Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாழ்க்கை எங்கே போகிறது…
Page 1 of 1 • Share
வாழ்க்கை எங்கே போகிறது…
வாழ்க்கை என்பது வியாபாரம்’ என்று கவியரசு கண்ணதாசன் பாடியது போல் வாழ்க்கையே வியாபாரமாகி வருகிறது. எல்லோருமே தன்னுடைய வாழ்க்கை, தன்னுடைய எதிர்காலம் என்று சுயநலமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். அதனால்தான் மக்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து வெகு தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இயல்பான வாழ்க்கை என்பதுதான் யதார்த்தமானது, நிஜமானது. இன்றைய வாழ்க்கை சூழல், நிஜங்களை தொலைத்துவிட்டு, போலி மயமாகிக் கொண்டிருக்கிறது.
ஒரு குழந்தை, தாயின் அரவணைப்பில் வளர்வதுதான் அதற்கு பாதுகாப்பு, மகிழ்ச்சி. இன்றைய முரண்பாடான வாழ்க்கை, குழந்தைக்கு அந்த அரவணைப்பை தருவதில்லை. மாறாக வருங்கால வசதி, வைப்பு நிதி, சமூக அந்தஸ்து, ஆடம்பரம் இவைகளை எல்லாம் தரப்போவதாக வாக்குறுதி அளிக்கிறது. அதனால் ஒரு மழலையை கூட வஞ்சித்து விடுகிறது இன்றைய வியாபார வாழ்க்கை. அதில் லாப- நஷ்ட கணக்குப்போட்டு பெற்ற பிள்ளைகளை சமாதானம் செய்து கொண்டு, தங்களையும் ஏமாற்றி தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார் கள்.
வயதான பெற்றோரை காப்பாற்றுவது பிள்ளைகளின் கடமை. ஆனால் இன்றைய வாழ்க்கை, அந்த கடமையை பின்னுக்கு தள்ளிவிட்டது. அதையும் மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டார்கள்.
இன்றைய வியாபார வாழ்க்கைக்கு அன்பு, பாசம் தேவையில்லை. தன்னுடைய தேவை, ஆசை, மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு போன்ற எல்லாவற்றையும் நோக்கி, உற்றார்- உறவினர்களைக்கூட பின்னுக்கு தள்ளிவிட்டு தலைதெறிக்க ஓடுவதே மிகப்பெரிய சாதனை என்று நினைக்கிறார்கள்.
`அது தவறல்லவா?’ என்று அவர்களிடம் கேட்டால், `தான் ஒரு பிராக்டிகல் மனிதன்’ என்கிறார்கள். இப்படி சொல்வதை ஒரு அறிவாளித்தனம் என்று கருதிக்கொண்டு, வாழ்வதற்கு என்றே படைக்கப்பட்ட நல்ல விஷயங்களை பற்றிய சிந்தனையே இல்லாமல், எல்லாவற்றையும் பிராக்டிகல் என்ற மண்ணைப்போட்டு மூடிவிட்டு, மேலே முள் செடியையும் நட்டு வளர்த்து, வாழ்க்கையையே ஒரு முட்காடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு அழகான ரோஜா மலரைப் பார்த்து ரசிக்க கூட இந்த பிராக்டிகல் மனசுகாரர்களால் முடியாது. விளைவு வாழ்க்கையும் முள்ளாகிப் போகிறது.
விட்டுக் கொடுத்தல், பணிந்து போதல், மற்றவர்கள் கருத்துக்களை காது கொடுத்து கேட்டல் இவை எதுவுமே பிராக்டிகல் எனப்படும் வியாபார வாழ்க்கையில் இருக்காது. அந்த வாழ்க்கை தனக்கு ஒரு அந்தஸ்தை தரும். சமூகத்தில் ஒரு அங்கீகாரத்தை தரும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும். ஆனால் ஏமாற்றத்தில் முடிந்துவிடும்.
“பிராக்டிகல்” என்ற ஒன்று நம்மோடு ஒட்டிக் கொண்டிருந்தால் தான் நம்மால் நிம்மதியாக வாழ முடியும் என்ற எண்ணம் பலபேர் மனதில் வேரூன்றி விட்டது. இதனால் தங்களுடைய “தனித்துவத்தை” தொலைத்து விட்டு கடனே என்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே கற்பனைகள் அற்புதமாக இருக்கும். ஆனால் அந்த கற்பனையில் மனிதனால் வாழ முடியாது. பிராக்டிகல் என்ற ஒன்று வாழ்க்கையை திசை மாற்றிவிடக் கூடாது. தவறுகளை நியாயப்படுத்தவும் அது பயன்படக்கூடாது. உண்மைகளை அது மறைக்க கூடாது. உறவுகளையும் சிதைத்துவிடக் கூடாது.
வாழ்க்கை வியாபாரம் ஆகிக்கொண்டிருக்கிறது. அதோடு சேர்ந்து நாமும் வியாபாரி ஆகிவிடாமல் நிஜ வாழ்க்கை, நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து உறவுகளுக்கு கைகொடுத்து மனிதனின் மாண்பை பாதுகாக்கவேண்டும்.
தன்னம்பிக்கை
இயல்பான வாழ்க்கை என்பதுதான் யதார்த்தமானது, நிஜமானது. இன்றைய வாழ்க்கை சூழல், நிஜங்களை தொலைத்துவிட்டு, போலி மயமாகிக் கொண்டிருக்கிறது.
ஒரு குழந்தை, தாயின் அரவணைப்பில் வளர்வதுதான் அதற்கு பாதுகாப்பு, மகிழ்ச்சி. இன்றைய முரண்பாடான வாழ்க்கை, குழந்தைக்கு அந்த அரவணைப்பை தருவதில்லை. மாறாக வருங்கால வசதி, வைப்பு நிதி, சமூக அந்தஸ்து, ஆடம்பரம் இவைகளை எல்லாம் தரப்போவதாக வாக்குறுதி அளிக்கிறது. அதனால் ஒரு மழலையை கூட வஞ்சித்து விடுகிறது இன்றைய வியாபார வாழ்க்கை. அதில் லாப- நஷ்ட கணக்குப்போட்டு பெற்ற பிள்ளைகளை சமாதானம் செய்து கொண்டு, தங்களையும் ஏமாற்றி தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார் கள்.
வயதான பெற்றோரை காப்பாற்றுவது பிள்ளைகளின் கடமை. ஆனால் இன்றைய வாழ்க்கை, அந்த கடமையை பின்னுக்கு தள்ளிவிட்டது. அதையும் மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டார்கள்.
இன்றைய வியாபார வாழ்க்கைக்கு அன்பு, பாசம் தேவையில்லை. தன்னுடைய தேவை, ஆசை, மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு போன்ற எல்லாவற்றையும் நோக்கி, உற்றார்- உறவினர்களைக்கூட பின்னுக்கு தள்ளிவிட்டு தலைதெறிக்க ஓடுவதே மிகப்பெரிய சாதனை என்று நினைக்கிறார்கள்.
`அது தவறல்லவா?’ என்று அவர்களிடம் கேட்டால், `தான் ஒரு பிராக்டிகல் மனிதன்’ என்கிறார்கள். இப்படி சொல்வதை ஒரு அறிவாளித்தனம் என்று கருதிக்கொண்டு, வாழ்வதற்கு என்றே படைக்கப்பட்ட நல்ல விஷயங்களை பற்றிய சிந்தனையே இல்லாமல், எல்லாவற்றையும் பிராக்டிகல் என்ற மண்ணைப்போட்டு மூடிவிட்டு, மேலே முள் செடியையும் நட்டு வளர்த்து, வாழ்க்கையையே ஒரு முட்காடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு அழகான ரோஜா மலரைப் பார்த்து ரசிக்க கூட இந்த பிராக்டிகல் மனசுகாரர்களால் முடியாது. விளைவு வாழ்க்கையும் முள்ளாகிப் போகிறது.
விட்டுக் கொடுத்தல், பணிந்து போதல், மற்றவர்கள் கருத்துக்களை காது கொடுத்து கேட்டல் இவை எதுவுமே பிராக்டிகல் எனப்படும் வியாபார வாழ்க்கையில் இருக்காது. அந்த வாழ்க்கை தனக்கு ஒரு அந்தஸ்தை தரும். சமூகத்தில் ஒரு அங்கீகாரத்தை தரும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும். ஆனால் ஏமாற்றத்தில் முடிந்துவிடும்.
“பிராக்டிகல்” என்ற ஒன்று நம்மோடு ஒட்டிக் கொண்டிருந்தால் தான் நம்மால் நிம்மதியாக வாழ முடியும் என்ற எண்ணம் பலபேர் மனதில் வேரூன்றி விட்டது. இதனால் தங்களுடைய “தனித்துவத்தை” தொலைத்து விட்டு கடனே என்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே கற்பனைகள் அற்புதமாக இருக்கும். ஆனால் அந்த கற்பனையில் மனிதனால் வாழ முடியாது. பிராக்டிகல் என்ற ஒன்று வாழ்க்கையை திசை மாற்றிவிடக் கூடாது. தவறுகளை நியாயப்படுத்தவும் அது பயன்படக்கூடாது. உண்மைகளை அது மறைக்க கூடாது. உறவுகளையும் சிதைத்துவிடக் கூடாது.
வாழ்க்கை வியாபாரம் ஆகிக்கொண்டிருக்கிறது. அதோடு சேர்ந்து நாமும் வியாபாரி ஆகிவிடாமல் நிஜ வாழ்க்கை, நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து உறவுகளுக்கு கைகொடுத்து மனிதனின் மாண்பை பாதுகாக்கவேண்டும்.
தன்னம்பிக்கை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்க்கை எங்கே போகிறது…
வாழ்க்கை வியாபாரமாகிவருகிறது என்பது மிகவும் கசப்பான உண்மை.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வாழ்க்கை எங்கே போகிறது…
செந்தில் wrote:வாழ்க்கை வியாபாரமாகிவருகிறது என்பது மிகவும் கசப்பான உண்மை.
Similar topics
» வாழ்க்கை எங்கே போகிறது…
» வாழ்க்கை எங்கே போகிறது…
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை
» நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!
» வாழ்க்கை எங்கே போகிறது…
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை
» நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|