Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
தமிழினியன் கவிதைகள் !
Page 1 of 1 • Share
தமிழினியன் கவிதைகள் !
மறைந்துயிர் போன உறையின் தானம் !
நாத்திகனல்ல நானிதைச் சொல்ல
ஆத்திரமின்றி யோசித்துப் பாரீர்!
சாத்திரசடங்கு சம்பிரதாயங்கள்
போர்த்தி வளர்த்த பொய்யுடலங்கள் !
மூச்சடங்கியது வீழ்ந்திட்ட பின்னும்
ஆச்சார சீலங்கள் ஆயிரங் காணும் !
குலச்சார உபசாரம் கொடுத்ததைக்கொண்டு
அபச்சாரமாகவேன் குப்பையாய் கொழுத்துவான்?
மண்ணுக்கும் புழுவிற்கும் மக்கியது போகவா
கண்ணுக்கும் கருத்துக்கும் காத்ததை வளர்த்தது?
மன்னனிறைவனின் மாண்புறு படைப்பினில்
எண்ணயிங்கெதுவும் கழிவில்லை கண்டீர் !
மறைந்தும் மறையா வாழ்வென்னும் அறமே !
மறைந்துயிர் போன உறையின் தானம் !
குறையோ பிழையோ இதிலொன்றுமில்லை –பாவக்
கறைகள் கழுவி இறைசேருமான்மா!
மண்ணாய்க் காற்றாய் மறைந்து போன நமை
எண்ணாதிறுதியில் மறந்து போவதை
கண்ணாய் கலமாய் தானம் செய்து நாம்
எண்ணா ஆயுளும் நீண்டு வாழ்வமே!
-தமிழினியன்-
நாத்திகனல்ல நானிதைச் சொல்ல
ஆத்திரமின்றி யோசித்துப் பாரீர்!
சாத்திரசடங்கு சம்பிரதாயங்கள்
போர்த்தி வளர்த்த பொய்யுடலங்கள் !
மூச்சடங்கியது வீழ்ந்திட்ட பின்னும்
ஆச்சார சீலங்கள் ஆயிரங் காணும் !
குலச்சார உபசாரம் கொடுத்ததைக்கொண்டு
அபச்சாரமாகவேன் குப்பையாய் கொழுத்துவான்?
மண்ணுக்கும் புழுவிற்கும் மக்கியது போகவா
கண்ணுக்கும் கருத்துக்கும் காத்ததை வளர்த்தது?
மன்னனிறைவனின் மாண்புறு படைப்பினில்
எண்ணயிங்கெதுவும் கழிவில்லை கண்டீர் !
மறைந்தும் மறையா வாழ்வென்னும் அறமே !
மறைந்துயிர் போன உறையின் தானம் !
குறையோ பிழையோ இதிலொன்றுமில்லை –பாவக்
கறைகள் கழுவி இறைசேருமான்மா!
மண்ணாய்க் காற்றாய் மறைந்து போன நமை
எண்ணாதிறுதியில் மறந்து போவதை
கண்ணாய் கலமாய் தானம் செய்து நாம்
எண்ணா ஆயுளும் நீண்டு வாழ்வமே!
-தமிழினியன்-
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: தமிழினியன் கவிதைகள் !
சிறந்த விழிப்புணர்வு...
நானும் கண் தானம் செய்ய முன்வந்துள்ளேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
நானும் கண் தானம் செய்ய முன்வந்துள்ளேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
Re: தமிழினியன் கவிதைகள் !
இந்தக் கவிதையைப் பார்த்த பின் அல்லவே கவிஞரே நீங்கள் தானம் செய்தது?
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: தமிழினியன் கவிதைகள் !
ஜாதி!
முதல் மனிதன்
பிறந்த போது
இல்லாதிந்த ஜாதி !
எதிலிருந்து
எப்போதிருந்து
வந்ததிந்த ஜாதி ?
வலியது
எளியததை
இழிமை செய்து
வலிமை பெறும்
இயற்கையெனும்
நியதி
முதலடியைப்
போட்டிருக்கும்
ஆரம்பம் புரிய
நான் சொல்லுகிறேன்
கேள்!
எளியவராய்
நீயிருந்து
வலிமை பெற
முயலாத வரையில்
முடியாதுன்
ஜாதிப் பெயர்
முதுகிலுன்னாலழிக்க !
பின்வருமுன்
சந்ததியின்
சரித்திரத்தை
மாற்ற
எரித்துவுன்
இழிமைத்தனம்
முறித்தெழுந்து
முயன்று பார்
மாறுமுன் ஜாதி!
-தமிழினியன்-
முதல் மனிதன்
பிறந்த போது
இல்லாதிந்த ஜாதி !
எதிலிருந்து
எப்போதிருந்து
வந்ததிந்த ஜாதி ?
வலியது
எளியததை
இழிமை செய்து
வலிமை பெறும்
இயற்கையெனும்
நியதி
முதலடியைப்
போட்டிருக்கும்
ஆரம்பம் புரிய
நான் சொல்லுகிறேன்
கேள்!
எளியவராய்
நீயிருந்து
வலிமை பெற
முயலாத வரையில்
முடியாதுன்
ஜாதிப் பெயர்
முதுகிலுன்னாலழிக்க !
பின்வருமுன்
சந்ததியின்
சரித்திரத்தை
மாற்ற
எரித்துவுன்
இழிமைத்தனம்
முறித்தெழுந்து
முயன்று பார்
மாறுமுன் ஜாதி!
-தமிழினியன்-
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: தமிழினியன் கவிதைகள் !
இது புதுசு!நீ புதுசு!
எல்லோரும் போலவே நீயிருந்தால்
எல்லோரில் யாராய் நீயிருப்பாய்?
வித்தியாசப்படு!
ஒத்திவைத்தவுன் எத்தனத்தில்
சொத்தியாகுமுன்னிலக்கு!
இன்றே செய்!
முயலாமல் முடியாது
முன்சென்று நீ வெல்ல!
முயற்சி செய்!
தோல்விக்குத் துவண்டால் நீ
கேள்வியின்றித் தொடரும் தோல்வி!
எழுந்துநில் !
கட்டம் கட்டி முட்டி நின்றால்
ஒட்டு முறிந்து விலகுமுறவு!
விட்டுக்கொடு!
மறக்காத் துரோகம் உனையென்றும்
உள்ளிருந்துருக்கும்!
மறந்துவிடு!
மன்னித்தல் உன்னை
மனிதரில் மாண்புறுத்தும் !
மன்னித்து விடு!
செல்லும் செல்வத்தோடு
செல்லாதிருக்கவுன் புகழ் !
தானம் செய்!
-தமிழினியன்-
எல்லோரும் போலவே நீயிருந்தால்
எல்லோரில் யாராய் நீயிருப்பாய்?
வித்தியாசப்படு!
ஒத்திவைத்தவுன் எத்தனத்தில்
சொத்தியாகுமுன்னிலக்கு!
இன்றே செய்!
முயலாமல் முடியாது
முன்சென்று நீ வெல்ல!
முயற்சி செய்!
தோல்விக்குத் துவண்டால் நீ
கேள்வியின்றித் தொடரும் தோல்வி!
எழுந்துநில் !
கட்டம் கட்டி முட்டி நின்றால்
ஒட்டு முறிந்து விலகுமுறவு!
விட்டுக்கொடு!
மறக்காத் துரோகம் உனையென்றும்
உள்ளிருந்துருக்கும்!
மறந்துவிடு!
மன்னித்தல் உன்னை
மனிதரில் மாண்புறுத்தும் !
மன்னித்து விடு!
செல்லும் செல்வத்தோடு
செல்லாதிருக்கவுன் புகழ் !
தானம் செய்!
-தமிழினியன்-
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: தமிழினியன் கவிதைகள் !
படிக்கப் படாத வரிகளிங்கு
புடம் போட காத்திருக்கு!
காட்டில் எறித்த நிலவாயிங்கு
பாட்டிசைப் புலவர் தேடுதிங்கு!
பார்த்தொரு குறை கண்டு சொல்வீர்
கோர்த்திடும் முறை மாற்றிக் கொள்ள
சேர்த்தெனைக் கவிச்சபையிலோர்
வார்த்த படிக்கல்லாய் நான்
சார்ந்திட வரம் தருவீரே!
-தமிழினியன்-
புடம் போட காத்திருக்கு!
காட்டில் எறித்த நிலவாயிங்கு
பாட்டிசைப் புலவர் தேடுதிங்கு!
பார்த்தொரு குறை கண்டு சொல்வீர்
கோர்த்திடும் முறை மாற்றிக் கொள்ள
சேர்த்தெனைக் கவிச்சபையிலோர்
வார்த்த படிக்கல்லாய் நான்
சார்ந்திட வரம் தருவீரே!
-தமிழினியன்-
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|