Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
/வெளிநாடு /ஐரோப்பிய தேசத்தில் சராசரி
குடிமகன்
ஒரு நேர உணவுக்கு செலவிடும் பணத்தின் பெறுமதியே
புலம்பெயர்ந்து வந்தவனின்
ஒரு நாள் சம்பளம்
அதை வைத்து கொண்டும் வசதியாய் இருக்கிறேன் என
போலியாய் நடித்து கொண்டு
இன்னொரு உறவுக்கு உதவுகிறான் என்றால்
அவனை விட இன்னொரு மகான்
அவதரிக்க போவதில்லை ........!!!!
குடிமகன்
ஒரு நேர உணவுக்கு செலவிடும் பணத்தின் பெறுமதியே
புலம்பெயர்ந்து வந்தவனின்
ஒரு நாள் சம்பளம்
அதை வைத்து கொண்டும் வசதியாய் இருக்கிறேன் என
போலியாய் நடித்து கொண்டு
இன்னொரு உறவுக்கு உதவுகிறான் என்றால்
அவனை விட இன்னொரு மகான்
அவதரிக்க போவதில்லை ........!!!!
Last edited by சுபபாலா on Thu Mar 27, 2014 11:54 pm; edited 1 time in total
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
வெறிசோடி கிடக்கிறது
மனமெனும் பசுமை வனம்
சில நேரங்களில்
பாலைவனமாய் ......!
உறவு மேகங்களின்
பாச மழையை நினைவுகளால்
உயிர்பித்தபடி .....!
/ வெளிநாடு /
மனமெனும் பசுமை வனம்
சில நேரங்களில்
பாலைவனமாய் ......!
உறவு மேகங்களின்
பாச மழையை நினைவுகளால்
உயிர்பித்தபடி .....!
/ வெளிநாடு /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
தாய் நாட்டை இழந்தவனுக்கும்
தாய் இல்லாமல் வாழ்பவனுக்கு ம்
மட்டுமே தெரியும்
இந்த வாழ்க்கையில்
நொடிக்கொரு முறை செத்து பிழைப்பது எப்படியான வலி என்று ......!!!! /வெளிநாடு /
தாய் இல்லாமல் வாழ்பவனுக்கு ம்
மட்டுமே தெரியும்
இந்த வாழ்க்கையில்
நொடிக்கொரு முறை செத்து பிழைப்பது எப்படியான வலி என்று ......!!!! /வெளிநாடு /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
!!!!......வெளிநாடு .....!!!
எத்தனை நூறு நல்
நட்புகளை தேடி கண்டு எடுத்தேன்
இதுவும்
யுத்தத்தில் தொலைந்த உறவுகள் போல்
தொலைந்து போய்விடுமோ
என்று தான் பயமாய் இருக்கிறது
காரணம்
வேற்று கிரகவாசி போல்
வெளிநாட்டில் இருப்பதால் ..!!!
எத்தனை நூறு நல்
நட்புகளை தேடி கண்டு எடுத்தேன்
இதுவும்
யுத்தத்தில் தொலைந்த உறவுகள் போல்
தொலைந்து போய்விடுமோ
என்று தான் பயமாய் இருக்கிறது
காரணம்
வேற்று கிரகவாசி போல்
வெளிநாட்டில் இருப்பதால் ..!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
வெளிநாட்டு வாழ்க்கை !!!!.............தேசம் மட்டும் அல்ல
மனசும் தான்
பாலைவனமானது
தனிமையின் வெறுமையினால் ......!!!!
மனசும் தான்
பாலைவனமானது
தனிமையின் வெறுமையினால் ......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
உயிருக்கு உயிராய் நேசித்த
காதலியின் திருமணத்தை
ஸ்கைப்பில் பார்த்து வாழ்த்துகிறான்
இவள் தான் வாழ்வென்று
எல்லாவற்றையும் இழந்த வெளிநாட்டு காதலன் ........!!!!
பாவம் ......!!!
இப்போது அவனுக்கு இரண்டு மரணம்
1/பணம்
2/மனம்
காதலியின் திருமணத்தை
ஸ்கைப்பில் பார்த்து வாழ்த்துகிறான்
இவள் தான் வாழ்வென்று
எல்லாவற்றையும் இழந்த வெளிநாட்டு காதலன் ........!!!!
பாவம் ......!!!
இப்போது அவனுக்கு இரண்டு மரணம்
1/பணம்
2/மனம்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
ஒரு நாள் யாராவது உறவினர் வீட்டில்
நண்பனின் வீட்டில் தங்கி கதைத்து பேசி உண்டு உறங்கி வந்தால்
அது வெளிநாட்டில் கிடைக்கும் பெரும் பாக்கியம் .....!!!
நண்பனின் வீட்டில் தங்கி கதைத்து பேசி உண்டு உறங்கி வந்தால்
அது வெளிநாட்டில் கிடைக்கும் பெரும் பாக்கியம் .....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
நேற்று இருந்தவர் இன்று இல்லை
இன்று இருப்பவர் நாளை இருக்கப்போவதில்லை ....!!!
வாழ்க்கை தத்துவம் மட்டும் அல்ல
முகநூல் நட்பு தத்துவமும் தான் ....!
(ஆவிகள் மட்டும் முகமூடி போட்டு அலையுது )
இன்று இருப்பவர் நாளை இருக்கப்போவதில்லை ....!!!
வாழ்க்கை தத்துவம் மட்டும் அல்ல
முகநூல் நட்பு தத்துவமும் தான் ....!
(ஆவிகள் மட்டும் முகமூடி போட்டு அலையுது )
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
ஒவ்வொரு உயிரும் உறவும்
மரணமாகும் போது
இதயத்தின் ஒவ்வொரு நரம்புகளையும் அறுத்துவிடுகிறது
மௌனத்தொடும் தனிமையோடும்
எத்தனை நாள் தான் கட்டிபிடித்து
அழுது கொள்வது .....!!!
கதறி அழவேண்டும் சொல்லி அழ வேண்டும் என்று யாரையாவது தேடி போனாலும் .....!
நம்ம வலியை விட பெருவலியொடு
அவன் இருக்கையில்
மீண்டும் திரும்பித்தான் வரமுடிகிறதே தவிர
அழுது கூட அமைதி பெறமுடியாது
(புலம்பெயர் வாழ்வியல் )
மரணமாகும் போது
இதயத்தின் ஒவ்வொரு நரம்புகளையும் அறுத்துவிடுகிறது
மௌனத்தொடும் தனிமையோடும்
எத்தனை நாள் தான் கட்டிபிடித்து
அழுது கொள்வது .....!!!
கதறி அழவேண்டும் சொல்லி அழ வேண்டும் என்று யாரையாவது தேடி போனாலும் .....!
நம்ம வலியை விட பெருவலியொடு
அவன் இருக்கையில்
மீண்டும் திரும்பித்தான் வரமுடிகிறதே தவிர
அழுது கூட அமைதி பெறமுடியாது
(புலம்பெயர் வாழ்வியல் )
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
முகம் தெரியா முகவரிகளால்
எதனை செய்ய முடியும்
என்றார்கள்
இதோ ....!
நட்பின் தோள் சாய்ந்து
நம்பிக்கையின் பூக்களாய்
பூத்து இருக்கிறதே
இதை விட
எது சாதனை .........!!!
இது போதும் வாழ்தலை அழகாக்கும்
இறைவனின் ஆராதனை .....!!!
இணைந்த நட்புகள் அனைவருக்கும்
உங்களுடன் இணைய துடிக்கும்
புலம்பெயர்ந்த சோதரனின் வாழ்த்துக்கள் .........!!!
எதனை செய்ய முடியும்
என்றார்கள்
இதோ ....!
நட்பின் தோள் சாய்ந்து
நம்பிக்கையின் பூக்களாய்
பூத்து இருக்கிறதே
இதை விட
எது சாதனை .........!!!
இது போதும் வாழ்தலை அழகாக்கும்
இறைவனின் ஆராதனை .....!!!
இணைந்த நட்புகள் அனைவருக்கும்
உங்களுடன் இணைய துடிக்கும்
புலம்பெயர்ந்த சோதரனின் வாழ்த்துக்கள் .........!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
எந்தன் தேவதைக்கு ......!!!
நலமா என் இதய தாமரையே ...!!!
உன்னை நினைத்து மகிழ்ந்த பொழுதை விட
உன்னையும் சுமந்து கொண்டு அழுத
பொழுதுகளே
என்னையும் கொல்கிறது .....!!!!
எல்லோரை போலவும் தான்
நானும் விமானம் ஏறினேன்
ஓராயிரம் ஆசையோடு
அதில் ஒரு ஆசையும் நிறைவேறவே இல்லை
உன்னை விரும்பியதை தவிர ......!!!
எப்படி இருக்கிறாய்
எந்தன் நிம்மதியே ......!!!
வாழ்க்கைக்கு கடவுளாய் வந்த சந்நிதியே ....!!!!
அகதியாய் அலைந்ததை விட
அகதி விசாவுக்காய்
அலைந்தது தான்
எனக்கு இன்னும் அழுகையை தந்திருக்கிறது .......!!!!
நீ மட்டும் இல்லையெனில்
எதற்குமே அலைந்திருக்கமாட்டேன்
உன்னால் தான்
எல்லாவற்றுக்கும் அமைதியாகி பொய் கொண்டு இருக்கிறேன்
எந்தன் செல்லமே .....!!!
என்னை நினைத்து உருகும் உள்ளமே ....!!!
உன்னை நானும்
என்னை நீயும் விரும்பிய நாளின்
நினைவுகளில்
முத்தங்களை பரிசளிக்காது
கண்ணீர்களை கட்டியனைக்கிறோம்
எதுவானாலும்
எனக்காக காத்திருக்கும் சீதையே ......!!!!
கடவுளுக்கான விரதங்களை
கை விட்டு விட்டேன் நான்
நீயும் கடவுளையும்
கையை விடு ......!!!
எங்கள் காதல் காதல் வாழ்வாக
காதலை கை தொழுவோம்
அது வென்று தரும்
அதை விட இல்லை இனி கேட்க
வேறு வரம் .........!!!!
/புலம்பெயர்ந்த காதலனின் கண்ணீர் கவி/
நலமா என் இதய தாமரையே ...!!!
உன்னை நினைத்து மகிழ்ந்த பொழுதை விட
உன்னையும் சுமந்து கொண்டு அழுத
பொழுதுகளே
என்னையும் கொல்கிறது .....!!!!
எல்லோரை போலவும் தான்
நானும் விமானம் ஏறினேன்
ஓராயிரம் ஆசையோடு
அதில் ஒரு ஆசையும் நிறைவேறவே இல்லை
உன்னை விரும்பியதை தவிர ......!!!
எப்படி இருக்கிறாய்
எந்தன் நிம்மதியே ......!!!
வாழ்க்கைக்கு கடவுளாய் வந்த சந்நிதியே ....!!!!
அகதியாய் அலைந்ததை விட
அகதி விசாவுக்காய்
அலைந்தது தான்
எனக்கு இன்னும் அழுகையை தந்திருக்கிறது .......!!!!
நீ மட்டும் இல்லையெனில்
எதற்குமே அலைந்திருக்கமாட்டேன்
உன்னால் தான்
எல்லாவற்றுக்கும் அமைதியாகி பொய் கொண்டு இருக்கிறேன்
எந்தன் செல்லமே .....!!!
என்னை நினைத்து உருகும் உள்ளமே ....!!!
உன்னை நானும்
என்னை நீயும் விரும்பிய நாளின்
நினைவுகளில்
முத்தங்களை பரிசளிக்காது
கண்ணீர்களை கட்டியனைக்கிறோம்
எதுவானாலும்
எனக்காக காத்திருக்கும் சீதையே ......!!!!
கடவுளுக்கான விரதங்களை
கை விட்டு விட்டேன் நான்
நீயும் கடவுளையும்
கையை விடு ......!!!
எங்கள் காதல் காதல் வாழ்வாக
காதலை கை தொழுவோம்
அது வென்று தரும்
அதை விட இல்லை இனி கேட்க
வேறு வரம் .........!!!!
/புலம்பெயர்ந்த காதலனின் கண்ணீர் கவி/
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
அப்பாவுடன் கோபித்தால்
அத்தை வீட்டுக்கு போவேன்
அத்தை கோபித்தால்
சித்தி வீட்டுக்கு போவேன்
மனைவி கோபித்தால் மாமி
வீட்டுக்கு போவேன்
மனசு கோபித்தால்
நண்பனோடு போவேன்
வெளிநாடு வந்ததால்
எல்லோரும் கோபித்தார்கள்
ஏதோ ஒரு காரணம் சொல்லி
வெளிநாட்டுக்கு வந்தவுடன்
மாறிவிடும் உடல்நோய்
வந்தவுடன் தொடங்கிவிடும்
மன நோய் ......!!!
காரணம்
அருகில்லை அன்பு காட்ட தாய்
இவை எல்லாவற்றையும் சொல்லி ஆற
இனி யாரை தேடி போவேன் .....!!!
!!!!..... வெளிநாட்டு வாழ்க்கை ....!!!
அத்தை வீட்டுக்கு போவேன்
அத்தை கோபித்தால்
சித்தி வீட்டுக்கு போவேன்
மனைவி கோபித்தால் மாமி
வீட்டுக்கு போவேன்
மனசு கோபித்தால்
நண்பனோடு போவேன்
வெளிநாடு வந்ததால்
எல்லோரும் கோபித்தார்கள்
ஏதோ ஒரு காரணம் சொல்லி
வெளிநாட்டுக்கு வந்தவுடன்
மாறிவிடும் உடல்நோய்
வந்தவுடன் தொடங்கிவிடும்
மன நோய் ......!!!
காரணம்
அருகில்லை அன்பு காட்ட தாய்
இவை எல்லாவற்றையும் சொல்லி ஆற
இனி யாரை தேடி போவேன் .....!!!
!!!!..... வெளிநாட்டு வாழ்க்கை ....!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
அனைத்து வரிகளும் என்னைப்போன்றவர்களுக்காக எழுதினது போலவே இருக்கிறது.
மிக மிக அருமை
மிக மிக அருமை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
!!!!......வெளிநாட்டு வேலை ........!!! வெட்டிய விரலின் காயம்
ஆறும் முன்னே
மீண்டும் வெட்டி விடுகிறது கத்தி .....!!!!அதே விரலை குறி வைத்து
வெட்டிய விரலுக்கு குளிர்நீர் என
நினைத்து
குழாய் திறக்கையில்
மீண்டும் கொதிநீர் விழுந்து
ரணமாய் கிடக்கிறது .....!
இருந்தும்
அகதியாய் வந்து
அரசு பதவியா கிடைக்கும்
கிடைத்ததை நினைத்து மகிழ்ந்து
மீண்டும்
கத்தியை வணக்கி தொடர்கிறது
வேலை ......!!!
/சுபபாலா /
ஆறும் முன்னே
மீண்டும் வெட்டி விடுகிறது கத்தி .....!!!!அதே விரலை குறி வைத்து
வெட்டிய விரலுக்கு குளிர்நீர் என
நினைத்து
குழாய் திறக்கையில்
மீண்டும் கொதிநீர் விழுந்து
ரணமாய் கிடக்கிறது .....!
இருந்தும்
அகதியாய் வந்து
அரசு பதவியா கிடைக்கும்
கிடைத்ததை நினைத்து மகிழ்ந்து
மீண்டும்
கத்தியை வணக்கி தொடர்கிறது
வேலை ......!!!
/சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
வெளிநாடு .....!
ஒரு வேலை கூட தேடி கிடைக்காத
நாட்டில்
இரண்டு வேலை தேடி
செய்ய வேண்டும்
ஒன்று வாழ மற்றையது வழியில்லாத போது
வாங்கியதற்கு
சாகும் வரையாவது
வட்டியையாவது கட்ட
/ சுபபாலா /
பிரான்ஸ்
ஒரு வேலை கூட தேடி கிடைக்காத
நாட்டில்
இரண்டு வேலை தேடி
செய்ய வேண்டும்
ஒன்று வாழ மற்றையது வழியில்லாத போது
வாங்கியதற்கு
சாகும் வரையாவது
வட்டியையாவது கட்ட
/ சுபபாலா /
பிரான்ஸ்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
வெளிநாடு .......!
எடுத்து அனுப்பும் புகைப்படம்
மட்டும்
அழகானது ......!
வாழ்க்கையோ அனுதினமும் யாருக்கும்
தெரியாத அழுகையானது ......!!!!
/ சுபபாலா /
பிரான்ஸ்
எடுத்து அனுப்பும் புகைப்படம்
மட்டும்
அழகானது ......!
வாழ்க்கையோ அனுதினமும் யாருக்கும்
தெரியாத அழுகையானது ......!!!!
/ சுபபாலா /
பிரான்ஸ்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
வெளிநாடு .......!
வரதட்சணைக்கு
வழியில்லாமல் முதிர்கன்னிகள் அங்கு .....!
குடும்பத்தை வாழ வைக்க
வந்து
முதுமையானவர்களே இங்கு ......!!!
/ சுபபாலா /
பிரான்ஸ்
வரதட்சணைக்கு
வழியில்லாமல் முதிர்கன்னிகள் அங்கு .....!
குடும்பத்தை வாழ வைக்க
வந்து
முதுமையானவர்களே இங்கு ......!!!
/ சுபபாலா /
பிரான்ஸ்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
மனதை நெருடும் கவிதைகள். புலம் பெயர்தவர்களின் தவிப்பை உணர்த்தும் கவிதைகள்.
கலங்காதே மனமே.... காலம் ஒருநாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும்.
கலங்காதே மனமே.... காலம் ஒருநாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும்.
Re: சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
!.......வெளிநாட்டு குழந்தை ........!
தொடர்மாடி கட்டிடத்தின்
குறுக்கிய வாடகை வீட்டின்
யன்னல்களால் பார்க்கிறது
உலகத்தை .......!
தாயோ தந்தையோ
வீடு திரும்பும் வரை
அந்த ஒற்றை யன்னலே
குழந்தையின்
உற்ற சிநேகிதன் .......!!!
/ சுபபாலா /
பிரான்ஸ்
தொடர்மாடி கட்டிடத்தின்
குறுக்கிய வாடகை வீட்டின்
யன்னல்களால் பார்க்கிறது
உலகத்தை .......!
தாயோ தந்தையோ
வீடு திரும்பும் வரை
அந்த ஒற்றை யன்னலே
குழந்தையின்
உற்ற சிநேகிதன் .......!!!
/ சுபபாலா /
பிரான்ஸ்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
» சுபபாலாவின் நம் தமிழ்......!!!
» சுபபாலாவின் நட்பு கவிதை
» சுபபாலாவின் காதல் கவிதை
» சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
» சுபபாலாவின் நம் தமிழ்......!!!
» சுபபாலாவின் நட்பு கவிதை
» சுபபாலாவின் காதல் கவிதை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|