Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
குறைப்பிரசவத்தை தடுக்க மருத்துவ கண்காணிப்பு அவசியம்
Page 1 of 1 • Share
குறைப்பிரசவத்தை தடுக்க மருத்துவ கண்காணிப்பு அவசியம்
பொதுவாக ஒரு தாயின் வயிற்றில் வளரும் குழந்தை முதல் கட்ட வளர்ச்சியடைய 37 வாரங்கள் தேவைப்படுகிறது. அதற்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் குறைப்பிரசவ குழந்தைகளாகும். 18 வயதிற்கு குறைவான, 35 வயதிற்கு மேலான கர்ப்பிணிகளுக்கும், மேலும் வேலைக்கு செல்வது, கர்ப்பகால செக்ஸ், நீண்ட தூர பயணம், அதிக எடை தூக்குவது, மாடிப்படி ஏறி இறங்குவது, உடல் இயக்கம் இல்லாமல் படுத்திருப்பது ஆகியவையும் குறைப்பிரசவத்திற்கு காரணமாகிறது. இதில், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு பாதிப்புள்ள கர்ப்பிணிகளுக்கும், சத்துணவு குறைபாடு உள்ளவர்களுக்கும் குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு, தைராய்டு பாதிப்புள்ள கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் உணவு கட்டுப்பாடு, மருத்துவ பராமரிப்புடன் மருந்துகளை சாப்பிட்டு சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வேண்டும். கர்ப்ப கால தொடக்கம் முதல் மருத்துவ குழுவின் ஆலோசனைகளை பெற்று பின்பற்றினால் குறைப்பிரசவத்தை தடுத்து ஆரோக்கிய குழந்தைகளை பெறலாம்.இல்லாவிட்டால் இத்தகைய பாதிப்புள்ளவர்களின் கர்ப்பப்பையில் வளரும் சிசுவிற்கு தேவையான சத்துக்கள் செல்வது பாதிக்கப்படும், வளர்ச்சி குன்றி ஊனமாகும் வாய்ப்புள்ளது அல்லது சிசு இறக்க நேரிடும், அது தாயையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இத்தகைய தன்மை கொண்ட கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தின்போதே அடிக்கடி ஸ்கேன் பார்த்து, கர்ப்பப்பையில் சிசுவின் நிலையை கண்டறிய வேண்டும். சிசுவின் வளர்ச்சியில் குறைபாடு கண்டறியப்பட்டவுடன் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் சிசுவை வெளியே எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தாய்க்கும், சிசுவிற்கும் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தும்.இவ்வாறு அறுவை சிகிச்சை மூலம் குறைப்பிரசவத்திற்கு ஆளாகும் சிசு ஒரு கிலோவிற்கும் குறைவான எடை இருக்கலாம். குறைப்பிரசவ சிசுவிற்கு நுரையீரல் முழு வளர்ச்சி அடைந்திருக்காது. சுவாசிக்க முடியாமல் திணறும். அதி நவீன வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் கொடுத்து காப்பாற்ற வேண்டும். அதுபோல் சூடு, குளிர் போன்ற சீதோஷ்ண நிலைகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும். அதற்கேற்றவாறு மருத்துவமனையில் சிறப்பு கருவிகள் மூலம் பராமரிக்க வேண்டும். இத்தகைய சிசுவிற்கு பால் குடிக்கும் திறன் இருக்காது. செயற்கை முறையில் குளுகோஸ், பால் போன்றவை சிசுவின் வளர்ச்சிக்கேற்ப டிரிப் மூலம் செலுத்த வேண்டும்.
மேலும் இந்த குழந்தைகளுக்கு பல்வேறு நோய் தாக்குதல் ஏற்படும் வாய்ப்புள்ளதால் மருத்துவ குழுவினரின் கண்காணிப்பு தேவை. இத்தகைய சிசுக்களுக்கு குறைப்பிரசவ அபாயங்களை நீக்கி, சிசு இயல்பான வளர்ச்சியை எட்டும் வரை மருத்துவ குழுவினர் பராமரித்த பின்னர் தாயிடம் ஒப்படைப்பார்கள் என்கிறார்கள் சிசு நல மருத்துவர்கள்.
தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: குறைப்பிரசவத்தை தடுக்க மருத்துவ கண்காணிப்பு அவசியம்
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
» அவசியம் அறிந்திருக்கவேண்டிய மருத்துவ குறிப்புகள் - 5
» அவசியம் அறிந்திருக்கவேண்டிய மருத்துவ குறிப்புகள் -6
» அவசியம் அறிந்திருக்கவேண்டிய மருத்துவ குறிப்புகள் -7
» அவசியம் அறிந்திருக்கவேண்டிய மருத்துவ குறிப்புகள் - 1
» அவசியம் அறிந்திருக்கவேண்டிய மருத்துவ குறிப்புகள் - 5
» அவசியம் அறிந்திருக்கவேண்டிய மருத்துவ குறிப்புகள் -6
» அவசியம் அறிந்திருக்கவேண்டிய மருத்துவ குறிப்புகள் -7
» அவசியம் அறிந்திருக்கவேண்டிய மருத்துவ குறிப்புகள் - 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|