Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி
Page 1 of 1 • Share
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி
[You must be registered and logged in to see this image.]
முதல் என்ற வார்த்தையை எளிதாகக் கூறிவிடலாம். ஆனால் அந்த முதல் என்ற இடத்தைப் பிடிக்க பலரும் பல்வேறு கஷ்டங்களையும், வேதனைகளையும், தடைகளையும் கடந்திருப்பார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுபோலத்தான்.. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற நிலையை அடைய முத்துலட்சுமி ரெட்டி பெற்ற வேதனைகளும், சோதனைகளும் பல.
1896ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்த முத்துலட்சுமி ரெட்டி, திண்ணைப் பள்ளியில் தான் ஆரம்பக் கல்வியை துவக்கினார். குடும்ப சூழ்நிலை காரணமாக 6ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்த இருந்த முத்துலட்சுமியின், ஆசிரியர் தானே முன்வந்து கல்வி செலவை ஏற்று 8ம் வகுப்பு வரை கொண்டு சென்றார். பெண்கள் பருவம் எய்துவிட்டால் பள்ளிப் படிப்பை நிறுத்துவது அந்த காலத்து வழக்கம். அதனை தகர்த்து, தனது பெண்ணை பள்ளிக்கு அனுப்ப முன் வந்தார் முத்துலட்சுமியின் தந்தை. அந்த ஆண்டில், இடைநிலைத் தேர்வை எழுதி தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற 13 பேரில் முத்துலட்சுமியும் ஒருவர் ஆனார். தேர்ச்சி பெற்றாலும், அவரது கல்லூரி கனவுக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டன.
இறுதியாக அனைத்தையும் தகர்த்து, கல்லூரியில் ஒரு திரையின் மறைவில் முத்துலட்சுமி உயர்கல்வியைக் கற்றார். அவர் திரை மறைவில் படித்தாலும், அவரது கல்வித் திறன் வெளி உலகுக்குத் தெரிய பல காரணங்கள் இருந்தன. அதன் ஒரு காரணமாக, அவர் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவியாக தேர்வு பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
1907ல் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் எம்.பி. மற்றும் சி.எம். வகுப்பில் சேர்ந்து உயர்கல்வியைத் தொடர்ந்தார் முத்துலட்சுமி. மருத்துவப் படிப்பில் சேர்ந்த முதல் பெண் மாணவி என்ற பெருமையை அப்போது அவர் பெற்றிருந்தார்.
மருத்துவப் படிப்பை முடித்த முத்துலட்சுமி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையோடு, எழும்பூரில் உள்ள தாய் - சேய் நல மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றினார். பிறகுதான் சுந்தரம் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு தாயானார்.
இதுவரை எந்த பெரிய லட்சியமும் இல்லாமல் இருந்த முத்துலட்சுமிக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டது. அதாவது, அவரது தந்தையார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உரிய மருத்துவம் இன்றி மிகக் குறைந்த காலத்தில் உயிரிழந்தார்.
சோதனைகளை சாதனைகளாக்குவதே சாதனையாளர்களின் செயல் என்ற வாக்குக்கு இணங்க, தனக்கு ஏற்பட்ட சோதனையை சாதனையாக்கினார். ராயல் புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்து பயிற்சி அறுவை மருத்துவம் பற்றி சிறப்புப் பயிற்சி பெற்றார். புற்றுநோய்க்கான சிகிச்சையில் பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார்.
அதே சமயம், இந்தியாவில் பெண்களின் நிலை குறித்து அவருக்கு கவலை ஏற்பட்டது. எனவே, பெண்களின் நிலையை உயர்த்த பல்வேறு வகையில் அவர் பாடுபட்டார். இவரது அயராத உழைப்பினால் மாநிலத்தில் மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவரது முயற்சியால் பெண்களுக்கு பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. குழந்தைகள், பெண்கள் நலன் காக்க தனி மருத்துவமனை, பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, இளம் விதவைகள் கல்வி கற்க வசதி, மருத்துவமனையில், பெண் நோயாளிகளுக்கு சேவையாற்ற பெண் ஊழியர்கள் நியமனம், குழந்தைகள் திருமணத்துக்கு தடை, கோயில்களில் உள்ள தேவதாசி முறை ஒழிப்பு போன்றவை இவரது முயற்சியால் நடந்த திட்டங்களாகும்.
இவரது தன்னலமற்ற சேவையாலும், முற்போக்கு எண்ணத்தாலும் இவருக்கு பல தலைவர்களுடன் பரிட்சயம் ஏற்பட்டது. மிகுந்த உந்துதல் காரணமாகவும், பெண்களின் விடுதலைக்காகவும் இவர் ஸ்தீரிதர்மம் என்ற பத்திரிக்கையை தொடங்கி நடத்தினார். இதில், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து கட்டுரைகள் எழுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளை கவனித்துக் கொள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்று இவரது முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது. மேலும் கைவிடப்பட்ட குழந்தைகள், இளம் பெண்கள், முதியோரை பராமரிக்க அவ்வை இல்லம் இவரது முயற்சியால் துவக்கப்பட்ட ஒன்றுதான். அந்த அவ்வை இல்லத்தில் தங்கியிருப்போர் கல்வி பெற வசதியாக பள்ளிகளும், ஆசிரியர் பயிற்சி பள்ளியும் துவக்கப்பட்டன.
பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் என்று கூறும் வாக்குக்கு சான்றாக வாழ்ந்து காட்டிய முத்துலட்சுமி ரெட்டி, மருத்துவராகவும், சிறந்த முற்போக்கு சிந்தனையாளராகவும் திகழ்ந்தார். 1968ஆம் ஆண்டு அவரது உடல்நிலை பாதித்ததால் இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், அவரது தன்னலமற்ற தொண்டும், அயராத முயற்சியும் தற்போது வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அவரது பெயரில், தமிழக அரசு மகப்பேறு நிதி உதவி திட்டத்தை செயல்படுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு தடைக் கற்களை படிக்கட்டுக்களாக மாற்றி சாதனை படைத்துள்ளார் முத்துலட்சுமி ரெட்டி. அந்த படிக்கட்டுக்களில் ஏறி சாதனை படைப்பதா அரிய காரியம்.. முயல்வோம்.. முடியாதது என்று ஒன்றுமில்லை.
தினமணி
முதல் என்ற வார்த்தையை எளிதாகக் கூறிவிடலாம். ஆனால் அந்த முதல் என்ற இடத்தைப் பிடிக்க பலரும் பல்வேறு கஷ்டங்களையும், வேதனைகளையும், தடைகளையும் கடந்திருப்பார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுபோலத்தான்.. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற நிலையை அடைய முத்துலட்சுமி ரெட்டி பெற்ற வேதனைகளும், சோதனைகளும் பல.
1896ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்த முத்துலட்சுமி ரெட்டி, திண்ணைப் பள்ளியில் தான் ஆரம்பக் கல்வியை துவக்கினார். குடும்ப சூழ்நிலை காரணமாக 6ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்த இருந்த முத்துலட்சுமியின், ஆசிரியர் தானே முன்வந்து கல்வி செலவை ஏற்று 8ம் வகுப்பு வரை கொண்டு சென்றார். பெண்கள் பருவம் எய்துவிட்டால் பள்ளிப் படிப்பை நிறுத்துவது அந்த காலத்து வழக்கம். அதனை தகர்த்து, தனது பெண்ணை பள்ளிக்கு அனுப்ப முன் வந்தார் முத்துலட்சுமியின் தந்தை. அந்த ஆண்டில், இடைநிலைத் தேர்வை எழுதி தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற 13 பேரில் முத்துலட்சுமியும் ஒருவர் ஆனார். தேர்ச்சி பெற்றாலும், அவரது கல்லூரி கனவுக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டன.
இறுதியாக அனைத்தையும் தகர்த்து, கல்லூரியில் ஒரு திரையின் மறைவில் முத்துலட்சுமி உயர்கல்வியைக் கற்றார். அவர் திரை மறைவில் படித்தாலும், அவரது கல்வித் திறன் வெளி உலகுக்குத் தெரிய பல காரணங்கள் இருந்தன. அதன் ஒரு காரணமாக, அவர் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவியாக தேர்வு பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
1907ல் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் எம்.பி. மற்றும் சி.எம். வகுப்பில் சேர்ந்து உயர்கல்வியைத் தொடர்ந்தார் முத்துலட்சுமி. மருத்துவப் படிப்பில் சேர்ந்த முதல் பெண் மாணவி என்ற பெருமையை அப்போது அவர் பெற்றிருந்தார்.
மருத்துவப் படிப்பை முடித்த முத்துலட்சுமி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையோடு, எழும்பூரில் உள்ள தாய் - சேய் நல மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றினார். பிறகுதான் சுந்தரம் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு தாயானார்.
இதுவரை எந்த பெரிய லட்சியமும் இல்லாமல் இருந்த முத்துலட்சுமிக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டது. அதாவது, அவரது தந்தையார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உரிய மருத்துவம் இன்றி மிகக் குறைந்த காலத்தில் உயிரிழந்தார்.
சோதனைகளை சாதனைகளாக்குவதே சாதனையாளர்களின் செயல் என்ற வாக்குக்கு இணங்க, தனக்கு ஏற்பட்ட சோதனையை சாதனையாக்கினார். ராயல் புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்து பயிற்சி அறுவை மருத்துவம் பற்றி சிறப்புப் பயிற்சி பெற்றார். புற்றுநோய்க்கான சிகிச்சையில் பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார்.
அதே சமயம், இந்தியாவில் பெண்களின் நிலை குறித்து அவருக்கு கவலை ஏற்பட்டது. எனவே, பெண்களின் நிலையை உயர்த்த பல்வேறு வகையில் அவர் பாடுபட்டார். இவரது அயராத உழைப்பினால் மாநிலத்தில் மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவரது முயற்சியால் பெண்களுக்கு பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. குழந்தைகள், பெண்கள் நலன் காக்க தனி மருத்துவமனை, பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, இளம் விதவைகள் கல்வி கற்க வசதி, மருத்துவமனையில், பெண் நோயாளிகளுக்கு சேவையாற்ற பெண் ஊழியர்கள் நியமனம், குழந்தைகள் திருமணத்துக்கு தடை, கோயில்களில் உள்ள தேவதாசி முறை ஒழிப்பு போன்றவை இவரது முயற்சியால் நடந்த திட்டங்களாகும்.
இவரது தன்னலமற்ற சேவையாலும், முற்போக்கு எண்ணத்தாலும் இவருக்கு பல தலைவர்களுடன் பரிட்சயம் ஏற்பட்டது. மிகுந்த உந்துதல் காரணமாகவும், பெண்களின் விடுதலைக்காகவும் இவர் ஸ்தீரிதர்மம் என்ற பத்திரிக்கையை தொடங்கி நடத்தினார். இதில், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து கட்டுரைகள் எழுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளை கவனித்துக் கொள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்று இவரது முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது. மேலும் கைவிடப்பட்ட குழந்தைகள், இளம் பெண்கள், முதியோரை பராமரிக்க அவ்வை இல்லம் இவரது முயற்சியால் துவக்கப்பட்ட ஒன்றுதான். அந்த அவ்வை இல்லத்தில் தங்கியிருப்போர் கல்வி பெற வசதியாக பள்ளிகளும், ஆசிரியர் பயிற்சி பள்ளியும் துவக்கப்பட்டன.
பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் என்று கூறும் வாக்குக்கு சான்றாக வாழ்ந்து காட்டிய முத்துலட்சுமி ரெட்டி, மருத்துவராகவும், சிறந்த முற்போக்கு சிந்தனையாளராகவும் திகழ்ந்தார். 1968ஆம் ஆண்டு அவரது உடல்நிலை பாதித்ததால் இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், அவரது தன்னலமற்ற தொண்டும், அயராத முயற்சியும் தற்போது வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அவரது பெயரில், தமிழக அரசு மகப்பேறு நிதி உதவி திட்டத்தை செயல்படுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு தடைக் கற்களை படிக்கட்டுக்களாக மாற்றி சாதனை படைத்துள்ளார் முத்துலட்சுமி ரெட்டி. அந்த படிக்கட்டுக்களில் ஏறி சாதனை படைப்பதா அரிய காரியம்.. முயல்வோம்.. முடியாதது என்று ஒன்றுமில்லை.
தினமணி
Re: இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி
தெரிந்து கொண்டோம் பகிர்வுக்கு நன்றி!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» இந்தியாவின் முதல் பெண் விமானி
» இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட பெண் போராளி யார்
» இந்தியாவின் முதல் பெண் மருத்துவருக்காக டூடில் வெளியிட்ட கூகுள்!
» ஜெ.மரணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பெண் மருத்துவர் கைது
» சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
» இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட பெண் போராளி யார்
» இந்தியாவின் முதல் பெண் மருத்துவருக்காக டூடில் வெளியிட்ட கூகுள்!
» ஜெ.மரணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பெண் மருத்துவர் கைது
» சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|