Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள் - பகுதி -1
Page 1 of 1 • Share
புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள் - பகுதி -1
பரந்து விரிந்த இந்த பேரண்டத்தில் மனிதனது செயற்கை கண்களுக்கு (செயற்கைக்கோள்) எட்டிய தொலைவு வரையிலான தேடலின் முடிவில் நாம் வாழும் இந்த புவியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிகூட புத்தகங்கள் வாயிலாக புவியை பற்றி நாம் நிறைய படித்திருந்தாலும் கூட அப்போது மதிப்பெண்களுக்காக படித்த காரணத்தினால் நம்மில் பலருக்கு பெரும்பாலான தகவல்கள் மனதில் பதிந்திருக்காது. நாம் வாழும் இந்த கிரகத்தை பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய தகவல்களை இந்த பதிவின் வாயிலாக உங்களுக்கு மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துவதில் நான் மற்றற்ற மகிழ்ச்சியடைகிறேன். சரி இனி பதிவிற்கு செல்வோமா.?
[You must be registered and logged in to see this image.]சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெடிப்பின் காரணமாக தோன்றிய பூமி, சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து மூன்றாவதாக அமைந்திருக்கும் கோள் ஆகும். சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு அருகில் புதன் கிரகமும் அடுத்ததாக வெள்ளியும் அதைத்தொடர்ந்து நாம் வாழும் இந்த புவியும் அமைந்துள்ளது. புவிக்கு அடுத்ததாக செவ்வாய், செரசு (குருங்கோல்), வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ மற்றும் ஏரிஸ் (குருங்கோல்) ஆகிய கிரகங்கள் வரிசைக்கிரமமாக அமைந்துள்ளன.
71% கடல் நீராலும், 29% சதவீதம் கண்டங்கள், தீபகற்பங்கள் மற்றும் நன்நீர் ஏரிகளால் சூழப்பட்ட நம்முடைய இந்த புவி சூரிய குடும்பத்திலுள்ள நான்கு வலிமையான திடகிரகங்களுள் ஒன்று (புதன், வெள்ளி, புவி, செவ்வாய்) என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சிய கிரகங்களின் மேற்பரப்பு வாயுக்களால் சூழப்பட்டது இன்னும் சொல்லப்போனால் அவை வாயுக்கிரகங்கள் என்றே அழைக்கப்படுகின்றன (வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ). புவியை தவிர அனைத்து கிரகங்களிலும் வெப்பம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதால் அந்த கிரகங்களில் நீர் கிடைப்பதில்லை இருப்பினும் செவ்வாய் கிரகத்தில் மட்டும் திட வடிவில் (Ice) நீர் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக நம்முடைய அறிவியலார்கள் தெரிவிக்கிறார்கள்.
[You must be registered and logged in to see this image.]
துருவ பகுதியில் துவங்கி நிலநடுக்கோடு வரை புவியின் அனைத்து பகுதிகளிலும் ஏதாவது ஒரு உயிரினம் வாழ்வதை ஆதரிக்கும் நம்முடைய இந்த பூமியில், சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன என்றும், புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் மேலும் சுமார் 1.5 பில்லியன் ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும் அறிவியல் அறிஞர்களால் கூறப்படுகிறது.
ஓசோன் மண்டலம், புவி காந்த மண்டலம் மற்றும் உயிர்க்கோளம் (கற்கோளம், நீர்க்கோளம், வளிமண்டலம்) ஆகிய மூன்று காரணிகள் தான் புவியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு முக்கியகாரணமாக இருந்திருக்கிறது. புவியின் மேற்பரப்பிலிருந்து சராசரியாக 17 கி.மீ முதல் 50 கி.மீ வரையிலான வளிமண்டலபகுதி ஓசோன்(O3) என்ற வாயுக்களால் நிரப்பப்பட்டுள்ளது. ஓசோன் மண்டலம் என்ற பெயரில் அழைக்கப்படும் இது சூரியனிலிருந்து புவியை நோக்கி வரும் புறஊதாக் கதிர்களில் 99% கதிர்களை உறிஞ்சிக் கொண்டு புவியில் வாழும் உயிர்களை புறஊதாக் கதிர்களின் தாக்குதல்களில் இருந்து காக்கிறது.
அண்டவெளியில் இருந்து வரும் துகள்கள், எரிகற்கள், ஊறுவிளைவிக்கும் கதிர்கள் போன்றவற்றின் தாக்கத்திலிருந்து புவியை பெருமளவில் காப்பது புவியின் காந்தப்புலம் என்றால் மிகையில்லை. சூரியகுடும்பத்தில் உள்ள பெரும்பாலான கிரகங்களுக்கு காந்தப்புலம் உண்டு என்றாலும் கூட புவியைப்போல வேறு எந்த கிரகத்திற்கும் வலிமையான காந்தப்புலம் கிடையாது. புவியின் காந்தப்புலம் எப்படி உருவாகிறது என்பது பற்றிய தெளிவான கோட்பாடு இதுவரை இல்லையென்றாலும் கூட இப்படித்தான் உருவாகிறது என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளைவாக டைனமோ விளைவு இருக்கிறது.
அதாவது புவி சுழலும் போது புவிக்குள் (வெளிக்கருவில்) இருக்கும் தனிமங்கள் (இரும்பு, நிக்கல் மற்றும் சல்பர்) அதிகப்படியான வெப்பம் மற்றும் இயக்கம் ஆகியவற்றின் காரணமாக அயனியேற்றம் அடைந்து புரோட்டான் (+) மற்றும் எலெக்ட்ரான்(-), என்ற இரண்டு நேர் மற்றும் எதிர் மின்அயனிகளை உண்டாக்குகின்றன. இந்த அயனிகள் நேர்(+) மற்றும் எதிர்(-) அயனிகளாக இருப்பதால் அவை ஒன்றுடன் ஒன்று இணைய ஆரம்பிக்கிறது. ஒரு துருவத்தில் நிகழும் அயனியேற்றத்தின் போது புரோட்டான்களை காட்டிலும் எலெக்ட்ரான்கள் அதிக எண்ணிக்கையில் உருவாவதால் ஜோடி சேர்ந்தது போக எஞ்சியுள்ள எலெக்ட்ரான்கள் எதிர் துருவத்தை நோக்கி நகர்ந்து அங்கிருக்கும் புரோட்டான்களோடு இணைய ஆரம்பிக்கிறது. இதைத்தொடர்ந்து எதிர் எதிர் துருவம் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு வலிமையான (மின்)காந்தப்புலம் உருவாகிறது. இந்த காந்தப்புலம் புவியின் மேற்பரப்பில் புவியை சுற்றிலும் வலிமையான காந்த அடுக்கை (Magnetosphere) உருவாக்குகிறது. இந்த காந்த அடுக்குதான் விண்வெளியில் இருந்து புவியை நோக்கி வரும் ஆபத்துகளை (எரிகற்கள், கதிர்வீச்சுகள்) தடுக்கும் கவசமாக செயல்படுகிறது. புவிக்குள் நிலவும் வெப்பநிலை வேறுபாட்டை பொறுத்து ஒவ்வொரு மில்லியன் ஆண்டுகளுக்கும் ஒருமுறை காந்தப்புலம் மாற்றமடைகிறது (pole shifting). கடைசியாக இந்த மாற்றம் 7,00,000 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்திருக்கிறது
தொடரும்....
நன்றி-வரலாற்று சுவடுகள்
[You must be registered and logged in to see this image.]சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெடிப்பின் காரணமாக தோன்றிய பூமி, சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து மூன்றாவதாக அமைந்திருக்கும் கோள் ஆகும். சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு அருகில் புதன் கிரகமும் அடுத்ததாக வெள்ளியும் அதைத்தொடர்ந்து நாம் வாழும் இந்த புவியும் அமைந்துள்ளது. புவிக்கு அடுத்ததாக செவ்வாய், செரசு (குருங்கோல்), வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ மற்றும் ஏரிஸ் (குருங்கோல்) ஆகிய கிரகங்கள் வரிசைக்கிரமமாக அமைந்துள்ளன.
71% கடல் நீராலும், 29% சதவீதம் கண்டங்கள், தீபகற்பங்கள் மற்றும் நன்நீர் ஏரிகளால் சூழப்பட்ட நம்முடைய இந்த புவி சூரிய குடும்பத்திலுள்ள நான்கு வலிமையான திடகிரகங்களுள் ஒன்று (புதன், வெள்ளி, புவி, செவ்வாய்) என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சிய கிரகங்களின் மேற்பரப்பு வாயுக்களால் சூழப்பட்டது இன்னும் சொல்லப்போனால் அவை வாயுக்கிரகங்கள் என்றே அழைக்கப்படுகின்றன (வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ). புவியை தவிர அனைத்து கிரகங்களிலும் வெப்பம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதால் அந்த கிரகங்களில் நீர் கிடைப்பதில்லை இருப்பினும் செவ்வாய் கிரகத்தில் மட்டும் திட வடிவில் (Ice) நீர் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக நம்முடைய அறிவியலார்கள் தெரிவிக்கிறார்கள்.
[You must be registered and logged in to see this image.]
துருவ பகுதியில் துவங்கி நிலநடுக்கோடு வரை புவியின் அனைத்து பகுதிகளிலும் ஏதாவது ஒரு உயிரினம் வாழ்வதை ஆதரிக்கும் நம்முடைய இந்த பூமியில், சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன என்றும், புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் மேலும் சுமார் 1.5 பில்லியன் ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும் அறிவியல் அறிஞர்களால் கூறப்படுகிறது.
ஓசோன் மண்டலம், புவி காந்த மண்டலம் மற்றும் உயிர்க்கோளம் (கற்கோளம், நீர்க்கோளம், வளிமண்டலம்) ஆகிய மூன்று காரணிகள் தான் புவியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு முக்கியகாரணமாக இருந்திருக்கிறது. புவியின் மேற்பரப்பிலிருந்து சராசரியாக 17 கி.மீ முதல் 50 கி.மீ வரையிலான வளிமண்டலபகுதி ஓசோன்(O3) என்ற வாயுக்களால் நிரப்பப்பட்டுள்ளது. ஓசோன் மண்டலம் என்ற பெயரில் அழைக்கப்படும் இது சூரியனிலிருந்து புவியை நோக்கி வரும் புறஊதாக் கதிர்களில் 99% கதிர்களை உறிஞ்சிக் கொண்டு புவியில் வாழும் உயிர்களை புறஊதாக் கதிர்களின் தாக்குதல்களில் இருந்து காக்கிறது.
அண்டவெளியில் இருந்து வரும் துகள்கள், எரிகற்கள், ஊறுவிளைவிக்கும் கதிர்கள் போன்றவற்றின் தாக்கத்திலிருந்து புவியை பெருமளவில் காப்பது புவியின் காந்தப்புலம் என்றால் மிகையில்லை. சூரியகுடும்பத்தில் உள்ள பெரும்பாலான கிரகங்களுக்கு காந்தப்புலம் உண்டு என்றாலும் கூட புவியைப்போல வேறு எந்த கிரகத்திற்கும் வலிமையான காந்தப்புலம் கிடையாது. புவியின் காந்தப்புலம் எப்படி உருவாகிறது என்பது பற்றிய தெளிவான கோட்பாடு இதுவரை இல்லையென்றாலும் கூட இப்படித்தான் உருவாகிறது என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளைவாக டைனமோ விளைவு இருக்கிறது.
அதாவது புவி சுழலும் போது புவிக்குள் (வெளிக்கருவில்) இருக்கும் தனிமங்கள் (இரும்பு, நிக்கல் மற்றும் சல்பர்) அதிகப்படியான வெப்பம் மற்றும் இயக்கம் ஆகியவற்றின் காரணமாக அயனியேற்றம் அடைந்து புரோட்டான் (+) மற்றும் எலெக்ட்ரான்(-), என்ற இரண்டு நேர் மற்றும் எதிர் மின்அயனிகளை உண்டாக்குகின்றன. இந்த அயனிகள் நேர்(+) மற்றும் எதிர்(-) அயனிகளாக இருப்பதால் அவை ஒன்றுடன் ஒன்று இணைய ஆரம்பிக்கிறது. ஒரு துருவத்தில் நிகழும் அயனியேற்றத்தின் போது புரோட்டான்களை காட்டிலும் எலெக்ட்ரான்கள் அதிக எண்ணிக்கையில் உருவாவதால் ஜோடி சேர்ந்தது போக எஞ்சியுள்ள எலெக்ட்ரான்கள் எதிர் துருவத்தை நோக்கி நகர்ந்து அங்கிருக்கும் புரோட்டான்களோடு இணைய ஆரம்பிக்கிறது. இதைத்தொடர்ந்து எதிர் எதிர் துருவம் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு வலிமையான (மின்)காந்தப்புலம் உருவாகிறது. இந்த காந்தப்புலம் புவியின் மேற்பரப்பில் புவியை சுற்றிலும் வலிமையான காந்த அடுக்கை (Magnetosphere) உருவாக்குகிறது. இந்த காந்த அடுக்குதான் விண்வெளியில் இருந்து புவியை நோக்கி வரும் ஆபத்துகளை (எரிகற்கள், கதிர்வீச்சுகள்) தடுக்கும் கவசமாக செயல்படுகிறது. புவிக்குள் நிலவும் வெப்பநிலை வேறுபாட்டை பொறுத்து ஒவ்வொரு மில்லியன் ஆண்டுகளுக்கும் ஒருமுறை காந்தப்புலம் மாற்றமடைகிறது (pole shifting). கடைசியாக இந்த மாற்றம் 7,00,000 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்திருக்கிறது
தொடரும்....
நன்றி-வரலாற்று சுவடுகள்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள் - பகுதி -1
தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள் -பகுதி -2
» புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள் -பகுதி -3
» பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்:-
» அரிய தகவல்கள் தெரிந்துக்கொள்வோம் பகுதி - 8
» சிங்கப்பூர் பற்றிய விரிவான வரலாறு
» புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள் -பகுதி -3
» பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்:-
» அரிய தகவல்கள் தெரிந்துக்கொள்வோம் பகுதி - 8
» சிங்கப்பூர் பற்றிய விரிவான வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|