Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நமக்கு வருவது எந்தத் தலைவலி?
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: தலை
Page 1 of 1 • Share
நமக்கு வருவது எந்தத் தலைவலி?
தலைவலிகளின் வகைகள் பற்றித் தெரிந்து கொள்வோம்.
மைக்ரேன் தலைவலி:
மைக்ரேன் அல்லது ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடும். பெற்றோரில் ஒருவருக்கு மைக்ரேன் இருந்தால், குழந்தைக்கு வரும் வாய்ப்பு 50%; இருவருக்கும் இருந்தால் வரும் வாய்ப்பு 75%. மைக்ரேன் தலைவலிகள் முன்னெச்சரிக்கைகள் அல்லது சமிக்ஞையுடனோ (AURA) அல்லது அவை இன்றியோ வரக்கூடும். சமிக்ஞைகள், திடீரென்று தோன்றி மறையும் பார்வைக் கோளாறுகள், தோலில் தொடு உணர்ச்சி, நல்ல மணம் அல்லது துர்நாற்றம், காதில் இரைச்சல், இசை, பேசும் குரல்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக, மைக்ரேன் வருவதற்கு முன்பாக நோயாளியால் அறியப்படும்.
மைக்ரேனைத் தூண்டக்கூடிய சில காரணிகள் உள்ளன. அவற்றை அறிந்து, தவிர்க்க முடிந்தால், ஓரளவுக்கு மைக்ரேனைக் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, ‘டைரமின்’ என்னும் வேதிப்பொருள் அதிகமாக உள்ள கெட்டுப்போன ‘சீஸ்’, வாழைப் பழங்கள், சாக்லெட், மது வகைகள் போன்றவை மைக்ரேனைத் தூண்டக்கூடும். அதிக நெடியுள்ள வாசனைப் பொருட்கள், மாதவிடாய் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், சோர்வு, மினுக்கும் வெளிச்சம், அதிகத் தூக்கம் அல்லது தூக்கமின்மை, அதிக காபி, மது, சில கொழுப்பு உணவு வகைகள், நீண்ட நேரம் கணினியைப் பார்த்தல், தட்பவெப்பநிலை மாற்றங்கள் போன்றவையும் மைக்ரேனைத் தூண்டவல்லவை என்பதால், அவற்றைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
1. சமிக்ஞை தோன்றும் நிலையிலேயே அல்லது வலி மிதமாக இருக்கும் நிலையிலேயே மருந்துகள் உட்கொண்டால் மைக்ரேன் ஓரளவுக்குக் கட்டுப்படும். மிகத் தீவிரமான வலி, வாந்தி ஆகியவை தோன்றிய பிறகு, மருந்துகள் வேலை செய்யாமல் போகலாம்.
2.மைக்ரேனைத் தூண்டும் காரணிகளைத் தவிர்ப்பது அவசியம் அது நல்ல நோய்த் தடுப்பு முறை!
3.பீட்டா பிளாக்கர்கள், வலிப்பு நோய் மருந்துகள், மனஇறுக்கத்தைக் குறைக்கும் மருந்துகள், கால்சியம் சேனல் பிளாக்கர்கள் மற்றும் புதிதாக வந்துள்ள ‘டிரிப்டான்ஸ்’ (Tryptons) போன்ற மருந்துகள் மைக்ரேன் தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கக்கூடியவை.
டென்ஷன் தலைவலி:
முப்பது வயது முதல் 40 வயதுவரை உள்ளவர்களுக்கு டென்ஷன் தலைவலிகள் அதிக அளவில் வருகின்றன. 90% மகளிருக்கும், 70% ஆண்களுக்கும் டென்ஷன் தலைவலி வருவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. மிகக் குறைந்த அளவு மருந்துகள், அளவான ஓய்வு, நல்ல பழக்கவழக்கங்கள் போன்றவை மனதையும் உடலையும் தளர்த்தி, டென்ஷன் தலைவலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கக்கூடியவை. ஐஸ் ஒத்தடம், இளஞ்சூடான நீரில் குளித்தல், சரியான நேர நிர்வாகம், அக்குபங்சர், சுவாசப் பயிற்சி, மனோ நிலை - நடத்தை முறையை மாற்றும் பயிற்சிகள், மசாஜ், ரிலாக்ஸேஷன் பயிற்சிகள் போன்றவையும் உதவும். திட்டமிட்ட, அமைதியான, ஆரோக்கியமான மன / உடல்நிலையுடன் கூடிய வாழ்க்கை போன்றவை நம்மிடம் டென்ஷன் தலைவலிகளை நெருங்கவிடாது.
கிளஸ்டர் தலைவலி அல்லது ‘கொத்துத்’ தலைவலி: மைக்ரேனைப் போலவே வரக்கூடியவை. ஆனால் தினமும், பல முறை கொஞ்ச நேரமே இருக்கக்கூடிய (கொத்து கொத்தாக) தலைவலி இது! சில நாட்கள் அல்லது சில மாதங்கள் இருந்து, பிறகு ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை காணாமல் போய்விடக் கூடியவை. புகை பிடித்தல், மதுப் பழக்கம் உள்ள ஆண்களுக்கு (75%) அதிகமாக வரக் கூடியது.
இந்த வலியின் கொடுமை தாங்காமல், சிலர் தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சிப்பார்கள். அதனால் இதற்கு ‘தற்கொலைத் தலைவலி’ என்ற காரணப் பெயரும் உண்டு. இதற்கு உடனடி மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் அவசியம்.
நன்றி: தி இந்து – தமிழ் பதிப்பு
மைக்ரேன் தலைவலி:
மைக்ரேன் அல்லது ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடும். பெற்றோரில் ஒருவருக்கு மைக்ரேன் இருந்தால், குழந்தைக்கு வரும் வாய்ப்பு 50%; இருவருக்கும் இருந்தால் வரும் வாய்ப்பு 75%. மைக்ரேன் தலைவலிகள் முன்னெச்சரிக்கைகள் அல்லது சமிக்ஞையுடனோ (AURA) அல்லது அவை இன்றியோ வரக்கூடும். சமிக்ஞைகள், திடீரென்று தோன்றி மறையும் பார்வைக் கோளாறுகள், தோலில் தொடு உணர்ச்சி, நல்ல மணம் அல்லது துர்நாற்றம், காதில் இரைச்சல், இசை, பேசும் குரல்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக, மைக்ரேன் வருவதற்கு முன்பாக நோயாளியால் அறியப்படும்.
மைக்ரேனைத் தூண்டக்கூடிய சில காரணிகள் உள்ளன. அவற்றை அறிந்து, தவிர்க்க முடிந்தால், ஓரளவுக்கு மைக்ரேனைக் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, ‘டைரமின்’ என்னும் வேதிப்பொருள் அதிகமாக உள்ள கெட்டுப்போன ‘சீஸ்’, வாழைப் பழங்கள், சாக்லெட், மது வகைகள் போன்றவை மைக்ரேனைத் தூண்டக்கூடும். அதிக நெடியுள்ள வாசனைப் பொருட்கள், மாதவிடாய் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், சோர்வு, மினுக்கும் வெளிச்சம், அதிகத் தூக்கம் அல்லது தூக்கமின்மை, அதிக காபி, மது, சில கொழுப்பு உணவு வகைகள், நீண்ட நேரம் கணினியைப் பார்த்தல், தட்பவெப்பநிலை மாற்றங்கள் போன்றவையும் மைக்ரேனைத் தூண்டவல்லவை என்பதால், அவற்றைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
1. சமிக்ஞை தோன்றும் நிலையிலேயே அல்லது வலி மிதமாக இருக்கும் நிலையிலேயே மருந்துகள் உட்கொண்டால் மைக்ரேன் ஓரளவுக்குக் கட்டுப்படும். மிகத் தீவிரமான வலி, வாந்தி ஆகியவை தோன்றிய பிறகு, மருந்துகள் வேலை செய்யாமல் போகலாம்.
2.மைக்ரேனைத் தூண்டும் காரணிகளைத் தவிர்ப்பது அவசியம் அது நல்ல நோய்த் தடுப்பு முறை!
3.பீட்டா பிளாக்கர்கள், வலிப்பு நோய் மருந்துகள், மனஇறுக்கத்தைக் குறைக்கும் மருந்துகள், கால்சியம் சேனல் பிளாக்கர்கள் மற்றும் புதிதாக வந்துள்ள ‘டிரிப்டான்ஸ்’ (Tryptons) போன்ற மருந்துகள் மைக்ரேன் தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கக்கூடியவை.
டென்ஷன் தலைவலி:
முப்பது வயது முதல் 40 வயதுவரை உள்ளவர்களுக்கு டென்ஷன் தலைவலிகள் அதிக அளவில் வருகின்றன. 90% மகளிருக்கும், 70% ஆண்களுக்கும் டென்ஷன் தலைவலி வருவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. மிகக் குறைந்த அளவு மருந்துகள், அளவான ஓய்வு, நல்ல பழக்கவழக்கங்கள் போன்றவை மனதையும் உடலையும் தளர்த்தி, டென்ஷன் தலைவலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கக்கூடியவை. ஐஸ் ஒத்தடம், இளஞ்சூடான நீரில் குளித்தல், சரியான நேர நிர்வாகம், அக்குபங்சர், சுவாசப் பயிற்சி, மனோ நிலை - நடத்தை முறையை மாற்றும் பயிற்சிகள், மசாஜ், ரிலாக்ஸேஷன் பயிற்சிகள் போன்றவையும் உதவும். திட்டமிட்ட, அமைதியான, ஆரோக்கியமான மன / உடல்நிலையுடன் கூடிய வாழ்க்கை போன்றவை நம்மிடம் டென்ஷன் தலைவலிகளை நெருங்கவிடாது.
கிளஸ்டர் தலைவலி அல்லது ‘கொத்துத்’ தலைவலி: மைக்ரேனைப் போலவே வரக்கூடியவை. ஆனால் தினமும், பல முறை கொஞ்ச நேரமே இருக்கக்கூடிய (கொத்து கொத்தாக) தலைவலி இது! சில நாட்கள் அல்லது சில மாதங்கள் இருந்து, பிறகு ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை காணாமல் போய்விடக் கூடியவை. புகை பிடித்தல், மதுப் பழக்கம் உள்ள ஆண்களுக்கு (75%) அதிகமாக வரக் கூடியது.
இந்த வலியின் கொடுமை தாங்காமல், சிலர் தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சிப்பார்கள். அதனால் இதற்கு ‘தற்கொலைத் தலைவலி’ என்ற காரணப் பெயரும் உண்டு. இதற்கு உடனடி மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் அவசியம்.
நன்றி: தி இந்து – தமிழ் பதிப்பு
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நமக்கு வருவது எந்தத் தலைவலி?
மிக பயனுள்ள பதிவு. சரியான இடத்தில் பதிந்து இருக்கிறீர்கள் நண்பரே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நமக்கு வருவது எந்தத் தலைவலி?
படித்த பின் பயங்கரமாக தலை வலிக்கிறது ஒரு கப் காபி குடித்துவிட்டு வருகிறேன்.
Similar topics
» சிந்தையால் வருவது உயர்வு தந்தையால் வருவது சிறப்பு
» தலைவலி.... நம்மில் சிலருக்கு அடிக்கடி வரும் விருந்தினர்.. அல்லது அவ்வப்போது வரும் மின்சாரம் ! பட் ... ஒய் திஸ் தலைவலி ?
» விக்கல் வருவது ஏன்?
» ஏப்பம் வருவது ஏன்?
» விக்கல் வருவது ஏன்?
» தலைவலி.... நம்மில் சிலருக்கு அடிக்கடி வரும் விருந்தினர்.. அல்லது அவ்வப்போது வரும் மின்சாரம் ! பட் ... ஒய் திஸ் தலைவலி ?
» விக்கல் வருவது ஏன்?
» ஏப்பம் வருவது ஏன்?
» விக்கல் வருவது ஏன்?
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: தலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|