Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுற்றுலா தளங்கள் -கிருஷ்ணகிரி
Page 1 of 1 • Share
சுற்றுலா தளங்கள் -கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி
வரலாற்று புகழ்பெற்ற நகரம். தமிழகத்தில் நடந்த வரலாற்றுப் போர்களில் கிருஷ்ணகிரியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதற்கான வாழும் ஆவணமாகக் கனத்த மதில் சுவர்களுடன் ஒரு பழமையான கோட்டை இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இதன் பெயர் சையத் பாட்சா கோட்டை. இக்கோட்டையும் அருகேயுள்ள அணைக்கட்டும் கண்டு ரசிக்க அற்புதமான சுற்றுலாத் தலங்கள்.கிருஷ்ணகிரி தருமபுரியிலிருந்து பிரிந்த மாவட்டம்.
ஓசூர் என்றால் புதிய நகர் என்று பொருள். இந்நகரில் பெருங்கோட்டை ஒன்றுள்ளது. இதன் எல்லையில்தான் சக்தி வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. [You must be registered and logged in to see this image.]ஓசூர் மக்களின் வணக்கத்திற்குரிய இடம். மாவீரன் திப்பு சுல்தான்-கேப்டன் ஹாமில்டன் மற்றும் இரண்டு கைதிகளை கொண்டு கோட்டையைப் பண்படுத்தினார். கோட்டையைச் சுற்றிலும் ஆழமும் அகலமுமான அகழி அமைக்கபட்டுள்ளது. நீங்கள் வரலாற்றின் பக்கங்களில் நடக்க வேண்டுமென்றால் ஒருமுறை ஓசூருக்கு போய் வாருங்கள். கோட்டையில் உலவும் போது உங்களுக்கு அந்தப் பழங்காலம் ஞாபகத்தில் வந்து போகும்.
சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில்
மலை மீது அமைந்துள்ள சந்திரசூடேஸ்வரர் கோயில் மிகப் பிரபலமானது. வார இறுதியில் மக்கள் கூடும் திருக்கோயில். மாலை நேரத்தில் மலைமேல் வீசும் தென்றலை அனுபவிக்கும் சுகம் அலாதியானது.
கிருஷ்ணகிரி அணைக்கட்டு
விவசாயிகளுக்குப் பரிவு காட்டும் தாயாக இருக்கின்ற அணைக்கட்டுகள், தருமபுரிக்கும் கிருஷ்ணகிரிக்கும்[You must be registered and logged in to see this image.]இடையே அமைந்துள்ள இந்த அணைக்கட்டால் ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன் நீர்பரப்பும் இயற்கைசூழலும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அனுபவம். இங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் அலை மோதும்.
தளி
'குட்டி இங்கிலாந்து' எனப் பெயர் பெற்ற ஏராளமான குன்றுகள் நிறைந்த பகுதி. இங்கு ஆண்டு முழுவதும் [You must be registered and logged in to see this image.]குளிர்ச்சிக்கு குறைவில்லை. தளி தாலுக்காவின் தலைநகர் தேன்கனிக் கோட்டை. பாளையர்களால் கட்டப்பட்டது. ஹைதர் அலி மற்றும் அவரது மைந்தன் மாவீரன் திப்புசுல்தான் ஆகியோர் ஆங்கிலேயருடன் புரிந்த போரில் கோட்டை சிதிலமாகிவிட்டது.
இராஜாஜி நினைவகம்
மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம் தொரப்பள்ளியில் நினைவகமாக தமிழக அரசால் மாற்றப்பட்டிருக்கிறது. ஓசூர் மற்றும் ஓனல்வாடியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இந்த நினைவகம் உள்ளது. இராஜாஜி பயன்படுத்திய பொருட்கள் அவரது வாழ்க்கை நிகழ்வுகளை சித்தரிக்கும் புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ராயகோட்டா
இக்குன்றுக் கோட்டை ஓசூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. மைசூர் போர்களுக்குப் பிறகு இந்தக்கோட்டை, ஆங்கிலேயர்களின் யுத்த தந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இங்கு 1861 ஆம் ஆண்டு வரை பிரிட்டன் படை நிலை கொண்டது. இது பாதுகாக்கபடும் நினைவுச்சின்னம். நாம் பார்த்து பிரமிக்க வேண்டிய கோட்டை. இதுபற்றி படித்தால் மட்டும் போதாது.
மாம்பழத் திருவிழா
கிருஷ்ணகிரி மாம்பழத்திருவிழா பிரபலமானது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நிகழும். ருமானி, அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி உட்பட பலவகையான மாம்பழங்கள் காட்சியில் வைக்கப்படும். இதன் வாசனை பார்வையாளர்களை மயங்கவைக்கும். பார்க்க வேண்டிய கண்காட்சியல்ல; ருசிக்க வேண்டியது.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுற்றுலா தளங்கள் -கிருஷ்ணகிரி
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|