Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
Page 1 of 1 • Share
தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
கடந்த மூன்று வாரங்களாக சிரமமப்படுகிறேன். தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
தெரிந்தவர்கள் பதில் கூறவும்.
தெரிந்தவர்கள் பதில் கூறவும்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
கீழ் வரும் வலி நிவாரணிகளில் தங்களுக்கு தகுந்தவற்றை மேற்கொள்ளுங்கள் விரைவில் குணமாகும்.
• பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்./சுக்கு காபி குடிக்கலாம் தொண்டைக்கு இதமாகும்.
• சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.
• அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.
• குரல் மாற்றத்தை சரிசெய்ய:
கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிகொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும்.
• தொண்டைப் புண் ஆற:
வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும். அல்லது கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் ஆறும்.
• தொண்டை நோய்:
மாதுளம் பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேனும் கலந்து சாப்பிட தொண்டை நோய் அகலும்.
• தொண்டை கரகரப்பு குணமாக:
சுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். அல்லது பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.
• தொண்டைக் கட்டு குணமாக:
மாவிலை, பச்சை இலையை நெருப்பில் போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால் தொண்டைக்கட்டு குணமாகும். அல்லது மாவிலையை தேன் விட்டு வதக்கி நீரில் கலந்து அருந்த தொண்டைக்கட்டு, குரல் கமறல் தீரும்.
• பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்./சுக்கு காபி குடிக்கலாம் தொண்டைக்கு இதமாகும்.
• சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.
• அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.
• குரல் மாற்றத்தை சரிசெய்ய:
கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிகொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும்.
• தொண்டைப் புண் ஆற:
வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும். அல்லது கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் ஆறும்.
• தொண்டை நோய்:
மாதுளம் பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேனும் கலந்து சாப்பிட தொண்டை நோய் அகலும்.
• தொண்டை கரகரப்பு குணமாக:
சுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். அல்லது பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.
• தொண்டைக் கட்டு குணமாக:
மாவிலை, பச்சை இலையை நெருப்பில் போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால் தொண்டைக்கட்டு குணமாகும். அல்லது மாவிலையை தேன் விட்டு வதக்கி நீரில் கலந்து அருந்த தொண்டைக்கட்டு, குரல் கமறல் தீரும்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றிகள் பல ...
பயன்படுத்தி பயனடைந்து... சொல்கிறேன்.
பயன்படுத்தி பயனடைந்து... சொல்கிறேன்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
கூடுதல் தகவல் :
மிக எளிய வைத்தியம் :
முருங்கை இலை சாற்றுடன் சற்று சுண்ணாம்பு கலந்து தொண்டையின் மேல்புறத்தில் பற்று போடுங்கள் . உடனடி நிவாரணம் . இரண்டொரு நாளில் உங்களால் நன்றாக பிசிறு இல்லாமல் பேச என்ன சத்தமே போட முடியும் ... எங்களால் உங்கள் சத்தத்தை இங்கு கேட்கவும் முடியும் ...
குரல் வளம் சிறப்படைய வாழ்த்துகிறோம்
மிக எளிய வைத்தியம் :
முருங்கை இலை சாற்றுடன் சற்று சுண்ணாம்பு கலந்து தொண்டையின் மேல்புறத்தில் பற்று போடுங்கள் . உடனடி நிவாரணம் . இரண்டொரு நாளில் உங்களால் நன்றாக பிசிறு இல்லாமல் பேச என்ன சத்தமே போட முடியும் ... எங்களால் உங்கள் சத்தத்தை இங்கு கேட்கவும் முடியும் ...
குரல் வளம் சிறப்படைய வாழ்த்துகிறோம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
உங்கள் பிரச்சனை சரியானதா ஜேக்?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்./சுக்கு காபி குடிக்கலாம் தொண்டைக்கு இதமாகும்.
இது எளிமையாக இருக்கும்... எனக்கும் சில சமயம் கட்டுகிறது... இனி சரி செய்து கொள்கிறேன்...
தகவலைப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுகள்
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
ஸ்ரீராம் wrote:உங்கள் பிரச்சனை சரியானதா ஜேக்?
முழுமுதலோன் அவர்கள் சொன்ன எளிய வைத்தியத்தை இல்லத்தரசியிடம் சொன்னேன். முருங்கைகீரையை அரைத்து சுண்ணாம்பு கலந்து வைத்திருக்கிறார்கள். இரவு தூங்கும்போது போடப்போகிறேன்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
ஓவரா பேசினா இப்படித்தான் ஆகும் ஜேக்கடந்த மூன்று வாரங்களாக சிரமமப்படுகிறேன். தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
முரளிராஜா wrote:ஓவரா பேசினா இப்படித்தான் ஆகும் ஜேக்கடந்த மூன்று வாரங்களாக சிரமமப்படுகிறேன். தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
3 வாரத்திற்கு முன்பு சென்னையில் ஒரு திருமணம். தண்ணீர் மாறி குடித்ததனால் வந்த வினை.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
ஒ உங்களுக்கு இந்த பழக்கமும் உண்டா?தண்ணீர் மாறி குடித்ததனால்
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
முரளிராஜா wrote:ஒ உங்களுக்கு இந்த பழக்கமும் உண்டா?தண்ணீர் மாறி குடித்ததனால்
அடக் கடவுளே...
இதற்கு இபபடியொரு அர்த்தம் வேறு இருக்கா
சரி... அதிலே மூழ்கி முத்தெடுக்கிற உங்களுக்குத்தானே இதெல்லாம் தெரியும்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
முழுமுதலோன் wrote:கூடுதல் தகவல் :
மிக எளிய வைத்தியம் :
முருங்கை இலை சாற்றுடன் சற்று சுண்ணாம்பு கலந்து தொண்டையின் மேல்புறத்தில் பற்று போடுங்கள் . உடனடி நிவாரணம் . இரண்டொரு நாளில் உங்களால் நன்றாக பிசிறு இல்லாமல் பேச என்ன சத்தமே போட முடியும் ... எங்களால் உங்கள் சத்தத்தை இங்கு கேட்கவும் முடியும் ...
குரல் வளம் சிறப்படைய வாழ்த்துகிறோம்
தங்கள் கூற்றுப்படி... நேற்று இரவு 1 மணியளவில் பற்று போட்டேன். இப்போது மணி 6:45 அதிகாலை. மூன்று வாரமாக என்னை தொல்லை செய்த தொண்டை கட்டு - பேச விடாமல் தடுத்த பிரச்சினை... 6:45 மணி நேரத்தில் விடுதலை. நம்பமுடியவில்லை. ஆச்சர்யம். அனுபவமாய் சொல்கிறேன். தங்களுக்கு மனதார மனசார மகிழ்ச்சியுடன் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
காரணம். 3 வாரமாக ஊசி, மருந்து மாத்திரை... வெறுத்துப் போய் நிறுத்தி விட்டேன். பெரியோர்களின் பச்சிலை நாட்டு வைத்தியத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொண்டேன். நன்றிகள் பல.
கேள்வி கேட்டவுடன்... தாமதமின்றி பதிலளித்த சகோதரி.சௌம்யா அவர்களுக்கு எனது மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பற்பல மருத்துவ ஆலோசனைகளை தாராளமாய் அள்ளி வழங்கிய தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்த்துக்கள்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
ஜேக்குக்கு உதவிய sawmya அவர்களுக்கும் , முழு முதலோன் அண்ணாவுக்கும் நன்றி.
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
-
மேலும் ஒரு எளிய பாட்டி வைத்தியம்
-
சிறிதளவு பெருஞ்சீரகம் தினமும் காலையில்
வெறும் வயிற்றில் சாப்பிட தொண்டைக் கட்டு
குறையும்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
ஆகா அருமை அருமை. இவர்களின் உதவிகள் என்னையும் புல்லரிக்க வைத்துவிட்டது.
உடன் உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
உடன் உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
முருங்கைஇலை வைத்தியம் சொல்லலாம்னு வந்தேன்...
சரி ஆயிருச்சா...
தொண்டை க்ட்டி இருந்தால் நாங்க இந்த வைத்தியம் தான் செய்வோம்
சரி ஆயிருச்சா...
தொண்டை க்ட்டி இருந்தால் நாங்க இந்த வைத்தியம் தான் செய்வோம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
ரானுஜா wrote:முருங்கைஇலை வைத்தியம் சொல்லலாம்னு வந்தேன்...
சரி ஆயிருச்சா...
தொண்டை க்ட்டி இருந்தால் நாங்க இந்த வைத்தியம் தான் செய்வோம்
எப்பவுமே தாங்கள் டூ லேட் பாட்டிதானே....
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
ஜேக் wrote:ரானுஜா wrote:முருங்கைஇலை வைத்தியம் சொல்லலாம்னு வந்தேன்...
சரி ஆயிருச்சா...
தொண்டை க்ட்டி இருந்தால் நாங்க இந்த வைத்தியம் தான் செய்வோம்
எப்பவுமே தாங்கள் டூ லேட் பாட்டிதானே....
வயசாயிடுச்சுல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
என் அப்பாவிற்கு அதிக மாத்திரை சாப்பிடுவதால் தொண்டை கட்டி உள்ளது ஒரு வரமாக அவரால சரியாக பேசமுடியவில்லை இதற்கு முருங்கைக்கீரை சாறு தீர்வாக இருக்குமா ?இல்லை வேற ஏதும் தீர்வு உண்டா .
Chithra- புதியவர்
- பதிவுகள் : 1
Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து
வாயில் போட்டு அடக்கிக் கொள்ள
வேண்டும்.
-
ஊறிய உமிழ்நீரை முழுங்கி விடவும்
வாயில் போட்டு அடக்கிக் கொள்ள
வேண்டும்.
-
ஊறிய உமிழ்நீரை முழுங்கி விடவும்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Similar topics
» மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
» மனைவியிடம் எந்த கேள்வியும் கேட்க முடியலை...!
» தொண்டை கரகரப்பா?
» தொண்டை வறட்சி
» தொண்டை கட்டுக்கு சுக்கு
» மனைவியிடம் எந்த கேள்வியும் கேட்க முடியலை...!
» தொண்டை கரகரப்பா?
» தொண்டை வறட்சி
» தொண்டை கட்டுக்கு சுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|