Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
Page 1 of 1 • Share
விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
அண்மையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுரைக்குப் பயணித்தேன். பஸ்ஸில் எனக்குப் பின்னால் கைக் குழந்தையுடன் ஓர் இளம் தம்பதி. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏறக்குறைய அனைத்து பயணிகளும் தூங்க தொடங்கி விட்டனர். அந்த இளம் தம்பதி, குழந்தைக்கான மெத்தையை தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க வைத்தனர்.
நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது ஒரு மோட்டலில் (சாலை வழி உணவகம்) பஸ் நின்றது. அங்கே இருந்த ஒலிபெருக்கியில் பலத்த சத்தத்தில் ஒரு டப்பாங்குத்து பாட்டு கத்தியது. இருப்பினும், என்னைப் போன்ற ஒன்றிரண்டு பயணிகளைத் தவிர, யாரும் இறங்கவில்லை. மற்ற அனைவருமே நல்ல தூக்கத்தில் இருந்தனர்.
அந்த மோட்டலின் கல்லாவில் இருந்தவர், அவரின் அருகில் இருந்த ஒருவரைப் பார்த்து “போ’ என்றார். உடனே அந்த நபர் கையில் ஒரு காலி தண்ணீர் கேனை எடுத்துக்கொண்டு அந்த கேனால் பஸ்ûஸ ஓங்கி ஓங்கி தட்டியபடியே சுற்றி சுற்றி வந்தார். அவ்வளவுதான், நல்ல தூக்கத்தில் டம் டம் என்று தட்டும் சத்தம் கேட்டு அனைத்து பயணிகளும் வாரிச் சுருட்டி எழுந்தனர். தரையில் படுத்திருந்த குழந்தை வீறிட்டு அழும் சத்தம், கீழே அவர்கள் கதற விடும் பாட்டுச் சத்தத்தையும் மீறி கேட்டது.
சரி, கீழே இறங்கி விட்டோமே ஒரு டீ சாப்பிடுவோம் என்று நினைத்து “டீ எவ்வளவு’ என கேட்டேன். “பதினைந்து ருபாய்’ என்றனர். டீ குடிக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு பிஸ்கெட் வாங்கலாம் என்று போனேன். தரமான நிறுவன பெயர்களில் ஒன்றிரண்டு எழுத்துகளை விழுங்கிவிட்டு அதே போன்ற பேக்கிங்கில் உள்ளூர் தயாரிப்பு பிஸ்கெட்களாக வைத்திருந்தனர். உதாரணமாக, மில்க் பிக்கீஸ் என்பதற்கு பதில் மில்க் பிக்ஸ் என ஓர் ஆங்கில எழுத்தை தவிர்த்துவிட்டு, கம்பெனி பிஸ்கெட் போன்ற பேக்கிங்கில் விற்றனர். அதையும் வாங்க மனமின்றி யோசித்தபடி நின்றேன்.
அப்போது பஸ்ஸில் வந்த கைக்குழந்தையின் தந்தையான அந்த இளைஞர் கடைக்காரருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். “பஸ்ஸில் தட்டுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? நான் போலீஸில் புகார் செய்வேன்’ என்ற ரீதியில் அவர் பேச… இவரைப்போல எத்தனையோ பேரை பார்த்துவிட்ட மிதப்பில் கடைக்காரர் பேச… இருவருக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. பிரச்னை அதிகரித்தால் பயணத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற சுயநலம் தோன்றவே, அந்த இளைஞரைச் சமாதானம் செய்து பஸ்ஸில் ஏற்றி விட்டேன்.
சில நிமிடங்களில் பஸ் புறப்பட்டது. நடத்துநரிடம் பேசினேன். “உங்களுக்கு ஓசியில் உணவு கிடைக்கிறது என்பதற்காக இப்படி பயணிகளின் உயிருடன் விளையாடு கிறீர்களே” என்று நான் துவங்க… தொடர்ந்து ஒவ்வொரு பயணியும் சகட்டுமேனிக்கு ஓட்டுநரையும் நடத்துநரையும் வறுத்தெடுக்க துவங்கினர்.
சற்று நேரம் பேசாமல் இருந்த நடத்துநர் பேசத் தொடங்கினார்.“இவ்வளவு பேர் பஸ்சுல இருந்து இறங்கினீங்களே நாங்க என்ன சாப்பிட்டோம்னு பாத்தீங்களா…. வெறும் டீ தான் சாப்பிட்டோம். இங்க இருக்கற பொருள் எப்படி இருக்கும்னு எங்களுக்கு தெரியும். அதுனால இதுமாதிரி இடங்கள்ல நாங்க சாப்பிடவே மாட்டோம்… அப்புறம் ஏன் நிறுத்துறோம்னு அடுத்த கேள்வி கேப்பீங்க… இங்க நாங்க நிறுத்தலேன்னா எங்களுக்கு மெமோ கொடுப்பாங்க… காரணம் என்னன்னு நீங்களே புரிஞ்சுக்கங்க’ என்றார்…
அவர் தரப்பில் இருக்கும் நியாயம் புரிந்தது. ஆனால், என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. தூங்கும் பயணிகளை எழுப்ப காலி டப்பாவால் பஸ்ûஸ தட்டும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது? ஒரு நிறுத்தத்தில் பஸ்ûஸ விட்டு பயணிகள் இறங்கும் முன் பஸ் புறப்பட்டால் ஓட்டுநரை எச்சரிக்கும் விதத்தில் ஒரு பயணி லேசாக கையால் பஸ்ûஸ தட்டினாலே கோபித்துக் கொள்கிற ஓட்டுநரும் நடத்துநரும் இந்த நபர் காலி பாட்டிலால் தொடர்ந்து சத்தமாக தட்டுவதை தங்கள் மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லலாமே…
உணவகத்தை யார் வேண்டுமானாலும் நடத்தட்டும். நியாயமான விலையில் உணவையும் பொருள் களையும் தரமாக கொடுக்கலாமே. ரயில் நிலையங்களில் உள்ளது போல, இதுபோன்ற உணவகங்களிலும் விலை, எடை போன்றவற்றை முறைப் படுத்தலாமே. உணவுப் பொருள் தரம், போலி தயாரிப்புகள் தடுப்பு, தரக் கட்டுப்பாடு என விதவிதமான அரசுத் துறைகள் இருந்தும் அவற்றின் பார்வையில் இந்த மோட்டல்கள் படவில்லையா?… இப்படி பல கேள்விகள்… எல்லாமே விடையில்லா வினாக்கள்.
இது பற்றி கீழே உறவுகள் விவாதிக்கலாம்...
நன்றி: முகநூல்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
இதுப்போல நிறைய இருக்கு. ஆனா தீர்வு தான் கிடைக்கமாட்டேங்குது.
ஒரு படத்துல மதுரை மல்லியை வடிவேல் கிட்ட விக்க ட்ரைவரை பூக்காரன் கரெக்ட் செய்வானே
ஒரு படத்துல மதுரை மல்லியை வடிவேல் கிட்ட விக்க ட்ரைவரை பூக்காரன் கரெக்ட் செய்வானே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
-
இதெல்லாம் சகஜம்பபா...
-
பேருந்து நிலையங்களில் கட்டண கழிவறையில்
சிறு நீர் கழிக்க ஆண்களுக்கு ஒரு ரூபாய் என்றால்
பெண்களுக்கு இரண்டு ரூபாய் வசூலிக்கிறார்கள்..!!
-
காரணம் என்ன என்று தெரியுமா..?!
இதெல்லாம் சகஜம்பபா...
-
பேருந்து நிலையங்களில் கட்டண கழிவறையில்
சிறு நீர் கழிக்க ஆண்களுக்கு ஒரு ரூபாய் என்றால்
பெண்களுக்கு இரண்டு ரூபாய் வசூலிக்கிறார்கள்..!!
-
காரணம் என்ன என்று தெரியுமா..?!
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
இதற்கெல்லாம் காரணம் பணம் மட்டுமே. மற்றவர் உயிருடன் விளையாடி பணம் பண்ணும் பிசாசுகளுக்கு நல்ல சாவே வராது.
ஸ்ரீமுகி
ஸ்ரீமுகி
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
மனிதநேயமற்ற செயல்.
தன்னுடைய குடும்பத்தை மறந்துவிடுகிறார்கள்.
தன்னுடைய குடும்பத்தை மறந்துவிடுகிறார்கள்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
அப்படிப்பட்ட கடைகள் யாருக்கு சொந்தமானது? அதற்கு பின்புலமாக, பக்கபலமாக இருப்பவர்கள் யார்? யார்? இதன் மூலம் யார்? யார் ? பயனடைகிறார்கள் என ஆராய்ச்சியில் ஈடுபட்டால் பலத்த அதிர்ச்சிக்குள்ளாவீர்கள். அதுமட்டுமல்ல... இப்படிப்பட்ட பதிவுகளுக்கு கூட பிரச்சினைகள் வரலாம்....
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
-
சமையல் எண்ணெயை ஒரு முறை பயன்
படுத்திய பின் மறுபடியும் பயன்படுத்தினால்
உடலுக்கு கேடு...
-
வீடுகளில் இதை யாரும் பின்பற்றுகிறோமா...?
-
ஸ்டார் ஓட்டல்களில் ஒரு முறை பயன்படுத்திய
எண்ணெயை மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள்...
-
அதனை ரோட்டோரத்தில் பஜ்ஜி மாதிரி தின்பண்டம்
தயாரித்து விற்பவர்கள் குறைந்த விலைக்கு வாங்கி வந்து
பயன்படுத்துவார்கள்...
-
ஆக எல்லாமே அணுகிப் பார்த்தால் தர்ம சங்கடம்தான்..!!
-
சூடான வெல்லப்பாகுவில் பொரியை உருண்டை பிடித்து
விற்பார்கள்...தயாரிக்கும் இடத்தில் சூடு பொறுக்காமல்
உள்ளங்கைகளை நாக்கால் தடவிக் கொள்வார்கள்...
இதைப்பார்த்தபின் அந்த உருண்டைகளை வாங்குவோமா..??
-
இப்படித்தான் எல்லாம்..காணாதவரை எல்லாம்
நல்லதுக்கே..!
சமையல் எண்ணெயை ஒரு முறை பயன்
படுத்திய பின் மறுபடியும் பயன்படுத்தினால்
உடலுக்கு கேடு...
-
வீடுகளில் இதை யாரும் பின்பற்றுகிறோமா...?
-
ஸ்டார் ஓட்டல்களில் ஒரு முறை பயன்படுத்திய
எண்ணெயை மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள்...
-
அதனை ரோட்டோரத்தில் பஜ்ஜி மாதிரி தின்பண்டம்
தயாரித்து விற்பவர்கள் குறைந்த விலைக்கு வாங்கி வந்து
பயன்படுத்துவார்கள்...
-
ஆக எல்லாமே அணுகிப் பார்த்தால் தர்ம சங்கடம்தான்..!!
-
சூடான வெல்லப்பாகுவில் பொரியை உருண்டை பிடித்து
விற்பார்கள்...தயாரிக்கும் இடத்தில் சூடு பொறுக்காமல்
உள்ளங்கைகளை நாக்கால் தடவிக் கொள்வார்கள்...
இதைப்பார்த்தபின் அந்த உருண்டைகளை வாங்குவோமா..??
-
இப்படித்தான் எல்லாம்..காணாதவரை எல்லாம்
நல்லதுக்கே..!
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
எனக்கு தெரிந்த ஒரு பையன் இது போன்ற மோட்டலில் வேலை செய்தான். அவன் சொன்ன தகவல்:
கடையை நடத்துபவர் ஒரு குறிப்பிட்ட பஸ் டெப்போவில் அனுமதி வாங்கிவிடுவார்கள். அந்த டெப்போவில் உள்ள அனைத்து பேருந்துகளும் அந்த வழித்தடத்தில் செல்லும் போது நின்று தான் செல்ல வேண்டும். இல்லையேல் மெமோ, அபாரதம் எல்லாம் உண்டு.
நின்று செல்லும் பேருந்துக்கு 60 ரூ கடையில் இருந்து தர வேண்டும். இது டெப்போவிற்கு செலுத்தும் கட்டணம் . இது தவிர ஓட்டுனர் நடத்துனருக்கு தரும் டிப்ஸ் நாமறிந்தது.
இதற்காக தான் அவர்கள் நம்மிடையே கொள்ளை அடிக்கிறார்கள்.
கடையை நடத்துபவர் ஒரு குறிப்பிட்ட பஸ் டெப்போவில் அனுமதி வாங்கிவிடுவார்கள். அந்த டெப்போவில் உள்ள அனைத்து பேருந்துகளும் அந்த வழித்தடத்தில் செல்லும் போது நின்று தான் செல்ல வேண்டும். இல்லையேல் மெமோ, அபாரதம் எல்லாம் உண்டு.
நின்று செல்லும் பேருந்துக்கு 60 ரூ கடையில் இருந்து தர வேண்டும். இது டெப்போவிற்கு செலுத்தும் கட்டணம் . இது தவிர ஓட்டுனர் நடத்துனருக்கு தரும் டிப்ஸ் நாமறிந்தது.
இதற்காக தான் அவர்கள் நம்மிடையே கொள்ளை அடிக்கிறார்கள்.
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
கொடுமையிலும் கொடுமை.....
ஒன்றும் செய்யா முடியாது அந்த ஆண்டவனே கிழே இறங்கி வந்தாலும் .......!!!!!!!!??????
ஒன்றும் செய்யா முடியாது அந்த ஆண்டவனே கிழே இறங்கி வந்தாலும் .......!!!!!!!!??????
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
நானும் சென்னை டு கும்பகோணம் வந்துகொண்டிருந்தேன். பஸ் செங்கல்பட்டு தாண்டி ஒரு இடத்தில் நிறுத்தியது தெரியவில்லை, ஆனால் ஒருவன் தகர டப்பாவில் கம்பியில் கட்டி மடார் மடார் என அடித்தான், அங்கே போன தூக்கம் நெய்வேலி கிட்ட பஸ் வந்தப்பதான் தூங்கினேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
எப்போது சென்னை வந்திர்கள் சொல்லி இருந்தால் நான் உங்களை வந்து சந்தித்து இருப்பேனே ......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
மீண்டும் உபயோகிக்க மாட்டார்கள் நல்ல விஷயம். ஆனா அதை ஏன் ரோட்டோர்த்தில் தின்பண்டம் தயாரிப்பவரிடம் குறைந்த காசுக்க்கு குடுக்க வேண்டும். நல்லவர்களாக இருந்தால் கெடுதல் என்று தெரிந்து கீழே கொட்டிவிட வேண்டியது தானே? இது முரண்படுதே.....
ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுபவர்கள் ஆரோக்கியம் தான் முக்கியமா? நாம என்ன அனாமத்தாவா இருக்கோம்.
ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுபவர்கள் ஆரோக்கியம் தான் முக்கியமா? நாம என்ன அனாமத்தாவா இருக்கோம்.
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
ரானுஜா wrote:மீண்டும் உபயோகிக்க மாட்டார்கள் நல்ல விஷயம். ஆனா அதை ஏன் ரோட்டோர்த்தில் தின்பண்டம் தயாரிப்பவரிடம் குறைந்த காசுக்க்கு குடுக்க வேண்டும். நல்லவர்களாக இருந்தால் கெடுதல் என்று தெரிந்து கீழே கொட்டிவிட வேண்டியது தானே? இது முரண்படுதே.....
ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுபவர்கள் ஆரோக்கியம் தான் முக்கியமா? நாம என்ன அனாமத்தாவா இருக்கோம்.
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
ரானுஜா wrote:மீண்டும் உபயோகிக்க மாட்டார்கள் நல்ல விஷயம். ஆனா அதை ஏன் ரோட்டோர்த்தில் தின்பண்டம் தயாரிப்பவரிடம் குறைந்த காசுக்க்கு குடுக்க வேண்டும். நல்லவர்களாக இருந்தால் கெடுதல் என்று தெரிந்து கீழே கொட்டிவிட வேண்டியது தானே? இது முரண்படுதே.....
ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுபவர்கள் ஆரோக்கியம் தான் முக்கியமா? நாம என்ன அனாமத்தாவா இருக்கோம்.
கீழே கொட்டுவதற்கும் சேர்த்து அவர்கள் பணம் செலுத்தகிறார்கள். வீணாவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
நாம் அப்படியா?! பழைய கருவாட்டு குழம்பை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து 4 நாளைக்கு ஊத்தி ஊத்தி சாப்பிடுகிற இரகமாச்சே நாம... வருத்தப்பட்டு என்ன பயன்?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
தங்கள் பதில் மிக அருமை அக்காரானுஜா wrote:மீண்டும் உபயோகிக்க மாட்டார்கள் நல்ல விஷயம். ஆனா அதை ஏன் ரோட்டோர்த்தில் தின்பண்டம் தயாரிப்பவரிடம் குறைந்த காசுக்க்கு குடுக்க வேண்டும். நல்லவர்களாக இருந்தால் கெடுதல் என்று தெரிந்து கீழே கொட்டிவிட வேண்டியது தானே? இது முரண்படுதே.....
ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுபவர்கள் ஆரோக்கியம் தான் முக்கியமா? நாம என்ன அனாமத்தாவா இருக்கோம்.
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
ஜேக் wrote:ரானுஜா wrote:மீண்டும் உபயோகிக்க மாட்டார்கள் நல்ல விஷயம். ஆனா அதை ஏன் ரோட்டோர்த்தில் தின்பண்டம் தயாரிப்பவரிடம் குறைந்த காசுக்க்கு குடுக்க வேண்டும். நல்லவர்களாக இருந்தால் கெடுதல் என்று தெரிந்து கீழே கொட்டிவிட வேண்டியது தானே? இது முரண்படுதே.....
ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுபவர்கள் ஆரோக்கியம் தான் முக்கியமா? நாம என்ன அனாமத்தாவா இருக்கோம்.
கீழே கொட்டுவதற்கும் சேர்த்து அவர்கள் பணம் செலுத்தகிறார்கள். வீணாவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
நாம் அப்படியா?! பழைய கருவாட்டு குழம்பை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து 4 நாளைக்கு ஊத்தி ஊத்தி சாப்பிடுகிற இரகமாச்சே நாம... வருத்தப்பட்டு என்ன பயன்?!
நான் என்ன சொல்றேன் நீங்க என்ன சொல்றிங்க...
வீணாவதைப் பற்றி கவலை கொள்ளாதவர்கள், அதற்கும் சேர்த்தே காசு வசூலிப்பவர்கள் ஏன் கீழே கொட்டாமல் அதையும் காசுக்கு விக்கிறாங்க
கருவாட்டுக் குழம்பு பழசாக பழசாக டேஸ்ட் அதிகமாகும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
முரளிராஜா wrote:தங்கள் பதில் மிக அருமை அக்காரானுஜா wrote:மீண்டும் உபயோகிக்க மாட்டார்கள் நல்ல விஷயம். ஆனா அதை ஏன் ரோட்டோர்த்தில் தின்பண்டம் தயாரிப்பவரிடம் குறைந்த காசுக்க்கு குடுக்க வேண்டும். நல்லவர்களாக இருந்தால் கெடுதல் என்று தெரிந்து கீழே கொட்டிவிட வேண்டியது தானே? இது முரண்படுதே.....
ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுபவர்கள் ஆரோக்கியம் தான் முக்கியமா? நாம என்ன அனாமத்தாவா இருக்கோம்.
நன்றி மு.ரா. புரியாத ஜேக்குக்கு புரிய வைங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
பழசுல எப்பவுமே taste அதிகம் ஆனால் இது புசுதுகளுக்கு எங்கே தெரிய போகுது ......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
முழுமுதலோன் wrote:பழசுல எப்பவுமே taste அதிகம் ஆனால் இது புசுதுகளுக்கு எங்கே தெரிய போகுது ......
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: விடையில்லா வினாக்கள் - விவாதக்களம்
ஓட்டல்கள் மோட்டல்கள் ஆனது எப்படி சார்?
மோட்டலுன்னா மோசமா தானே இருக்கும்.
மோட்டலுன்னா மோசமா தானே இருக்கும்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Similar topics
» விவாதக்களம்..
» பொது அறிவு வினாக்கள்
» அக்குப்பங்சர் விடை தேடும் வினாக்கள்
» தமிழ் பொது அறிவு வினாக்கள்.
» ரீசனிங் வினாக்கள்: தேவை அடிப்படை புரிதல்
» பொது அறிவு வினாக்கள்
» அக்குப்பங்சர் விடை தேடும் வினாக்கள்
» தமிழ் பொது அறிவு வினாக்கள்.
» ரீசனிங் வினாக்கள்: தேவை அடிப்படை புரிதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|