Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வை
Page 1 of 1 • Share
சில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வை
தெய்வப்புலவர் திருவள்ளுவர் செய்தருளிய அறநூலான திருக்குறள் தமிழ் மொழியில் விளங்குகிற ஸ்மிருதியாகும். ஆக, மிகச்சிறப்பான இந்நூற்கருத்துக்கள் யாவும் நுணுகி ஆராயத்தக்கன. அவ்வாறு ஆராய்ந்து இந்நூற்கருத்துகளுக்கு அமைவாக நம் வாழ்வைப் பேண வேண்டும்.
எனவே, ஈரடியில் அறம் பேசும் திருக்குறளை விளக்க பற்பல ஆன்றோர்கள் காலத்திற்குக் காலம் உரையெழுதி வந்திருக்கிறார்கள். பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காலிங்கர் என்பவர்கள் தொட்டு இன்று வரை பற்பல உரைகள் தோன்றி விட்டன. இன்னும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.
என்றாலும் இன்னும் சில குறள்களின் பொருள் குழப்பமாகவே இருக்கிறது. திருக்குறள் உரைகளில் பரிமேலழகர் உரையையே அறிஞர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றார்கள்.
பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ –நூலிற்
பரித்தவுரை யெல்லாம் பரிமே லழகன்
தெரித்தவுரை யாமோ தெளி.
எனினும், சிற்சில திருக்குறள்களுக்கு பரிமேலழகர் முதலான அறிஞர்கள் பலரும் கண்ட கருத்துக்கள் யாவும் ஏற்றுக்கொள்ளத் தக்கனவாகத் தெரியாத நிலை கூட இருக்கிறது. வள்ளுவர் எதை நினைந்து குறளை அமைத்தாரோ, அப்பொருளை உரையாசிரியர்கள் இவ்வாறான சிற்சில இடங்களில், சரியாக, அறிந்து கொள்ளவில்லையா? என்ற ஐயமும் உண்டாகிறது.
ஆக, என்னைத் தடுமாற வைத்த சில குறட்பாக்களை நோக்குவதும் அது தொடர்பான எனது கருத்தை முன்வைப்பதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை
(குறள்- 37)
அறன்வலியுறுத்தல் என்ற அதிகாரத்தில் உள்ள ஏழாவது குறள் இதுவாகும். இதற்குப் பொருள் கண்ட பரிமேலழகர்
“அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்தல் வேண்டா, சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னாலே உணரப்படும்” என்கிறார்.
இதே கருத்தையே மணக்குடவர், பரிதியார், காலிங்கர் போன்ற உரையாசிரியர்களும் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் அறத்தின் பயனை அறிய வேண்டுமாயின், எந்த நூலையும் பார்க்கத் தேவையில்லை. தெருவில் நின்று சிவிகையை (பல்லக்கை) பார்… அதிலே, மேலே இருந்து போகிறவன் புண்ணியவான் என்றும், கீழே சுமப்பவர்கள் பாவிகள் என்றும் பொருள்பட உரைக்கின்றனர்.
bangalore_thiruvalluvarஇதை அப்படியே, இன்று நோக்கின் வாகனம் செலுத்துபவர்கள் (ஒரு வகையில் சிவிகை சுமப்பவர்கள் போலவே அவர்கள்) எல்லோரும் பாவிகளா..?
நகுலன் என்பான் நூறு அஸ்வமேதயாகங்கள் செய்து, இந்திரப்பதவி பெற்றான் என்றும், அவனை ஏழுமாமுனிவர்களும் சிவிகையில் வைத்துச் சுமந்து சென்றார்கள் என்றும் ஒரு கதை வழக்கில் உண்டு.
அவன் தன்னைத் தாங்கிச் செல்லும் முனிவர்களின் தகுதி மறந்து “சர்ப்ப.. சர்ப்ப..” (விரைவாக, விரைவாக) என்று வெருட்டியதால், முனிவர்களின் சாபத்துக்கு உள்ளாகி சர்ப்பமானான். (பாம்பானான்) என்று அக்கதை கூறும்.
ஆக, சிவிகை ஊர்ந்த புண்ணியவான் என்ன ஆனான்..? திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் எழுந்தருளி வந்த சிவிகையை ஆர்வமிகுதியாலும், பேரன்பினாலும் திருநாவுக்கரசர் பெருமான் தாங்கியதாகப் பெரிய புராணம் பேசுகிறது.
எனவே, இதற்கான பொருளாக, எதிர்மறைக்கருத்து எடுக்க வேண்டும். அதாவது அறம் அறிய வேண்டுமாயின் நூல்களைக் கற்றுத் தெரிக, வெறுமனே பல்லக்கில் வருபவனையும், அதனைச் சுமக்கிறவர்களையும் வைத்து அறம் இதுவென நினைக்க வேண்டாம். என்பதே வள்ளுவனார் குறளின் கருத்தாக அமைய வேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
(குறள்- 55)
இது வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தில் அமைந்துள்ள ஐந்தாவது குறட்பாவாகும்.
இக்குறள் பல இடங்களிலும் பலராலும் விவாதிக்கப்பட்டு ஒரு பிரச்சினையாகிப் போன குறள்.
இதற்குப் பரிமேலழகர் பொருள் சொல்கிற போது, “பிற தெய்வம் தொழாது தன்தெய்வமாகிய கொழுநனைத் (கணவனை) தொழாநின்று துயிலெழுவாள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்” என்கிறார்.
ஆதிகமான உரையாசிரியர்கள் இக்கருத்தையே இக்குறளின் பொருளாக முன் வைக்கின்றனர்.
இங்கே பெண்கள் கணவனைத் தவிர, பிற தெய்வம் தொழார் என்று ஒரு கருத்து உரையாசிரியர்களால் நிறுவப்படுகிறது. ஆனால், கடவுள் வாழ்த்திலேயே பரிமேலழகர் உரையிலேயே, இறை வணக்கம் பற்றிச் சொல்லும் போது, இருபாலாருக்கும் உரிய பன்மை விகுதிச் சொற்கள் ஒன்றல்ல பன்னிரு இடங்களில் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன.
ஆக, இக்குறளுக்கு இத்தகு உரையெழுச்சி பெற்றது ஒரு வகையில், இஸ்லாமியம் போன்ற பிறசமயத்தாக்கமோ? ஏன்று கூடச் சிந்திக்கத் தோன்றுகிறது. இவ்வுரை மூலம் பெண்களின் இறைவழிபாட்டு உரிமை மறுக்கப்படுகின்றது.
எனவே, இதற்கு எதிர்மறையாகப் பொருள் கொண்டால், என்ன? வள்ளுவனார் இந்த இடத்தில் பெண்களுக்கு கட்டாயம் இறைவழிபாடு அவசியம் என்று வலியுறுத்துவதாக, இக்குறள் குறித்து உரையாடிய யாழ்ப்பாணத்துப் பருத்தித்துறை என்ற ஊரைச் சேர்ந்த ஆ.வடிவேலு என்ற தமிழாசிரியர் குறிப்பிட்டார்.
இதற்கு அவர் பரிமேலழகர் உரையிலேயே பல உதாரணங்களையும் குறிப்பிட்டார். உதாரணமாக, பரிமேலழகர்,
55ஆவது குறளில் தொழுது என்று வருகிற போது, தொழா நின்று என்கிறார்.
451ஆவது குறளில் அஞ்சும் என்று வருகிற போது, அஞ்சா நிற்கும் என்கிறார்.
527ஆவது குறளில் உண்ணும் என்று வருகிற போது, உண்ணா நிற்கும் என்கிறார்.
இப்படி முப்பதிற்கும் மேற்பட்ட குறட்பாக்களுக்கு பரிமேலழகர் எதிர்மறைப் பொருள் கொள்கிறார்.
ஆனால், 774ஆவது குறளான,
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
என்பதற்குப் பெர்ருள் சொல்கிற போது, பறியா நகும் என்ற எதிர்மறையை “பறித்து மகிழும்” என்று பொருள் கொள்கிறார்.
எனவே, இக்குறட்பாவானது,
“தெய்வந் தொழ கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
என்றாவது, இருந்திருப்பின் சிக்கலிருந்திருக்காது. அதாவது, கணவனைப் போற்றுபவள் தெய்வத்தை வேண்ட, மழை பொழியும் என்றாவது பொருள் கொண்டிருக்கலாம். ஆனால், இப்படிக் குறள் எழுதியிருந்தால், அது வெண்பா யாப்புக்கு முரணாகும். (நிரை முன் நிரை அசையாக வரக்கூடாது)
women-doing-pongal
இயற்கை நிகழ்வுகளைப் பெண்களால் மாற்ற முடியுமா..? அதுவும் தெய்வத்துணை இன்றிச் செயற்படுத்த முடியுமா,.? ஆனால், உரையெழுதுபவர்கள் எல்லாம் “தெய்வம் தொழாது கணவனையே தெய்வமாகத்தொழுபவள்” என்கிறார்கள்.
திரௌபதை துகிலுரியப்பட்ட போது, தெய்வமான கண்ணனை அழைத்து வழிபட்டதும், மங்கையற்கரசியார் தன் கணவன் சமயம் மாறிய போதும் தான் மாறாமல் சைவப்பணி புரிந்ததும், புனிதவதியார் பக்திஇயக்கத்திற்கு உயிர் கொடுத்ததும் இலக்கிய ரீதியாக இறைபணியில் இல்லறத்தில் ஈடுபட்ட பெண்கள் ஈடுபட்டிருந்ததை வெளிப்படுத்துகின்றது.
இதற்கு விளக்கம் சொல்ல வந்தவர்கள் அநுசூயை என்கிற முனிபத்தினி மழை பெய்யச் செய்தாள் என்று சொல்லி நழுவுகிறார்கள்.
கலைக்கோட்டுமாமுனிவன் நாட்டுக்குள் வந்த போது, மழை பொழிந்து வளம் பெருகிற்று என்று கம்பராமாயணம் உரைக்கிறது. அப்படியாகில், ஆண்களால் மழை பொழியச் செய்ய முடியுமா..? ஆக, அநுசூயை, கலைக்கோட்டு முனிவன் ஆகிய இருவரதும் தவவலிமையையே இது காட்டுவதாகக் கொள்ளலாம்.
ஆகவே, மொத்தத்தில் இக்குறளுக்கு இப்படிப் பொருள் கொள்வது நலம் என்று நம்பலாம். அதாவது,
“கணவனையே நினைந்து கொண்டு, மனதால் வணங்கிக்கொண்டு துயிலெழுகின்றவளாகிய கற்புடைய பெண் கணவனதும் மற்றை எல்லோரதும் நலனுக்காக கடவுள் வழிபாடு செய்பவளாவாள். அவள் எல்லோரும் விரும்புகின்ற போது, பெய்த மழைக்கு ஒப்பாவாள்”
என்று பொருள் கொள்வதே நலம். எனவே, இக்குறளில் கற்புடைய மாதரையே எல்லோரும் விரும்பும் போது பொழியும் மழையாக வள்ளுவப்பெருமான் உவமித்தார் என்று சிந்திக்கலாம் அல்லவா..?
தோன்றிற் புகழொடு தோன்றுக அகிதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று
(குறள்- 236)
இதற்குப் பொருள் கண்ட பரிமேலழகர்
“மக்களாய் பிறக்கின் புகழுக்கு ஏதுவான குணத்தோடு பிறக்க, அக்குணமில்லாதவர் மக்களாய் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று” என்கிறார். இவ்வாறே பலரும் பிறப்புடன் தொடர்பு பட்டதாக இக்குறளுக்குப் பொருள் விரித்துள்ளனர்.
இவ்வாறு இக்குறள் பிறப்பைக் குறித்திருந்தால் ‘மக்கட்பேறு’ என்ற அதிகாரத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இது அமைந்திருப்பதோ, புகழ் என்ற அதிகாரமாகும்.
இதுவோ, ஈகை என்ற அதிகாரத்தை அடுத்து வருவதாகும். ஆகவே, இந்த தோன்றல் என்பதைக் காட்சி என்றே பொருள் கொள்வது சிறப்பாகும் எனக் கருத வேண்டியுள்ளது.
உதாரணமாக, ஒரு போட்டி அல்லது தேர்தல் என்றால், அதில் வெற்றி பெறுபவர் புகழ் பெறுவார். தோற்பவர், புகழ், நேரம், பணம் எல்லாவற்றையும் வீணடிக்க நேரிடும். எனவே, இத்தகு நிலைமையில், தோற்கக்கூடிய நிலையிருந்தால் தோற்றாமையே நன்று. ஆக, இக்கருத்தையே இக்குறள் குறிப்பிடுகின்றதோ..? என்று கூடச் சிந்திக்கலாம்.
இம்மூன்று குறட்பாக்கள் போலவே, பல குறட்பாக்களின் பொருளை உரையாசிரியர்களின் பொருளின் மூலம் சரியாகத் தெரிந்து கொள்ள இயலாத நிலையிருக்கிறது. இவற்றுக்கு தமிழ்ப்பற்றாளர்களும் திருக்குறள் நெறி பேணுபவர்களும் விரைந்து சரியான பொருள் காட்ட வேண்டும் என்பதே எம் அவா ஆகும்.
நன்றி - நீர்வை. தி.மயூரகிரி சர்மா
எனவே, ஈரடியில் அறம் பேசும் திருக்குறளை விளக்க பற்பல ஆன்றோர்கள் காலத்திற்குக் காலம் உரையெழுதி வந்திருக்கிறார்கள். பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காலிங்கர் என்பவர்கள் தொட்டு இன்று வரை பற்பல உரைகள் தோன்றி விட்டன. இன்னும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.
என்றாலும் இன்னும் சில குறள்களின் பொருள் குழப்பமாகவே இருக்கிறது. திருக்குறள் உரைகளில் பரிமேலழகர் உரையையே அறிஞர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றார்கள்.
பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ –நூலிற்
பரித்தவுரை யெல்லாம் பரிமே லழகன்
தெரித்தவுரை யாமோ தெளி.
எனினும், சிற்சில திருக்குறள்களுக்கு பரிமேலழகர் முதலான அறிஞர்கள் பலரும் கண்ட கருத்துக்கள் யாவும் ஏற்றுக்கொள்ளத் தக்கனவாகத் தெரியாத நிலை கூட இருக்கிறது. வள்ளுவர் எதை நினைந்து குறளை அமைத்தாரோ, அப்பொருளை உரையாசிரியர்கள் இவ்வாறான சிற்சில இடங்களில், சரியாக, அறிந்து கொள்ளவில்லையா? என்ற ஐயமும் உண்டாகிறது.
ஆக, என்னைத் தடுமாற வைத்த சில குறட்பாக்களை நோக்குவதும் அது தொடர்பான எனது கருத்தை முன்வைப்பதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை
(குறள்- 37)
அறன்வலியுறுத்தல் என்ற அதிகாரத்தில் உள்ள ஏழாவது குறள் இதுவாகும். இதற்குப் பொருள் கண்ட பரிமேலழகர்
“அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்தல் வேண்டா, சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னாலே உணரப்படும்” என்கிறார்.
இதே கருத்தையே மணக்குடவர், பரிதியார், காலிங்கர் போன்ற உரையாசிரியர்களும் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் அறத்தின் பயனை அறிய வேண்டுமாயின், எந்த நூலையும் பார்க்கத் தேவையில்லை. தெருவில் நின்று சிவிகையை (பல்லக்கை) பார்… அதிலே, மேலே இருந்து போகிறவன் புண்ணியவான் என்றும், கீழே சுமப்பவர்கள் பாவிகள் என்றும் பொருள்பட உரைக்கின்றனர்.
bangalore_thiruvalluvarஇதை அப்படியே, இன்று நோக்கின் வாகனம் செலுத்துபவர்கள் (ஒரு வகையில் சிவிகை சுமப்பவர்கள் போலவே அவர்கள்) எல்லோரும் பாவிகளா..?
நகுலன் என்பான் நூறு அஸ்வமேதயாகங்கள் செய்து, இந்திரப்பதவி பெற்றான் என்றும், அவனை ஏழுமாமுனிவர்களும் சிவிகையில் வைத்துச் சுமந்து சென்றார்கள் என்றும் ஒரு கதை வழக்கில் உண்டு.
அவன் தன்னைத் தாங்கிச் செல்லும் முனிவர்களின் தகுதி மறந்து “சர்ப்ப.. சர்ப்ப..” (விரைவாக, விரைவாக) என்று வெருட்டியதால், முனிவர்களின் சாபத்துக்கு உள்ளாகி சர்ப்பமானான். (பாம்பானான்) என்று அக்கதை கூறும்.
ஆக, சிவிகை ஊர்ந்த புண்ணியவான் என்ன ஆனான்..? திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் எழுந்தருளி வந்த சிவிகையை ஆர்வமிகுதியாலும், பேரன்பினாலும் திருநாவுக்கரசர் பெருமான் தாங்கியதாகப் பெரிய புராணம் பேசுகிறது.
எனவே, இதற்கான பொருளாக, எதிர்மறைக்கருத்து எடுக்க வேண்டும். அதாவது அறம் அறிய வேண்டுமாயின் நூல்களைக் கற்றுத் தெரிக, வெறுமனே பல்லக்கில் வருபவனையும், அதனைச் சுமக்கிறவர்களையும் வைத்து அறம் இதுவென நினைக்க வேண்டாம். என்பதே வள்ளுவனார் குறளின் கருத்தாக அமைய வேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
(குறள்- 55)
இது வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தில் அமைந்துள்ள ஐந்தாவது குறட்பாவாகும்.
இக்குறள் பல இடங்களிலும் பலராலும் விவாதிக்கப்பட்டு ஒரு பிரச்சினையாகிப் போன குறள்.
இதற்குப் பரிமேலழகர் பொருள் சொல்கிற போது, “பிற தெய்வம் தொழாது தன்தெய்வமாகிய கொழுநனைத் (கணவனை) தொழாநின்று துயிலெழுவாள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்” என்கிறார்.
ஆதிகமான உரையாசிரியர்கள் இக்கருத்தையே இக்குறளின் பொருளாக முன் வைக்கின்றனர்.
இங்கே பெண்கள் கணவனைத் தவிர, பிற தெய்வம் தொழார் என்று ஒரு கருத்து உரையாசிரியர்களால் நிறுவப்படுகிறது. ஆனால், கடவுள் வாழ்த்திலேயே பரிமேலழகர் உரையிலேயே, இறை வணக்கம் பற்றிச் சொல்லும் போது, இருபாலாருக்கும் உரிய பன்மை விகுதிச் சொற்கள் ஒன்றல்ல பன்னிரு இடங்களில் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன.
ஆக, இக்குறளுக்கு இத்தகு உரையெழுச்சி பெற்றது ஒரு வகையில், இஸ்லாமியம் போன்ற பிறசமயத்தாக்கமோ? ஏன்று கூடச் சிந்திக்கத் தோன்றுகிறது. இவ்வுரை மூலம் பெண்களின் இறைவழிபாட்டு உரிமை மறுக்கப்படுகின்றது.
எனவே, இதற்கு எதிர்மறையாகப் பொருள் கொண்டால், என்ன? வள்ளுவனார் இந்த இடத்தில் பெண்களுக்கு கட்டாயம் இறைவழிபாடு அவசியம் என்று வலியுறுத்துவதாக, இக்குறள் குறித்து உரையாடிய யாழ்ப்பாணத்துப் பருத்தித்துறை என்ற ஊரைச் சேர்ந்த ஆ.வடிவேலு என்ற தமிழாசிரியர் குறிப்பிட்டார்.
இதற்கு அவர் பரிமேலழகர் உரையிலேயே பல உதாரணங்களையும் குறிப்பிட்டார். உதாரணமாக, பரிமேலழகர்,
55ஆவது குறளில் தொழுது என்று வருகிற போது, தொழா நின்று என்கிறார்.
451ஆவது குறளில் அஞ்சும் என்று வருகிற போது, அஞ்சா நிற்கும் என்கிறார்.
527ஆவது குறளில் உண்ணும் என்று வருகிற போது, உண்ணா நிற்கும் என்கிறார்.
இப்படி முப்பதிற்கும் மேற்பட்ட குறட்பாக்களுக்கு பரிமேலழகர் எதிர்மறைப் பொருள் கொள்கிறார்.
ஆனால், 774ஆவது குறளான,
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
என்பதற்குப் பெர்ருள் சொல்கிற போது, பறியா நகும் என்ற எதிர்மறையை “பறித்து மகிழும்” என்று பொருள் கொள்கிறார்.
எனவே, இக்குறட்பாவானது,
“தெய்வந் தொழ கொழுநற் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
என்றாவது, இருந்திருப்பின் சிக்கலிருந்திருக்காது. அதாவது, கணவனைப் போற்றுபவள் தெய்வத்தை வேண்ட, மழை பொழியும் என்றாவது பொருள் கொண்டிருக்கலாம். ஆனால், இப்படிக் குறள் எழுதியிருந்தால், அது வெண்பா யாப்புக்கு முரணாகும். (நிரை முன் நிரை அசையாக வரக்கூடாது)
women-doing-pongal
இயற்கை நிகழ்வுகளைப் பெண்களால் மாற்ற முடியுமா..? அதுவும் தெய்வத்துணை இன்றிச் செயற்படுத்த முடியுமா,.? ஆனால், உரையெழுதுபவர்கள் எல்லாம் “தெய்வம் தொழாது கணவனையே தெய்வமாகத்தொழுபவள்” என்கிறார்கள்.
திரௌபதை துகிலுரியப்பட்ட போது, தெய்வமான கண்ணனை அழைத்து வழிபட்டதும், மங்கையற்கரசியார் தன் கணவன் சமயம் மாறிய போதும் தான் மாறாமல் சைவப்பணி புரிந்ததும், புனிதவதியார் பக்திஇயக்கத்திற்கு உயிர் கொடுத்ததும் இலக்கிய ரீதியாக இறைபணியில் இல்லறத்தில் ஈடுபட்ட பெண்கள் ஈடுபட்டிருந்ததை வெளிப்படுத்துகின்றது.
இதற்கு விளக்கம் சொல்ல வந்தவர்கள் அநுசூயை என்கிற முனிபத்தினி மழை பெய்யச் செய்தாள் என்று சொல்லி நழுவுகிறார்கள்.
கலைக்கோட்டுமாமுனிவன் நாட்டுக்குள் வந்த போது, மழை பொழிந்து வளம் பெருகிற்று என்று கம்பராமாயணம் உரைக்கிறது. அப்படியாகில், ஆண்களால் மழை பொழியச் செய்ய முடியுமா..? ஆக, அநுசூயை, கலைக்கோட்டு முனிவன் ஆகிய இருவரதும் தவவலிமையையே இது காட்டுவதாகக் கொள்ளலாம்.
ஆகவே, மொத்தத்தில் இக்குறளுக்கு இப்படிப் பொருள் கொள்வது நலம் என்று நம்பலாம். அதாவது,
“கணவனையே நினைந்து கொண்டு, மனதால் வணங்கிக்கொண்டு துயிலெழுகின்றவளாகிய கற்புடைய பெண் கணவனதும் மற்றை எல்லோரதும் நலனுக்காக கடவுள் வழிபாடு செய்பவளாவாள். அவள் எல்லோரும் விரும்புகின்ற போது, பெய்த மழைக்கு ஒப்பாவாள்”
என்று பொருள் கொள்வதே நலம். எனவே, இக்குறளில் கற்புடைய மாதரையே எல்லோரும் விரும்பும் போது பொழியும் மழையாக வள்ளுவப்பெருமான் உவமித்தார் என்று சிந்திக்கலாம் அல்லவா..?
தோன்றிற் புகழொடு தோன்றுக அகிதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று
(குறள்- 236)
இதற்குப் பொருள் கண்ட பரிமேலழகர்
“மக்களாய் பிறக்கின் புகழுக்கு ஏதுவான குணத்தோடு பிறக்க, அக்குணமில்லாதவர் மக்களாய் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று” என்கிறார். இவ்வாறே பலரும் பிறப்புடன் தொடர்பு பட்டதாக இக்குறளுக்குப் பொருள் விரித்துள்ளனர்.
இவ்வாறு இக்குறள் பிறப்பைக் குறித்திருந்தால் ‘மக்கட்பேறு’ என்ற அதிகாரத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இது அமைந்திருப்பதோ, புகழ் என்ற அதிகாரமாகும்.
இதுவோ, ஈகை என்ற அதிகாரத்தை அடுத்து வருவதாகும். ஆகவே, இந்த தோன்றல் என்பதைக் காட்சி என்றே பொருள் கொள்வது சிறப்பாகும் எனக் கருத வேண்டியுள்ளது.
உதாரணமாக, ஒரு போட்டி அல்லது தேர்தல் என்றால், அதில் வெற்றி பெறுபவர் புகழ் பெறுவார். தோற்பவர், புகழ், நேரம், பணம் எல்லாவற்றையும் வீணடிக்க நேரிடும். எனவே, இத்தகு நிலைமையில், தோற்கக்கூடிய நிலையிருந்தால் தோற்றாமையே நன்று. ஆக, இக்கருத்தையே இக்குறள் குறிப்பிடுகின்றதோ..? என்று கூடச் சிந்திக்கலாம்.
இம்மூன்று குறட்பாக்கள் போலவே, பல குறட்பாக்களின் பொருளை உரையாசிரியர்களின் பொருளின் மூலம் சரியாகத் தெரிந்து கொள்ள இயலாத நிலையிருக்கிறது. இவற்றுக்கு தமிழ்ப்பற்றாளர்களும் திருக்குறள் நெறி பேணுபவர்களும் விரைந்து சரியான பொருள் காட்ட வேண்டும் என்பதே எம் அவா ஆகும்.
நன்றி - நீர்வை. தி.மயூரகிரி சர்மா
Similar topics
» gmail குறித்த வினா
» இயற்கை உணவு குறித்த பொன்மொழிகள்
» கூழாக இருந்தாலும் குறித்த நேரத்தில் குடி!
» இயற்கை உணவு குறித்த பொன்மொழிகள்
» இயற்கை உணவுகள் குறித்த பொன்மொழிகள்
» இயற்கை உணவு குறித்த பொன்மொழிகள்
» கூழாக இருந்தாலும் குறித்த நேரத்தில் குடி!
» இயற்கை உணவு குறித்த பொன்மொழிகள்
» இயற்கை உணவுகள் குறித்த பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|