Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
Page 2 of 5 • Share
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
First topic message reminder :
கவிதை எழுதுவது எப்படி?
கவிதைகள் எத்தனை வகை உண்டு?
கவிதை எழுத தகுதி வேண்டுமா?
ஹைக்கூ - என்பதின் விளக்கம் என்ன?
கவிதை எழுதுவது எப்படி?
கவிதைகள் எத்தனை வகை உண்டு?
கவிதை எழுத தகுதி வேண்டுமா?
ஹைக்கூ - என்பதின் விளக்கம் என்ன?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
பெண்ணியம்
மரபுக்கவிதை
ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் சமுதாயம்; உலகம். ஆனால் ஆண், பெண்ணை அடிமைப்படுத்தி வந்துள்ள நிலைமை காலங்காலமாக நம் சமுதாயத்தில் இருந்து வந்துள்ளது. பெண்கள் அறிவில் குறைந்தவர்களாகவும், போகப் பொருள்களாகவும் கல்வி பெறத் தகுதியற்றவர்களாகவும் கருதப்பட்டு வந்துள்ளனர். இந்நிலை பாரதியார் காலந்தொட்டுத்தான் மாறியது. விழிப்புணர்வு வந்தது; பெண்ணுரிமை பேசப்படலானது; மகளிர் மதிக்கப்படலாயினர்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங் கேபெண்
இளைப்பில்லை காண்என்று கும்மியடி
என்னும் பாரதியார் பாடலையே தக்கதொரு முன்னோடியாகக் கொள்ளலாம்.
புதுக்கவிதை
பெண்களும் தங்கள் பிரச்சனைகளை எடுத்துக்கூறப் பயன்படும் வடிவமாகப் புதுக்கவிதை உள்ளது. ஆண்கள், பெண்களுக்காகக் காலந்தோறும் குரல் கொடுத்து வரும் வரிசையில், இன்று பெண்களும் வந்து நிற்கத் தொடங்கியுள்ளனர்.
என் ஆதித்தாயின்
முதுகில்பட்ட திருக்கைச் சவுக்கடி
நான்காணும் ஒவ்வொரு
முகத்திலும்
தழும்பாய், தேமலாய்
படர்ந்து கிடக்கிறது
எனவரும் பெண்கவிஞரின் கவிதை, ‘பெண்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் இன்னும் ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டு முன்னேறியதாகத் தெரியவில்லை’ என்பதைப் புலப்படுத்துகின்றது.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
பொதுவுடைமை
மரபுக்கவிதை
பொருள் உள்ளவர், பொருளில்லாதவர் என்னும் பொருளாதார ஏற்றத்தாழ்வு மாறவேண்டும். உழைப்பவர்க்குத் தக்க ஊதியம் வாய்த்தல் வேண்டும்.
நடவு செய்த தோழர் கூலி
நால ணாவை ஏற்பதும்
உடலு ழைப்பி லாத செல்வர்
உலகை யாண்டு லாவலும்
கடவு ளாணை என்று ரைத்த
கயவர் கூட்ட மீதிலே
கடவுள் என்ற கட்ட றுத்துத்
தொழிலு ளாரை ஏவுவோம்
எனவரும் பாரதிதாசனாரின் பாடல், ‘எல்லார்க்கும் எல்லாமென்று இருப்பதான இடம்’ நோக்கி இவ்வையத்தைச் செலுத்தவல்லதாகும்.
புதுக்கவிதை
நாட்டினைப் பரமபதச் சோபானப் படமாகவும், நாட்டில் நிலவும் சிக்கல்களைப் பாம்பாகவும் உருவகித்துச் சமுதாய மாற்றத்திற்குத் தடையாகும் ஆற்றல்களை அழித்தால்தான் பரமபதத்தை உருவாக்க முடியும் என்கிறார் சிற்பி.
நடுங்கி நடுங்கித்
தாயக் கட்டைகள்
உருட்டிக் காத்திருந்தால்
பரமபதத்தை ஒருநாளும்நீர்
அடைந்திட மாட்டீர்
அதனால்
நாகங்கள் அழிக்கும்
யாகங்கள் தொடங்கினோம்
கொடிய சர்ப்பயாகம்
என்பது அக்கவிதையாகும்.
மரபுக்கவிதை
பொருள் உள்ளவர், பொருளில்லாதவர் என்னும் பொருளாதார ஏற்றத்தாழ்வு மாறவேண்டும். உழைப்பவர்க்குத் தக்க ஊதியம் வாய்த்தல் வேண்டும்.
நடவு செய்த தோழர் கூலி
நால ணாவை ஏற்பதும்
உடலு ழைப்பி லாத செல்வர்
உலகை யாண்டு லாவலும்
கடவு ளாணை என்று ரைத்த
கயவர் கூட்ட மீதிலே
கடவுள் என்ற கட்ட றுத்துத்
தொழிலு ளாரை ஏவுவோம்
எனவரும் பாரதிதாசனாரின் பாடல், ‘எல்லார்க்கும் எல்லாமென்று இருப்பதான இடம்’ நோக்கி இவ்வையத்தைச் செலுத்தவல்லதாகும்.
புதுக்கவிதை
நாட்டினைப் பரமபதச் சோபானப் படமாகவும், நாட்டில் நிலவும் சிக்கல்களைப் பாம்பாகவும் உருவகித்துச் சமுதாய மாற்றத்திற்குத் தடையாகும் ஆற்றல்களை அழித்தால்தான் பரமபதத்தை உருவாக்க முடியும் என்கிறார் சிற்பி.
நடுங்கி நடுங்கித்
தாயக் கட்டைகள்
உருட்டிக் காத்திருந்தால்
பரமபதத்தை ஒருநாளும்நீர்
அடைந்திட மாட்டீர்
அதனால்
நாகங்கள் அழிக்கும்
யாகங்கள் தொடங்கினோம்
கொடிய சர்ப்பயாகம்
என்பது அக்கவிதையாகும்.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
அரசியல்
மரபுக்கவிதை
அன்பும், அருளும், அறிவும், நிர்வாகத் திறமையும் உடையவர்களால் அரசு செலுத்தப்படும் பொழுது நாடு சிறக்கின்றது. மனுநீதிச் சோழனின் ஆட்சிச் சிறப்பைக் கூறும் சேக்கிழார்,
மாநிலம்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலை
தானதனுக்கு இடையூறு தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்தும்தீர்த்து அறம்காப்பான் அல்லனோ?
(பெரிய புராணம்)
என அவன்தன் கூற்றிலமைத்துக் கூறுவார். இது முடியாட்சி, குடியாட்சி என்னும் இரண்டிற்கும் பொருந்தும்.
புதுக்கவிதை
அரசியல் குறித்து உடன்பாட்டில் மரபுக்கவிதை உரைக்க, எதிர்மறைநிலையில் அறிவுறுத்துகின்றது புதுக்கவிதை.
அந்நியர் எங்களைச்
சுரண்டிய போது
ஆவேசப்பட்டோம்
இப்போது
சொந்த தேசத்தார்
சுரண்டுகிறபோது
சும்மாயிருக்கின்றோம்
காரணம்
சொந்தமல்லவோ சுரண்டுகிறது (காந்தியும் கவிஞனும்)
என்கிறார் மேத்தா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே மக்களைச் சுரண்டுதல் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
வறுமை
மரபுக்கவிதை
வறுமை என்பது உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றன் தேவைக்கே தவிக்கும் நிலையைக் குறிப்பது எனப் பொதுவாகப் பொருள் கொள்ளலாம். பாணன் ஒருவனின் மனைவி, குடும்ப வறுமையால் உணவுக்கு வழியின்றிக் குப்பையில் தோன்றிய வேளைக்கீரையைப் பறித்து வந்து வேகவைக்கின்றாள். அதனுடன் சேர்ப்பதற்கான உப்பு வாங்கவும் பொருளில்லை. இதில் பங்குக்கு உறவினர்க் கூட்டம் வேறு. ஊராரின் பரிகசிப்புக்குப் பயந்து கதவைச் சாத்திக் கொண்டு உண்கின்றாள். நல்லியக்கோடனிடம் பரிசுபெறச் செல்லும் பாணன் குடும்பநிலை இது என்கிறார் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்.
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பே ரொக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்
(கிணைமகள் = பாடினி; வள்உகிர் = கூரிய நகம்; மடவோர் = அறிவிலிகள்;கடை = கதவு; ஒக்கல் = உறவினர்; மிசைதல் = உண்ணுதல்)
என்பன அவர்தம் சிறுபாணாற்றுப்படை அடிகள்.
புதுக்கவிதை
அரசு, மக்களின் பசியைப் போக்க முயலாமல் சட்டம் பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை அப்துல் ரகுமானின் கவிதை உணர்த்துகின்றது.
சுதந்திர தினவிழாவில்
‘ஜனகணமன’
பாடிக் கொண்டிருந்தார்கள்
நான்
பசியால் சுருண்டு
படுத்துக் கொண்டிருந்தேன்
எழுந்து நிற்க
முடியவில்லை
தேசியகீதத்தை அவமதித்ததாகச்
சிறையில் அடைத்துவிட்டார்கள்
என்பது அக்கவிதை.
மரபுக்கவிதை
வறுமை என்பது உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றன் தேவைக்கே தவிக்கும் நிலையைக் குறிப்பது எனப் பொதுவாகப் பொருள் கொள்ளலாம். பாணன் ஒருவனின் மனைவி, குடும்ப வறுமையால் உணவுக்கு வழியின்றிக் குப்பையில் தோன்றிய வேளைக்கீரையைப் பறித்து வந்து வேகவைக்கின்றாள். அதனுடன் சேர்ப்பதற்கான உப்பு வாங்கவும் பொருளில்லை. இதில் பங்குக்கு உறவினர்க் கூட்டம் வேறு. ஊராரின் பரிகசிப்புக்குப் பயந்து கதவைச் சாத்திக் கொண்டு உண்கின்றாள். நல்லியக்கோடனிடம் பரிசுபெறச் செல்லும் பாணன் குடும்பநிலை இது என்கிறார் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்.
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பே ரொக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்
(கிணைமகள் = பாடினி; வள்உகிர் = கூரிய நகம்; மடவோர் = அறிவிலிகள்;கடை = கதவு; ஒக்கல் = உறவினர்; மிசைதல் = உண்ணுதல்)
என்பன அவர்தம் சிறுபாணாற்றுப்படை அடிகள்.
புதுக்கவிதை
அரசு, மக்களின் பசியைப் போக்க முயலாமல் சட்டம் பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை அப்துல் ரகுமானின் கவிதை உணர்த்துகின்றது.
சுதந்திர தினவிழாவில்
‘ஜனகணமன’
பாடிக் கொண்டிருந்தார்கள்
நான்
பசியால் சுருண்டு
படுத்துக் கொண்டிருந்தேன்
எழுந்து நிற்க
முடியவில்லை
தேசியகீதத்தை அவமதித்ததாகச்
சிறையில் அடைத்துவிட்டார்கள்
என்பது அக்கவிதை.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
காதல்
மரபுக்கவிதை
காதல் தொன்றுதொட்டு வரும் சிறந்ததோர் இன்றியமையாத உணர்வாகும்.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே !
என்னும் குறுந்தொகைப் பாடலில் நிலம், வானம், கடல் ஆகியவற்றினும் பெரிதாகக் காதல் சுட்டப் பெறுகின்றது. நட்பு என்பது இங்குக் காதலைச் சுட்டிற்று. குறிஞ்சிப்பூ கிடைத்தற்கு அரிதாகலின், இக்காதலுணர்வின் கிடைத்தற்கரிய சிறப்புத் தோன்ற உவமையாக்கப்பட்டது.
புதுக்கவிதை
காதலின் மென்மை குறித்து அப்துல் ரகுமான்,
இரவில்
புல்லின் மீது
ரகசியமாக உருவாகும்
பனித்துளி போன்றது
காதல்
என்கிறார். புதுக்கவிதையாளர்களுள் காதலைப் பற்றிப் பாடாதார் யாரும் இல்லை என்று கூறுமளவுக்கு யாவரும் காதலைப் பாடியுள்ளனர்.
மரபுக்கவிதை
காதல் தொன்றுதொட்டு வரும் சிறந்ததோர் இன்றியமையாத உணர்வாகும்.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே !
என்னும் குறுந்தொகைப் பாடலில் நிலம், வானம், கடல் ஆகியவற்றினும் பெரிதாகக் காதல் சுட்டப் பெறுகின்றது. நட்பு என்பது இங்குக் காதலைச் சுட்டிற்று. குறிஞ்சிப்பூ கிடைத்தற்கு அரிதாகலின், இக்காதலுணர்வின் கிடைத்தற்கரிய சிறப்புத் தோன்ற உவமையாக்கப்பட்டது.
புதுக்கவிதை
காதலின் மென்மை குறித்து அப்துல் ரகுமான்,
இரவில்
புல்லின் மீது
ரகசியமாக உருவாகும்
பனித்துளி போன்றது
காதல்
என்கிறார். புதுக்கவிதையாளர்களுள் காதலைப் பற்றிப் பாடாதார் யாரும் இல்லை என்று கூறுமளவுக்கு யாவரும் காதலைப் பாடியுள்ளனர்.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
தன்னம்பிக்கை
மரபுக்கவிதை
வாழ்க்கையில் எந்நிலையிலும் சோர்ந்து போகக் கூடாது. தடைகள் பல வரினும் போராடி வென்று மேலேற வேண்டும். ‘இதுதான் நம் தலைவிதி’ என்று சோம்பேறித்தனத்தை வளர்த்துக் கொள்ளலாகாது.
தேடிச் சோறுநிதம் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரைஎனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேன் என்றுநினைத் தாயோ?
எனச் சக்தியிடமே முறையிடுகின்றார் பாரதியார்.
புதுக்கவிதை
தளராத உள்ளத்தோடு துணிந்து செல்ல வழிகாட்டும் புதுக்கவிதைகள் பல வந்துகொண்டிருக்கின்றன.
நம்பிக்கையை
நெஞ்சில் இருத்தி
நடந்து பாருங்கள்
வசந்தம்
கைகோர்த்துக்
கூட வரும்
என்பது க.வை. பழனிச்சாமி என்பவரின் கவிதை.
மரபுக்கவிதை
வாழ்க்கையில் எந்நிலையிலும் சோர்ந்து போகக் கூடாது. தடைகள் பல வரினும் போராடி வென்று மேலேற வேண்டும். ‘இதுதான் நம் தலைவிதி’ என்று சோம்பேறித்தனத்தை வளர்த்துக் கொள்ளலாகாது.
தேடிச் சோறுநிதம் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரைஎனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேன் என்றுநினைத் தாயோ?
எனச் சக்தியிடமே முறையிடுகின்றார் பாரதியார்.
புதுக்கவிதை
தளராத உள்ளத்தோடு துணிந்து செல்ல வழிகாட்டும் புதுக்கவிதைகள் பல வந்துகொண்டிருக்கின்றன.
நம்பிக்கையை
நெஞ்சில் இருத்தி
நடந்து பாருங்கள்
வசந்தம்
கைகோர்த்துக்
கூட வரும்
என்பது க.வை. பழனிச்சாமி என்பவரின் கவிதை.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
இயற்கை
மரபுக்கவிதை
இயற்கையைக் கண்டு அதில் மனத்தைப் பறிகொடுக்காதவர்கள் கவிஞர்களாகவே இருத்தல் இயலாது. மயிலைக் கண்டு மனம் மகிழ்ந்த பாரதிதாசனார், மயிலை விளித்துப் பாடுகின்றார்.
அழகிய மயிலே ! அழகிய மயிலே !
கடிமலர் வண்டு நெடிது பாடத்
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்
தாடு கின்றாய், அழகிய மயிலே !
ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்
மரகத உருக்கின் வண்ணத் தடாகம்
ஆனஉன் மெல்லுடல், ஆடல் உன்உயிர்
இவைகள் என்னை எடுத்துப் போயின
(புளகித்தல் = சிலிர்த்தல்)
இவ்வாறு மயிலின் ஆடலில் மனம் பறிகொடுத்த பாடலாக இஃது அமைகின்றது.
புதுக்கவிதை
மரங்களைக் குறித்து அமைந்த மேத்தாவின் கவிதை வருமாறு :
நாங்கள்
காற்று மன்னவன்
கால்நடை யாத்திரையைக்
கண்டு முரசறையும்
கட்டியங்காரர்கள் ;
தரையில் நடக்கப்
பிரியப்படாத போது
காற்று எங்கள்
தலைகளின் மீதே
நடந்து செல்கிறது
இவ்வாறாகப் பல்வேறு பாடுபொருள்கள் மரபுக் கவிதையிலும் புதுக்கவிதையிலும் அமைகின்றன.
மரபுக்கவிதை
இயற்கையைக் கண்டு அதில் மனத்தைப் பறிகொடுக்காதவர்கள் கவிஞர்களாகவே இருத்தல் இயலாது. மயிலைக் கண்டு மனம் மகிழ்ந்த பாரதிதாசனார், மயிலை விளித்துப் பாடுகின்றார்.
அழகிய மயிலே ! அழகிய மயிலே !
கடிமலர் வண்டு நெடிது பாடத்
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்
தாடு கின்றாய், அழகிய மயிலே !
ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்
மரகத உருக்கின் வண்ணத் தடாகம்
ஆனஉன் மெல்லுடல், ஆடல் உன்உயிர்
இவைகள் என்னை எடுத்துப் போயின
(புளகித்தல் = சிலிர்த்தல்)
இவ்வாறு மயிலின் ஆடலில் மனம் பறிகொடுத்த பாடலாக இஃது அமைகின்றது.
புதுக்கவிதை
மரங்களைக் குறித்து அமைந்த மேத்தாவின் கவிதை வருமாறு :
நாங்கள்
காற்று மன்னவன்
கால்நடை யாத்திரையைக்
கண்டு முரசறையும்
கட்டியங்காரர்கள் ;
தரையில் நடக்கப்
பிரியப்படாத போது
காற்று எங்கள்
தலைகளின் மீதே
நடந்து செல்கிறது
இவ்வாறாகப் பல்வேறு பாடுபொருள்கள் மரபுக் கவிதையிலும் புதுக்கவிதையிலும் அமைகின்றன.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
உத்திகள்
கொள்வோன் கொள்வகை அறிந்து, சொல்ல வரும் கருத்தையும் படைப்போன் பெற வேண்டிய உணர்ச்சியையும் கருத்தில் கொண்டு பாடலியற்றும் முறைகளே உத்திகள் எனப்படும்.
மரபுக்கவிதைகளில் காலங்காலமாகப் பொருள்கோள் முறையும், அணியிலக்கணங்களும் சிறந்த உத்திகளாகப் பயன்படுத்தப் பெற்று வந்துள்ளன.
புதுக்கவிதைகளில் பொருள்கோள் வகைகள் இடம் பெறுவதில்லை. அணியிலக்கணக் கூறுகள் பலவற்றைக் காண முடிகின்றது. பொருளை நேரடியாக அணுகுதல், தேவையற்ற ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் இருத்தல், கடினமான யாப்பு முறைகளை விட்டொழித்து இசையின் எளிமையைப் பின்பற்றுதல் ஆகியன புதுக்கவிதைக்கான சிறந்த உத்திகள் என்பர்.
இருவகைக் கவிதைகளையும் ஒப்பிடும் நிலையில் உவமை, உருவகம், முரண், அங்கதம், சிலேடை, பிறிதுமொழிதல், தற்குறிப்பேற்றம், தொன்மம், உரையாடற்பாங்கு, இருண்மை ஆகியவற்றின் அடிப்படையில் இங்குச் சிந்திப்போம்.
கொள்வோன் கொள்வகை அறிந்து, சொல்ல வரும் கருத்தையும் படைப்போன் பெற வேண்டிய உணர்ச்சியையும் கருத்தில் கொண்டு பாடலியற்றும் முறைகளே உத்திகள் எனப்படும்.
மரபுக்கவிதைகளில் காலங்காலமாகப் பொருள்கோள் முறையும், அணியிலக்கணங்களும் சிறந்த உத்திகளாகப் பயன்படுத்தப் பெற்று வந்துள்ளன.
புதுக்கவிதைகளில் பொருள்கோள் வகைகள் இடம் பெறுவதில்லை. அணியிலக்கணக் கூறுகள் பலவற்றைக் காண முடிகின்றது. பொருளை நேரடியாக அணுகுதல், தேவையற்ற ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் இருத்தல், கடினமான யாப்பு முறைகளை விட்டொழித்து இசையின் எளிமையைப் பின்பற்றுதல் ஆகியன புதுக்கவிதைக்கான சிறந்த உத்திகள் என்பர்.
இருவகைக் கவிதைகளையும் ஒப்பிடும் நிலையில் உவமை, உருவகம், முரண், அங்கதம், சிலேடை, பிறிதுமொழிதல், தற்குறிப்பேற்றம், தொன்மம், உரையாடற்பாங்கு, இருண்மை ஆகியவற்றின் அடிப்படையில் இங்குச் சிந்திப்போம்.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
உவமை
மரபுக்கவிதை
தெரிந்த பொருளைக் கொண்டு, தெரியாத பொருளைப் புரியவைப்பதற்காகஉவமை தோன்றியது. பின்னர் அணிநயத்தின் பொருட்டும் பயன்படுத்தப்படலானது. அணிகளுக்கெல்லாம் தாயாக விளங்குவது உவமையணியே ஆகும். உவமவியலை மட்டும் தொல்காப்பியர் படைத்துள்ளமையும் இதனை உணர்த்தும்.
நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் ; - பூக்குழலாய் !
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம் (நன்னெறி)
எனவரும் சிவப்பிரகாசரின் பாடலை, பிரிந்து சேர்ந்த நட்பின் உறுதிக்குலைவுக்கு, நெல்லின் உமி பிரிந்து சேர்தல் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
புதுக்கவிதை
புதுக்கவிதைகளிலும் உவமைக்கென்று தனியிடம் உண்டு. ‘கோடை மேகம் சேர்த்து வைத்திருக்கும் மழைத்துளி, ஒரு கருமி, பஞ்சத்தில் காக்கும் பணப்பையின் காசுகள் போன்றது’ என்கிறார் வைரமுத்து.
ஓர் உலோபி
பஞ்சத்தில் காக்கும்
பணப்பையைப் போல்
கோடைமேகம்
என்னும் அக்கவிதையில் கோடைகால மேகமாவது மழையைச் சிந்திவிடுகிறது. கருமி தன் காசுகளைத் தருவதேயில்லை என்னும் கருத்தும் புலனாகின்றது.
மரபுக்கவிதை
தெரிந்த பொருளைக் கொண்டு, தெரியாத பொருளைப் புரியவைப்பதற்காகஉவமை தோன்றியது. பின்னர் அணிநயத்தின் பொருட்டும் பயன்படுத்தப்படலானது. அணிகளுக்கெல்லாம் தாயாக விளங்குவது உவமையணியே ஆகும். உவமவியலை மட்டும் தொல்காப்பியர் படைத்துள்ளமையும் இதனை உணர்த்தும்.
நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் ; - பூக்குழலாய் !
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம் (நன்னெறி)
எனவரும் சிவப்பிரகாசரின் பாடலை, பிரிந்து சேர்ந்த நட்பின் உறுதிக்குலைவுக்கு, நெல்லின் உமி பிரிந்து சேர்தல் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
புதுக்கவிதை
புதுக்கவிதைகளிலும் உவமைக்கென்று தனியிடம் உண்டு. ‘கோடை மேகம் சேர்த்து வைத்திருக்கும் மழைத்துளி, ஒரு கருமி, பஞ்சத்தில் காக்கும் பணப்பையின் காசுகள் போன்றது’ என்கிறார் வைரமுத்து.
ஓர் உலோபி
பஞ்சத்தில் காக்கும்
பணப்பையைப் போல்
கோடைமேகம்
என்னும் அக்கவிதையில் கோடைகால மேகமாவது மழையைச் சிந்திவிடுகிறது. கருமி தன் காசுகளைத் தருவதேயில்லை என்னும் கருத்தும் புலனாகின்றது.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
உருவகம்
மரபுக்கவிதை
உவமையும் பொருளும் ஏதோ ஒரு பகுதி மட்டும் ஒப்புடையனவல்ல; முழுமையும் ஒன்றானவை என்பதாக அமைவது உருவகம் ஆகும். உவமையினும் செறிவும் நெருக்கமும் உடையது உருவகம். ‘சிவபெருமான், வேதமாகிய உணவை வெறுத்து, தேவார மூவர்தம் திருப்பாடல் ஆகிய உணவுக்கு உழலும் செவியுடையவன்’ என்கிறார் சிவப்பிரகாசர்.
வேத உணவு வெறுத்துப் புகழ்மூவர்
ஓதுதமிழ் ஊணுக்கு உழல்செவியான் (திருவெங்கை உலா)
என வரும் கண்ணியில் இக்கருத்து இடம்பெறுகின்றது.
புதுக்கவிதை
புதுக்கவிதைகளிலும் உருவகங்கள் இடம்பெறக் காண்கிறோம். ரோஜாவைப் பாத்திகட்டி, நட்டு, நீர்பாய்ச்சி மலர வைத்தாலும், மலரைப் பறிக்கும்போது வளர்த்தவரையே முள்ளால் கீறி வடுப்படுத்துவதும் உண்டு. தொழிலாளர்களின் நிலைமையை ரோஜாவோடு உருவகப்படுத்துகின்றார் இன்குலாப்.
தொழிற்சாலைப் பாத்திகளில்
வியர்வைநீர் ஊற்றி
இயந்திர ரோஜாக்களை
மலரவைத்தோம்
இருந்தும்
வறுமை முட்கள்
கீறிய வடுக்களே
பாடுபட்டதற்குக் கிடைத்த
பரிசுப் புத்தகங்கள்
என்பதில்,
(1) தொழிற்சாலை - பாத்தி
(2) வியர்வை - நீர்
(3) இயந்திரம் - ரோஜா
(4) வறுமை - முள்
(5) வடுக்கள் - பரிசு நூல்கள்
என உருவகம் அமைகின்றது.
புதுக்கவிதையில் படிமம் என்பதாக உருவக வடிவம் செறிவாக அமைதலைக் காணமுடிகின்றது.
மரபுக்கவிதை
உவமையும் பொருளும் ஏதோ ஒரு பகுதி மட்டும் ஒப்புடையனவல்ல; முழுமையும் ஒன்றானவை என்பதாக அமைவது உருவகம் ஆகும். உவமையினும் செறிவும் நெருக்கமும் உடையது உருவகம். ‘சிவபெருமான், வேதமாகிய உணவை வெறுத்து, தேவார மூவர்தம் திருப்பாடல் ஆகிய உணவுக்கு உழலும் செவியுடையவன்’ என்கிறார் சிவப்பிரகாசர்.
வேத உணவு வெறுத்துப் புகழ்மூவர்
ஓதுதமிழ் ஊணுக்கு உழல்செவியான் (திருவெங்கை உலா)
என வரும் கண்ணியில் இக்கருத்து இடம்பெறுகின்றது.
புதுக்கவிதை
புதுக்கவிதைகளிலும் உருவகங்கள் இடம்பெறக் காண்கிறோம். ரோஜாவைப் பாத்திகட்டி, நட்டு, நீர்பாய்ச்சி மலர வைத்தாலும், மலரைப் பறிக்கும்போது வளர்த்தவரையே முள்ளால் கீறி வடுப்படுத்துவதும் உண்டு. தொழிலாளர்களின் நிலைமையை ரோஜாவோடு உருவகப்படுத்துகின்றார் இன்குலாப்.
தொழிற்சாலைப் பாத்திகளில்
வியர்வைநீர் ஊற்றி
இயந்திர ரோஜாக்களை
மலரவைத்தோம்
இருந்தும்
வறுமை முட்கள்
கீறிய வடுக்களே
பாடுபட்டதற்குக் கிடைத்த
பரிசுப் புத்தகங்கள்
என்பதில்,
(1) தொழிற்சாலை - பாத்தி
(2) வியர்வை - நீர்
(3) இயந்திரம் - ரோஜா
(4) வறுமை - முள்
(5) வடுக்கள் - பரிசு நூல்கள்
என உருவகம் அமைகின்றது.
புதுக்கவிதையில் படிமம் என்பதாக உருவக வடிவம் செறிவாக அமைதலைக் காணமுடிகின்றது.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
படிமம்
உணர்வும் அறிவும் இணைந்து உருவாக்கும் மனக்காட்சியே படிமம் ஆகும். ‘புலன் உணர்வுகளோடும் மன உணர்வுகளோடும் தொடர்புகொண்ட காட்சிப் பொருள், கருத்துப் பொருள் ஆகியவற்றின் மனஉருக் காட்சி நிலையே படிமம்’ என்பார் சி.சு.செல்லப்பா.
காலக் கிழவி
கண்ணுறங்கப் போகுமுன்
தன்
பொக்கைவாய் கழுவிக்
கழற்றிவைத்த
பல்செட்டோ? (வாலி)
எனப் பிறைநிலவு குறித்து வரும் கவிதை இவ்வகையினது.
உணர்வும் அறிவும் இணைந்து உருவாக்கும் மனக்காட்சியே படிமம் ஆகும். ‘புலன் உணர்வுகளோடும் மன உணர்வுகளோடும் தொடர்புகொண்ட காட்சிப் பொருள், கருத்துப் பொருள் ஆகியவற்றின் மனஉருக் காட்சி நிலையே படிமம்’ என்பார் சி.சு.செல்லப்பா.
காலக் கிழவி
கண்ணுறங்கப் போகுமுன்
தன்
பொக்கைவாய் கழுவிக்
கழற்றிவைத்த
பல்செட்டோ? (வாலி)
எனப் பிறைநிலவு குறித்து வரும் கவிதை இவ்வகையினது.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
முரண்
மரபுக்கவிதை
சொல்லாலோ, பொருளாலோ, சொற்பொருளாலோ முரண்பட அமைவது முரண் எனப்படும். இதனைத் தொடை வகையுள் ஒன்றாக யாப்பிலக்கணம் கூறும், அணிவகையுள் ஒன்றாக அணியிலக்கணம் கூறும். 'கடல், குளிர்ந்த சந்திரனின் கதிர்கண்டு பொங்கும்; வெப்பமான சூரியனின் கதிர்கண்டால் பொங்காது; அதுபோல உலகினர் இன்சொல் பேசுவோரைக் கண்டால் மனமகிழ்வர்; வன்சொல் பேசுவோரைக் கண்டால் மனமகிழார்’ என்கிறார் சிவப்பிரகாசர்.
இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே; - பொன்செய்
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் ; தண்என்
கதிர்வரவால் பொங்கும் கடல் (நன்னெறி)
என்னும் பாடலில் இன்சொல் x வன்சொல், பொங்காது x பொங்கும் என முரண் சொற்களும் பொருள்களும் அமைந்துள்ளமையைக் காணலாம்.
புதுக்கவிதை
புதுக்கவிதைகளிலும் முரண் உத்தி அமைந்து, கவிதைக்குப் பெருமை சேர்க்கின்றது.
படித்திருந்தாலாவது
பரவாயில்லை என்று
பாமரப்பெண் சிந்திக்க,
படிக்காமலிருந்தாலாவது
பரவாயில்லை என்று
படித்தபெண் சிந்திக்க,
பெண்கள் இங்கே தவிப்புத் தீவுகள்
என்னும் பொன்மணி வைரமுத்துவின் கவிதையில், படித்திருந்தால் x படிக்காமலிருந்தால், பாமரப் பெண் x படித்த பெண் என முரண்பாடுகள் அமையக் காண்கிறோம். ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்னும் பழமொழிச் சாயலினது இது.
மரபுக்கவிதை
சொல்லாலோ, பொருளாலோ, சொற்பொருளாலோ முரண்பட அமைவது முரண் எனப்படும். இதனைத் தொடை வகையுள் ஒன்றாக யாப்பிலக்கணம் கூறும், அணிவகையுள் ஒன்றாக அணியிலக்கணம் கூறும். 'கடல், குளிர்ந்த சந்திரனின் கதிர்கண்டு பொங்கும்; வெப்பமான சூரியனின் கதிர்கண்டால் பொங்காது; அதுபோல உலகினர் இன்சொல் பேசுவோரைக் கண்டால் மனமகிழ்வர்; வன்சொல் பேசுவோரைக் கண்டால் மனமகிழார்’ என்கிறார் சிவப்பிரகாசர்.
இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே; - பொன்செய்
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் ; தண்என்
கதிர்வரவால் பொங்கும் கடல் (நன்னெறி)
என்னும் பாடலில் இன்சொல் x வன்சொல், பொங்காது x பொங்கும் என முரண் சொற்களும் பொருள்களும் அமைந்துள்ளமையைக் காணலாம்.
புதுக்கவிதை
புதுக்கவிதைகளிலும் முரண் உத்தி அமைந்து, கவிதைக்குப் பெருமை சேர்க்கின்றது.
படித்திருந்தாலாவது
பரவாயில்லை என்று
பாமரப்பெண் சிந்திக்க,
படிக்காமலிருந்தாலாவது
பரவாயில்லை என்று
படித்தபெண் சிந்திக்க,
பெண்கள் இங்கே தவிப்புத் தீவுகள்
என்னும் பொன்மணி வைரமுத்துவின் கவிதையில், படித்திருந்தால் x படிக்காமலிருந்தால், பாமரப் பெண் x படித்த பெண் என முரண்பாடுகள் அமையக் காண்கிறோம். ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்னும் பழமொழிச் சாயலினது இது.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
அங்கதம்
மரபுக்கவிதை
அங்கதம் என்பது நகைச்சுவையும், புலமை நுட்பமும், திறனாய்வு நோக்கும் கொண்ட ஓர் இலக்கிய உத்தி. இது மக்கட் சமுதாய மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. தீங்கையும், அறிவின்மையையும் கண்டனம் செய்வது; மனிதகுலக் குற்றம் கண்டு சினம்கொண்டு சிரிப்பது. தொல்காப்பியரும் அங்கதம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்
பொருட்புறத் ததுவே குறிப்புமொழி என்ப
என்பது தொல்காப்பியம்.
ஒளவையார், தொண்டைமானின் படைக்கலக் கொட்டிலில் புதியனவாகவும், அதியமானின் படைக்கலக் கொட்டிலில் வடிவம் சிதைந்து பழையனவாகவும் படைக்கலன்கள் இருந்தனவாகத் தூது சென்ற இடத்தில் தொண்டைமானிடம் தெரிவிக்கிறார்.
இவ்வே
பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்யணிந்து,
கடியுடை வியல்நக ரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ ! . . .
எனவரும் அப்புறநானூற்றுப் பாடல், ‘அதியமான் பல போர்கள் கண்ட திறமுடையவன், தொண்டைமானாகிய நீ போர்களைக் காணாதவன், அவனை நீ வெல்வது அரிது என்பதான பொருளை அங்கதமாகக் கொண்டிருக்கின்றது.
புதுக்கவிதை
அங்கதம் புதுக்கவிதையில் சிறப்புறப் பயன்படுத்தப் பெறுகின்றது. ஈரோடு தமிழன்பன், அரசியல்வாதிகள் மனிதநேயமின்றி இருத்தலைக் குறித்துக் கூறும் கவிதை இத்தகையது.
எங்கள் ஊரில்
ஒருவர் ஊராட்சி உறுப்பினரானார்
ஒன்றியத் தலைவரானார்
சட்டமன்ற
உறுப்பினரானார்
அமைச்சரானார்
அயல்நாட்டுத் தூதரானார்
இறுதிவரை ஒருமுறைகூட
மனிதராகாமலே
மரணமானார்
என்பது அக்கவிதை.
மரபுக்கவிதை
அங்கதம் என்பது நகைச்சுவையும், புலமை நுட்பமும், திறனாய்வு நோக்கும் கொண்ட ஓர் இலக்கிய உத்தி. இது மக்கட் சமுதாய மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. தீங்கையும், அறிவின்மையையும் கண்டனம் செய்வது; மனிதகுலக் குற்றம் கண்டு சினம்கொண்டு சிரிப்பது. தொல்காப்பியரும் அங்கதம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்
பொருட்புறத் ததுவே குறிப்புமொழி என்ப
என்பது தொல்காப்பியம்.
ஒளவையார், தொண்டைமானின் படைக்கலக் கொட்டிலில் புதியனவாகவும், அதியமானின் படைக்கலக் கொட்டிலில் வடிவம் சிதைந்து பழையனவாகவும் படைக்கலன்கள் இருந்தனவாகத் தூது சென்ற இடத்தில் தொண்டைமானிடம் தெரிவிக்கிறார்.
இவ்வே
பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்யணிந்து,
கடியுடை வியல்நக ரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ ! . . .
எனவரும் அப்புறநானூற்றுப் பாடல், ‘அதியமான் பல போர்கள் கண்ட திறமுடையவன், தொண்டைமானாகிய நீ போர்களைக் காணாதவன், அவனை நீ வெல்வது அரிது என்பதான பொருளை அங்கதமாகக் கொண்டிருக்கின்றது.
புதுக்கவிதை
அங்கதம் புதுக்கவிதையில் சிறப்புறப் பயன்படுத்தப் பெறுகின்றது. ஈரோடு தமிழன்பன், அரசியல்வாதிகள் மனிதநேயமின்றி இருத்தலைக் குறித்துக் கூறும் கவிதை இத்தகையது.
எங்கள் ஊரில்
ஒருவர் ஊராட்சி உறுப்பினரானார்
ஒன்றியத் தலைவரானார்
சட்டமன்ற
உறுப்பினரானார்
அமைச்சரானார்
அயல்நாட்டுத் தூதரானார்
இறுதிவரை ஒருமுறைகூட
மனிதராகாமலே
மரணமானார்
என்பது அக்கவிதை.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
சிலேடை
மரபுக்கவிதை
ஒருவகைச் சொற்றொடர், பலவகைப் பொருள்களைத் தருவதாக அமைவது சிலேடை ஆகும். காளமேகப் புலவர் சிலேடை பாடுவதில் சிறந்து விளங்குகின்றார். அவர் பாடிய பாம்புக்கும் எள்ளுக்குமான சிலேடை வருமாறு :
ஆடிக் குடத்தடையும் ; ஆடும்போ தேஇரையும் ;
மூடித் திறக்கின் முகம்காட்டும் ; - ஓடிமண்டை
பற்றின் பரபரென்னும் பாரில்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம்பு எள்ளெனவே ஓது
இப்பாடலில்,
(1) குடத்தடைதல் - பாம்புக் கூடை ; எண்ணெய்க்குடம்
(2) இரைதல் - ‘உஸ்’ என்னும் ஓசை ; செக்கு ஓசை
(3) முகம் காட்டல் - பாம்பு முகம் ; பார்ப்பவர் முகம்
(4) மண்டை பற்றல்- விடம் தலைக்கேறல் ; தலையில் பரவுதல்
(5) பிண்ணாக்கு - பிளவுபட்ட நாக்கு ; எள்ளுப் பிண்ணாக்கு (பிள்+நாக்கு)
என்பனவாகப் பொருள் அமையும்.
புதுக்கவிதை
சிலேடைகள் புதுக்கவிதையில் அரிதாகவே காணப்படுகின்றன.
என்னை
எவரெஸ்டாகப் பார்க்கும்
இந்த ஊரின் பார்வையில்
என் வீழ்ச்சி
மிகப் பெரிய வீழ்ச்சியே
எனினும்
இது இயல்பானது
தடுக்க முடியாதது
. . . . . . என் வீழ்ச்சி
நீர்வீழ்ச்சியே
என்னும் மீராவின் கவிதையில் ‘நீர் வீழ்ச்சி - நீர் மேலிருந்து கீழ்விழுதல்; அருவி’ எனப் பொருளமைந்தது. வீழ்தல் நீருக்கு இயல்பானது தானே !
மரபுக்கவிதை
ஒருவகைச் சொற்றொடர், பலவகைப் பொருள்களைத் தருவதாக அமைவது சிலேடை ஆகும். காளமேகப் புலவர் சிலேடை பாடுவதில் சிறந்து விளங்குகின்றார். அவர் பாடிய பாம்புக்கும் எள்ளுக்குமான சிலேடை வருமாறு :
ஆடிக் குடத்தடையும் ; ஆடும்போ தேஇரையும் ;
மூடித் திறக்கின் முகம்காட்டும் ; - ஓடிமண்டை
பற்றின் பரபரென்னும் பாரில்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம்பு எள்ளெனவே ஓது
இப்பாடலில்,
(1) குடத்தடைதல் - பாம்புக் கூடை ; எண்ணெய்க்குடம்
(2) இரைதல் - ‘உஸ்’ என்னும் ஓசை ; செக்கு ஓசை
(3) முகம் காட்டல் - பாம்பு முகம் ; பார்ப்பவர் முகம்
(4) மண்டை பற்றல்- விடம் தலைக்கேறல் ; தலையில் பரவுதல்
(5) பிண்ணாக்கு - பிளவுபட்ட நாக்கு ; எள்ளுப் பிண்ணாக்கு (பிள்+நாக்கு)
என்பனவாகப் பொருள் அமையும்.
புதுக்கவிதை
சிலேடைகள் புதுக்கவிதையில் அரிதாகவே காணப்படுகின்றன.
என்னை
எவரெஸ்டாகப் பார்க்கும்
இந்த ஊரின் பார்வையில்
என் வீழ்ச்சி
மிகப் பெரிய வீழ்ச்சியே
எனினும்
இது இயல்பானது
தடுக்க முடியாதது
. . . . . . என் வீழ்ச்சி
நீர்வீழ்ச்சியே
என்னும் மீராவின் கவிதையில் ‘நீர் வீழ்ச்சி - நீர் மேலிருந்து கீழ்விழுதல்; அருவி’ எனப் பொருளமைந்தது. வீழ்தல் நீருக்கு இயல்பானது தானே !
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
பிறிதுமொழிதல்
மரபுக்கவிதை
சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல், வேறொரு கருத்தைக் கொண்டு பெறவைத்தல் பிறிதுமொழிதல் எனப்படும்.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் ; அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்
என்னும் திருக்குறளில் பிறிதுமொழிதல் இடம்பெற்றுள்ளது. குறளின் பொருள், 'மிக மென்மையானவையே ஆயினும் மயிலிறகுகளை அளவுக்கதிகமாய் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும் என்பதாகும். எளியவர்களே யாயினும் பல பகைவர்கள் ஏற்பட்டால், ஆற்றல் படைத்த ஒருவரும் அவர்களால் தோல்வியுற நேரலாம்’ என்னும் கருத்தை விளக்க வந்தது இக்குறட்பா.
புதுக்கவிதை
புதுக்கவிதையில் ‘குறியீடு’ எனக் குறிக்கப் பெறுவது இது எனலாம். குறியீடு என்பது ஒரு பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருளைப் பதிலியாகக் காட்டுவதாகும். காட்டப்படும் பொருள் ஒன்றாகவும், உணர்த்தப்படும் பொருள் ஒன்றாகவும் அமைந்து மறைமுகமாகப் படைப்பாளர், வாசகருக்கு உணர்த்த விரும்பிய பொருளினை உணர்த்தவல்லது குறியீடு.
அஞ்சு விரலும்
ஒன்றுபோலிராது
என்பது உண்மைதான்
அதற்காக நடுவிரல் மட்டும்
நாலடி வளர்ந்தால்
நறுக்காமலிருக்க முடியுமா?
என்னும் மு.கு ஜகந்நாத ராஜாவின் கவிதையில், நடுவிரல்- களையப்பட வேண்டிய தீமையைச் சுட்டி நிற்கின்றது.
மரபுக்கவிதை
சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல், வேறொரு கருத்தைக் கொண்டு பெறவைத்தல் பிறிதுமொழிதல் எனப்படும்.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் ; அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்
என்னும் திருக்குறளில் பிறிதுமொழிதல் இடம்பெற்றுள்ளது. குறளின் பொருள், 'மிக மென்மையானவையே ஆயினும் மயிலிறகுகளை அளவுக்கதிகமாய் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும் என்பதாகும். எளியவர்களே யாயினும் பல பகைவர்கள் ஏற்பட்டால், ஆற்றல் படைத்த ஒருவரும் அவர்களால் தோல்வியுற நேரலாம்’ என்னும் கருத்தை விளக்க வந்தது இக்குறட்பா.
புதுக்கவிதை
புதுக்கவிதையில் ‘குறியீடு’ எனக் குறிக்கப் பெறுவது இது எனலாம். குறியீடு என்பது ஒரு பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருளைப் பதிலியாகக் காட்டுவதாகும். காட்டப்படும் பொருள் ஒன்றாகவும், உணர்த்தப்படும் பொருள் ஒன்றாகவும் அமைந்து மறைமுகமாகப் படைப்பாளர், வாசகருக்கு உணர்த்த விரும்பிய பொருளினை உணர்த்தவல்லது குறியீடு.
அஞ்சு விரலும்
ஒன்றுபோலிராது
என்பது உண்மைதான்
அதற்காக நடுவிரல் மட்டும்
நாலடி வளர்ந்தால்
நறுக்காமலிருக்க முடியுமா?
என்னும் மு.கு ஜகந்நாத ராஜாவின் கவிதையில், நடுவிரல்- களையப்பட வேண்டிய தீமையைச் சுட்டி நிற்கின்றது.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
தற்குறிப்பேற்றம்
மரபுக்கவிதை
இயல்பாக உள்ள பொருளின்மீதோ, இயல்பாக இயங்கும் பொருளின்மீதோ கவிஞன் தானாக ஒரு கருத்தை ஏற்றிக் கூறுதல் தற்குறிப்பேற்றம் ஆகும்.
நட்சத்திரங்களைக் குறித்துச் சிவப்பிரகாசர் பாடும் பாடல் பின்வருமாறு:
கடல்முரசம் ஆர்ப்பக் கதிர்க்கயிற்றால் ஏறி
அடைமதி விண்கழைநின்று ஆடக் - கொடைமருவும்
எங்கள் சிவஞான ஏந்தல் இறைத்தமணி
தங்கியவே தாரகைகள் தாம்
இப்பாடல், கடலாகிய முரசு முழங்க, கதிராகிய கயிற்றில் ஏறி, வானமாகிய மூங்கிலில் நின்று ஆடக்கூடிய சந்திரனாகிய கூத்தாடிக்குச் சிவஞானி (சிவப்பிரகாசரின் குருநாதர்) வாரி வழங்கிய பொற்காசுகளே நட்சத்திரங்களாகும் என்பதாகப் பொருள் தருகின்றது.
புதுக்கவிதை
கடிகார முட்களைக் கொண்டு, சமுதாய ஏற்றத்தாழ்வைச் சுட்டுகின்றார் மு.மேத்தா.
ஏ, கடிகாரமே
பேச்சை நிறுத்தாத
பெரிய மனிதனே !
குதிக்கும் உன்னுடைய
கால்களில் ஒன்று ஏன்
குட்டையாய் இருக்கிறது?
காலங்கள்தோறும்
இருந்துவருகிற
ஏற்றத் தாழ்வை
எடுத்துக் காட்டவோ?
என்னும் அக்கவிதையில் சிறிய முள், பெரிய முள் பேதம் - சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வைச் சுட்ட அமைந்ததாகக் கவிஞர் தம் கருத்தை ஏற்றியுரைக்கின்றார்.
மரபுக்கவிதை
இயல்பாக உள்ள பொருளின்மீதோ, இயல்பாக இயங்கும் பொருளின்மீதோ கவிஞன் தானாக ஒரு கருத்தை ஏற்றிக் கூறுதல் தற்குறிப்பேற்றம் ஆகும்.
நட்சத்திரங்களைக் குறித்துச் சிவப்பிரகாசர் பாடும் பாடல் பின்வருமாறு:
கடல்முரசம் ஆர்ப்பக் கதிர்க்கயிற்றால் ஏறி
அடைமதி விண்கழைநின்று ஆடக் - கொடைமருவும்
எங்கள் சிவஞான ஏந்தல் இறைத்தமணி
தங்கியவே தாரகைகள் தாம்
இப்பாடல், கடலாகிய முரசு முழங்க, கதிராகிய கயிற்றில் ஏறி, வானமாகிய மூங்கிலில் நின்று ஆடக்கூடிய சந்திரனாகிய கூத்தாடிக்குச் சிவஞானி (சிவப்பிரகாசரின் குருநாதர்) வாரி வழங்கிய பொற்காசுகளே நட்சத்திரங்களாகும் என்பதாகப் பொருள் தருகின்றது.
புதுக்கவிதை
கடிகார முட்களைக் கொண்டு, சமுதாய ஏற்றத்தாழ்வைச் சுட்டுகின்றார் மு.மேத்தா.
ஏ, கடிகாரமே
பேச்சை நிறுத்தாத
பெரிய மனிதனே !
குதிக்கும் உன்னுடைய
கால்களில் ஒன்று ஏன்
குட்டையாய் இருக்கிறது?
காலங்கள்தோறும்
இருந்துவருகிற
ஏற்றத் தாழ்வை
எடுத்துக் காட்டவோ?
என்னும் அக்கவிதையில் சிறிய முள், பெரிய முள் பேதம் - சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வைச் சுட்ட அமைந்ததாகக் கவிஞர் தம் கருத்தை ஏற்றியுரைக்கின்றார்.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
தொன்மம்
மரபுக்கவிதை
புராண இதிகாச வரலாறுகளை உடன்பாட்டு நிலையிலோ எதிர்மறைநிலையிலோ, உள்ளவாறோ மாற்றியோ எடுத்துரைப்பது தொன்மம்ஆகும்.
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல்இனி(து) ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ, நன்னுதால் ! ஒண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு (நன்னெறி)
என்னும் பாடலில், சாக்கிய நாயனார் சிவலிங்கத்தின்மீது வழிபடும் நோக்கத்தோடு கல் எறிந்தது விருப்பத்திற்குரியதாயிற்று. 'மன்மதன் மலரம்புகளை வீசினான் எனினும் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க வீசப்பட்டதாதலின் வெறுப்புக்குரியதாயிற்று’ எனப் புராண வரலாற்று நிகழ்வுகள் சுட்டப் பெறுகின்றன.
புதுக்கவிதை
தொன்மக் குறியீடு என்பதாக இது புதுக்கவிதையில் சுட்டப்பெறுகின்றது. இன்றைய அரசியல் உலகில் சுயநலம் கருதி அடிக்கடி கட்சித்தாவல் செய்யும் அரசியல்வாதிகளின் செயல்களை,
தாயங்களில் - சகுனி
வெற்றிச் சரிதத்தின் அத்தியாயங்கள்
வளர்க்க வளர்க்க . . .
மாயக் கண்ணன்
கட்சி மாறுகிறான்
எனப் பாரதக்கதையை மாற்றியமைத்துள்ளார் ஈரோடு தமிழன்பன்.
மரபுக்கவிதை
புராண இதிகாச வரலாறுகளை உடன்பாட்டு நிலையிலோ எதிர்மறைநிலையிலோ, உள்ளவாறோ மாற்றியோ எடுத்துரைப்பது தொன்மம்ஆகும்.
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல்இனி(து) ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ, நன்னுதால் ! ஒண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு (நன்னெறி)
என்னும் பாடலில், சாக்கிய நாயனார் சிவலிங்கத்தின்மீது வழிபடும் நோக்கத்தோடு கல் எறிந்தது விருப்பத்திற்குரியதாயிற்று. 'மன்மதன் மலரம்புகளை வீசினான் எனினும் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க வீசப்பட்டதாதலின் வெறுப்புக்குரியதாயிற்று’ எனப் புராண வரலாற்று நிகழ்வுகள் சுட்டப் பெறுகின்றன.
புதுக்கவிதை
தொன்மக் குறியீடு என்பதாக இது புதுக்கவிதையில் சுட்டப்பெறுகின்றது. இன்றைய அரசியல் உலகில் சுயநலம் கருதி அடிக்கடி கட்சித்தாவல் செய்யும் அரசியல்வாதிகளின் செயல்களை,
தாயங்களில் - சகுனி
வெற்றிச் சரிதத்தின் அத்தியாயங்கள்
வளர்க்க வளர்க்க . . .
மாயக் கண்ணன்
கட்சி மாறுகிறான்
எனப் பாரதக்கதையை மாற்றியமைத்துள்ளார் ஈரோடு தமிழன்பன்.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
உரையாடற்பாங்கு
மரபுக்கவிதை
உரைநடையில் அமையும் நாடகம், நாவல் ஆகியவற்றில் மட்டுமன்றிச் செய்யுளிலும் உரைநடை அமைவதுண்டு. கலித்தொகை, சிலப்பதிகாரவழக்குரை காதை, காப்பியங்கள், தனிப் பாடல்கள் எனப் பலவற்றில் உரையாடற்பாங்கு மரபுக்கவிதையில் அமைந்துள்ளமையைக் காண்கிறோம்.
சிவப்பிரகாசர், தம் இளவல்களுக்கு மணம் செய்வித்து வாழ்த்தியபோது பாடிய தனிப்பாடல் வருமாறு :
அரனவ னிடத்திலே ஐங்கரன் வந்துதான்
‘ஐயஎன் செவியை மிகவும்
ஆறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும்
அத்தன்வே லவனை நோக்கி
விரைவுடன் வினவவே ‘அண்ணன்என் சென்னியில்
விளங்குகண் எண்ணினன்’ என
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்துநீ அப்படி
விகடம் ஏன்செய் தாய்என
‘மருவும்என் கைந்நீள முழம்அளந் தான்’என்ன
மயிலவன் நகைத்து நிற்க
மலையரையன் உதவவரும் உமையவளை நோக்கி நின்
மைந்தரைப் பாராய் எனக்
கருதரிய கடலாடை உலகுபல அண்டம்
கருப்பமாப் பெற்ற கன்னி
கணபதியை அருகழைத்து அகமகிழ்வு கொண்டனள்
களிப்புடன் உமைக்காக்கவே
இதில் விநாயகனுக்கும் முருகனுக்குமிடையிலான விளையாட்டுச் சண்டையும் முறையீடுகளும் இடம் பெற்றுள்ளன.
புதுக்கவிதை
அரசியல்வாதியிடம் நிருபர் பேட்டியெடுப்பதாய் ஈரோடு தமிழன்பன் கவிதை வழங்குகிறார்.
‘தாங்கள் தவறாது
படிக்கும் பத்திரிகை எது?’
‘படிப்பது வழக்கமில்லை
பத்திரிகைகளுக்குச் செய்தி
வழங்குவது வழக்கம்’
'தாங்கள் அரசியல்துறவு
பூணுவதாக
எண்ணம் உண்டா?'
‘இல்லை. . .
அரசியல்வாதிகளை
அநாதைகளாக்கமாட்டேன் நான்’
மரபுக்கவிதை
உரைநடையில் அமையும் நாடகம், நாவல் ஆகியவற்றில் மட்டுமன்றிச் செய்யுளிலும் உரைநடை அமைவதுண்டு. கலித்தொகை, சிலப்பதிகாரவழக்குரை காதை, காப்பியங்கள், தனிப் பாடல்கள் எனப் பலவற்றில் உரையாடற்பாங்கு மரபுக்கவிதையில் அமைந்துள்ளமையைக் காண்கிறோம்.
சிவப்பிரகாசர், தம் இளவல்களுக்கு மணம் செய்வித்து வாழ்த்தியபோது பாடிய தனிப்பாடல் வருமாறு :
அரனவ னிடத்திலே ஐங்கரன் வந்துதான்
‘ஐயஎன் செவியை மிகவும்
ஆறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும்
அத்தன்வே லவனை நோக்கி
விரைவுடன் வினவவே ‘அண்ணன்என் சென்னியில்
விளங்குகண் எண்ணினன்’ என
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்துநீ அப்படி
விகடம் ஏன்செய் தாய்என
‘மருவும்என் கைந்நீள முழம்அளந் தான்’என்ன
மயிலவன் நகைத்து நிற்க
மலையரையன் உதவவரும் உமையவளை நோக்கி நின்
மைந்தரைப் பாராய் எனக்
கருதரிய கடலாடை உலகுபல அண்டம்
கருப்பமாப் பெற்ற கன்னி
கணபதியை அருகழைத்து அகமகிழ்வு கொண்டனள்
களிப்புடன் உமைக்காக்கவே
இதில் விநாயகனுக்கும் முருகனுக்குமிடையிலான விளையாட்டுச் சண்டையும் முறையீடுகளும் இடம் பெற்றுள்ளன.
புதுக்கவிதை
அரசியல்வாதியிடம் நிருபர் பேட்டியெடுப்பதாய் ஈரோடு தமிழன்பன் கவிதை வழங்குகிறார்.
‘தாங்கள் தவறாது
படிக்கும் பத்திரிகை எது?’
‘படிப்பது வழக்கமில்லை
பத்திரிகைகளுக்குச் செய்தி
வழங்குவது வழக்கம்’
'தாங்கள் அரசியல்துறவு
பூணுவதாக
எண்ணம் உண்டா?'
‘இல்லை. . .
அரசியல்வாதிகளை
அநாதைகளாக்கமாட்டேன் நான்’
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
இருண்மை
மரபுக்கவிதை
இருண்மை (Obscurity) என்பது, கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடையில் கருத்துப் பரிவர்த்தனை முழுமையாக நடைபெறாத நிலையைச் சுட்டுவதாகும். இதற்கு வாசகனும் காரணம்; கவிஞனின் சோதனை முயற்சியும் காரணம். புரியாததுபோல் இருந்து படிக்கப் படிக்கப் புரியத் தொடங்கும் படிமுறைப் புரிதலை உடையது இது.
மரபுக்கவிதையின் பொருள், அகராதி கொண்டு புரிந்து கொள்ளத்தக்கதாக உள்ளதே தவிரப் புரியாமல் இல்லை. எனினும், குழூஉக்குறியாகப் பல்வேறு சொற்களைச் சித்தர்கள் கலைச் சொற்களாகக் கொண்டு பாடி வைத்துள்ளனர்.
புதுக்கவிதை
பொருளைச் சொல்ல விரும்பாமல், உணர்த்த விரும்பும் இருண்மை உத்தி புதுக்கவிதைகளிலேயே மிகுதியும் கையாளப் பெறுகிறது. மாடர்ன் ஆர்ட்போன்றது இது எனலாம்.
நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமாக
நிஜமோ நிஜமே நிஜம்
நிஜம் நிஜம் நிஜம்.
என்னும் ஆத்மாநாமின் கவிதை இத்தகையது.
இவ்வாறு உத்திமுறைகள் இருவகைக் கவிதைகளிலும் சிறந்து விளங்கக் காண்கிறோம்.
மரபுக்கவிதை
இருண்மை (Obscurity) என்பது, கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடையில் கருத்துப் பரிவர்த்தனை முழுமையாக நடைபெறாத நிலையைச் சுட்டுவதாகும். இதற்கு வாசகனும் காரணம்; கவிஞனின் சோதனை முயற்சியும் காரணம். புரியாததுபோல் இருந்து படிக்கப் படிக்கப் புரியத் தொடங்கும் படிமுறைப் புரிதலை உடையது இது.
மரபுக்கவிதையின் பொருள், அகராதி கொண்டு புரிந்து கொள்ளத்தக்கதாக உள்ளதே தவிரப் புரியாமல் இல்லை. எனினும், குழூஉக்குறியாகப் பல்வேறு சொற்களைச் சித்தர்கள் கலைச் சொற்களாகக் கொண்டு பாடி வைத்துள்ளனர்.
புதுக்கவிதை
பொருளைச் சொல்ல விரும்பாமல், உணர்த்த விரும்பும் இருண்மை உத்தி புதுக்கவிதைகளிலேயே மிகுதியும் கையாளப் பெறுகிறது. மாடர்ன் ஆர்ட்போன்றது இது எனலாம்.
நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமாக
நிஜமோ நிஜமே நிஜம்
நிஜம் நிஜம் நிஜம்.
என்னும் ஆத்மாநாமின் கவிதை இத்தகையது.
இவ்வாறு உத்திமுறைகள் இருவகைக் கவிதைகளிலும் சிறந்து விளங்கக் காண்கிறோம்.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
ஹைக்கூ - என்பதின் விளக்கம் என்ன?
இது மிகவும் விரிவான விளக்கம் நண்பரே... தொடர்ந்து சென்ரியூ, லிமரைக்கூ வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது...
இது மிகவும் விரிவான விளக்கம் நண்பரே... தொடர்ந்து சென்ரியூ, லிமரைக்கூ வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது...
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்
ஹைக்கூ
‘ஹை’ என்பதற்கு ஜப்பானிய அடிச் சொல்லுக்கு அணுத்தூசி, கரு, முழுமையான கரு என்ற பொருள் உண்டு. ‘கூ’ என்பது சொற்றொடர், வெளிப்பாடு, வாக்கியம், பகுதி, ஒரு வரி, ஓர் அடி, ஒரு செய்யுள், ஒரு கவிதை என்றும் பொருள் தருகிறது.
இவற்றை இணைத்துப் பார்க்கையில் ஹைக்கூ என்பது கரு போன்றும், உயிரணு போன்றும் உருவானதொரு கவிதை என்னும் முழுப்பொருளைத் தரும். மேலும் வளர்ச்சிக்கும் விரிவுக்கும், ஒரு கருவுக்கு உள்ளிருக்கும் இன்னொரு கவிதைக் கருவைக் காண்பதற்கும் ஹைக்கூ என்ற சொல் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம்.
‘ஹைக்கூ’ ஜப்பானிய மொழிக் கவிதை. 3 அடிகள் கொண்டது. மூன்று அடிகள் கொண்ட ஜப்பானிய ஹைக்கூ ஐந்து, ஏழு, ஐந்து சீர்களைக் கொண்டு 17 சீர்களில் ஹைக்கூ படைக்கப்படும் (தமிழுக்கு இந்த சீர் எண்ணிக்கை தேவையில்லை). ஜென் தத்துவத்தோடு இயற்கை மற்றும் மெய்யியலோடு தொடர்பு கொண்டது. கவித்துவம் கொண்டது. இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் எப்படியோ இந்தியாவில் (தமிழ்நாடு உள்பட) ஓர் இலக்கிய வடிவமாக / கவிதையாக இடம் பிடித்துவிட்டது. பெரும்பான்மையாக தமிழ்நாட்டு ஹைக்கூ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘ஹைக்கூ’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள்.
இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் தமிழ் ‘ஹைக்கூ’ இயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகளையும் கருத்துச் செறிவையும் கொண்டதாக இருப்பது சிறப்பு. இன்று எழுதப்படுவதெல்லாம் ‘புதுக்கவிதை’ என்பது போல ‘ஹைக்கூ’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் 3 அடிகள்கொண்டு எழுதப்படுவது எல்லாம் ‘ஹைக்கூ’ என்பதால் ஹைக்கூவின் உள்ளடக்கம் தாழ்ந்துபோய் உள்ளது. ஜப்பானிய ஹைக்கூவின் தமிழ் மொழிபெயர்ப்பை தவிர்த்து விட்டால் 1974ல் கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழில் முதன்முதலாக ஹைக்கூ படைத்துள்ளார். இன்று பல ஆயிரம் பேர் தமிழில் ஹைக்கூ எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’விற்கென்றே சில தனி சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டுள்ளன.
இன்றைய ஹைக்கூக் கவிஞர்கள் பெரும்பான்மையினர் தங்களை ஹைக்கூக் கவிஞர்கள் என்று கூறிக் கொள்ள வேண்டும் அல்லது தொடர்ந்து ¨ஹைக்கூவிற்குள் இயங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற தன்முனைப்புக்காகச் சென்ரியு வகைக் கவிதைகளை நிறைய படைத்து அதனை ஹைக்கூ என்று பெயரிட்டு வெளியிட்டு வருகிறார்கள் என்பது உண்மை. இதன் காரணமாகச் சென்ரியு என்ற ஒரு வடிவம் இருப்பதை அவர்களால் வெளிக்காட்டாமல் இருட்டடிப்பும் செய்யப்படுகிறது. இந்த நிலை இன்னும் ஓராண்டுவரை நீடித்தால் கூட சென்ரியு கவிதைகள் தான் தமிழின் ஹைக்கூக் கவிதைகள் என்று வாசகர்கள் மனத்தில் பதிந்துபோய்விடும்.
ஜப்பானிய மொழியில் இன்னும் - இன்றும் ஹைக்கூ, ஹைக்கூவாகவேதான் இருக்கிறது. ஹைக்கூவை எழுத முடியாதவர்கள் சென்ரியு வகையை நாடிச் சென்றுவிடுகிறார்கள். ஹைக்கூவின் பிறிதோரு வகையான நகைச்சுவை, வேடிக்கை, சமூக கேலி கிண்டல்களை உள்ளடக்கமாகக் கொண்டதுதான் சென்ரியு.
இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஹைக்கூ கவிஞர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பலரும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆயிரக்கணக்கான ஹைக்கூக்கள் படைத்துள்ளதாகக் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற போலியான / தன்முனைப்பால்(Ego) சென்ரியு வகை கவிதைகளைப் படைத்து ஹைக்கூ என்ற தலைப்பில் கவிதைத் தொகுதியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹைக்கூவின் உள்ளடக்கம் வேறு. சென்ரியுவின் உள்ளடக்கம் வேறு என்று ஹைக்கூ பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தும், உண்மையான ஹைக்கூவை எழுத (நிறைய எழுத) முடியாதக் காரணத்தால் சென்ரியு வகைக் கவிதைகளை எழுதிக் குவித்துவிட்டு ஹைக்கூ என்று சொல்லிக் கொள்கிறார்கள். தவறான வழிகாட்டியாவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒருவர் எழுதிய ஹைக்கூக் கவிதைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுதான் ‘ஹைக்கூக் கவிஞர்’ என்று அழைக்கின்றனர் அல்லது பட்டம் கொடுக்கப்படுகிறது. இது தவறு. ஒருவர் ஓரிரு ஹைக்கூவைச் சிறப்பாகப் படைத்தாலும் அவர் ஹைக்கூக் கவிஞர்தான் என்று ஏற்றுக் கொள்ளும் ஜப்பானியர்களின் மனநிலை தமிழ்நாட்டிலும் பரவலாக்கப்பட வேண்டும்.
ஹைக்கூ மரபுகள்
1. ஹைக்கூ மூன்று வரியாக இருக்க வேண்டும். (ஒரு வாக்கியத்தையே பிரித்து மூன்று அடியாக்கி ஹைக்கூ எழுதக் கூடாது. ஹைக்கூவில் ஒவ்வொரு அடியும் ஒரு வாக்கியம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.)
2. ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது (குறியீடு போல; உட்பொருள்) இருக்க வேண்டும். (ஹைக்கூவுக்குத் தலைப்பிடக்கூடாது என்பதற்கானக் காரணம் இதுதான். தலைப்பைத் தாண்டிச் சிந்திப்பதைத் தடை செய்கிறது. ஒரு ஹைக்கூவின் உட்பொருள் (குறியீடு போல்) விரிந்து செல்வதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு ஹைக்கூக்கள் பெரும்பான்மையும் ஒற்றைப் பரிமாணத்தில்தான் வருகின்றன. ஒரு உண்மையான ஹைக்கூ குறைந்தபட்சம் இரண்டு உட்பொருளையாவதுத் தாங்கி இருப்பது சிறப்பு.)
கவிக்கோ அப்துல் ரகுமான் கூற்று:
ஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கிய மரபுகள் உண்டு.
1.ஹைக்கூவில் முதல் அடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும்.
2.மற்றொரு மரபு ஹைக்கூவின் மொழி அமைப்பு. ஹைக்கூவின் மொழி ஊழல் சதையற்ற மொழி. தந்தி மொழியைப் போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும். (ஹைக்கூ எளிய சொற்கள் கொண்டும் குறைந்த வார்த்தைகளைக் கொண்டும் இருப்பது சிறப்பு. படைப்பாளர் எல்லாவற்றையும் விவரித்துக்கொண்டு இருக்கக்கூடாது. விவரிப்பது வசனம் அல்லது புதுக்கவிதையின் வேலை.)
3.உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.
மேற்கண்டவற்றை ஹைக்கூப் படைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஹைக்கூவின் அடையாளமும், அழகும், ஆற்றலும் இவற்றில்தான் இருக்கின்றன.
ஹைக்கூ வாசிப்பு முறை
ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போது ஹைக்கூ எழுதுபவர்கள் இந்த எளிமையான முறையை மட்டுமே கடைபிடித்தால் கூட அவர்கள் எழுதும் ஹைக்கூவை மேலும் சிறப்பாகப் படைக்க முடியும்.
ஹைக்கூ
‘ஹை’ என்பதற்கு ஜப்பானிய அடிச் சொல்லுக்கு அணுத்தூசி, கரு, முழுமையான கரு என்ற பொருள் உண்டு. ‘கூ’ என்பது சொற்றொடர், வெளிப்பாடு, வாக்கியம், பகுதி, ஒரு வரி, ஓர் அடி, ஒரு செய்யுள், ஒரு கவிதை என்றும் பொருள் தருகிறது.
இவற்றை இணைத்துப் பார்க்கையில் ஹைக்கூ என்பது கரு போன்றும், உயிரணு போன்றும் உருவானதொரு கவிதை என்னும் முழுப்பொருளைத் தரும். மேலும் வளர்ச்சிக்கும் விரிவுக்கும், ஒரு கருவுக்கு உள்ளிருக்கும் இன்னொரு கவிதைக் கருவைக் காண்பதற்கும் ஹைக்கூ என்ற சொல் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம்.
‘ஹைக்கூ’ ஜப்பானிய மொழிக் கவிதை. 3 அடிகள் கொண்டது. மூன்று அடிகள் கொண்ட ஜப்பானிய ஹைக்கூ ஐந்து, ஏழு, ஐந்து சீர்களைக் கொண்டு 17 சீர்களில் ஹைக்கூ படைக்கப்படும் (தமிழுக்கு இந்த சீர் எண்ணிக்கை தேவையில்லை). ஜென் தத்துவத்தோடு இயற்கை மற்றும் மெய்யியலோடு தொடர்பு கொண்டது. கவித்துவம் கொண்டது. இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் எப்படியோ இந்தியாவில் (தமிழ்நாடு உள்பட) ஓர் இலக்கிய வடிவமாக / கவிதையாக இடம் பிடித்துவிட்டது. பெரும்பான்மையாக தமிழ்நாட்டு ஹைக்கூ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘ஹைக்கூ’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள்.
இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் தமிழ் ‘ஹைக்கூ’ இயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகளையும் கருத்துச் செறிவையும் கொண்டதாக இருப்பது சிறப்பு. இன்று எழுதப்படுவதெல்லாம் ‘புதுக்கவிதை’ என்பது போல ‘ஹைக்கூ’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் 3 அடிகள்கொண்டு எழுதப்படுவது எல்லாம் ‘ஹைக்கூ’ என்பதால் ஹைக்கூவின் உள்ளடக்கம் தாழ்ந்துபோய் உள்ளது. ஜப்பானிய ஹைக்கூவின் தமிழ் மொழிபெயர்ப்பை தவிர்த்து விட்டால் 1974ல் கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழில் முதன்முதலாக ஹைக்கூ படைத்துள்ளார். இன்று பல ஆயிரம் பேர் தமிழில் ஹைக்கூ எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’விற்கென்றே சில தனி சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டுள்ளன.
இன்றைய ஹைக்கூக் கவிஞர்கள் பெரும்பான்மையினர் தங்களை ஹைக்கூக் கவிஞர்கள் என்று கூறிக் கொள்ள வேண்டும் அல்லது தொடர்ந்து ¨ஹைக்கூவிற்குள் இயங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற தன்முனைப்புக்காகச் சென்ரியு வகைக் கவிதைகளை நிறைய படைத்து அதனை ஹைக்கூ என்று பெயரிட்டு வெளியிட்டு வருகிறார்கள் என்பது உண்மை. இதன் காரணமாகச் சென்ரியு என்ற ஒரு வடிவம் இருப்பதை அவர்களால் வெளிக்காட்டாமல் இருட்டடிப்பும் செய்யப்படுகிறது. இந்த நிலை இன்னும் ஓராண்டுவரை நீடித்தால் கூட சென்ரியு கவிதைகள் தான் தமிழின் ஹைக்கூக் கவிதைகள் என்று வாசகர்கள் மனத்தில் பதிந்துபோய்விடும்.
ஜப்பானிய மொழியில் இன்னும் - இன்றும் ஹைக்கூ, ஹைக்கூவாகவேதான் இருக்கிறது. ஹைக்கூவை எழுத முடியாதவர்கள் சென்ரியு வகையை நாடிச் சென்றுவிடுகிறார்கள். ஹைக்கூவின் பிறிதோரு வகையான நகைச்சுவை, வேடிக்கை, சமூக கேலி கிண்டல்களை உள்ளடக்கமாகக் கொண்டதுதான் சென்ரியு.
இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஹைக்கூ கவிஞர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பலரும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆயிரக்கணக்கான ஹைக்கூக்கள் படைத்துள்ளதாகக் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற போலியான / தன்முனைப்பால்(Ego) சென்ரியு வகை கவிதைகளைப் படைத்து ஹைக்கூ என்ற தலைப்பில் கவிதைத் தொகுதியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹைக்கூவின் உள்ளடக்கம் வேறு. சென்ரியுவின் உள்ளடக்கம் வேறு என்று ஹைக்கூ பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தும், உண்மையான ஹைக்கூவை எழுத (நிறைய எழுத) முடியாதக் காரணத்தால் சென்ரியு வகைக் கவிதைகளை எழுதிக் குவித்துவிட்டு ஹைக்கூ என்று சொல்லிக் கொள்கிறார்கள். தவறான வழிகாட்டியாவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒருவர் எழுதிய ஹைக்கூக் கவிதைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுதான் ‘ஹைக்கூக் கவிஞர்’ என்று அழைக்கின்றனர் அல்லது பட்டம் கொடுக்கப்படுகிறது. இது தவறு. ஒருவர் ஓரிரு ஹைக்கூவைச் சிறப்பாகப் படைத்தாலும் அவர் ஹைக்கூக் கவிஞர்தான் என்று ஏற்றுக் கொள்ளும் ஜப்பானியர்களின் மனநிலை தமிழ்நாட்டிலும் பரவலாக்கப்பட வேண்டும்.
ஹைக்கூ மரபுகள்
1. ஹைக்கூ மூன்று வரியாக இருக்க வேண்டும். (ஒரு வாக்கியத்தையே பிரித்து மூன்று அடியாக்கி ஹைக்கூ எழுதக் கூடாது. ஹைக்கூவில் ஒவ்வொரு அடியும் ஒரு வாக்கியம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.)
2. ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது (குறியீடு போல; உட்பொருள்) இருக்க வேண்டும். (ஹைக்கூவுக்குத் தலைப்பிடக்கூடாது என்பதற்கானக் காரணம் இதுதான். தலைப்பைத் தாண்டிச் சிந்திப்பதைத் தடை செய்கிறது. ஒரு ஹைக்கூவின் உட்பொருள் (குறியீடு போல்) விரிந்து செல்வதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு ஹைக்கூக்கள் பெரும்பான்மையும் ஒற்றைப் பரிமாணத்தில்தான் வருகின்றன. ஒரு உண்மையான ஹைக்கூ குறைந்தபட்சம் இரண்டு உட்பொருளையாவதுத் தாங்கி இருப்பது சிறப்பு.)
கவிக்கோ அப்துல் ரகுமான் கூற்று:
ஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கிய மரபுகள் உண்டு.
1.ஹைக்கூவில் முதல் அடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும்.
2.மற்றொரு மரபு ஹைக்கூவின் மொழி அமைப்பு. ஹைக்கூவின் மொழி ஊழல் சதையற்ற மொழி. தந்தி மொழியைப் போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும். (ஹைக்கூ எளிய சொற்கள் கொண்டும் குறைந்த வார்த்தைகளைக் கொண்டும் இருப்பது சிறப்பு. படைப்பாளர் எல்லாவற்றையும் விவரித்துக்கொண்டு இருக்கக்கூடாது. விவரிப்பது வசனம் அல்லது புதுக்கவிதையின் வேலை.)
3.உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.
மேற்கண்டவற்றை ஹைக்கூப் படைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஹைக்கூவின் அடையாளமும், அழகும், ஆற்றலும் இவற்றில்தான் இருக்கின்றன.
ஹைக்கூ வாசிப்பு முறை
ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போது ஹைக்கூ எழுதுபவர்கள் இந்த எளிமையான முறையை மட்டுமே கடைபிடித்தால் கூட அவர்கள் எழுதும் ஹைக்கூவை மேலும் சிறப்பாகப் படைக்க முடியும்.
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
சென்ரியு
(சுருக்கமாகச் சொல்வதென்றால் கவித்துவம் அதிகமாக இருந்தால் ‘ஹைக்கூ’. கவித்துவம் குறைந்து நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் அது ‘சென்ரியு’. )
சென்ரியுவும் ஜப்பானிய மொழிக்கவிதை. 3 அடிகள் கொண்டது. ஜென் தத்துவம், இயற்கை மற்றும் மெய்யியலோடும் சிறிது தொடர்பு கொண்டு நகைச்சுவை உணர்வை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது சென்ரியு ஆகும். சென்ரியு சமூகம், அரசியல் ஆகியவை குறித்து நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்தும்.
‘சென்ரியு’ என்னும் புனைப்பெயரைக் கொண்ட ‘கராய்ஹச்சிமோன்’ என்னும் ஜப்பானியக் கவிஞர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இவ்விலக்கியத்தை அளித்தார். பின்னர் அக்கவிஞரின் புனைப் பெயரே அக்கவிதை வகைகளுக்கான பெயரும் ஆயிற்று. தமிழில் இவ்வகையை நகைப்பா என்கிறார்கள்.
தமிழ்நாட்டு ‘சென்ரியு’ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘சென்ரியு’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். இது இந்திய சமூகம், அரசியல் ஆகியவை குறித்த போக்கை நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்த ஏற்ற மிகச் சிறந்த வடிவம் ஆகும். எனவே இந்தியாவின் சூழலுக்கு தமிழில் ‘ஹைக்கூ’வை விட ‘சென்ரியு’ சிறந்த வடிவம் /உள்ளடக்கம் ஆகும்.
தேனீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு இவ்வகைக் கவிதைகளைச் சொல்லும் மரபு ஜப்பானில் இயல்பாக இருக்கிறது. சென்ரியு கவிதைகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஏனெனில் அதற்கு எதை எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்பதால் எதை வேண்டுமானாலும் அந்த வடிவத்துக்கு உட்பட்டு எழுதலாம். (ஹைக்கூ எழுத சிறிதாவது நுன்மான் நுழைப்புலம் வேண்டும்) நீங்கள் கூட ஒரு நாளைக்கு ஒரு செய்தித்தாள் மட்டுமே கூட வாசித்தால் ஏறக்குறைய 100 சென்ரியு கவிதைகள் எழுதிவிட முடியும். தேனீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் எளிய மனிதர்கள் இலக்கிய நயங்களை, இயற்கையை, கவித்துவத்தை, கவிதைப் பற்றிய உட்சிந்தனையை விரும்பாதவர்கள் ஒருவரோடு ஒருவர் களிப்பூட்டிக் கொள்ளும் முறையில் பேசிக்கொள்ளும் போது, அங்கதக் கவிதைகளில் அர்த்தச் செறிவும் கவித்துவமும் ஹைக்கூவாகவும் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே.
இயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகளையும் கருத்துச் செறிவையும் கொண்டதாக இருக்கும் ஹைக்கூவைத் தவிர பிற அனைத்தும் சென்ரியு வகையைச் சேர்ந்ததாகும். நம்பிக்கையிழந்ததால், பிற சூழ்நிலைகளை இழித்துப் பேசும் தன்மையும் இவற்றில் உண்டு. பல சென்ரியுக்கள் கருத்தில் நேர்த்தியில்லாத, சிறிதும் கலையழகும் வேலைப்பாடுமற்ற வெளிப்படையான விமர்சனங்கள் ஆகும்.
மூட நம்பிக்கைகள், காதல் மற்றும் அதோடு தொடர்புடைய பலவும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பிச்சை, வறுமை, சாதி, மதம், வரதட்சணை, பெண்ணியத்தின் சாடல் போன்ற சமுதாயச் சீர்கேடுகளும், நீதியின் முரண்பாடுகள், நோய்கள், அன்றாடச் செய்திகள், அரசியல் சார்ந்த விமர்சனங்கள் மற்றும் புகழ்பாடுதல், உரைநடை போன்ற அமைப்பில் நேரடியாகக் கருத்தை சொல்லுதல் மற்றும் அறிவுறுத்தல்கள், இவை போன்ற பிற (புதுக் கவிதையில் கருப்பொருளாகப் பயன்படுத்தும் மேலும் பல) அனைத்தும் சென்ரியு வகையைச் சார்ந்தவையாகும். தமிழ் ஹைக்கூக் கவிஞர் பெரும்பான்மையும் இவ்வகைக் கவிதைகளையே அதிகம் படைத்துவிட்டு ஹைக்கூ என்று தலைப்பிட்டுக் கொள்கிறார்கள். தற்போது உங்களால் எது ஹைக்கூ? எது சென்ரியு? என்று பிரித்து அடையாளம் காண முடியும் என நினைக்கிறேன்.
தமிழ் ஹைக்கூ, ஜப்பானியப் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதாய்த் தெரியவில்லை. இதற்குப் படைப்பாளர் சிலரின் அறியாமையும், ஒரு காரணமாயிருக்கலாம், சிலர் அதனைப் பொருட்படுத்தாமையும் காரணமாயிருக்கலாம் என்கிறார் டாக்டர் பட்டத்துக்காகத் தமிழ் ஹைக்கூக்களைப் பல்கலைக்கழகத்துக்காக ஆய்வு செய்த நிர்மலா சுரேஷ் அவர்கள்.
தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘சென்ரியு’ படைத்துள்ளார். தமிழில் சிலரே ‘சென்ரியு’ எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் எழுதப்படும் ‘ஹைக்கூ’ எல்லாம் ‘சென்ரியு’ கவிதையாகவே காணப்படுகின்றன.
குருக்களாகிவிட்ட கடவுள்
மறுபடியும் கடவுளாகவில்லை
தட்டு நிறையக் காணிக்கை - ஈரோடு தமிழன்பன் - சென்ரியு
யார் சொல்லிக் கொடுத்தவன்?
அடி பிள்ளைக்கு
வலி வாத்தியாருக்கு - ஈரோடு தமிழன்பன் - சென்ரியு
(சுருக்கமாகச் சொல்வதென்றால் கவித்துவம் அதிகமாக இருந்தால் ‘ஹைக்கூ’. கவித்துவம் குறைந்து நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் அது ‘சென்ரியு’. )
சென்ரியுவும் ஜப்பானிய மொழிக்கவிதை. 3 அடிகள் கொண்டது. ஜென் தத்துவம், இயற்கை மற்றும் மெய்யியலோடும் சிறிது தொடர்பு கொண்டு நகைச்சுவை உணர்வை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது சென்ரியு ஆகும். சென்ரியு சமூகம், அரசியல் ஆகியவை குறித்து நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்தும்.
‘சென்ரியு’ என்னும் புனைப்பெயரைக் கொண்ட ‘கராய்ஹச்சிமோன்’ என்னும் ஜப்பானியக் கவிஞர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இவ்விலக்கியத்தை அளித்தார். பின்னர் அக்கவிஞரின் புனைப் பெயரே அக்கவிதை வகைகளுக்கான பெயரும் ஆயிற்று. தமிழில் இவ்வகையை நகைப்பா என்கிறார்கள்.
தமிழ்நாட்டு ‘சென்ரியு’ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘சென்ரியு’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். இது இந்திய சமூகம், அரசியல் ஆகியவை குறித்த போக்கை நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்த ஏற்ற மிகச் சிறந்த வடிவம் ஆகும். எனவே இந்தியாவின் சூழலுக்கு தமிழில் ‘ஹைக்கூ’வை விட ‘சென்ரியு’ சிறந்த வடிவம் /உள்ளடக்கம் ஆகும்.
தேனீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு இவ்வகைக் கவிதைகளைச் சொல்லும் மரபு ஜப்பானில் இயல்பாக இருக்கிறது. சென்ரியு கவிதைகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஏனெனில் அதற்கு எதை எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்பதால் எதை வேண்டுமானாலும் அந்த வடிவத்துக்கு உட்பட்டு எழுதலாம். (ஹைக்கூ எழுத சிறிதாவது நுன்மான் நுழைப்புலம் வேண்டும்) நீங்கள் கூட ஒரு நாளைக்கு ஒரு செய்தித்தாள் மட்டுமே கூட வாசித்தால் ஏறக்குறைய 100 சென்ரியு கவிதைகள் எழுதிவிட முடியும். தேனீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் எளிய மனிதர்கள் இலக்கிய நயங்களை, இயற்கையை, கவித்துவத்தை, கவிதைப் பற்றிய உட்சிந்தனையை விரும்பாதவர்கள் ஒருவரோடு ஒருவர் களிப்பூட்டிக் கொள்ளும் முறையில் பேசிக்கொள்ளும் போது, அங்கதக் கவிதைகளில் அர்த்தச் செறிவும் கவித்துவமும் ஹைக்கூவாகவும் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே.
இயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகளையும் கருத்துச் செறிவையும் கொண்டதாக இருக்கும் ஹைக்கூவைத் தவிர பிற அனைத்தும் சென்ரியு வகையைச் சேர்ந்ததாகும். நம்பிக்கையிழந்ததால், பிற சூழ்நிலைகளை இழித்துப் பேசும் தன்மையும் இவற்றில் உண்டு. பல சென்ரியுக்கள் கருத்தில் நேர்த்தியில்லாத, சிறிதும் கலையழகும் வேலைப்பாடுமற்ற வெளிப்படையான விமர்சனங்கள் ஆகும்.
மூட நம்பிக்கைகள், காதல் மற்றும் அதோடு தொடர்புடைய பலவும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பிச்சை, வறுமை, சாதி, மதம், வரதட்சணை, பெண்ணியத்தின் சாடல் போன்ற சமுதாயச் சீர்கேடுகளும், நீதியின் முரண்பாடுகள், நோய்கள், அன்றாடச் செய்திகள், அரசியல் சார்ந்த விமர்சனங்கள் மற்றும் புகழ்பாடுதல், உரைநடை போன்ற அமைப்பில் நேரடியாகக் கருத்தை சொல்லுதல் மற்றும் அறிவுறுத்தல்கள், இவை போன்ற பிற (புதுக் கவிதையில் கருப்பொருளாகப் பயன்படுத்தும் மேலும் பல) அனைத்தும் சென்ரியு வகையைச் சார்ந்தவையாகும். தமிழ் ஹைக்கூக் கவிஞர் பெரும்பான்மையும் இவ்வகைக் கவிதைகளையே அதிகம் படைத்துவிட்டு ஹைக்கூ என்று தலைப்பிட்டுக் கொள்கிறார்கள். தற்போது உங்களால் எது ஹைக்கூ? எது சென்ரியு? என்று பிரித்து அடையாளம் காண முடியும் என நினைக்கிறேன்.
தமிழ் ஹைக்கூ, ஜப்பானியப் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதாய்த் தெரியவில்லை. இதற்குப் படைப்பாளர் சிலரின் அறியாமையும், ஒரு காரணமாயிருக்கலாம், சிலர் அதனைப் பொருட்படுத்தாமையும் காரணமாயிருக்கலாம் என்கிறார் டாக்டர் பட்டத்துக்காகத் தமிழ் ஹைக்கூக்களைப் பல்கலைக்கழகத்துக்காக ஆய்வு செய்த நிர்மலா சுரேஷ் அவர்கள்.
தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘சென்ரியு’ படைத்துள்ளார். தமிழில் சிலரே ‘சென்ரியு’ எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் எழுதப்படும் ‘ஹைக்கூ’ எல்லாம் ‘சென்ரியு’ கவிதையாகவே காணப்படுகின்றன.
குருக்களாகிவிட்ட கடவுள்
மறுபடியும் கடவுளாகவில்லை
தட்டு நிறையக் காணிக்கை - ஈரோடு தமிழன்பன் - சென்ரியு
யார் சொல்லிக் கொடுத்தவன்?
அடி பிள்ளைக்கு
வலி வாத்தியாருக்கு - ஈரோடு தமிழன்பன் - சென்ரியு
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
லிமரைக்கூ
ஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். 5 அடிகளில் அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாக வேடிக்கை, வினோதம், நகைச்சுவை முதலிய உணர்வோடு இயங்கக் கூடியது.
தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘லிமரைக்கூ’வைப் படைத்துள்ளார். தமிழில் முதன்முதலாக ‘லிமரைக்கூ’வைப் படைத்த ஈரோடு தமிழன்பன் ஆங்கிலத்தின் ‘லிமரிக்’ வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத் தொடையை 1 (முதல்) மற்றும் 3 (இறுதி) அடிகளில் இணைத்து] ஜப்பானிய ‘ஹைக்கூ’வின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டு ‘லிமரைக்கூ’ என்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார். இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்து விட்டது.
ஹைக்கூ, லிமரிக் என்னும் இரண்டு வகைக் கவிதைகளின் வடிவங்களையும் உள்ளடக்கங்களையும் உள் வாங்கிக் கொண்டு தமிழில் கவிதைப் படைக்கத்தக்க திறமையும் பயிற்சியும் தேர்ச்சியும் மொழியாளுமை - கவித்துவ இயக்கம் ஆகிய இரண்டிலும் தேவை என்கிறார் ஈரோடு தமிழன்பன்.
5-7-5 என்னும் அசையமைப்பு அடிகளைக் கருத்தில் கொண்டால் ஹைக்கூவின் தன்மை அதுவென உணர்ந்து மூன்றடிகளின் இடையடி சற்றே - ஒரு சீர் அளவே மிக்கிருக்க எழுதலாம். முதல், கடை அடிகள் தவிர்த்த இடையடிகள் சீர் குறைந்து வரும் லிமரிக்கைக் கருத்தில் கொள்ளும் போது - லிமரைக்கூவிலும் நடுவடி சீர் குறைந்து வரலாம் (இது சிறுபான்மை). மூவசைச் சீர்களைப் பயன்படுத்தும் போது அவை ஈரசைகளாகப் பிரிக்கத்தக்கதாக இருந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார் ஈரோடு தமிழன்பன்.
எடுத்துக்காட்டாக, ‘வந்ததற்காய்’ என்னும் மூவசைச் சீர், ‘வந்த + தற்காய்’ என இரண்டு சீராகப் பிரியும் வாய்ப்புள்ளதாகவும், ‘வந்ததனால்’ என்பது, ‘வந்த + தனால்’ எனப் பிரிவும் போது அவ்வாய்ப்பைப் பெறாததாகவும் அமைவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
3 அடிகளிலும் சந்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற விதி இல்லை. ஈரோடு தமிழன்பன் தமிழுக்கு முதன்முறையாக லிமரைக்கூவை அறிமுகம் செய்து வைத்தபோது சந்தம் கடைபிடிக்கப்பட்டது. (அவ்வாறு சந்தம் அமைத்துக் கொண்டது ஈரோடு தமிழன்பனின் தனி உத்தி.) மூன்று வரி, சந்தம் மட்டுமே லிமரைக்கூ ஆகிவிடாது. ஹைக்கூ, சென்ரியுவின் இணைப்புதான் லிமரைக்கூ.
தேன் நிரம்பி வழிந்தது
வண்ணத்துப் பூச்சி பறந்து சென்றது
பூ தலைக் கவிழ்ந்தது
-இது சந்தம் கொண்டு அமைந்த லிமரைக்கூ.
ஜணகனமன பாடியது
மரியாதையுடன் கூட்டத்தில் பொது மக்கள்
அரசியல்வாதி கொட்டாவி விட்டது - ம.ரமேஷ்
-இது இயைபுத் தொடை கொண்டு அமைந்த லிமரைக்கூ.
குருக்கள் தெய்வங்கள் ஆனார்கள்
கோயி லில்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடியி ருக்கப் போனார்கள்
பறவை கூடு திரும்பியது
சிறகு முளைத்துப் பறந்து திரிய
வானின் இதயம் விரும்பியது
- ஈரோடு தமிழன்பன் – சென்னிமலை கிளியோப்பாத்ராக்கள்
எதிரெதிர் தலைவர்கள் கைக்குலுக்கல்
விளை நிலங்கள் பங்கீடு பேச்சுக்குப்பின்
அவரவர் பங்குகள் பதுக்கல்
வாழ்வில் எத்தனை இன்னல்
முதிர் கன்னியோடு ஏங்கி ஏங்கி
இளைத்துப் போனது பின்னல்
- கன்னிக்கோவில் இராஜா - சென்னைவாசி
மார்கழி மாதப் பனிக்காலம்
மனத்தில் எண்ணங்கள் தேக்கி வாசலில்
வரைந்தாள் அழகிய கோலம்
வீசும் மெல்லியக் காற்று
வயலில் ஆனந்த நடனம்
ஆடிக் களிக்கும் நாற்று
- ந.க. துறைவன் - உப்பு பொம்மைகள்
இயற்கைக்கு வந்தது ஊறு!
ஏரி குளங்களில் கட்டினார்கள் வீடு!
இனியாவது நீ மாறு!
கொட்டி தீர்த்த மழை!
வீடுகளில் உள்ளே புகுந்தது நீரு!
தூர்வாறா குளங்களால் பிழை!
- " தளிர் அண்ணா" சா. சுரேஷ்பாபு
கவிதைக்குக் குறுகிய வடிவம் சிறப்புடையது என்பதில் ஐயமில்லை. அந்தச் சிறப்பை ஹைக்கூ,சென்ரியு, லிமரைக்கூ பெற்றுள்ளன. சொற்கள் குறையும் பொழுது சொற்களுக்கிடையே மௌனங்கள் கூடுகின்றன. இந்த மௌனங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. சிந்திக்கும்பொழுது நமக்குள் கூர்மைப்படுகிறோம். இந்தத் திசையில்தான் அந்தக் கவிதைகள் நம்மோடு ஒட்டுகின்றன. உறவாடுகின்றன. அவை நம்மோடும் உரையாடுகின்றன. குறுகிய வடிவம் என்பதன் காரணமாகப் படிமம், குறியீடு, தொன்மம் முன்னுக்கு வருகின்றன. அவைதான் கவிதைக்கு உயிராய் அமைகின்றன என்று சொல்வதில் தவறு இல்லை என்பார் ஞானி.
இன்று தமிழில் இவ்வகை வடிவங்களைத் தவிர ஹைபுன், லிபுன், குறட்கூ, சீர்க்கூ, கஸல் எனப் பல வடிவங்கள் உருவாகிக் கொண்டு வருகின்றன.
காண்க : [You must be registered and logged in to see this link.]
ஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். 5 அடிகளில் அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாக வேடிக்கை, வினோதம், நகைச்சுவை முதலிய உணர்வோடு இயங்கக் கூடியது.
தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘லிமரைக்கூ’வைப் படைத்துள்ளார். தமிழில் முதன்முதலாக ‘லிமரைக்கூ’வைப் படைத்த ஈரோடு தமிழன்பன் ஆங்கிலத்தின் ‘லிமரிக்’ வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத் தொடையை 1 (முதல்) மற்றும் 3 (இறுதி) அடிகளில் இணைத்து] ஜப்பானிய ‘ஹைக்கூ’வின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டு ‘லிமரைக்கூ’ என்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார். இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்து விட்டது.
ஹைக்கூ, லிமரிக் என்னும் இரண்டு வகைக் கவிதைகளின் வடிவங்களையும் உள்ளடக்கங்களையும் உள் வாங்கிக் கொண்டு தமிழில் கவிதைப் படைக்கத்தக்க திறமையும் பயிற்சியும் தேர்ச்சியும் மொழியாளுமை - கவித்துவ இயக்கம் ஆகிய இரண்டிலும் தேவை என்கிறார் ஈரோடு தமிழன்பன்.
5-7-5 என்னும் அசையமைப்பு அடிகளைக் கருத்தில் கொண்டால் ஹைக்கூவின் தன்மை அதுவென உணர்ந்து மூன்றடிகளின் இடையடி சற்றே - ஒரு சீர் அளவே மிக்கிருக்க எழுதலாம். முதல், கடை அடிகள் தவிர்த்த இடையடிகள் சீர் குறைந்து வரும் லிமரிக்கைக் கருத்தில் கொள்ளும் போது - லிமரைக்கூவிலும் நடுவடி சீர் குறைந்து வரலாம் (இது சிறுபான்மை). மூவசைச் சீர்களைப் பயன்படுத்தும் போது அவை ஈரசைகளாகப் பிரிக்கத்தக்கதாக இருந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார் ஈரோடு தமிழன்பன்.
எடுத்துக்காட்டாக, ‘வந்ததற்காய்’ என்னும் மூவசைச் சீர், ‘வந்த + தற்காய்’ என இரண்டு சீராகப் பிரியும் வாய்ப்புள்ளதாகவும், ‘வந்ததனால்’ என்பது, ‘வந்த + தனால்’ எனப் பிரிவும் போது அவ்வாய்ப்பைப் பெறாததாகவும் அமைவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
3 அடிகளிலும் சந்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற விதி இல்லை. ஈரோடு தமிழன்பன் தமிழுக்கு முதன்முறையாக லிமரைக்கூவை அறிமுகம் செய்து வைத்தபோது சந்தம் கடைபிடிக்கப்பட்டது. (அவ்வாறு சந்தம் அமைத்துக் கொண்டது ஈரோடு தமிழன்பனின் தனி உத்தி.) மூன்று வரி, சந்தம் மட்டுமே லிமரைக்கூ ஆகிவிடாது. ஹைக்கூ, சென்ரியுவின் இணைப்புதான் லிமரைக்கூ.
தேன் நிரம்பி வழிந்தது
வண்ணத்துப் பூச்சி பறந்து சென்றது
பூ தலைக் கவிழ்ந்தது
-இது சந்தம் கொண்டு அமைந்த லிமரைக்கூ.
ஜணகனமன பாடியது
மரியாதையுடன் கூட்டத்தில் பொது மக்கள்
அரசியல்வாதி கொட்டாவி விட்டது - ம.ரமேஷ்
-இது இயைபுத் தொடை கொண்டு அமைந்த லிமரைக்கூ.
குருக்கள் தெய்வங்கள் ஆனார்கள்
கோயி லில்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடியி ருக்கப் போனார்கள்
பறவை கூடு திரும்பியது
சிறகு முளைத்துப் பறந்து திரிய
வானின் இதயம் விரும்பியது
- ஈரோடு தமிழன்பன் – சென்னிமலை கிளியோப்பாத்ராக்கள்
எதிரெதிர் தலைவர்கள் கைக்குலுக்கல்
விளை நிலங்கள் பங்கீடு பேச்சுக்குப்பின்
அவரவர் பங்குகள் பதுக்கல்
வாழ்வில் எத்தனை இன்னல்
முதிர் கன்னியோடு ஏங்கி ஏங்கி
இளைத்துப் போனது பின்னல்
- கன்னிக்கோவில் இராஜா - சென்னைவாசி
மார்கழி மாதப் பனிக்காலம்
மனத்தில் எண்ணங்கள் தேக்கி வாசலில்
வரைந்தாள் அழகிய கோலம்
வீசும் மெல்லியக் காற்று
வயலில் ஆனந்த நடனம்
ஆடிக் களிக்கும் நாற்று
- ந.க. துறைவன் - உப்பு பொம்மைகள்
இயற்கைக்கு வந்தது ஊறு!
ஏரி குளங்களில் கட்டினார்கள் வீடு!
இனியாவது நீ மாறு!
கொட்டி தீர்த்த மழை!
வீடுகளில் உள்ளே புகுந்தது நீரு!
தூர்வாறா குளங்களால் பிழை!
- " தளிர் அண்ணா" சா. சுரேஷ்பாபு
கவிதைக்குக் குறுகிய வடிவம் சிறப்புடையது என்பதில் ஐயமில்லை. அந்தச் சிறப்பை ஹைக்கூ,சென்ரியு, லிமரைக்கூ பெற்றுள்ளன. சொற்கள் குறையும் பொழுது சொற்களுக்கிடையே மௌனங்கள் கூடுகின்றன. இந்த மௌனங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. சிந்திக்கும்பொழுது நமக்குள் கூர்மைப்படுகிறோம். இந்தத் திசையில்தான் அந்தக் கவிதைகள் நம்மோடு ஒட்டுகின்றன. உறவாடுகின்றன. அவை நம்மோடும் உரையாடுகின்றன. குறுகிய வடிவம் என்பதன் காரணமாகப் படிமம், குறியீடு, தொன்மம் முன்னுக்கு வருகின்றன. அவைதான் கவிதைக்கு உயிராய் அமைகின்றன என்று சொல்வதில் தவறு இல்லை என்பார் ஞானி.
இன்று தமிழில் இவ்வகை வடிவங்களைத் தவிர ஹைபுன், லிபுன், குறட்கூ, சீர்க்கூ, கஸல் எனப் பல வடிவங்கள் உருவாகிக் கொண்டு வருகின்றன.
காண்க : [You must be registered and logged in to see this link.]
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
விரிவான விளக்கத்திற்க்கு நன்றி கவியே
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...
என் ஹைக்கூ தொடரைப் பார்க்க [You must be registered and logged in to see this link.]
என் சென்ரியூ தொடரைப் பார்க்க [You must be registered and logged in to see this link.]
கவிஞர் இனியவன் என்பவரும் தொடர்ந்து அமர்க்களத்தில் எழுதி வருகிறார்.
என் சென்ரியூ தொடரைப் பார்க்க [You must be registered and logged in to see this link.]
கவிஞர் இனியவன் என்பவரும் தொடர்ந்து அமர்க்களத்தில் எழுதி வருகிறார்.
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» நான் எழுதுவது கவிதை இல்லை
» சொல்லுங்க சொல்லுங்க பார்க்கலாம்
» சொல்லுங்க டாடி சொல்லுங்க
» பிளீஸ் இதை செய்யவேண்டாம் ...?
» சிரியுங்க பிளீஸ் ..
» சொல்லுங்க சொல்லுங்க பார்க்கலாம்
» சொல்லுங்க டாடி சொல்லுங்க
» பிளீஸ் இதை செய்யவேண்டாம் ...?
» சிரியுங்க பிளீஸ் ..
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|