... "எனது சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர். கவுரவமான படித்த குடும்பம். என்ஜினீயரான தந்தை பால் துபாயில் வேலை பார்த்தார். குடும்பம் துபாயில்தான் உள்ளது. அண்ணனும் என்ஜினீயர்தான். அவரும் துபாயில் நல்ல வேலையில் இருக்கிறார். எனது 2 தங்கைகளில் ஒருவர் டாக்டராக உள்ளார். என்னையும் எனது தந்தை பல் மருத்துவம் படிக்க வைத்தார். நானும் நன்றாக படித்து பல் டாக்டரானேன்.
டாக்டர் தொழிலில் ஈடுபட்டிருந்தால் எனது நிலைமை இதுபோல் ஆகி இருக்காது. சினிமாவில் நடிக்க வந்ததுதான் எனது வாழ்க்கையை தடம் புரள வைத்துவிட்டது. நான் மலையாள படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, இணைய தளத்தில் சுகாஷ் என்னை தொடர்பு கொண்டார். அவர் தன்னை பிரபல இந்திப்பட இயக்குனர் என்று சொன்னார். பெங்களூரில் உள்ள பிரபல நகைக்கடை பெயரைச்சொல்லி அந்த நகைக்கடை உரிமையாளர் என்றும் சொன்னார். அவரது நகைக்கடை விளம்பரத்தில் முதலில் நடிக்க வேண்டும் என்றும், இதற்காக என்னை சந்திக்க விரும்புவதாகவும், இணையதளத்தில் தகவல் அனுப்பினார். மும்பையில் மாடல் அழகியாக இருக்கும் எனது தோழியின் காதலர் சுகாசுக்கு நெருங்கிய நண்பர்.
மும்மையில் உள்ள எனது தோழி வீட்டில் சுகாசை முதன், முதலில் சந்தித்தேன். அவர் என்னை இந்திப்படத்தில் கதாநாயகிஆக்கி, பாலிவுட்டில் பெரிய நடிகை ஆக்குகிறேன் என்று ஆசை காட்டினார். அவர் ஒரு மிகப்பெரிய மோசடி பேர்வழி என்று அப்போது எனக்கு தெரியாது. அவரை பெரிய இந்திப்பட இயக்குனர் என்று நினைத்துதான், அவரிடம் பழக ஆரம்பித்தேன். மேலும் அவரை தமிழ்ப்பட நடிகர் ஒருவரும், பிரபல நடன இயக்குனர் ஒருவரும் அடிக்கடி வந்து பார்ப்பார்கள். இதனால் சுகாசை சினிமாப்பட இயக்குனர் என்று நம்பினேன்.
கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து சுகாசுடன் ஒன்றாக வாழ்கிறேன். என்னை இந்திப்பட கதாநாயகி ஆக்குவதாக சொன்ன சுகாஷ், அவரது ஆசைநாயகி ஆக்கிக்கொண்டார். என்னை திருமணம் செய்துகொள்வதாக சொல்லி ஆசை காட்டினார். அதை நம்பி என்னை அவரிடம் ஒப்படைத்தேன். ஆனால் தாலி கட்டி மனைவி ஆக்கிக்கொள்ளாமல் ஏமாற்றியபடி இருந்தார். அவர் என்னை மணந்து கொள்வார் என்று நம்பி, அவரோடு மனைவிபோல வாழ்ந்ததால், 2 முறை கர்ப்பம் ஆனேன். ஆனால் என்னை மிரட்டி கருவை கலைக்க வைத்துவிட்டார். இப்போது கூட நான் கர்ப்பமாக இருப்பதாக உணர்ந்து, கைது செய்யப்பட்ட அன்று கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்டேன். சுகாஷ் ஒரு மோசடி ஆசாமி என்று தெரிந்த பிறகு அவரை விட்டு விலக நினைத்தேன்.
பெங்களூர் போலீசில் கூட அவரை மாட்டிவிட்டேன். அவர் சிறைக்கு போனார். அதன்பிறகு அவர் என்னை ஒதுக்கிவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் மீண்டும் என்னை தேடிவந்து, என்னை உயிராக காதலிப்பதாக சொன்னார். மோசடி தொழிலை விட்டுவிடுவதாகவும் தெரிவித்தார். அதை நம்பி அவருக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன்.
அவரால் எனக்கு கிடைத்த சொகுசான வாழ்க்கை, அவர் மீண்டும் மோசடி செய்தாலும், அதை மறைத்துவிட்டது. மோசடியில் கோடி, கோடியாக பணம் கொட்டியது. அதை வைத்துதான் அவர் உலக பணக்காரர்கள் பயன்படுத்தும் 9 சொகுசு கார்களை வாங்கினார். மீன் விற்ற பணம் நாற்றம் அடிக்காது என்பதுபோல, மோசடியில் சொகுசு வாழ்க்கை கிடைத்ததால், எனக்கு அது கசக்கவில்லை.
மேலும் சுகாஷ் வருகிற நாடாளுமன்ற தேர்தலில், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில் சேர்ந்து எம்.பி.யாக திட்டமிட்டு இருந்தார். மத்திய அமைச்சராகவும் பவனி வருவேன் என்று என்னிடம் அவர் சவால் விட்டு சொல்லி இருந்தார். அதற்குள் போலீசில் நான் மாட்டிக்கொண்டேன்" என்று நடிகை லீனா வாக்குமூலம் அளித்துள்ளார்.
விகடன்.காம்
Similar topics
» இந்தியாவில் தாக்குதல் நடத்த 100 இடங்களில் தீவிரவாதிகள் ஆய்வு: ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம்
» நடிகை சிம்ரன் கடத்தலா?: சென்னையில் பரபரப்பு போஸ்டர்
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை…!
» மரண வாக்குமூலம்...!
» கோட்சேவின் வாக்குமூலம் ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.
» நடிகை சிம்ரன் கடத்தலா?: சென்னையில் பரபரப்பு போஸ்டர்
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை…!
» மரண வாக்குமூலம்...!
» கோட்சேவின் வாக்குமூலம் ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|