Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சில துளி ரத்தம் சொல்லும் ரத்தசோகை ரத்தப் புற்றுநோய்
Page 1 of 1 • Share
சில துளி ரத்தம் சொல்லும் ரத்தசோகை ரத்தப் புற்றுநோய்
[You must be registered and logged in to see this image.]
ரத்தத்தில் என்னென்ன இருக்கின்றன?
‘‘ரத்தம் என்பது திரவ வடிவில் இருக்கிற ஒரு வகை திசு. பொதுவாக ஆண்களுக்கு ஐந்தரை லிட்டர் ரத்தமும் பெண்களுக்கு நாலரை லிட்டர் ரத்தமும் இருக்கும். இதில் பிளாஸ்மா, சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத்தட்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன. இதில் வெள்ளை அணுக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிற பணியைச் செய்வதால், இவற்றைப் ‘போர்வீரர்கள்’ என்று சொல்வார்கள். சராசரியாக, 8 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரை வெள்ளை அணுக்கள் இருக்க வேண்டும்.
சிவப்பு அணுக்கள் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தை அளிக்கும் ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருளைக் கொண்டவை.இந்த ஹீமோகுளோபின்கள் தான் ரத்தத்தின் மூலம் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கின்றன. திரும்பி வரும்போது கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு வந்து சுவாசத்தின் வழியாக வெளியேற்றுகின்றன. ரத்தத்தட்டுகள் (பிளேட்லெட்ஸ்) ரத்தத்தை உறைய வைக்கின்றன. ஏதேனும் காயம் ஏற்பட்டால் 2 நிமிடங்களிலிருந்து அதிகபட்சம் 12 நிமிடங் களுக்குள் ரத்தம் உறைய வேண்டும். சராசரியாக 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை ரத்தத்தட்டுகள் இருக்கும். இந்த எண்ணிக்கை குறைந்தால் ரத் தம் உறையாது.’’
ரத்தப் பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது?
‘‘2 மி.லி. முதல் 5 மி.லி. வரை ரத்தம் எடுப்பதே பரிசோதனைக்குப் போதுமானது. ரத்த வகையை கண்டுபிடிப்பது முதல் குறிப்பிட்ட நோய்க்கான பரிசோதனை வரை ஒவ்வொன்றுக்கும் ஒரு வழிமுறை இருக்கிறது. எந்தப் பரிசோதனையையும் அதிகபட்சமாக ஒரு மணிநேரத்துக்குள் முடித்துவிடலாம்...’’
எங்கு பரிசோதனை செய்ய வேண்டும்?
‘‘ரத்தப் பரிசோதனை மையங்கள் அமைப்பதற்கு நிறைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் இருக்கின்றன. ஆனால், சில இடங்களில் பயிற்சி பெறாதவர்களும் அனுபவமற்றவர்களும் மையங்களை நடத்தி வருவதாகக் கேள்விப்படுகிறோம். ரத்தப்பரிசோதனை என்பது மருத்துவத்தில் மிகவும் முக்கியமானது. இந்த முடிவுகளை வைத்துத்தான் என்ன சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று ஒரு மருத்துவர் முடிவெடுக்கிறார்.
தவறான இடத்தில் செய்கிற பரிசோதனையால், மோசமான விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் உண்டு. அதனால், ரத்தப்பரிசோதனையை ஒரு மருத்துவமனையில் செய்து கொள்வது எல்லா வகையிலும் சிறந்தது. இது தவிர, ஒரு மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் செயல்பட்டு வரும் பரிசோதனை மையங்களிலும் செய்துகொள்ளலாம். அந்த மையம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றிருக்கிறதா, பயிற்சி பெற்றவர் அங்கு இருக்கிறாரா, கருவிகளை சரியான முறையில் பராமரிக்கிறார்களா என்பதையெல்லாம் கவனத்தில் கொண்ட பிறகே பரிசோ தனை செய்ய வேண்டும்...’’
ரத்தப் பரிசோதனை மையம் நடத்த என்ன படித்திருக்க வேண்டும்?
‘‘வழக்கமாக டிப்ளமோ இன் லேப் டெக்னாலஜி படித்திருந்தால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால், டி.எம்.எல்.டி. கற்றவர்களுக்கு கருவிகளைக் கையாளும் திறனும், பரிசோதனை செய்யும் வழிமுறைகளும் மட்டுமே தெரிந்திருக்கும். இவர்களின் முடிவு அதிகாரப்பூர்வமானது அ ல்ல. எம்.பி.பி.எஸ். படித்திருக்கும் ஒரு மருத்துவருக்கு ரத்தப் பரிசோதனை பற்றி அடிப்படையான அறிவு இருக்கும். அதன்பிறகு, எம்.டி., நோய்க் குறியியல் (Pathology) படித்த மருத்துவரே இந்தப் பரிசோதனைகள் பற்றி முழுமையாக அறிந்திருப்பார்...’’
என்னென்ன நோய்களைக் கண்டுபிடிக்க முடியும்?
‘‘நம் நாட்டில் அதிகமாக இருக்கும் குறைபாடான ரத்தசோகை முதல் ரத்தப் புற்றுநோய் வரை 50 சதவிகித நோய்களை ரத்தப் பரிசோதனையில் கண்டுபிடிக்கலாம். ஹெச்.ஐ.வி., மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்களை ரத்தத்தில் இருக்கும் சீரத்தில் இருந்து கண்டுபிடிக்கலாம். இந்த சீரத்தில் இருந்தே சிறுநீரகத்தின் செயல்பாடு, கல்லீரலின் செயல்பாடு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, புற்றுநோய் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முடியும். இது தவிர, ரத்தப்பரிசோதனையிலேயே குழந்தைகள் குறைபாட்டுடன் பிறப்பதையும் மரபியல் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கலாம்...’’
உடல்நலக்குறைவுக்காக தவிர, ரத்தப் பரிசோதனையை யாரெல்லாம் செய்துகொள்வது நல்லது?
‘‘ரத்த தானம் செய்ய விரும்புகிறவர்கள், உறுப்பு தானம் செய்ய விரும்புகிறவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயம். சிலர் அடிக்கடி சோர்வாக உணர்வார்கள், வேலையில் கவனம் செலுத்த முடியாது, தூக்கமாக வரும், படுத்துக் கொள்ள வேண்டும் போல் இருக் கும்... இந்த அறிகுறிகளை சோம்பேறித்தனம் என்றோ, களைப்பு என்றோ கருதக் கூடாது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் இதுபோன்ற சோர்வு ஏற்படும். ஒருவேளை ரத்தப்புற்றுநோய் கூட காரணமாக இருக்கலாம். இவர்கள் கண்டிப்பாக ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்...’’ 50 சதவிகித நோய்களை ரத்தப் பரிசோதனையிலேயே கண்டுபிடித்து விடலாம். ஹெச்.ஐ.வி., மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்களை ரத்த சீரத்தில் இருந்து கண்டு பிடிக்கலாம்.
நன்றி: தினகரன்
ரத்தத்தில் என்னென்ன இருக்கின்றன?
‘‘ரத்தம் என்பது திரவ வடிவில் இருக்கிற ஒரு வகை திசு. பொதுவாக ஆண்களுக்கு ஐந்தரை லிட்டர் ரத்தமும் பெண்களுக்கு நாலரை லிட்டர் ரத்தமும் இருக்கும். இதில் பிளாஸ்மா, சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத்தட்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன. இதில் வெள்ளை அணுக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிற பணியைச் செய்வதால், இவற்றைப் ‘போர்வீரர்கள்’ என்று சொல்வார்கள். சராசரியாக, 8 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரை வெள்ளை அணுக்கள் இருக்க வேண்டும்.
சிவப்பு அணுக்கள் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தை அளிக்கும் ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருளைக் கொண்டவை.இந்த ஹீமோகுளோபின்கள் தான் ரத்தத்தின் மூலம் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கின்றன. திரும்பி வரும்போது கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு வந்து சுவாசத்தின் வழியாக வெளியேற்றுகின்றன. ரத்தத்தட்டுகள் (பிளேட்லெட்ஸ்) ரத்தத்தை உறைய வைக்கின்றன. ஏதேனும் காயம் ஏற்பட்டால் 2 நிமிடங்களிலிருந்து அதிகபட்சம் 12 நிமிடங் களுக்குள் ரத்தம் உறைய வேண்டும். சராசரியாக 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை ரத்தத்தட்டுகள் இருக்கும். இந்த எண்ணிக்கை குறைந்தால் ரத் தம் உறையாது.’’
ரத்தப் பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது?
‘‘2 மி.லி. முதல் 5 மி.லி. வரை ரத்தம் எடுப்பதே பரிசோதனைக்குப் போதுமானது. ரத்த வகையை கண்டுபிடிப்பது முதல் குறிப்பிட்ட நோய்க்கான பரிசோதனை வரை ஒவ்வொன்றுக்கும் ஒரு வழிமுறை இருக்கிறது. எந்தப் பரிசோதனையையும் அதிகபட்சமாக ஒரு மணிநேரத்துக்குள் முடித்துவிடலாம்...’’
எங்கு பரிசோதனை செய்ய வேண்டும்?
‘‘ரத்தப் பரிசோதனை மையங்கள் அமைப்பதற்கு நிறைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் இருக்கின்றன. ஆனால், சில இடங்களில் பயிற்சி பெறாதவர்களும் அனுபவமற்றவர்களும் மையங்களை நடத்தி வருவதாகக் கேள்விப்படுகிறோம். ரத்தப்பரிசோதனை என்பது மருத்துவத்தில் மிகவும் முக்கியமானது. இந்த முடிவுகளை வைத்துத்தான் என்ன சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று ஒரு மருத்துவர் முடிவெடுக்கிறார்.
தவறான இடத்தில் செய்கிற பரிசோதனையால், மோசமான விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் உண்டு. அதனால், ரத்தப்பரிசோதனையை ஒரு மருத்துவமனையில் செய்து கொள்வது எல்லா வகையிலும் சிறந்தது. இது தவிர, ஒரு மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் செயல்பட்டு வரும் பரிசோதனை மையங்களிலும் செய்துகொள்ளலாம். அந்த மையம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றிருக்கிறதா, பயிற்சி பெற்றவர் அங்கு இருக்கிறாரா, கருவிகளை சரியான முறையில் பராமரிக்கிறார்களா என்பதையெல்லாம் கவனத்தில் கொண்ட பிறகே பரிசோ தனை செய்ய வேண்டும்...’’
ரத்தப் பரிசோதனை மையம் நடத்த என்ன படித்திருக்க வேண்டும்?
‘‘வழக்கமாக டிப்ளமோ இன் லேப் டெக்னாலஜி படித்திருந்தால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால், டி.எம்.எல்.டி. கற்றவர்களுக்கு கருவிகளைக் கையாளும் திறனும், பரிசோதனை செய்யும் வழிமுறைகளும் மட்டுமே தெரிந்திருக்கும். இவர்களின் முடிவு அதிகாரப்பூர்வமானது அ ல்ல. எம்.பி.பி.எஸ். படித்திருக்கும் ஒரு மருத்துவருக்கு ரத்தப் பரிசோதனை பற்றி அடிப்படையான அறிவு இருக்கும். அதன்பிறகு, எம்.டி., நோய்க் குறியியல் (Pathology) படித்த மருத்துவரே இந்தப் பரிசோதனைகள் பற்றி முழுமையாக அறிந்திருப்பார்...’’
என்னென்ன நோய்களைக் கண்டுபிடிக்க முடியும்?
‘‘நம் நாட்டில் அதிகமாக இருக்கும் குறைபாடான ரத்தசோகை முதல் ரத்தப் புற்றுநோய் வரை 50 சதவிகித நோய்களை ரத்தப் பரிசோதனையில் கண்டுபிடிக்கலாம். ஹெச்.ஐ.வி., மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்களை ரத்தத்தில் இருக்கும் சீரத்தில் இருந்து கண்டுபிடிக்கலாம். இந்த சீரத்தில் இருந்தே சிறுநீரகத்தின் செயல்பாடு, கல்லீரலின் செயல்பாடு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, புற்றுநோய் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முடியும். இது தவிர, ரத்தப்பரிசோதனையிலேயே குழந்தைகள் குறைபாட்டுடன் பிறப்பதையும் மரபியல் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கலாம்...’’
உடல்நலக்குறைவுக்காக தவிர, ரத்தப் பரிசோதனையை யாரெல்லாம் செய்துகொள்வது நல்லது?
‘‘ரத்த தானம் செய்ய விரும்புகிறவர்கள், உறுப்பு தானம் செய்ய விரும்புகிறவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயம். சிலர் அடிக்கடி சோர்வாக உணர்வார்கள், வேலையில் கவனம் செலுத்த முடியாது, தூக்கமாக வரும், படுத்துக் கொள்ள வேண்டும் போல் இருக் கும்... இந்த அறிகுறிகளை சோம்பேறித்தனம் என்றோ, களைப்பு என்றோ கருதக் கூடாது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் இதுபோன்ற சோர்வு ஏற்படும். ஒருவேளை ரத்தப்புற்றுநோய் கூட காரணமாக இருக்கலாம். இவர்கள் கண்டிப்பாக ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்...’’ 50 சதவிகித நோய்களை ரத்தப் பரிசோதனையிலேயே கண்டுபிடித்து விடலாம். ஹெச்.ஐ.வி., மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்களை ரத்த சீரத்தில் இருந்து கண்டு பிடிக்கலாம்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சில துளி ரத்தம் சொல்லும் ரத்தசோகை ரத்தப் புற்றுநோய்
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சில துளி ரத்தம் சொல்லும் ரத்தசோகை ரத்தப் புற்றுநோய்
அருமையான கட்டுரை!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|