தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம். (கேள்வி-பதில்)

View previous topic View next topic Go down

ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம்.  (கேள்வி-பதில்) Empty ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம். (கேள்வி-பதில்)

Post by ஸ்ரீராம் Fri May 02, 2014 11:51 am


பல இடங்களில் பார்த்து இருக்கிறேன் ஆரத்தி எடுக்கும் போது ஆரத்தி எடுக்கும் பெண்கள் இடது கையால் நெற்றியில் போட்டு வைப்பது ஏன்? ஏன் வலது கை பயன்படுத்துவது இல்லையே?

யாருக்கேனும் தெரிந்தால் அறிய தாருங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம்.  (கேள்வி-பதில்) Empty Re: ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம். (கேள்வி-பதில்)

Post by முழுமுதலோன் Fri May 02, 2014 2:44 pm

பல இடங்களில் பார்த்து இருக்கிறேன் ஆரத்தி எடுக்கும் போது ஆரத்தி எடுக்கும் பெண்கள் இடது கையால் நெற்றியில் போட்டு வைப்பது ஏன்? ஏன் வலது கை பயன்படுத்துவது இல்லையே?
ஆச்சரியமாக உள்ளது 


இது வரையிலும் நான் பார்த்தது இல்லை 


நாளை பதில் சொல்லுகிறேன் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம்.  (கேள்வி-பதில்) Empty Re: ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம். (கேள்வி-பதில்)

Post by ஸ்ரீராம் Fri May 02, 2014 4:17 pm

சரி அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம்.  (கேள்வி-பதில்) Empty Re: ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம். (கேள்வி-பதில்)

Post by முழுமுதலோன் Sat May 03, 2014 12:15 pm

ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம்.  (கேள்வி-பதில்) Tamil-Daily-News-Paper_1163446904

ஸ்ரீராமின் கேள்விக்கு பதில் அளிக்குமுன் ஆரத்தி என்றால்  என்ன ஆரத்தி ஏன் எடுக்கப்படுகிறது? என்று பார்போம்
 
நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை.


பழங்காலத்தில் வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் துவங்குவர். இதுபோன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக அவர்கள் நம்பினர். 


தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.
 
சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது. 


ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.
 
மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது. 


ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. 


திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது. மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். 


ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது. 


எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.
 
இப்போது அவரின் கேள்விக்கு பதில் அளிப்போம்
 
பொதுவாக ஆரத்தியை கற்பூரம் ஏற்றிய பின்னர் முதலில் வலது புறமாக ஆரம்பித்து 3 முறை சுற்றி வலது கை மோதிர விரலால் நெற்றியில் பொட்டு வைத்து அவர்களை மனதார வாழ்த்த வேண்டும் இது தான் வழக்கமான் நியதி நெடும் காலமாக செய்து கொண்டு வருகின்ற வழக்கமும் கூட ..
 
ஆனால் தற்போது இந்த சடங்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக செய்யப்படுகிறது அது ஏன் என்று தெரியவில்லை இது தொடர்பாக சிலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது அவர்கள் கூறிய சில விவ்ரங்கள் உங்களுக்காக ...
 
சில இடங்களில் ஆரத்தி தட்டை இடது புறமாக ஆரம்பித்து 3 முறையும் பின்னர் வலது முறையாக ஆரம்பித்து 3 முறையும் சுற்றி இடது கை விரலால் நெற்றில் பொட்டு வைக்கிறார்கள்
இது முறையல்ல ஒருவேளை அந்த திருஷ்டி எங்கே தன்னிடம் வந்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக இருக்கலாமோ என்று சிலர் சொல்கிறார்கள்
 
சமூகத்தில் ஒரு பிரிவினர் வலது புறம் சுற்றி இடது கைய்யால் நெற்றியில் பொட்டு வைக்கிறார்கள்... கேட்டால் அது எங்களில் வழக்கம் என்று சொல்கிறார்கள்
 
சில இடங்களில் தட்டை மட்டும் அப்படியே 3 முறை சுழற்றி விட்டு வலது கட்டை விரலால் பொட்டு வைக்கின்றனர்
 
இவற்றுக்கு எல்லாம் சரியான காரணம் சொல்ல தெரியாமல் எங்களின் முன்னோர்கள் இப்படித்தான் சொல்லி கொடுத்தார்கள் என்று சொல்கிறார்களாம்
 
பொதுவாக அந்த கால்த்தில் வயதில் மூத்தவர்களே ஆரத்தி எடுப்பார்கள் ஆனால் இன்று பணம் பறிக்கவேண்டும் என்பதற்காக சிறு பெண்கள் கூட ஆரத்தி எடுக்கிறார்கள் என்ன செய்வது ?
 
எங்கள் ஊர்களில் கூட பண்டைய நியதியான 3 முறை வலதுபுறம் சுற்ற ஆரம்பித்து வலது மோதிர விரலால் நெற்றியில் பொட்டு வைத்து அவர்களை வாழ்த்த வேண்டும் என்ற நியதியோடு சிறப்பாக செய்து வருகிறார்கள்
 
எது எப்படி இருப்பினும் பழைய நெறிமுறைகள் இக்காலத்தில் சற்று மாற்றப்பட்டு அவரவர்கள் விருப்படி சம்பிரதாயங்களை மறவாமல் செய்கிறார்கள் என்று என்னும் போது மகிழ்ச்சியாக உள்ளது
 
இது பற்றி இன்னும் விவரங்கள் வெளிவரும்
 

உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம்.  (கேள்வி-பதில்) Empty Re: ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம். (கேள்வி-பதில்)

Post by ஸ்ரீராம் Sat May 03, 2014 3:38 pm

அண்ணா,

நான் சாதாரணமாக கேட்ட இந்த கேள்வியை இப்போது கவர் ஸ்டோரி லெவலில் கொண்டு சென்று இருக்கீங்க. இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? ஆச்ரியம்தான்.

போனில் நண்பர்களுடன் பேசி விவரங்கள் சேகரித்து இருக்கீங்க. கலக்குறீங்க அண்ணா. நன்றி சொல்லாமால் இருக்கமுடியாது.

மேலும் எதேனும் தகவல்கள் கிடைத்தால் பகிருங்கள் உறவுகளே.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம்.  (கேள்வி-பதில்) Empty Re: ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம். (கேள்வி-பதில்)

Post by நாஞ்சில் குமார் Sat May 03, 2014 9:59 pm

நல்ல முயற்ச்சி எடுத்து பகிர்ந்துள்ளமைக்கு நன்றி. நானும் தெரிந்து கொண்டேன்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம்.  (கேள்வி-பதில்) Empty Re: ஆரத்தி பற்றிய ஒரு சந்தேகம். (கேள்வி-பதில்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum