Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஈதுனக்கு அழகாமோ?
Page 1 of 1 • Share
ஈதுனக்கு அழகாமோ?
போதுமே எங்கள் பொன்தமிழ்க் குலத்தர்
பட்டதோர் துயர்களும் இங்கே!
நீதமே இல்லை நீயுமே காக்கும்
நீண்டதோர் பொறுமையே சொன்னேன்!
ஏதமே நாங்கள் ஏதிவண் புரிந்தோம்?
எடுத்துநீ புகலுதல் வேண்டும்!
வேதமே கேட்டுன் செவிகளுக் கெங்கள்
வேதனை மொழிபுரிந் திலையோ?
கல்லினில் வடித்துக் கோவிலில் வைத்தக்
கணக்கதும் பிழையென வாச்சோ?
கல்லினில் வடித்தும் கடவுளாய்க் கண்ட
காட்சியும் பொருளிலா தாச்சோ?
கல்லென வேநீ கண்திற வாமற்
கிடப்பதே முடிவென வானால்
கல்லறை தனக்கும் கோவிலுக் கும்பின்
வேற்றுமை ஏதுள திங்கே?
அஞ்சலென் றுரைக்கும் அன்புடைக் கரங்கள்
அசைவினை இழந்ததும் ஏனோ?
சஞ்சல மென்றுன் சந்நிதி வந்தோம்
சாந்திநீ தரமறுப் பாயோ?
தஞ்சமென் றுன்றன் தாள்பணிந் திட்டோம்
தெய்வமே கண்திற வாயோ?
வஞ்சமில் லாரை வாட்டியே பார்த்தல்
வேதனே ஒருவிளை யாட்டோ?
நம்பினார்க் கெடுவ தில்லையென் றுரைத்த
நான்மறை நீர்த்ததோ இன்று?
வெம்பினார் நெஞ்சம் தெம்பினாற் சிரிக்க
விழியினாற் காண்பதும் என்று?
அம்பினாற் கொய்த ஐயிரு தலையன்
மீட்டுமே பிறந்துளான் இங்கே!
நம்பியாய் வந்த நாயகா உன்றன்
நல்லவ தாரமும் எங்கே?
வேண்டாம்,
"தர்மமே யழிந்து தரணியின் மீதில்
அதர்மமே ஓங்கிடும் போது
கர்மமே முடிக்க கனிவுடன் அந்நாள்
கல்கியென் றுதிப்பனே, முற்றாய்ச்
சர்வமே துடைத்துச் சதுரிடு வேனஃ
தே,கலி யுகமுடி வென்னும்
மர்மமே" யென்றாய் மாலவா அச்சொல்
மெய்யென வாகிலும் நன்றே!
தரிகிட தத்தோம் தரிகிட தத்தோம்
தரிகிட தரிகிட வென்றே
கருகிட ஞாலம் கலங்கிடக் கோலம்
கண்ணனே தரித்துநீ, தீயோர்
நெறிகெட, ரத்தம் பருகிட, நல்லோர்
உருகிட, உருவெடுத் தே,வா!
தரிகிட தத்தோம் தரிகிட தத்தோம்
தரிகிட தரிகிட தத்"ஓம்"!
---------ரௌத்திரன்
பட்டதோர் துயர்களும் இங்கே!
நீதமே இல்லை நீயுமே காக்கும்
நீண்டதோர் பொறுமையே சொன்னேன்!
ஏதமே நாங்கள் ஏதிவண் புரிந்தோம்?
எடுத்துநீ புகலுதல் வேண்டும்!
வேதமே கேட்டுன் செவிகளுக் கெங்கள்
வேதனை மொழிபுரிந் திலையோ?
கல்லினில் வடித்துக் கோவிலில் வைத்தக்
கணக்கதும் பிழையென வாச்சோ?
கல்லினில் வடித்தும் கடவுளாய்க் கண்ட
காட்சியும் பொருளிலா தாச்சோ?
கல்லென வேநீ கண்திற வாமற்
கிடப்பதே முடிவென வானால்
கல்லறை தனக்கும் கோவிலுக் கும்பின்
வேற்றுமை ஏதுள திங்கே?
அஞ்சலென் றுரைக்கும் அன்புடைக் கரங்கள்
அசைவினை இழந்ததும் ஏனோ?
சஞ்சல மென்றுன் சந்நிதி வந்தோம்
சாந்திநீ தரமறுப் பாயோ?
தஞ்சமென் றுன்றன் தாள்பணிந் திட்டோம்
தெய்வமே கண்திற வாயோ?
வஞ்சமில் லாரை வாட்டியே பார்த்தல்
வேதனே ஒருவிளை யாட்டோ?
நம்பினார்க் கெடுவ தில்லையென் றுரைத்த
நான்மறை நீர்த்ததோ இன்று?
வெம்பினார் நெஞ்சம் தெம்பினாற் சிரிக்க
விழியினாற் காண்பதும் என்று?
அம்பினாற் கொய்த ஐயிரு தலையன்
மீட்டுமே பிறந்துளான் இங்கே!
நம்பியாய் வந்த நாயகா உன்றன்
நல்லவ தாரமும் எங்கே?
வேண்டாம்,
"தர்மமே யழிந்து தரணியின் மீதில்
அதர்மமே ஓங்கிடும் போது
கர்மமே முடிக்க கனிவுடன் அந்நாள்
கல்கியென் றுதிப்பனே, முற்றாய்ச்
சர்வமே துடைத்துச் சதுரிடு வேனஃ
தே,கலி யுகமுடி வென்னும்
மர்மமே" யென்றாய் மாலவா அச்சொல்
மெய்யென வாகிலும் நன்றே!
தரிகிட தத்தோம் தரிகிட தத்தோம்
தரிகிட தரிகிட வென்றே
கருகிட ஞாலம் கலங்கிடக் கோலம்
கண்ணனே தரித்துநீ, தீயோர்
நெறிகெட, ரத்தம் பருகிட, நல்லோர்
உருகிட, உருவெடுத் தே,வா!
தரிகிட தத்தோம் தரிகிட தத்தோம்
தரிகிட தரிகிட தத்"ஓம்"!
---------ரௌத்திரன்
Re: ஈதுனக்கு அழகாமோ?
எதிர்காலத்தில் உங்கள் கவிதைகள் தேசிய உடமை ஆகலாம் கவிஞரே !இது மிகை வாரத்தை
அல்ல!





thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: ஈதுனக்கு அழகாமோ?
எந்த வார்த்தைகளை எடுத்து எழுதி கவிதையை பாராட்ட? வாழ்த்துக்கள் கவிஞரே!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|