Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
First topic message reminder :
*
வினைத் தீர்த்தான்…!!
*
மூத்தவனே, விநாயகா…
உலகை வலம் வந்து
நீதான் வெற்றிப் பெற்று
பழத்தைப் பெற்றாய்.
உன் தம்பி
கோபித்துக் கொண்டு
எங்கோ போகிறேன் என்று
மிரட்டுகிறான் பார்.
அவன் அழலாமா? போகலாமா,
உனக்கு கஷ்டமில்லையா?
அந்தப் பழத்தை
அவனிடம் கொடுத்துச்
சமாதானமாகப் போ…!
உங்களுக்குள்
தகராறு வேண்டாம்?
தாய் சொல் மிக்க
மந்திரமில்லை.
வினைத் தீர்த்தான்
விநாயகன்.
*.
*
வினைத் தீர்த்தான்…!!
*
மூத்தவனே, விநாயகா…
உலகை வலம் வந்து
நீதான் வெற்றிப் பெற்று
பழத்தைப் பெற்றாய்.
உன் தம்பி
கோபித்துக் கொண்டு
எங்கோ போகிறேன் என்று
மிரட்டுகிறான் பார்.
அவன் அழலாமா? போகலாமா,
உனக்கு கஷ்டமில்லையா?
அந்தப் பழத்தை
அவனிடம் கொடுத்துச்
சமாதானமாகப் போ…!
உங்களுக்குள்
தகராறு வேண்டாம்?
தாய் சொல் மிக்க
மந்திரமில்லை.
வினைத் தீர்த்தான்
விநாயகன்.
*.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
அருமை அருமை உங்களின் தீபாவளி வரிகள்


முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
நோம்பு விரதம்…!!
*
நிர்மலமான வானம் வெண்மேகங்களால்
தெளிந்திருந்தது கதிரொளியின் வெப்பத்
தகிப்பின் தீவிரம் இன்னும் தணியவில்லை.
காற்றின்மையால் மரங்களில் அசைவில்லை.
எங்கும் மேயப் போகாமல் மரநிழலில்
ஒய்வெடுக்கின்றன மாடுகள்.
பாதையில் வாகனங்களின் இரைச்சல்.
சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் சத்தம்.
குடும்ப வேலைகளைக் கருத்தாகக்
கவனித்துக் கொண்டு தீபாவளி
விடுமுறையினைக் கழிக்கும் ஆண்கள்
பத்திரிகைச் செய்தியில் முகம்
மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் அடுக்களையில் விதவிதமாய்
சமைத்துக் கொண்டு, அவ்வப்போது
தேனீர் அருந்தி பசியடக்கிக் கொண்டு
நோம்பு விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.
தலை தீபாவளி கொண்டாடும்
மாப்பிள்ளை – பெண்
காலையிலிருந்தே சிரிப்பு வெடிப்
போட்டுக்கொண்டிருக்கிறார்கள்,
குழந்தைகள் நேற்று வாங்கி
வைத்திருந்தப் பலகாரங்களை
அடம்பிடித்துக் கேட்டு வாங்கிப் போய்
நண்பர்களோடு மகி்ழ்ச்சியாய் பகிர்ந்துச்
சாப்பிடுகிறார்கள். பரபரப்பில்லாமல்
தட்டுகளில் பலகாரம் பூ பழங்கள் கயிறு
எல்லாம் அடுக்கி வைத்துப் பின்னர்
அழகான புதியப் பட்டுப் புடவையில்
கௌரிப் பூசைக்காக கோயிலுக்குப்
புறப்படுகிறார்கள் அங்கு வரிசையில்
காத்திருக்கும் பெண்களின் கூச்சல்
பட்டாசு வெடிச் சத்தத்தை மிஞ்சியது.
கோயிலுக்குப் போனவர்கள் வரும் வரை
வீட்டில் பூசைக்காகக் காத்திருக்கிறாள்
அலங்கார பூஷிதையாய் அம்மன்.
அப்பாக்களை நச்சரிக்கிறார்கள்
பசி தாங்க முடியாத சிறுவர்கள்
இன்னும் சிறிது நேரத்தில்
முடியப் போகிறது நோம்பு விரதம்….!!
*
*
நிர்மலமான வானம் வெண்மேகங்களால்
தெளிந்திருந்தது கதிரொளியின் வெப்பத்
தகிப்பின் தீவிரம் இன்னும் தணியவில்லை.
காற்றின்மையால் மரங்களில் அசைவில்லை.
எங்கும் மேயப் போகாமல் மரநிழலில்
ஒய்வெடுக்கின்றன மாடுகள்.
பாதையில் வாகனங்களின் இரைச்சல்.
சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் சத்தம்.
குடும்ப வேலைகளைக் கருத்தாகக்
கவனித்துக் கொண்டு தீபாவளி
விடுமுறையினைக் கழிக்கும் ஆண்கள்
பத்திரிகைச் செய்தியில் முகம்
மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் அடுக்களையில் விதவிதமாய்
சமைத்துக் கொண்டு, அவ்வப்போது
தேனீர் அருந்தி பசியடக்கிக் கொண்டு
நோம்பு விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.
தலை தீபாவளி கொண்டாடும்
மாப்பிள்ளை – பெண்
காலையிலிருந்தே சிரிப்பு வெடிப்
போட்டுக்கொண்டிருக்கிறார்கள்,
குழந்தைகள் நேற்று வாங்கி
வைத்திருந்தப் பலகாரங்களை
அடம்பிடித்துக் கேட்டு வாங்கிப் போய்
நண்பர்களோடு மகி்ழ்ச்சியாய் பகிர்ந்துச்
சாப்பிடுகிறார்கள். பரபரப்பில்லாமல்
தட்டுகளில் பலகாரம் பூ பழங்கள் கயிறு
எல்லாம் அடுக்கி வைத்துப் பின்னர்
அழகான புதியப் பட்டுப் புடவையில்
கௌரிப் பூசைக்காக கோயிலுக்குப்
புறப்படுகிறார்கள் அங்கு வரிசையில்
காத்திருக்கும் பெண்களின் கூச்சல்
பட்டாசு வெடிச் சத்தத்தை மிஞ்சியது.
கோயிலுக்குப் போனவர்கள் வரும் வரை
வீட்டில் பூசைக்காகக் காத்திருக்கிறாள்
அலங்கார பூஷிதையாய் அம்மன்.
அப்பாக்களை நச்சரிக்கிறார்கள்
பசி தாங்க முடியாத சிறுவர்கள்
இன்னும் சிறிது நேரத்தில்
முடியப் போகிறது நோம்பு விரதம்….!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
மழை…!!
*
பகலெல்லாம் மரங்களுக்கு
ஒய்வில்லை.
வேகமானக் காற்று வீசி
மரங்களின் உடலை
உலுக்கி எடுத்தது
இலைகள் உதிர்ந்து
பூக்களும் உதிர்ந்து
தரையெங்கும் பரவியது
கருத்த மேகங்கள் வானில்
பஞ்சுப் பொதியைாய்
திரண்டு நகர்ந்துப் போய்க்
கொண்டிருந்தன.
சின்னச் சின்னச் சிணுங்கல்
தூறல் போடத் தொடங்கின
பரபரவென ஜனங்கள் நடந்து
ஒதுங்க இடந்தேடினர்.
மேய்ந்துக் கொண்டிருந்த
மாடுகள் அப்படியே அசையாமல்
நின்று உடலை அசைத்தன.
நாய்கள், பன்றிகள்
பாதையிலிருந்து எங்கோ ஒடின.
பலத்த மழைப் பிடித்துச்
சோவென பெய்யத் தொங்கின
வாகன ஓட்டிகள் விரைந்தனர்
மக்கள் நனைந்தும்
நனையாமலும் நடையில்
வேகம் காட்டினர்.
பலத்த இடியோசை மனதை
கொஞ்சம் அதிர வைத்தது
இந்த இடி எங்கோ
விழுந்திருக்கணுமென்று
பலரும் பேசிக் கொண்டனர்.
மழை இன்னும் நின்றபாடில்லை.
அவசரமாகப் போக நினைத்தவர்கள்
.ஆங்காங்கே நின்று தலைத்துவட்டி
காத்திருந்தனர் எப்போது நிற்கும்
யாருக்கும் தெரியவில்லை?
எப்பொழுது நிற்க வேண்டுமென்று
நேரம் கணித்துக் கொண்டா
பெய்கின்றது மழை?
*
*
பகலெல்லாம் மரங்களுக்கு
ஒய்வில்லை.
வேகமானக் காற்று வீசி
மரங்களின் உடலை
உலுக்கி எடுத்தது
இலைகள் உதிர்ந்து
பூக்களும் உதிர்ந்து
தரையெங்கும் பரவியது
கருத்த மேகங்கள் வானில்
பஞ்சுப் பொதியைாய்
திரண்டு நகர்ந்துப் போய்க்
கொண்டிருந்தன.
சின்னச் சின்னச் சிணுங்கல்
தூறல் போடத் தொடங்கின
பரபரவென ஜனங்கள் நடந்து
ஒதுங்க இடந்தேடினர்.
மேய்ந்துக் கொண்டிருந்த
மாடுகள் அப்படியே அசையாமல்
நின்று உடலை அசைத்தன.
நாய்கள், பன்றிகள்
பாதையிலிருந்து எங்கோ ஒடின.
பலத்த மழைப் பிடித்துச்
சோவென பெய்யத் தொங்கின
வாகன ஓட்டிகள் விரைந்தனர்
மக்கள் நனைந்தும்
நனையாமலும் நடையில்
வேகம் காட்டினர்.
பலத்த இடியோசை மனதை
கொஞ்சம் அதிர வைத்தது
இந்த இடி எங்கோ
விழுந்திருக்கணுமென்று
பலரும் பேசிக் கொண்டனர்.
மழை இன்னும் நின்றபாடில்லை.
அவசரமாகப் போக நினைத்தவர்கள்
.ஆங்காங்கே நின்று தலைத்துவட்டி
காத்திருந்தனர் எப்போது நிற்கும்
யாருக்கும் தெரியவில்லை?
எப்பொழுது நிற்க வேண்டுமென்று
நேரம் கணித்துக் கொண்டா
பெய்கின்றது மழை?
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்

உங்களின் மழை வரிகள் மிகவும் அருமை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
பாராட்டுக்கு மிக்க நன்றி. கவிதைக்கேற்ற தங்களின் படம் மிக அருமை.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
முத்தப் போராட்டம்…!!
*
ஆதிகாலத்தில் பிரபஞ்சம்
சத்தங்களிலிருந்தே தோன்றியது.
அச்சத்தங்களின் உச்சமே
அப்பரிமாணம்.
அங்கிருந்தே தோன்றினர்.
ஆதாம் – ஏவாள் என்ற
மானுடப் பிறவிகள்.
அன்று தொடங்கியது தான்
அன்பின் அடையாளமாகப்
பதிக்கப்பட்டு வருகின்ற
மதுர முத்தங்கள்.
*
இருட்டின் முத்தங்கள்
உயிர்த்துளியில் மானுட
இருப்பின் உருவங்களை
உற்பத்தி செய்கி்ன்றன.
*
அச்சத்தங்களில் எழுந்த
மொத்த முத்தங்களின்
தொகுப்பே
இப்பொழுதிருக்கும்
உலக மக்களின் தொகை.
*
காலந்தோறும் மானுட
வாழ்வின்
மொத்தப் போராட்டத்தை
உள்ளடக்கியது தான் முத்தம்.
இம்முத்தங்களில் கனிவது தான்
காதல், திருமணம், குடும்ப
வாழ்வின் எல்லைகள். இம்
முத்தங்களுக்கு எந்த
வர்க்கவேறுபாடுகளுமில்லை?
*
இனி எதிர்வரும் நாள்களில்
அம்பலத்தில் அரங்கேறாமல்
அந்தரங்கத்தில் மட்டுமே
சத்தமில்லாமல் இயங்கட்டும்
முத்தப் போராட்டம்..
*
*
ஆதிகாலத்தில் பிரபஞ்சம்
சத்தங்களிலிருந்தே தோன்றியது.
அச்சத்தங்களின் உச்சமே
அப்பரிமாணம்.
அங்கிருந்தே தோன்றினர்.
ஆதாம் – ஏவாள் என்ற
மானுடப் பிறவிகள்.
அன்று தொடங்கியது தான்
அன்பின் அடையாளமாகப்
பதிக்கப்பட்டு வருகின்ற
மதுர முத்தங்கள்.
*
இருட்டின் முத்தங்கள்
உயிர்த்துளியில் மானுட
இருப்பின் உருவங்களை
உற்பத்தி செய்கி்ன்றன.
*
அச்சத்தங்களில் எழுந்த
மொத்த முத்தங்களின்
தொகுப்பே
இப்பொழுதிருக்கும்
உலக மக்களின் தொகை.
*
காலந்தோறும் மானுட
வாழ்வின்
மொத்தப் போராட்டத்தை
உள்ளடக்கியது தான் முத்தம்.
இம்முத்தங்களில் கனிவது தான்
காதல், திருமணம், குடும்ப
வாழ்வின் எல்லைகள். இம்
முத்தங்களுக்கு எந்த
வர்க்கவேறுபாடுகளுமில்லை?
*
இனி எதிர்வரும் நாள்களில்
அம்பலத்தில் அரங்கேறாமல்
அந்தரங்கத்தில் மட்டுமே
சத்தமில்லாமல் இயங்கட்டும்
முத்தப் போராட்டம்..
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
மொத்தப் போராட்டும் ஒன்றிரண்டு முத்தம் பெறத்தானே...
சின்னஞ்சிறுசுகள் கொஞ்சிக் கொள்கிறார்கள் என்று விட்டுவிட முடியாதல்லவா?
அந்தரங்க முத்தமும் தப்பு தப்புதான்

சின்னஞ்சிறுசுகள் கொஞ்சிக் கொள்கிறார்கள் என்று விட்டுவிட முடியாதல்லவா?
அந்தரங்க முத்தமும் தப்பு தப்புதான்

Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
இலைவரிகள்…!!
*
மரங்களுக்கு எப்பொழுதும்
எதிர்மறை எண்ணங்களில்லை
அப் பச்சை இலைகளின்
மென்மையானச் சிரிப்பின்
சலசலப்புப் பேச்சுக்கள்
இரகசியமற்றவைகள்.
இதமானக் காற்றை
இலவசமாக வழங்கும்
வள்ளல் மனம்
படைத்தவைகள் மரங்கள்.
நிழலுக்கு
ஒதுங்குகின்றவர்களைக் கூட
யார் என்ன நிறமென்று
பார்ப்பதில்லை மரங்கள்.
மரத்திடமிருந்து
மனிதர்கள் கற்பதற்கு
எத்தனையோ இலைவரிகள்
உதிர்ந்துக் கிடக்கின்றன.
ஒவ்வொருவரின் இதயத்திலும்
மரம் என்பது மனிதமே என்ற
மனம் விரிய வேண்டும்.
அப்பொழுது தான்
அனைவருக்கும் சித்திக்கும்
ஞான விருட்சத்தின்
பிரபஞ்ச மௌனம்…!!
*
*
மரங்களுக்கு எப்பொழுதும்
எதிர்மறை எண்ணங்களில்லை
அப் பச்சை இலைகளின்
மென்மையானச் சிரிப்பின்
சலசலப்புப் பேச்சுக்கள்
இரகசியமற்றவைகள்.
இதமானக் காற்றை
இலவசமாக வழங்கும்
வள்ளல் மனம்
படைத்தவைகள் மரங்கள்.
நிழலுக்கு
ஒதுங்குகின்றவர்களைக் கூட
யார் என்ன நிறமென்று
பார்ப்பதில்லை மரங்கள்.
மரத்திடமிருந்து
மனிதர்கள் கற்பதற்கு
எத்தனையோ இலைவரிகள்
உதிர்ந்துக் கிடக்கின்றன.
ஒவ்வொருவரின் இதயத்திலும்
மரம் என்பது மனிதமே என்ற
மனம் விரிய வேண்டும்.
அப்பொழுது தான்
அனைவருக்கும் சித்திக்கும்
ஞான விருட்சத்தின்
பிரபஞ்ச மௌனம்…!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
அ [ செ ] ழிப்பு….!!
*
கிரானைட் கற்கள் வெட்டி
எடுக்கப்பட்டதில்
மதுரையில்
பொக்கிஷ மலை அழிப்பு
கிராமங்கள் அழிப்பு
அழித்தவர்கள் செழித்தார்கள்
அடடா,
இன்னும் கொஞ்ச நாளில்
செந்தமிழ்நாடே
காணாமல் போய்விடுமோ?
*
*
கிரானைட் கற்கள் வெட்டி
எடுக்கப்பட்டதில்
மதுரையில்
பொக்கிஷ மலை அழிப்பு
கிராமங்கள் அழிப்பு
அழித்தவர்கள் செழித்தார்கள்
அடடா,
இன்னும் கொஞ்ச நாளில்
செந்தமிழ்நாடே
காணாமல் போய்விடுமோ?
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
சுபம்….சுகம்….!!
*
பேரூந்தில், நடைபாதையில்
திருமணக் கூட்டம்
திருமண மண்டபங்களில்
மாப்பிள்ளை – பெண் வரவேற்பு
கலகலப்பானப் பேச்சுக்கள்
இசைக் கச்சேரியின் இரைச்சல்
வரிசையில் நின்று
பரிசுப் பொருள்கள்
அன்பளிப்புச் செய்து
வாழ்த்துபவர்கள்
சிரித்த முகத்தோடு
வீடீயோ, போட்டோவுக்கு
போஸ் கொடுத்துக்
கைக் குலுக்குகிறார்கள்.
உணவு கூடத்தில்
சத்தமிட்டு பரிமாறல்கள்
தேவையானவற்றைக் கேட்டு
விரும்பிச் சாப்பிடுபவர்களின்
அவசரச் சத்தங்கள்.
முடித்தவர்கள் விரைந்து
எழுந்துப் போய் கைகழுவி
வெளியேறுபவர்களின்
கைகளில் மஞ்சள் திருமணத்
தாம்பூலப் பைகள்.
பரபரப்பாய் விடைபெற்று
வெளியேறுபவர்கள்
பஸ், கார், பைக்கிள் பயணம்.
விடியற்காலை
சுபமுகூர்த்தம்
சுபம்…சுபம்…சுபம்…
வாழ்க்கைத் துவங்கி
பகிர்ந்திடப் போகிறது
சுகம்…சுகம்…சுகம்…!!
*
*
பேரூந்தில், நடைபாதையில்
திருமணக் கூட்டம்
திருமண மண்டபங்களில்
மாப்பிள்ளை – பெண் வரவேற்பு
கலகலப்பானப் பேச்சுக்கள்
இசைக் கச்சேரியின் இரைச்சல்
வரிசையில் நின்று
பரிசுப் பொருள்கள்
அன்பளிப்புச் செய்து
வாழ்த்துபவர்கள்
சிரித்த முகத்தோடு
வீடீயோ, போட்டோவுக்கு
போஸ் கொடுத்துக்
கைக் குலுக்குகிறார்கள்.
உணவு கூடத்தில்
சத்தமிட்டு பரிமாறல்கள்
தேவையானவற்றைக் கேட்டு
விரும்பிச் சாப்பிடுபவர்களின்
அவசரச் சத்தங்கள்.
முடித்தவர்கள் விரைந்து
எழுந்துப் போய் கைகழுவி
வெளியேறுபவர்களின்
கைகளில் மஞ்சள் திருமணத்
தாம்பூலப் பைகள்.
பரபரப்பாய் விடைபெற்று
வெளியேறுபவர்கள்
பஸ், கார், பைக்கிள் பயணம்.
விடியற்காலை
சுபமுகூர்த்தம்
சுபம்…சுபம்…சுபம்…
வாழ்க்கைத் துவங்கி
பகிர்ந்திடப் போகிறது
சுகம்…சுகம்…சுகம்…!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Page 2 of 3 • 1, 2, 3

» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» ந.க.துறைவன் புதுக்கவிதைகள்.
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள்
» கே இனியவன் புதுக்கவிதைகள்
» ந.க.துறைவன் புதுக்கவிதைகள்.
» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
» புதுக்கவிதைகள்
» கே இனியவன் புதுக்கவிதைகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|